search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    22 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்? என கேள்வி எழுப்பினார். #Loksabhaelections2019
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு பிரசாரம் செய்தார்.

    1998 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி திருசெங்கோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வாக்கு கேட்ட இடத்தில் இப்போது தமிழக முதல்வராக வந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பிரதமராக வருவதற்கு தனித்தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமை மிகுந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா? அல்லது திமுக உறுப்பினரா? என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டு விட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன.

    வைகோவுக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதையெல்லாம் நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்த கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்? இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திமுக தான். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.

    அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை கலைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காக ராகுல் காந்தியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு மோசமான நிலையிலா இருக்கிறோம்? முதல்வராக வேண்டும் அவர் கனவு எப்போதும் நிறைவேறாது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நான் கிளைச்செயலராக இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இப்போது முதல்வராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தை நிழலில் இருந்து கட்சிக்கு தலைவராகி இருக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு முதல் அமைச்சர் எட்பபாடி பழனிசாமி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உடன் இருந்தனர். #Loksabhaelections2019 #Edappadipalaniswami #MKStalin
    தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? இருளில் மூழ்க வைத்த தி.மு.க. எந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறது? சாதனைகள் எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதனால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள்.

    நடிகர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்து முதல்- அமைச்சராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் என்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மோடி தான் கதாநாயகன். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவார். அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministersellurraju

    கிராம மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பிரசாரம் செய்தார்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், பல கிராமங்களில் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் சட்ட மன்றத்திற்கு போட்டியிடும் தனக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது பேசிய வேட்பாளர் கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். இன்று காலை வெங்கம்பாக்கம், சட்ராஸ் மீனவகுப்பம், கல்பாக்கம், விட்டிலாபுரம், உள்ளிட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மரகதம் குமர வேல், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வீதி வீதியாக சென்று இரட்டைஇலைக்கு வாக்கு சேகரித்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர்.
    மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பலிக்காது என்று திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #mkstalin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க. ஸ்டாலினின் முதல்- அமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது.

    தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.க. தான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.க. தான்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #opanneerselvam #mkstalin

    வேலூர் தேர்தல் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. ரகசிய உறவு வைத்திருப்பதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கி தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.

    தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.

    மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

    கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல ‘அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை. நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்’ என்று பா.ஜனதா சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

    ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். ‘அந்தத் தீர்ப்பை மதிப்போம்’ என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ‘இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொன்ன டாக்டர் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

    அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?



    இன்னொரு புறம் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பா.ஜனதாவுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜனதாவுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?

    அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.

    அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

    ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜனதாவையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பா.ஜனதாவுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    தேர்தல் பிரசாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் இளங்கோவன் மீது வழக்கு தொடரப்போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
    தேனி:

    தேனியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து நான் மணல் அனுப்புவதாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின்போது பேசி உள்ளார். மேகதாதுவுக்காக நான் மணல் அனுப்புவதாக அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.


    அவதூறு பரப்பும் வகையில் அவர் இவ்வாறு பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேம். பிரசாரத்தின்போது தவறான தகவலை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். தேர்தல் பிரசாரத்தில் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இதேபோல் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி பொய்யான குற்றச்சாட்டை கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் வழக்கு  தொடரப்படும். காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வரலாற்று பிழையை செய்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தகுதியான நபராக இருந்தால் வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை என்றார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
    தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் 3 தொகுதிகளிலும் அவர் வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். சாலிகிராமம் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதிலும், நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணி விஷயத்திலும் விஜயகாந்த் கவனம் செலுத்தினார்.

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தன்னால் பேச இயலவில்லை என்பதை நிருபர்களுக்கு கை சைகை மூலம் விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.

    அதேநேரத்தில், தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயகாந்த், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளாதது தே.மு.தி.க.வினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் விஜயகாந்த் சார்பாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



    இந்தநிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும், இந்த தேர்தல் தர்மத்துக்கும்-அதர்மத்துக்கும் இடையே நடப்பதாகவும், இதில் தர்மம் வெற்றி பெறும் என்றும், 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தே.மு.தி.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருப்பினும் விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்? என்ற எதிர்பார்ப்பு மட்டும் தே.மு.தி.க.வினர் மனதில் இருந்து நீங்காத குறையாக இருந்தது. தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க. நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

    3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். #DMDK #Vijayakanth
    சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் பிரசாரம் செய்தார்.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிடுகிறார்.

    சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் தெர்டர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்க ளியுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ். ஆர். ராஜவர்மன் கேட்டு கொண் டார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீ காரம் அளிக்கும் வகையில் நடை பெறும் இந்த தேர்த லில் வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். சாத்தூர் தொகுதியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப் பட்டுள்ளன. சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, வைப் பாற்றில் ரூ. 13 கோடியில் மேம்பாலம், தாலுகா அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டிடம், நீதிமன் றத்திற்கு புதிய கட்டிடம், வெம்பக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய வருவாய் கோட்டம், புதிய ஐ.டி.ஐ. கல்லூரி, சாலைகள் விரிவாக்கம், ஏராளமான பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தியது.

    ரூ.3 கோடியில் இருக்கன் குடி குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிந்து ஆய்வு பணிகள் நடை பெறுகிறது.

    இன்னும் ஒருசில வாரங்க ளில் அனைத்து கிராமங் களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகள் இன்று திறந்து இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். தமிழக முதல்வர் சரியான வழக்கறிஞரை வைத்து வாதாடியதால் பட்டாசு ஆலைகள் திறக்க முடிந்தது என்றார். #ADMK
    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தலையில்லாத உடம்பு போன்றது என தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அத்துடன் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களையும் அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான லோகி ராஜன் (ஆண்டிப்பட்டி), மயில்வேல் (பெரியகுளம்) ஆகியோரையும் ஆதரித்து பேசினார்.



