search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #DeathForChildRapists #POCSO #MonsoonSession
    புதுடெல்லி:

    கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. 

    இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. 

    இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 

    இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த நிரந்தர சட்டம் அமலாகும்.

    இந்த சட்ட மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது. 

    16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. #DeathForChildRapists #POCSO 
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். #RahulHugsModi #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு பொய்யர் என ராகுல் கூறினார். இதற்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் அவை கூடியதும் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.

    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்க்கப்பட்ட விவகாரத்தில், சிபிஎஸ் இ தாமாகவே மொழிபெயர்ப்பாளர்களை நியமித்துக் கொண்டதாக அதிமுக எம்.பி விஜிலா சத்தியானந்த் பேசினார். #MansoonSession #NEET
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு எழுதுவதற்காக வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இனி நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும், நீட் தேர்வில் வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசே மொழிபெயர்ப்பாளர்களை நியமித்ததாக மந்திரி கூறினார்.

    இதற்கு பதிலளித்த விஜிலா சத்யானந்த், “தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களை நியமித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுவது தவறு. நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமிக்கவில்லை. சிபிஎஸ்இ தாமாகவே மொழிபெயர்பாளர்களை நியமித்துக் கொண்டது” என கூறினார்.

    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. #MansoonSession #TeluguDesam #NDA
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இன்னும், மூன்று கூட்டத்தொடர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருகிறது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவை சுமுகமாக நடக்க எம்.பி.க்கள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், நாளை தீர்மானத்தை கொண்டு வர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவோம் என ஆர்.ஜே.டி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

    நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அபாயம் இல்லை என்றாலும், இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால் எப்படி முறியடிப்பது என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

    பாராளுமன்றத்துக்கும் - சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். #SimultaneousElections #Pandian

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.

    பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

    செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார்.  #SimultaneousElections #Pandian

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கோரி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார். #Parliment
    புதுடெல்லி :

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் அலுவல்களை முடிப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்து கட்சி சேர்ந்த உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.

    உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எழுதிய கடிததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் போன்றது அதன் புனிதம் மற்றும் கவுரவத்தை காப்பாற்றும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊடகங்களும் அவையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்கின்றன.

    கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரின்போது உறுப்பினர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, அவையினுள் பதாகைகளை தாங்கி பிடித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அடிக்கடி அவையை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.  

    இந்நிலையில், ஆட்சியின் கடைசி ஆண்டில் 3 பாராளுமன்ற கூட்டத்தொடர் மட்டுமே மீதம் உள்ளன. நேரம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் முடிக்க வேண்டிய அலுவல்கள் மிக அதிகமாக உள்ளது. எனவே இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரின் போது கட்சி வேறுபாடு பார்க்காமல் உறுப்பினர்கள் அமைதியான முறையில் அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #Parliment
    இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் மந்திரி தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. #Srilanka #LTTE
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

    சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, ‘இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்’ என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

    விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி மந்திரி அகில விராஜ் கரியவாசம், “விஜேயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.
    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடக்க இருக்கிறது. #Monsoonsession #Parliment
    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. அப்போது, மழைக்கால கூட்டத்தொடரை அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை முறைப்படி விரைவில் அறிவிக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 
    முத்தலாக் மற்றும் ஓ.பி.சி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமுலு தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 272 ஆக குறைந்துள்ளது. #BJP #Parliament
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அந்த கட்சியின் பலம் 272 ஆக குறைந்து உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார். இதனால் தான் பா.ஜனதாவின் பலம் 272 (சபாநாயகர் நீங்கலாக) ஆக தற்போது குறைந்து உள்ளது.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடியிடமும், பீட் (மத்திய பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ்சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதிகளில் காங்கிரசிடமும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    கட்சி விதிமுறைகளை மீறியதால் கீர்த்தி ஆசாத்தை பா.ஜனதா சஸ்பெண்டு செய்துள்ளது. மேலும் மற்றொரு எம்.பி.யான சத்ருகன் சின்கா நேரடியாகவே பா.ஜனதாவை விமர்சித்து வருகிறார். இந்த இருவருமே 272 பேர் கொண்ட பட்டியலில் அடங்குவார்கள்.


    பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு தற்போது மெஜாரிட்டிக்கான 272 உறுப்பினர்களே இருக்கிறார்கள். ஆனால் கூட்டணி கட்சிகள் ஆதரவால் பா.ஜனதா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. தெலுங்கு தேசம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. சிவசேனா கூட்டணியில் இருந்தாலும் கடுமையாக பா.ஜனதாவை விமர்சித்து வருகிறது.
    இந்த நிலையில் 4 எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதியிலும் உத்தர பிரதேசம், நாகலாந்தில் தலா ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மராட்டியத்தில் பா.ஜனதா உறுப்பினர் நானாபடோல் ராஜினாமா செய்ததால் பாந்திரா தொகுதியிலும், பா.ஜனதா உறுப்பினர் வங்கா மரணம் அடைந்ததால் பால்கர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

    இதே போல் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி. மரணத்தால் கைரானா தொகுதியிலும், நாகலாந்து முதல்- மந்திரி தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததாலும் அங்கு தேர்தல் நடக்கிறது.

    இந்த இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜனதா கடுமையாக போராடும்.

    கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

    மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு பா.ஜனதா கட்சி வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. #BJP #Parliament
    ×