search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • ராமானுஜர் காலத்தில், திருமலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.
    • பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வார் பரம்பரையினருக்கு அருளாசி வழங்கினர்.

    ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து, முதன் முதலில் குளம் வெட்டி, மலர் செடிகளை பயிரிட்டு, ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கர்ய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969-வது அவதார தின உற்சவம், திருப்பதியில் நேற்று கோலாகலமாக நடந்தது.

    ராமானுஜர் காலத்தில், திருமலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இதனால், கோவிலுக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். மேலும், கோவிலில் கைங்கர்யம் செய்பவர்களும், காலையில் திருமலைக்கு சென்றுவிட்டு மாலையில் திருப்பதிக்கு திரும்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதோடு, வாகன போக்குவரத்து வசதி இல்லாத அந்த கால கட்டத்தில், நடந்து சென்றே ஏழுமலையானை வழிபட்டனர்.

    அதேபோல், கைங்கர்யத்துக்கு தேவையான பொருட்கள் தலைச் சுமையாகவும், மாட்டு வண்டி மூலமாகவும் மட்டுமே திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், ராமானுஜர் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து அனந்தாழ்வார் எனும் வைணவர், தனது மனைவியுடன் ஏழுமலையானுக்கு சேவை செய்ய திருமலைக்கு வந்தார்.

    தொடர்ந்து, திருமலையில் தங்கிய அவர், இப்போது ஏழுமலையான் கோவிலுக்கு பின்பக்கம் அனந்தாழ்வான் தோட்டத்தில் உள்ள குளத்தை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, மலர் தோட்டங்களை ஏற்பாடு செய்து, ஏழுமலையானுக்கு சேவை செய்து வந்தார்.

    இதற்கிடையே, மலர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தனது 5 மாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து அனந்தாழ்வார் குளம் வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பக்தி சிரத்தையை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஏழுமலையான், சிறுவனாக அவதாரம் பூண்டு அனந்தாழ்வான் மனைவிக்கு குளம் வெட்டும் பணியில் உதவி செய்து வந்தார்.

    அதேநேரம், இறை சேவையில் வேறு நபர் குறுக்கிடுவதை விரும்பாத அனந்தாழ்வார், கையில் கடப்பாரையுடன் சிறுவனை விரட்டிச் சென்றார்.

    ஆனால், அந்த சிறுவன் வேகமாக ஓடினான். இதனால், அவன் மீது அந்த கடப்பாரையை அனந்தாழ்வார் வீசி எறிந்தார். அது, சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது.

    ஆனால் அந்த சிறுவன் அதையும் பொருட்படுத் தாமல் கோவிலுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

    பின்னர், அனந்தாழ்வார் மலர்களை மாலையாக தொடுத்து எடுத்துக் கொண்டு, ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது, ஏழுமலையான் தாடையில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அவர் பதறினார்.

    மேலும், தன்னை சோதிப்பதற்காக ஏழுமலையானே சிறுவனாக உருவெடுத்து வந்ததை உணர்ந்தார். பின்னர், ஏழுமலையான் தாடையில் நாமக்கட்டியைபொடி செய்து பூசினார். அதன்பிறகு, ரத்தம் வழிவது நின்றுவிட்டது.

    இதன் அடையாளமாகவே, இப்போதும் ஏழுமலையானின் தாடையில் நாமக்கட்டி பூசப்படுகிறது. மேலும், அனந்தாழ்வார் வீசிய கடப்பாரை இப்போதும் ஏழுமலையான் கோவில் முன்பக்க வாசலில் தொங்கவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அனந்தாழ்வாரின் கைங்கர்ய 4 சேவைகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய அவதாரத் திருநாளன்று, அனந்தாழ்வார் அமைத்த-தோட்டத்தில் கோவில் ஜீயர்கள் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் அடிப்படையில், அவருடைய 969-வது அவதாரத் திருநாளான நேற்று, ஏழுமலையான் கோவில் ஜீயர்கள்-இணைந்து, பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வார் பரம்பரையினருக்கு அருளாசி வழங்கினர்.

    • 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
    • சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் உள்ள தங்க தகடுகள் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால் புதியதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணிக்காக தேவஸ்தானம் சார்பில் பாலாலயம் நடந்தது. இதனால் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ரூ.300 ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தங்க தகடுகள் பதிக்கும் பணி தாமதமாகும் என கூறப்பட்டதால் சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளது. இதனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதனால் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்ட 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    இதேபோல் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது.

