search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கிண்டி போலீசார் நேற்று இரவு கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    வேளச்சேரி செக்போஸ்ட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து ஓட்டல் ஊழியர்களான சவுகார் பேட்டையை சேர்ந்த மோகித் (வயது 25), பஜன்லால் (27), மற்றொரு பஜன்லால் (24), சந்தீப் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    டெல்லியில் கனடாவை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லி ஜவுஸ் காஸ் பகுதியில் உள்ள ஒரு பப்பில் அங்குள்ள ஒருவரிடம் நட்பாக அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து, நேற்றிரவு அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

    பெண்ணின் புகாரை அடுத்து, அபிஷேக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 
    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக 45 சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். #TrumpImmigrantPolicy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும், இன்னும் பல குழந்தைகள் பெற்றோருடன் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கும் நடமுறையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து மாநிலத்திலும் உள்ள 45 சட்ட அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

    சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து காவலில் வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    கைது நடவடிக்கைக்கு பதிலாக, ஒரு குடும்பத்தினர் சட்டவிரோதமாக குடியேறுகிறார் என்றால், குடும்ப தலைவரின் கையில், ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அடங்கிய கருவியை பொருத்திவிட்டால், அந்த குடும்பத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக குடியேறிகள் குடும்பத்தோடு கைது செய்யும் நடவடிக்கையை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரும் எதிர்த்து கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை தடுத்த போலீசார் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மெக்சிகோ:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூலை 1-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதிபர், செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் நடந்து வருகின்றன.

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதனை அடுத்து, ஆஸ்காரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர போலீசார், சிறப்பு படையினரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் உள்ள 27 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    27 போலீசாருடன் ஆஸ்கர் கார்சியாவும் கைது செய்யப்பட்டார். 
    புதுவைக்கு உறவினருடன் சுற்றுலா வந்த பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சென்னை கீழ்ப்பாக்கம் மாணிக்க ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது28). இவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்‌ஷனி (23). இவர் சினிமா துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

    இவர்கள் இருவரும் ஒரு காரில் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள சூப் கடைக்கு சூப் குடிக்க வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் அக்‌ஷனி வடமாநில பெண் என நினைத்து அவர் அணிந்திருந்த ஆடை குறித்து கிண்டல் செய்தனர்.

    இதையடுத்து அக்‌ஷனி ஏன் கிண்டல் செய்தீர்கள் என்று கேட்டபோது அந்த வாலிபர்கள் மீண்டும் ஆபாச வார்த்தைகளால் அக்‌ஷனியை வர்ணித்தனர். இதனை ஹேமந்த்குமார் தட்டிக்கேட்ட போது ஆவேசம் அடைந்த அந்த வாலிபர்கள் ஹேமந்த்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் அக்‌ஷனி அணிந்திருந்த ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனை அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹனிஷ்போரிஷ் (24) என்ற பெண் தைரியமாக வந்து தட்டிக்கேட்டார். அந்த பெண்ணிடமும் வாலிபர்கள் தகராறு செய்து அவரை தாக்கினர்.

    இதையடுத்து அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். இதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி சதீஷ் (34)மற்றும் டிரைவர் கிருஷ்ணகுமார் (25) என்பதும் தப்பி ஓடியவர்கள் அமுது, தேவ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெண்ணை மானபங்கம் செய்தல், தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய அமுது, தேவ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
    பாகிஸ்தானில் துப்பாக்கிமுனையில் பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் கராச்சி நகரில் குல்ஷா இ ஹதீத் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. கடந்த 21-ந் தேதி இந்தப் பூங்காவுக்கு வெளியே 21 வயதான ஒரு பெண் தனது குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய 3 நபர்கள், அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் காரில் கடத்திச்சென்றனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் அந்தப் பெண்ணை கற்பழித்து விட்டு, அவரை அவரது வீட்டுக்கு அருகே போட்டு விட்டுச் சென்றனர். இந்த பயங்கர சம்பவம், கராச்சி நகரை உலுக்கி உள்ளது.

    இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை, போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது பற்றி மூத்த போலீஸ் சூப்பிரண்டு அபித் உசேன் காயிம்கனி கூறும்போது, “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறி உள்ளார். அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

    இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்து உள்ளனர். 3-வது நபரை தேடி வருகின்றனர். சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    பாகிஸ்தானில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள மத்திய பெண் மந்திரியின் காரை வழிமறித்து ‘ஈவ்டீசிங்’ செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனுபிரியா பட்டேல் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியாக உள்ள அப்னாதளம் கட்சியை சேர்ந்தவர்.

