search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • படி திருவிழா 3 நாட்கள் நடக்கிறது.
    • சுப்ரபாதம், தியானம் மற்றும் கூட்டுப் பஜனை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டத்தின் சார்பில் 3 நாட்கள் படி திருவிழா நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 4 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து 3-வது சத்திரம் வரை பஜனை மண்டல உறுப்பினர்கள் ஊர்வலம் (சோபா யாத்திரா) நடத்தினர். அதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரம் பஜனை மண்டல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அலிபிரி பாத மண்டபத்தில் முக்கிய பிரமுகர்களுடன் படி பூஜை நடக்கிறது. அங்கிருந்து பஜனை மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகள் செய்து பாத யாத்திரையாக சென்று திருமலையை அடைகிறார்கள்.

    முன்னதாக 3-வது சத்திரம் வளாகத்தில் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 7 மணி வரை பஜனை மண்டல உறுப்பினர்கள் சுப்ரபாதம், தியானம் மற்றும் கூட்டுப் பஜனை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை பஜனை மண்டல உறுப்பினர்களுக்கு புதிய பாசுரங்கள், ஆன்மிக செய்திகள், மனித நேயத்துக்கான ஹரிதாசரின் உபதேசங்கள் நடந்தது.

    மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளில் தாச சாகித்ய திட்ட சிறப்பு அலுவலர் ஆனந்த தீர்த்தாச்சாரிலு, திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் துணை அதிகாரி சாந்தி, பிற அதிகாரிகள் மற்றும் பஜனை மண்டல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசு விடுமுறை முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

    இருப்பினும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்தனர்.

    இதனால் வாகன சோதனை நடைபெறும் அலிபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனைக்காக சுமார் 1 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வைகுந்தம் காம்ளக்ஸ் 30 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,748 பேர் தரிசனம் செய்தனர். 39,086 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
    • நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
    • வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர்.

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னால் முதல்-அமைச்சர் எடியூரப்பா மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட விஐபிகள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ஏற்கனவே ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    ஆனால் ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் தேவஸ்தான அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு தரிசனத்திற்கு வருகின்றனர். வி.ஐ.பி. தரிசனத்தின் போது சாதாரண பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இலவச தரிசன வரிசையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.

    தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • செப்டம்பர் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான (செப்டம்பர்) அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஆனால் செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது.
    • உறியடி உற்சவத்திற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கோவில் தங்க மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தங்க சர்வபூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தங்கத்திருச்சியில் மலையப்ப சுவாமியும், மற்றொரு திருச்சியில் கிருஷ்ணரும் மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். இதற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    இதனால் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    எனவே பிரமோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,851 பேர் தரிசனம் செய்தனர். 34,404 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்புத்துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று, அதிகமாகப் பணம் சம்பாதிக்கும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    மேலும் சாமி தரிசனம் மற்றும் அறைகளுக்கான சிபாரிசு கடிதம் கொடுக்கும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர். இதனால், திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது.

    நேற்று முன்தினம் கோவிலில் மொத்தம் 92 ஆயிரத்து 328 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 52 ஆயிரத்து 969 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு காத்திருந்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும்

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரத்தில் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், சுதந்திர தினவிழா விடுமுறை வந்ததாலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னப்பிரசாத கவுண்ட்டர்கள், நாராயணகிரி தோட்டம் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உணவு, பால் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் திருமலைக்கு விரைந்து வந்து நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், பக்தர்களுக்கு வரிசைகளில் வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அன்னப்பிரசாதம், சுகாதாரம் மற்றும் பறக்கும்படை பிரிவுகளில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து முக்கிய இடங்களிலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும், என அதிகாரிகளை கேட்டுகொண்டார்.

    தரிகொண்டா வெங்கமாம்பா அன்னத்தானக்கூடத்தில் ஓரிரு நாட்ளாக மதிய வேளையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அன்னப்பிரசாதமாக உப்புமா, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. 2 நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களுக்கு 2 மடங்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரி தெரிவித்தார்.

    அதுமட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் வழங்கப்பட்டு வருகிறது. வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து திருமலையில் உள்ள வெளிவட்டச்சாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 40 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    • 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் மூல மூர்த்தியை திருப்திகரமாக தரிசனம் செய்வதற்கும், வாகன சேவைகளை பின்னணியில் இருந்து தரிசிப்பதற்கும் போதிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி மரத்தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகளை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழக்கம்போல் அளிக்கப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் ரூ.300 டிக்கெட் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் உள்பட அனைத்து வகையான தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந் தேதி, மாநில அரசு சார்பில் மூலவர் ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களை சமர்ப்பணம் செய்கிறார்.

    முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி இரவு 9 மணிக்கு பெரியசேஷ வாகனச் சேவை நடக்கிறது. மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகனச் சேவை நடக்கும்.

    திருமலையில் கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி திருமலையில் மீண்டும் தொடங்கியது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2007-ம் ஆண்டு அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    சுமார் 1.30 லட்சம் கலைஞர்கள் 7,500-க்கும் மேற்பட்ட குழுக்களில் பதிவு செய்துள்ளனர். கலைஞர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் இதர வசதிகளை கம்ப்யூட்டர் மயமாக்கல் முறையில் செய்து தருகிறோம்.

    திருப்பதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் 3 வார்டுகளை மேம்படுத்தி, மேலும் 100 படுக்கை வசதிகளை நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    திருமலையில் உள்ள விடுதிகளில் அறைகள் பெற்ற பக்தர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க அமைக்கப்பட்ட புகார் மைய திட்டம் நல்ல பலனை தந்து வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜசாமி சத்திரங்களில் இந்தப் புகார் மையம் தொடங்க முடிவு செய்துள்ளோம்.

    திருமலையில் மூலவர் ஏழுமலையானுக்கு தினமும் நடக்கும் அனைத்து சேவைகளை பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் 16-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நெல்லூரில் உள்ள ஏ.சி. சுப்பாரெட்டி அரங்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வர வைபவ உற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். முதலுதவி மையங்கள் அமைக்கப்படும். ஆன்மிகம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    திருமலையில் வருகிற 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20-ந்தேதி கோவில் எதிரே உறியடி உற்சவம், 30-ந்தேதி வராஹ ஜெயந்தி, 31-ந்தேதி விநாயக சதுர்த்தி விழாக்கள் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.139 கோடியே 33 லட்சம் கிடைத்துள்ளது.

    லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 97 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 497 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 15 லட்சம் கிடைத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் தரிசன ஏற்பாடு செய்வது தேவஸ்தானத்தின் கடமையாகும்.
    • 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லலாம்.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகள், ேகட்ட ேகள்விகள், ஆலோசனைகள் ஆகியவற்றுக்கு பதில் அளித்து பேசினார்.

    பக்தர்கள் தெரிவித்த குறைகள், கேட்ட கேள்விகளுக்கு, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    வீராரெட்டி, ஐதராபாத்: திருமலையில் தங்கும் அறைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. அறைகள் வாங்குவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. அறைகளில் சூடான தண்ணீர் இல்லை?

    அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி: திருமலையில் 7 ஆயிரம் அறைகள் உள்ளன. கொரோனா பரவலுக்கு பின் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், காலியானப் பிறகு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். செப்டம்பர் மாதத்துக்குள் திருமலையில் உள்ள அனைத்துத் தங்கும் விடுதிகளிலும் கீசர் பொருத்துவோம்.

    தினேஷ், விஜயவாடா: அஸ்வினி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய ஏற்பாடு செய்தால், பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பிரம்மோற்சவ விழா நாட்களில் காணிக்கையாளர்களுக்கு சாமி தரிசன ஏற்பாடு செய்து கொடுங்கள்?

    அதிகாரி: திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு உள்ளது. திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரம்மோற்சவ விழா, புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்து விதமான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

    ஸ்ரீகாந்த், மாஞ்சேரியாலா: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி கோவிலில் அர்ச்சகர்கள் பணம் கேட்கின்றனர். கொடுக்கவில்லை என்றால் தள்ளுகிறார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கடேஸ்வரசாமி கோவிலை புனரமைப்பு செய்கிறோம். திருப்பதி தேவஸ்தானம் எங்களுக்கு உதவ முடியுமா? மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தை சரியில்லை?

    அதிகாரி: திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். யாரேனும் பணம் கேட்டால் நடவடிக்கை எடுப்போம். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள விமான கோபுரம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. எனவே பாலாலயத்தில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் உங்கள் கிராமத்தில் உள்ள அறக்கட்டளை மூலம் வெங்கடேஸ்வரசாமி கோவிலை நவீனப்படுத்தலாம். உங்கள் கோவில் திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி இருந்தால், நாங்கள் சிலைகள் மற்றும் உற்சவ சிலைகளை வழங்குவோம். அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜான்சி, ஐதராபாத்: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சப்தகிரி மாத சந்தா செலுத்தி உள்ளோம். இன்னும் கிடைக்கவில்லை?

