search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாட வீதிகளில் சாமி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தாலும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த அளவு மட்டுமே இருந்தது.

    கருட சேவை அன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ரூ.300 கட்டண சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பிரம்மோற்சவ நிறைவு பெற்றதால் அனைத்து தரிசனங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

    இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இலவச தரிசன வரிசை சீலா தோரணம் வரை 5 கி. மீ தூரத்திற்கு வரிசையில் காத்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 40 மணிநேரம் வரை ஆகிறது.

    திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குளிரில் நடுங்கியபடி வரிசையில் நின்று கொண்டு உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 41,071 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் தேவஸ்தான சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    • ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
    • ரூ.300 சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    முதல் நாளான அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. கடந்த 1-ந் தேதி கருட சேவை நடந்தது.

    பிரம்மோற்சவ விழா தொடங்கியது முதல் நேற்று வரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரத்து 816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 20 லட்சத்து 99 ஆயிரத்து 96 பக்தர்கள் அன்னபிரசாதம் சாப்பிட்டனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுக்களும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுக்களும் விற்பனையானது.

    ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 226 பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 பக்தர்களும் பஸ்சில் பயணம் செய்தனர்.

    குற்ற சம்பவங்களை கண்காணிக்க திருமலையில் 2,279 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 4,635 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக 140 பஸ்களில் அழைத்து வரப்பட்டு 61,997 சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.300 கட்டண சேவை சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த தரிசனங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன.
    • ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனச் சேவை முடிந்ததும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும். ஆனால், இந்த முறை பிரம்மோற்சவ விழாவின்போது, உற்சவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    வண்ணமயமான ஆர்க்கிட் மலர்களாலும், தாமரைகளாலும் மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் சுகந்த திரவியங்கள் பயன்படுத்தப்பட்டது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் உலர்ந்த பழங்கள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா மாலைகள், உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடங்கள் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டன.

    தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த காணிக்கையாளர்கள் ஐதராபாத்தில் இருந்து அலங்கார நிபுணர்களை வரவழைத்து கோவிலில் ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தும் ரெங்கநாயகர் மண்டபத்தை அலங்கரித்தனர். ஸ்நாபன திருமஞ்சனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஜப்பான் ஆப்பிள்கள், சின்னத் திராட்சை, கொரியன் பேரிக்காய், மாம்பழங்கள், அமெரிக்க செர்ரி பழங்கள், குங்குமப்பூ, பிஸ்தா, பாதாம் மாலைகளை பிரத்யேகமாக தயாரித்து அணிவித்து உற்சவர்கள் அலங்கரித்தனர்.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாசுலு கூறியதாவது:-

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் சிறப்பு அம்சமாக, முதல் முறையாக குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன. ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம். அதன் மூலம் ஒரு மாலை தயாரிக்க சுமார் 3 கிலோ வரை குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

    இந்தக் குங்குமப்பூ மாலைகளை ஐதராபாத்தைச் சேர்ந்த அம்பிகா புளோரா நிறுவனம், தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த காணிக்கையாளர்களான ராஜேந்திரன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் காணிக்கையில் தயார் செய்யப்பட்டன.

    அம்பிகா பிளோராவின் தலைவர் சீனிவாஸ் வழிகாட்டுதலின் கீழ் சுமார் 60 பேர் திருமலைக்கு வந்து இரவும் பகலும் கடுமையாக உழைத்து, வாசனை திரவியங்கள் மற்றும் உலர் பழங்களால் இந்த மாலைகளை தயார் செய்தனர்.

    அதேபோல் அத்திப்பழம், நாவல் பழம், பிஸ்தா, பாதாம், ஏலக்காய், சோளம் போன்றவற்றைக் கொண்டு மாலைகளும், கிரீடங்களும் தயார் செய்யப்பட்டன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் 7 வகையான மாலைகள், கிரீடங்கள் மற்றும் இறுதியாக துளசி மாலைகளை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
    • இதற்கு ஒரு ஆன்மிக கதை உள்ளது.

    திருப்பதியில் பீமன் என்ற மண்பாண்ட தொழிலாளி வசித்து வந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக் கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். அதனால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானின் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. ஏதாவது ஒரு சனிக்கிழமையில் ஆலயத்திற்குச் சென்றால், "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை அவரது மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். களிமண்ணில் ஒரு சிலை வடித்தார். அதற்கு பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. எனவே தான் மண்பாண்டம் செய்யும்போது சிதறிய களிமண்ணை ஒன்று சேர்த்து, அவற்றில் சிறிய சிறிய பூக்களை செய்து அதைக் கோர்த்து பெருமாளின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த பகுதியை ஆட்சி செய்த தொண்டைமான் என்ற அரசனும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை ஏழுமலையானுக்கு அணிவிப்பார்.

    ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. 'பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ?' என குழப்பத்தில் அங்கிருந்து மன்னன் சென்றுவிட்டார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், நடந்த விவரங் களைச் சொன்னார்.

    மறுநாள் காலையிலேயே பீமனின் குடிசைக்குச் சென்ற மன்னன், அவருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்வதாகச் சொல்லியும், பீமன் அதை ஏற்கவில்லை. அவர் செய்த பெருமாள் பணிக்காக, இறுதி காலத்தில் வைகுண்டம் அடைந்தார். அவரை கவுரவிக்கும் வகையில்தான், இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

    • தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
    • பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

    கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    • நாளை மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
    • நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.

    ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.

    8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.

