search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • 1,486 சட்டங்களை மத்திய அரசு ஒழித்துக்கட்டிவிட்டது நினைவுகூரத்தக்கது.
    • வழக்கத்தில் இல்லாத சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்கான மசோதாவையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்தொடரும் கடந்த சில நாட்களாக சீன எல்லை மோதல் (தவாங்) விவகாரத்தால் முடங்கி வருகிறது.

    இரு சபைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்ததுடன் முடித்து விட மத்திய அரசு எண்ணுகிறது. ஆனால் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன.

    இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்ட மசோதாவை கடந்த 7-ந் தேதி பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதா, கூட்டுறவுத்துறையில் வெளிப்படையான தன்மைக்கும், பொறுப்புகூறலுக்கும் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி பல மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் போன்றவற்றுக்கும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் இந்த மசோதாவைபாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உரத்த குரல் எழுப்புகின்றன.

    இந்த மசோதா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டமானால், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக அமையும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.

    இந்த வாரம் இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு வர உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் புயலைக்கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த வாரத்தில், வழக்கத்தில் இல்லாத சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்கான மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இப்படிப்பட்ட 1,486 சட்டங்களை மத்திய அரசு ஒழித்துக்கட்டிவிட்டது நினைவுகூரத்தக்கது.

    கடல்சார் கொள்ளை தடுப்பு மசோதா, அரசியல் சாசனம் (பழங்குடியினர்) ஒழுங்கு 2-வது திருத்த மசோதா, 3-வது திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அரசியல் சாசன திருத்த மசோதாக்களும் தமிழ்நாட்டிலும், இமாசலபிரதேசத்திலும் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான மசோதாக்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க அரசுக்கு கோரிக்கை.
    • தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை விவாதிக்க அரசு மறுப்பதாக புகார்.

    அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் அத்து மீறிய சீனா ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 13ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    விதி எண் 267 இன் கீழ் சீன விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மேலும் பல காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவை நிகழ்ச்சி தொடங்கியதும், அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த ஹரிவன்ஷ் அதை அனுமதிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை  சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் அவை கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கோரும் விவாதங்களுக்கு அரசு அனுமதி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த கோருவதை ஏற்க இயலாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

    மேலும் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ்கள் அவை தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் அவையின் மையப் பகுதிக்கு சென்று அவர்கள் முற்றுகையிட்டதால் நண்பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

    • கடந்த ஓராண்டில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • அடுத்த 6 மாதங்களில் 50 கோடி சுகாதார கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 2018 ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்காக தினசரி ஏழு முதல் எட்டு லட்சம் சுகாதார அட்டைகள் அச்சிடப்படுகின்றன.

    அடுத்த 6 மாதங்களில் 50 கோடி அட்டைகள் பயனாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 22,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இணையதள தாக்குதல்கள் உள்பட அனைத்து வகையான ஊடுருவல்களில் இருந்தும் அணு உலைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டு உள்ளன.
    • இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் இயங்கி வருகின்றன.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, அணு உலைகள் மீது இணையதள தாக்குதல் நடப்பதை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு மத்திய அணுசக்தி இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    அணு உலைகளில் பல்வேறு மட்டங்களில் கண்காணிப்பு பணி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இணையதள தாக்குதல்கள் உள்பட அனைத்துவகையான ஊடுருவல்களில் இருந்தும் அணு உலைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டு உள்ளன.

    கூடங்குளத்தில், தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகள் அமைப்பதற்காக ரஷிய கூட்டமைப்புடன் அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

    இவற்றில் 2 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. மீதி 4 அணு உலைகளின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அவற்றின் மொத்த உற்பத்தி திறன் 6 ஆயிரத்து 780 மெகாவாட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவையில், அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    சமீபத்தில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சர்வர்கள் மீதான இணையதள தாக்குதல், சீனாவில் இருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சீனா நம்மை அழிக்க பார்க்கிறது. எல்லையில் மோதலில் ஈடுபடுகிறது. ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. சீனாவுக்கு எதிராக அரசு எப்போது சிவந்த கண்களை காட்டும்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியதாவது:-

    இந்தியாவில் முதல்நிலை மற்றும் 2-வது நிலை நகரங்களுக்கிடையே விமான போக்குவரத்து வசதி தாராளமாக உள்ளது. மூன்றாம்நிலை நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம்.

    கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 20 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் திட்டம் மூலம் கடைக்கோடி நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை கொண்டுவர விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவையில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 364 பேர், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இதுவரை மாநில, யூனியன்பிரதேச அரசுகளுக்கு எதிராக 60 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

    அவற்றில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 866 புகார்கள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக 2 லட்சத்து 72 ஆயிரத்து 552 புகார்கள் வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    நாடு முழுவதும் வாகனங்களின் தடையற்ற பரிமாற்றத்துக்காக 'பாரத்' என்ற புதிய பதிவு குறியீட்டுடன் பதிவு செய்யும் முறை, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 49 ஆயிரத்து 600 வாகனங்கள், 'பாரத்' குறியீட்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

    தி.மு.க. எம்.பி. கிரிராஜன் பேசுகையில், வடசென்னையில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கெட்ட வாயு கசிந்து வருவதாகவும், அதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
    • சமையல் எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.27276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன.

    சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் வரியை குறைக்கச் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மசோதாவை அறிமுகம் செய்தார்.
    • இன்று நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.

    இதையடுத்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதாவை, நேற்று முன்தினம் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
    • 2021-22-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 


    வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வாயிலாக ஷகாரி வக்பு விகாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வக்பு நிலங்களில், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வக்பு நிறுவனங்கள், வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

    அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி நிதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
    • பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான மாதாந்திர உணவு தானியங்களை, நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வாங்க முடியும். மேலும் பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தியும் உணவு தானியங்களை பெற முடியும்.

    இது குறித்து பண்பலை வானொலி நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒலி-ஒளி காட்சிகள், பதாகைகள் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள மேரா ரேஷன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 5076284.98 மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானியங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.அதில் 4087528.24 மெட்ரிக் டன் அளவிலான உணவு தானியங்களை தமிழக அரசு விநியோகித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை.
    • சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

    இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவது மற்றும் உற்பத்தி செய்வது என்ற எஃப்.ஏ.எம்.இ. திட்டம் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அந்த துறையின் இணை மந்திரி கிருஷன்பால் குஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    எஃப்ஏஎம்இ-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுச்சேரியில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உத்தரப்பிரதேசத்தில் 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி.
    • விளையாட்டு வீரர்கள் வெளிநாடு பயிற்சி முகாம்களில் பங்கேற்க அரசு நிதி வழங்குகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாவது:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கேலோ இந்தியா மையம் ஒன்றுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதித்துள்ளது. அம்மாநிலத்தில் மேலும் 23 பன்னோக்கு விளையாட்டு அரங்குகள் உட்பட 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி முகாம்கள் உட்பட விளையாட்டுக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகத் தரத்திலான பயிற்சி வசதிகளுக்குப் போதிய நிதியை அரசு வழங்குகிறது.

    கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான உதவி, ஒலிம்பிக் மேடை இலக்கு, இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின் விளையாட்டுகள் மேம்பாடு போன்ற திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப் படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் அடிப்படையில் அவற்றின் தொழில்நுட்ப சாத்தியம் மற்றும் திட்ட வழிகாட்டுதல்கள் மூலம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
    • செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.

    ஆனால் மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். 8 மாதங்களுக்கு பிறகு உண்மை இப்போது வெளிவருகிறது. இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    நேற்று கேள்வி நேரத்தின் போது, ​​வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அரசு அமைந்த பிறகு 2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேலே அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

    ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் இந்த அனல்பறக்கும் உரையானது வைரலாகி வருகிறது.

    • கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தினார்
    • வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    இந்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று அறிவிக்க வேண்டும். நிதி பகிர்வு செய்வதில் பதினைந்தாவது நிதிக்குழு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்வது என்பதை குறித்து ஒரு வரையறையை தீர்மானித்து இருக்கிறது.

    2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்வது என்கிற வரையறையால் தமிழ்நாடு பாதிப்புகுள்ளாகி இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தான் இந்திய ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒப்பிட்டளவிலே உத்தரபிரதேசத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தினுடைய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மையான மாநிலம். அதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    இந்த மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து ஒரு வரையறையாக வைத்து நிதி பகிர்வு என்கிற நிலையை கையாள்வதால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது.

    எனவே அதிக நிதி வருவாயை வழங்குகிற தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து டிபென்ஸ் காரிடாருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருக்கிறது. தமிழ்நாட்டிலே ஏற்கனவே ஆவடியில் டாங்கி தொழிற்சாலை இருக்கிறது, அதை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த ஒன்றிய அரசு இதுவரை பட்ஜெட்டில் மிக குறைவான முறையில் அளித்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது. கடந்த 2020ம் ஆண்டிலே 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறாக பொருளாதார கொள்கை தான் காரணம் என்பது தெரியவருகிறது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியிலே 4 சதவீதம் உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே அவர்களுக்கான வெல்த் டாக்ஸை குறைக்காமல் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை மதுரைக்கு இடையில் வந்தே பாரத் ரெயில் விட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    ×