search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் என்று மனுதாரர் கூறி உள்ளார்.
    • பாராளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், பாராளுமன்ற கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்?

    டெல்லியில் ரூ.850 கோடி மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

    ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    இந்த நிலையில் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த வக்கீல் ஜெய்சுகீன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் என்று மனுதாரர் கூறி உள்ளார்.

    பாராளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், பாராளுமன்ற கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? நீங்கள் இந்த மனுவை என்ன நோக்கத்திற்காக தாக்கல் செய்துள்ளீர்கள்? இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக நாங்கள் உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறோம்.

    நாங்கள் வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு எடுத்தால் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரராகிய நீங்கள் சொல்கிறீர்கள். இந்த மனுவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் யாரை வைத்து திறக்க வேண்டும். எப்படி திறக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இதன் மூலம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க தடை இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே வக்கீல் ஜெய்சுகீன் தனது மனுவை திரும்ப பெற்றார்.

    • டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வரும் 28-ந் தேதி சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதை முன்னிட்டு அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த செங்கோலை கங்கை புனித நீரால் புனிதப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மேலும் அந்த செங்கோலை தயாரித்தவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும்.

    பெங்களூரு :

    டெல்லியில் 28-ந்தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. அந்த வரிசையில் மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், 'புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல' என தெரிவித்தார்.

    இதைப்போல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.

    அத்துடன் பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகளும் பங்கேற்க உள்ளதால் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    • புதிய ரூ. 75 நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது.
    • 35 கிராம் எடை கொண்ட புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

    புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது.

    இத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.

    இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவான 25 கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன. மறுபுறம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

    • பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில்.
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் (28-ந்தேதி) திறந்து வைக்க உள்ளார். நாட்டின் தலைவரும், முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 கட்சிகள் புதிய பாராளுமன்றக்கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிக்கின்றன.

    இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

    இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    மோடி அவர்களே, பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில். இது மக்களால் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகம், பாராளுமன்றத்தின் முதல் அங்கம் ஆகும். உங்கள் அரசின் அகந்தை, பாராளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதில் ஜனாதிபதியின் சிறப்பு உரிமையைப் பறித்து எடுத்துக்கொள்வதின்மூலம் நீங்கள் காட்ட விரும்புவது என்ன? இதைத்தான் 140 கோடி இந்தியர்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ராஞ்சியில் நேற்று நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜார்கண்ட் ஐகோர்ட்டு வளாகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார். ஆனால் ஒற்றை மனிதரின் எல்லாமே நானே என்ற அகந்தையும், ஆசையும்தான் டெல்லியில் 28-ந் தேதி பாராளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி திறந்து வைக்கும் அரசியல் சாசன சிறப்புரிமையை மறுக்கிறது.

    அசோகா மாபெரும் மன்னர். அக்பர் மாபெரும் மன்னர். மோடி திறப்பாளர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
    • திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இதனை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. ஆனால் ஜனநாயகத்தின் கோவிலாக திகழும் பாராளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    முக்கியத்துவம் வாய்ந்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர்.

    பிரதமரையும், மந்திரிகளையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.

    இதுபோன்ற சூழலில் புதிய பாராளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.

    இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    • புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும் என பேட்டி.
    • பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம்

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அதுவும் பெண் ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும்.

    பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது ஜனாதிபதி என்பதால், அவர் பாராளுமன்றத்தின் முக்கிய அங்கம். எனவே, புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும். அவர் பழங்குடியினர் என்பதால் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

    பழங்குடியினர் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை அழைத்து திறந்து வைக்க வேண்டும்.

    பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். பழங்குடியினரை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
    • ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை :

    புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது 1947-ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம். ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து அவர்கள் கையில் இருந்து நமது மக்கள் கையில் ஆளுமை கிடைத்தபோது, அந்த ஆளுமையை, பரிமாற்றத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி.

    அதை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவே அதில் பங்கேற்று அந்த பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது. செங்கோல் தான் அந்த பரிமாற்றம். அது நடந்த சமயம் இரவு 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளாக நடந்த விஷயம். அந்த பரிமாறுதல் அப்போது தான் நடந்திருக்கிறது.

    நாம் கொண்டாடக்கூடிய சுதந்திரம், அந்த பரிமாற்றத்தால் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆளுமை பரிமாறுதல் பூர்வீகத்தில் எப்படி நடந்தது என்பதை தேடி கண்டு பிடித்து இன்று வரை செய்கிறார்கள்.

    நாம் எந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோமோ அந்த ஆங்கிலேயர்கள் கூட இன்று அவர்களின் நாட்டில் 1670-ம் ஆண்டு வாக்கில் நடந்த அதே பாணியில் இன்றும் அங்கு அரசு பரிமாறுதல் நடக்கிறது. சுதந்திரம் என்பது செங்கோல் பரிமாற்றத்தால் கிடைத்தது.

    இந்த பரிமாறுதல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெருமையான பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை மாற்றும் போது இதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எப்படி செய்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று கேட்டனர். அந்த ஏற்புடையது என்ன என்பதை விவரிக்க அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் கலந்து ஆலோசனை செய்தார். ராஜாஜி பின்னர் ஆதீனங்களை கலந்தாலோசனை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக அது தரும தண்டம் எனப்படும் செங்கோல் என கூறப்பட்டது.

    அந்த செங்கோலை அன்றைக்கு உற்பத்தி செய்யவில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயத்தை அழகாக எடுத்து சொல்லி அதை இன்னும் நமது நல்ல காலமாக அதை தயார் செய்த உம்மிடி ஜூவல்லர்ஸ் பெரியவர்கள் இருவரும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சி பற்றி பேச தயாராக இருக்கிறார்கள்.

    புதிய கட்டிடத்தை நிர்மாணம் செய்த தொழிலாளர்களையும், செங்கோலை செய்து கொடுத்த உம்மிடி பெரியவர்களையும், பிரதமர் நரேந்திர மோடி 28-ந்தேதி பாராளுமன்றத்தில் கவுரவிப்பார்.

    புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுரி, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது.

    ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. மக்களுக்காகவாவது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பாராளுமன்றத்துக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

    செங்கோல் என்பது தமிழகத்துக்கு கவுரவமான, மிகப்பெரிய கவுரவம். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது. முன்பு ஜனாதிபதியை விமர்சித்தவர்கள்தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.

    சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.

    எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது.

    நேரு பிரதமராக இருந்த போது அவரிடம் வழங்கப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார்.

    மதுரைக்கே அரசியாக விளங்கும் மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல்தான் உள்ளது. திருவிழா நேரங்களில் செங்கோலுடன் தான் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார். மதுரை எனது பிறந்த மண் என்பதால் இதை சொல்கிறேன்.

    புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஷ்கரில் புதிய தலைமை செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டிட திறப்பு விழாவுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதலமைச்சர் தான் திறந்தார். ஆனால் இப்போது மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய் சுக்தேவ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

    அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

    இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அகில இந்திய அளவில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2022-23ம் நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கு மாறாக, பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்து வருகிறது. இதற்கு சமீபத்தைய காரணம் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாகும்.

    இதனால் 6 கோடி சிறு, குறு தொழில்களும் 11 கோடி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ.850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவுபடுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் தற்போது பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அழைக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும்.

    எனவே தான் 28-ந்தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

    இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×