    9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 82,463 பேர் தரிசனம் செய்தனர். 35, 385 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக 'ராமச்சந்திரமூர்த்தி' அலங்காரத்தில் சுதர்சன சாளக்ராம ஹாரம் மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தமக்கு பிடித்தமான, விசுவாசமான அனுமந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அனுமனை போல் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் பக்தர்களும், பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே மலையப்பசாமி அனு மந்த வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதாரெட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    மேலும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வருகிறார்.

    ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்களுக்கு கருட சேவை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு தென்மேற்கு வாசல், வடமேற்கு வாசல், வட கிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரத்தி காண்பிக்கும் இடங்களில் ஆரத்தி ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுகின்றனர்.

    ஆரத்தி வழங்கும் நேரத்தில் 5 பேருக்கு தரிசனம் கொடுக்க முடியும். எனவே இந்த ஆண்டு ஆரத்திகளை ரத்து செய்து சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆரத்தி தலத்திலும் 10,000 பேருக்கு கருடசேவை காண வாய்ப்பு கிடைக்கும்.

    அதேபோல், கேலரிகளிலும், வணிக வளாகம் முதல், கோவில் எதிரில் உள்ள நடரா ஜர் மண்டபம் வரை, 2 லட்சம் பேரை அனுமதித்தால், கூடுதலாக, 25,000 பேர் தரிசனம் செய்யலாம். இதன் மூலம் சுமார் 2.75 லட்சம் முதல் 3 லட்சம் பேர் கருட சேவையை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடம், ரம்பகீஜாவில் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் கருடசேவை தரிசனம் அளிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நிமிடத்திற்கு 2 பஸ்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்படுகிறது. மேலும் திருமலைக்கு செல்ல 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரும் வாகனங்கள் திருப்பதியிலேயே பார்க்கிங் செய்துவிட்டு பஸ்களில் திருப்பதி செல்ல வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை பைக்குகள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்காததால் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டத்தை காண முடிகிறது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    கருட சேவையையொட்டி ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை ஆண்டாள் கோவில் இணை ஆணையர் செல்லதுரை, அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடிய மாலையை திருப்பதி ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோரிடம் வழங்கினர்.இதையடுத்து இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 75,382 பேர் தரிசனம் செய்தனர். 31,434 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.85 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது.
    • திருப்பதியில் இன்று இரவு கருடசேவை உற்சவம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசாமி, ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்கள் ரெங்கநாயக்கர் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

    இதையடுத்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கில் மோகினி அலங்கார வீதிஉலா, இரவு கருடசேவை உற்சவம் நடக்கிறது.

    • திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • இன்று இரவு கருடசேவை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசாமி, ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்கள் ரெங்கநாயக்கர் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

    இதையடுத்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கில் மோகினி அலங்கார வீதிஉலா, இரவு கருடசேவை உற்சவம் நடக்கிறது.

    • புரட்டாசி பிரம்மோற்சவ விழா தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • ‘திருப்பதி வந்தால் திருப்பம் வரும்’ என்ற சொல்வழக்கு உருவானது.

    வாழ்க்கையில் திருப்பம் தரும் தெய்வமாக இருப்பவர், திருப்பதி ஏழுமலையான். இதனால்தான் 'திருப்பதி வந்தால் திருப்பம் வரும்' என்ற சொல்வழக்கு உருவானது. திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எளிமையாகவே நடத்தப்பட்டது. மாடவீதிகளில் ஏழுமலையான் வீதி உலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சீரான காரணத்தால், முன்பு போலவே, வெகு விமரிசையாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, இன்று (27.9.2022) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 5-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும், அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர, மற்ற பிரமுகர்களுக்கான சலுகைகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவை ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களுமே இலவச தரிசன வரிசையில் மட்டுமே ஏழுமலையானைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • கருடசேவை அக்டோபர் 1-ந்தேதி நடக்கிறது.
    • பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருடசேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி இரவு 7 மணியளவில் தொடங்கி நடக்கிறது. அன்று வாகனச் சேவையைப் பார்க்க வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் வாகன தரிசனம் வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, போலீஸ் டி.ஐ.ஜி ரவிபிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி ஆகியோர் கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். நான்கு மாடவீதிகளில் சாமி உலா வரும்போது, பக்தர்கள் உற்சவருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் இடம், கேலரிகளை பார்வையிட்டனர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் கருடசேவை அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்.

    கேலரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாசல்கள் வழியாக பக்தர்கள் சென்று கருடவாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசாமியை வழிபடலாம். வீதிஉலாவின்போது கற்பூரம், நெய் தீப ஆரத்தி கொடுக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆரத்தி வாசல்களிலும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கருடசேவையைக் காண வாய்ப்பு கிடைக்கும்.

    அதேபோல் கேலரிகளிலும், கோவில் எதிரே உள்ள நாதநீராஞ்சன மண்டபம் முதல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரையிலும் அனுமதித்தால் கூடுதலாக 25 ஆயிரம் பக்தர்கள் கருடசேவையைத் தரிசனம் செய்யலாம். அதன் மூலம் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை மலையப்பசாமியின் கருட வாகன வீதி உலாவை தரிசிக்க முடியும்.

    தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடம், ராம்பகீதா விடுதி அருகில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கருடசேவை தரிசனம் அளித்து, மலையப்பசாமி வாகன மண்டபத்தை அடைவார்.

    அறங்காவலர் குழு தீர்மானித்த முடிவின்படி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 தரிசனம் உள்பட பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருடசேவை அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

    கருடசேவைக்காக வியாழக்கிழமை (அதாவது நேற்று) காலையில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டத்துக்கேற்ப திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர், பக்தி சேனல் அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி மற்றும் காவல்துறையினரும், தேவஸ்தான அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    ×