    பக்தர்கள் அங்கப்பிரதட்சன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    திருப்பதியில் நேற்று 80,969 பேர் தரிசனம் செய்தனர். 26,777 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
    • குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

    திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் இன்று ஆன்லைனில் வெளியிடுகிறது.
    • ஆன்லைன் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23, 28-ந் தேதிகளுக்கான வெளியிடப்படாத டோக்கன்கள் ஒதுக்கீட்டையும் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வரும் 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அப்போது கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்பிறகு கோவில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அதேபோல் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
    • லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    திருமலை

    திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.

    ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.

    திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.

    அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.

    கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
    • தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

    சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும்.

    ராமகிருஷ்ண தீர்த்தம் திருமலை கோவிலில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. அங்கு 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அங்குள்ள ராமர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்புபூஜைகளை செய்து அங்கிருந்து திருமலைக்கு திரும்புவர்.

    அன்று பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம்.
    • தரிசன டிக்கெட்டுகள் பெறலாம்.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் காணொலி காட்சி மூலம் தேவஸ்தான பிற துறை அதிகாரிகள், துணைக் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் கேட்வே' என்ற செல்போன் செயலியை பற்றி அதிக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் மையங்கள், தேவஸ்தான கோவில்களில் அதிகாரிகள் காட்சிப்படுத்த வேண்டும். அந்தச் செயலியை ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம். தரிசன டிக்கெட்டுகள் பெறலாம். அறைகள் முன்பதிவு செய்யலாம்.

    புவனேஸ்வரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவிலில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவஸ்தான சேவைகள், பிற தகவல்களை அந்தந்தக் கோவிலில் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    புவனேஸ்வரம் கோவிலின் வளர்ச்சிக்கு உள்ளூர் ஆலோசனைக் குழுவிடம் அவ்வப்போது ஆலோசனைகள் பெற வேண்டும். பல்வேறு ஊர்களில் நிலுவையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபப் பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

    உபமாகா கோவிலில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருந்த சீனிவாச கல்யாண உற்சவம் இம்மாதம் நடத்தப்படும். கோவிலுக்கு பக்தர்களின் வருகையை அதிகரிக்க போக்குவரத்து வசதி செய்து தர அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலின் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதி கபிலேஸ்வரர் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், தொண்டமாநாடு வெங்கடேஸ்வரர் கோவில்களில் பிரம்மோற்சவ விழா விரைவில் நடத்தப்படும்.

    பிரம்மோற்சவ விழா தொடர்பான விவர அறிக்கைக்கும், டெண்டர்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் கோபூஜைக்கு பசு, கன்றுக்குட்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.
    • நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    திருமலை :

    ஆந்திராவில் கொரோனா தொற்று இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் காணிக்கையும் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.123 கோடி கிடைத்துள்ளது.

    அதில் ஜனவரி மாதம் 2-ந்தேதி ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.7 கோடியே 68 லட்சம் கிடைத்தது. இது, தேவஸ்தான வரலாற்றில் அதிகமாகும். உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். அதில் கிலோ கணக்கில் தங்கத்தை பக்தர்கள் பிரதான உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது தொடர்கிறது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.

    தற்போது நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கோவிலில் நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 939 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 17 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 5-ந்தேதி மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.
    • 16-ந்தேதி சர்வ ஏகாதசி வழிபாடு நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி (இன்று) பீஷ்ம ஏகாதசி, 5-ந்தேதி ராமகிருஷ்ணதீர்த்த முக்கோட்டி உற்சவம், மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை, 7-ந்தேதி திருமழிசை ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 10-ந்தேதி கூரத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், 16-ந்தேதி சர்வ ஏகாதசி, 18-ந்தேதி கோகர்ப்பம் அணை அருகில் உள்ள சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • இன்று மதியம் புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
    • இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது.

    இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன சேவையும், 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன சேவையும் நடந்தது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை அங்குள்ள புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடுவார்கள்.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலாவும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது.

    ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • அன்று ஒரேநாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இது, திருமலையில் நடக்கும் 'மினி பிரம்மோற்சவ' விழா என்றும், 'ஒருநாள் பிரம்மோற்சவம்' என்றும் அழைக்கலாம். அன்று ஒரேநாளில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த வாகனச் சேவையை வழிபடும் பக்தர்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் வாகனச் சேவையை வழிபடும் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    அதன்படி 28-ந்தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ரத சப்தமியையொட்டி 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×