    அவர் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இரவு காரில் வாரணாசிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 3 வாலிபர்கள் மற்றொரு காரில் வந்தனர். அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. காரில் வந்தவர்கள் மத்திய மந்திரியின் காரை முந்தி சென்று வழிமறித்தனர். அப்போது மந்திரியின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

    அதை கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மத்திய மந்திரியை கேலி- கிண்டல் செய்து அவமதித்தனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசினார்கள்.

    தொடர்ந்து பாதுகாவலர்கள் எச்சரித்ததால் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்த அவர்கள் மந்திரி அனுபிரியாவை கிண்டல் செய்தார்கள்.

    நிலைமை மோசமானதை அறிந்ததும் வாரணாசி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த வாலிபர்களை பிடிப்பதற்காக போலீசார் தயாரானார்கள். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தயாராக இருந்தனர்.

    அப்போது அந்த வாலிபர்களின் கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    முசிறி அடுத்த வேளகாநத்தம் பகுதியில் திருட்டுத்தனமாக ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    முசிறி:

    முசிறி காவிரி ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் அலுவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது முசிறி அடுத்த வேளகாநத்தம் பகுதியில் திருட்டுத்தனமாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற முசிறி அடுத்த சேந்தமாங்குடியை சேர்ந்த சிவா என்பவரையும், முசிறி பெரியார் பாலம் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி சென்ற மணி என்பவரையும் வருவாய் துறையினர் பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    இதையடுத்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிவா, மணி ஆகிய இருவரும் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
    கேரளாவில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொன்று விட்டு பீகாருக்கு தப்ப முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    கேரள மாநிலம் மலப்புரம் வெங்கரா பகுதி ஆசாத் நகரில் வசித்து வருபவர் நவ்சாத். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி கோதல் (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நவ்சாத் கத்தியால் மனைவி கோதலை குத்திக் கொன்றார். பின்னர் 2 குழந்தைகளுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நவ்சாத் சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பி செல்வது தெரிந்தது. இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவில் இருந்து பீகாருக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அதில் கொலையாளி நவ்சாத் தனது 2 குழந்தைகளுடன் பயணம் செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    காங்கேயத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்நாயக் (26), பிஜு ஹெம்ப்ரம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 6.4.2018 அன்று ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் நாயக் தலையில் கல்லை போட்டு பிஜு ஹெம்ப்ரம் கொலை செய்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒடிசா செல்லும் ரெயிலில் கழிவறையில் பதுங்கி இருந்த பிஜு ஹெம்ப்ரப்பை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர்.
    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த டாக்டரின் போட்டோவை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜோதி 3-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

    அந்த கர்ப்பத்தை கலைக்க விஜயகுமார் மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் இருந்த பெண் டாக்டர் பவானியை சந்தித்தனர்.

    டாக்டரிடம், எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை வேண்டாம். கருவை கலைத்து விடுங்கள் என்றனர். டாக்டர் பவானி கருக்கலைப்பு சட்ட விரோதம். கருக்கலைப்பு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், டாக்டர் பவானியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். எங்கு சென்று கருக்கலைப்பு செய்தாலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் பவானி எச்சரித்தார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், தனது செல்போனில் டாக்டர் பவானியை போட்டோ பிடித்து அதை பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக எழுதி பதிவிட்டார். மேலும் டாக்டர் பவானி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பினார்.

    இதையறிந்த டாக்டர் பவானி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய குமாரை கைது செய்தனர்.
    தருமபுரியில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக புறப்பட்ட 25 விவசாயிகளை வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
    அரூர்:

    சேலம்-சென்னை வரை 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க தருமபுரி மாவட்டத்தில் 10 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனை கண்டித்து 10 கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர்.

    இதற்காக கடத்தூர், அரூர், தீர்த்தமலை, சாமியாபுரம், மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, கடத்தூர்-தருமபுரி மெயின்ரோடு ஆகிய 8 இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    அரூரில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
    கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் 83 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளுடன் போலீசாரிடம் இன்று பிடிபட்டார். #fakecurrency
    கோவை:

    தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் கள்ளநோட்டுகளின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இன்று கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியே வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கட்டுகட்டாக கள்ளநோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும், ஆனந்தன் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிடிபட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 83 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கள்ளநோட்டுகளின் தயாரிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #fakecurrency

    ×