என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைது"
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி பகுதியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ கஞ்சாவும் சிக்கியது. பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர்கள் வெள்ளமடத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி, நாங்குநேரியைச் சேர்ந்த துரைபாண்டி என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை வாலிபர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மந்திர மூர்த்தி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
மதுக்கூர்:
அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ் (வயது 21). இவர் வாட்டாகுடி ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் அங்கு வந்து தூங்கி கொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை திருட முயற்சி செய்தபோது அவரை பிடித்து மதுக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
முகமது ஹாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுரபீக் ராவுத்தரை கைது செய்தனர்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவை வந்தார். ரெயில் போத்தனூர் வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார்.
அப்போது செல்போன் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரெயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதையடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை தேடி வந்தார். அப்போது செல்போன் எண் சிக்னலை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமாரிடம் ரெயிலில் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.
ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.
பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.
முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வனப் பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதி ராஜன், பிரகாஷ், உதயகுமார், மலைச்சாமி, சாமிகண்ணு, சுந்தர், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், வீரையா, கண்ணபிரான், செல்வம் வனக்காவலர்கள் கோபுரபாண்டி, மாரியப்பன், வாசுகி, சின்னப்பன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாச்சியாபுரம் அருகே உள்ள இளங்குடியில் முயல் வேட்டையாட முயன்றதாக கூறி இளங்குடியைச் சேர்ந்த கருப்பையா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
அதே போன்று நேமத்தன் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (33), மலைச்சாமி (49) ஆகியோரும் பைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (39), ராஜா (33), தனுஷ் (17) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் வனச்சரக பகுதிகளில் முயல்களை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்றப் பிரிவின் கீழ், 6 பேர் மீது வனச்சரகர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்தார்.
2 தினங்களுக்கு முன்பு கீழச்சிவல்பட்டி அருகே 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் பஸ் நிலையத்திற்கு சிங்கம்புணரியில் இருந்து அரசு டவுன் பஸ் வந்தது. இந்த பஸ் செக்கடி பஜாரில் நின்ற போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்தப் பஸ்சின் கூரையின் மீது ஏறி உள்ளார். பஸ் அங்கிருந்து புறப்பட்டதும் அவர் மேற்கூரையில் ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது.
உடனடியாக பஸ்சை நிறுத்த டிரைவர் முயன்றார். அப்போது அந்த வாலிபர் முன்பக்க கண்ணாடி வழியாக ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார். அதற்குள் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்தது தெரியவர போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல்வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதிக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.
இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
சோமசுந்தரம் வேலை தேடுவதை அறிந்து கொண்டு, பணம் கொடுத்தால் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளில் நிரந்தர வேலை வாங்கிவிடலாம் என்று அருண்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சோமசுந்தரம், அவர் கேட்டது போல் ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 பணத்தை அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தராமல், சோமசுந்தரத்திடம் பேசுவதையும், அருண்குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசுந்தரம், வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அருண் குமார், பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சோமசுந்தரம் உடனடியாக அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான அருண்குமாரை தனிப்படை அமைத்து தேடி விசாரித்து வந்தனர்.
விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்குசென்ற தனிப்படை போலீசார், அங்கு தனியார்விடுதியில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் அருண்குமார் பலரிடம் ஆவின்நிறுவனத் தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்