என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94493"
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.-
தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.
செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார். #SimultaneousElections #Pandian
பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் அலுவல்களை முடிப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்து கட்சி சேர்ந்த உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.
உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எழுதிய கடிததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் போன்றது அதன் புனிதம் மற்றும் கவுரவத்தை காப்பாற்றும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊடகங்களும் அவையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்கின்றன.
கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரின்போது உறுப்பினர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, அவையினுள் பதாகைகளை தாங்கி பிடித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அடிக்கடி அவையை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆட்சியின் கடைசி ஆண்டில் 3 பாராளுமன்ற கூட்டத்தொடர் மட்டுமே மீதம் உள்ளன. நேரம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் முடிக்க வேண்டிய அலுவல்கள் மிக அதிகமாக உள்ளது. எனவே இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரின் போது கட்சி வேறுபாடு பார்க்காமல் உறுப்பினர்கள் அமைதியான முறையில் அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #Parliment
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார். இதனால் தான் பா.ஜனதாவின் பலம் 272 (சபாநாயகர் நீங்கலாக) ஆக தற்போது குறைந்து உள்ளது.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடியிடமும், பீட் (மத்திய பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ்சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதிகளில் காங்கிரசிடமும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் 4 எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதியிலும் உத்தர பிரதேசம், நாகலாந்தில் தலா ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மராட்டியத்தில் பா.ஜனதா உறுப்பினர் நானாபடோல் ராஜினாமா செய்ததால் பாந்திரா தொகுதியிலும், பா.ஜனதா உறுப்பினர் வங்கா மரணம் அடைந்ததால் பால்கர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.
இதே போல் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி. மரணத்தால் கைரானா தொகுதியிலும், நாகலாந்து முதல்- மந்திரி தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததாலும் அங்கு தேர்தல் நடக்கிறது.
இந்த இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜனதா கடுமையாக போராடும்.
கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு பா.ஜனதா கட்சி வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. #BJP #Parliament
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்