    அதிகாரி: சப்தகிரி மாத இதழ் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

    சுரேஷ்குமார், கல்வகுர்த்தி: சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருந்தால், அங்குள்ள ஊழியர்கள் பணத்தை வாங்கிகொண்டு பக்தர்களை நமக்கு முன்னால் உள்ள கம்பார்ட்மெண்டில் அமர வைத்தார்கள்?

    அதிகாரி: வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்.

    பரசுராம், மேற்கு கோதாவரி: தங்கும் விடுதிக்கு முன்பதிவு செய்துவிட்டு திருமலைக்கு வரவில்லை என்றால், ரத்து செய்ததற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

    அதிகாரி: நீங்கள் தங்குமிடம் மற்றும் சேவையை ரத்து செய்து, முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்தால், நாங்கள் பணத்தைத் திருப்பித் தருவோம்.

    மல்லிகார்ஜுன்ரெட்டி, திருப்பதி: திருப்பதியில் தேவஸ்தானம் நடத்தும் பாலமந்திர் பள்ளிக் கூடத்தில் தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதில் தாய் அல்லது தந்தை இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தைகளுக்கு அனுமதி கொடுக்க முடியுமா?

    அதிகாரி: பரிசீலித்து உரிய முடிவு எடுப்போம்.

    சீனிவாசராவ், ஐதராபாத்: திருமலையில் உள்ள சப்தகிரி விருந்தினர் மாளிகையில் தங்கி சாமி தரிசனம் செய்து விட்டு, அறைகளை காலி செய்து விட்டு வெளியே வரும்போது, அங்குள்ள ஊழியர்கள், பக்தர்களிடம் பணம் கேட்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க முடியுமா?

    அதிகாரி: திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் தரிசன ஏற்பாடு செய்வது தேவஸ்தானத்தின் கடமையாகும். இதுபோன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த பறக்கும் படை துறை உள்ளது. இதுவரை 142 வழக்குகள் பதிவு செய்து, 217 பேரை கைது செய்து, 1400-க்கும் மேற்பட்டோரை திருமலைக்கு வர தடை விதித்துள்ளோம். 182 தேவஸ்தான ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருமலையில் பறக்கும்படை துறை வலுவாக உள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு பக்தர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சுவேத பவனில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

    வெங்கடபதிசாஸ்திரி, ஐதராபாத்: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தரிசனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மாடியில் தங்கும் வசதியை சாப்ட்வேரில் மாற்ற முடியுமா?

    அதிகாரி: பரிசீலனை செய்கிறோம்.

    சாவித்திரி, பட்டிகொண்டா: எலக்ட்ரிக் டிப் மூலம் சேவை டிக்கெட்டை பெற்றோம். குழந்தைகளை அழைத்து வரலாமா?

    அதிகாரி: 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் தோமாலா, அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.

    மாரிமுத்து, சென்னை: கோவிலில் பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து செல்வதால் பின்னால் இருப்பவர்கள் சாமி தரிசனம் சரியாக செய்ய முடியவில்லை. ஏழுமலையான் கோவில் மூலவர் சன்னதியில் ஊழியர்கள் பக்தர்களை பிடித்து தள்ளுகிறார்கள்?

    அதிகாரி: கோவிலில் குழந்தைகளை தோளில் சுமந்து வருவதை தடுக்க, ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஏராளமான பக்தர்கள் வெளியில் மணிக்கணக்கில் காத்திருப்பதால், விரைந்து வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யவும். வெளியில் உள்ள பக்தர்களுக்கு தரிசனத்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி உள்ளது. கோவில் ஊழியர்களுக்கு உதவுங்கள்.

    ரமணகுமார், விஜயநகரம்: அபிஷேகத்துக்கு 2004-ம் ஆண்டு பணம் வசூலித்தால், 2021-ம் ஆண்டு கிடைக்கும். கொரோனா காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அபிஷேக டிக்கெட் கொடுக்க முடியுமா?

    அதிகாரி: அபிஷேக டிக்கெட்டுகள் 2050-ம் ஆண்டு வரை பக்தர்களால் முன்பதிவு செய்யப்படுகின்றன. அபிஷேக சேவையை 150 பேர் மட்டுமே காண முடியும். எனவே ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திருமலையில் லக்கி டிப் மூலம் 10 டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. வியாழக்கிழமை காலை உங்கள் பெயரை பதிவு செய்தால் டிக்கெட் பெறலாம்.

    மேற்கண்டவாறு பக்தர்கள் கேட்ட கேள்விகள், தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    ×