    முன்னதாக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் நரேந்திர மோடி என்றும், அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நாடே எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    “தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது. நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கிறார்கள். ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்சசெல்வம் பேசும்போது, நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டினார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது என்றும், தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    கூட்டதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    கூட்டணிக்காக அ.தி.மு.க.வை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை என்று, அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது பிரதமர் மோடி கூறினார். #PMModi #BJP #ADMK
    புதுடெல்லி :

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். ‘தினத்தந்தி’ குழும செய்தியாளர்கள் எஸ்.சலீம், அசோக வர்‌ஷினி ஆகியோர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டி கண்டனர்.

    அப்போது பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?

    பதில்:- நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். அது மட்டுமல்லாமல் வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் பணியாற்றும் காவல்துறையினர், இரவு-பகல் பாராது உழைக்கும் விவசாயிகள் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர். இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே. நாட்டு மக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

    கேள்வி:- சார்... நீங்கள் தற்போது 69 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... வாழ்க்கை உங்களை எப்படி நடத்துகிறது?

    பதில்:- என்னை விட சுகானுபாவர் இல்லை என்றே நான் கூறுவேன். இந்த ஜனநாயக நாட்டில், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பெரும் பணி எனக்கு கிடைத்து உள்ளது. இதனை பாக்கியமாக கருதுகிறேன்.

    கேள்வி:- ராகுல் காந்தி என்ற பெயரை கேட்டதும் தங்களின் மனதில் தோன்றுவது அன்பா? வெறுப்பா? அல்லது பகைமையா?

    பதில்:- இந்த மூன்றில் எதுவும் இல்லை.

    கேள்வி:- உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

    பதில்:- நான் குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி மதிப்பீடு செய்ய சொன்னால், நான் சாதாரணமானவன். பா.ஜ.க. அல்லது வேறு கட்சியினருடன் பாகுபாடு இன்றி பழகுபவன்.

    கேள்வி:- ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க.வில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே?

    பதில்:- ஸ்மிரிதி இரானி அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீ‌‌ஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை.. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை..

    கேள்வி:- ராகுல் மட்டுமல்லாது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அது அவர்களது குடும்ப கட்சி. எனவே அதனை காப்பாற்ற குடும்பத்தினர் பாடுபடுகின்றனர். செய்துதானே ஆக வேண்டும்.

    கேள்வி:- உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவின் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இதற்கு பதில் நான் முன்னதாக கூறி விட்டேன்.

    பா.ஜ.க. வடமாநில கட்சியா?

    கேள்வி:- கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?

    பதில்:- இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.



    கேள்வி:- தென்னிந்தியாவில் பா.ஜ.க. வளர்ச்சியடைய ஏன் சிரமப்படுகிறது?

    பதில்:- இல்லவே இல்லை... குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளோம். இதுபோல் தென்னிந்தியாவில் நாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கேள்வி:- கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி மக்களவை தேர்தலை எதிர்கொண்டீர்கள். ஆனால் தற்போது தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து கொண்டது ஏன்?

    பதில்:- திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 2014-ம் ஆண்டு எங்களது நோக்கம் வேறாக இருந்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். நாங்களும் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம். தற்போது, கூட்டணி வைக்க முடிவு செய்து போட்டியிடுகிறோம். இதற்கு முன்பும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து உள்ளது.

    கேள்வி:- மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக்காக தி.மு.க.வை தவிர்த்து, அ.தி.மு.க.வை தேர்வு செய்தது ஏன்?

    பதில்:- அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. பாராளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.

    கேள்வி:- ஆனால் ஒரு சில கட்சிகள், அ.தி.மு.க.வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே?

    பதில்:- அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா.ஜ.க.வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர்.

    கேள்வி:- ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி முழக்கமிடும் போது, தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். இதற்கு தங்களின் பதில் என்ன?

    பதில்:- தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சிறிய அளவிலான பங்குதாரர் மட்டுமே. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் முடிவடையாது.

    கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்குமா? அதன் நிலை என்னவாகும்?

    பதில்:- நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

    கேள்வி:- ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான வரி செலுத்துவதாக, புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனரே?

    பதில்:- இதில் உண்மை இல்லை. ஜி.எஸ்.டி வரிக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் (செக்போஸ்ட்) தலா இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, செலவானது. தற்போது அவை நீக்கப்பட்டதும் அத்தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்படுகிறது.

    கேள்வி:- அது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக கூறுகின்றனர். சாமானிய மக்களுக்கு இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறதே?

    பதில்:- இதில் உண்மை இல்லை. உணவகம் போன்ற இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. சாமான்ய மக்களும் பயன் அடைகின்றனர். இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    கேள்வி:- மத்திய பா.ஜ.க. அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா?

    பதில்:- கடந்த 1992-ம் ஆண்டு, மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு, பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்திய முதல் இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது.



    கேள்வி:- நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார். இதை, புகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறீர்களா? இல்லை சந்தேகத்தோடு பார்க்கிறீர்களா?

    பதில்:- இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. பந்து வீசுவதை போல, அவருடைய சமீபத்திய கருத்து இந்தியாவின் தேர்தலில் தலையீடு செய்வதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, இம்ரான்கான் வீசிய பந்தை எப்படி சிக்சர் அடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் தேர்தலின் போது, நவாஸ் ஷெரீப்பை அவர் எவ்வாறு விமர்சித்தார் என்றும் தெரியும். மோடியின் நண்பர் (நவாஸ் ஷெரீப்) ஒரு துரோகி என்றார்.

    கேள்வி:- உங்களுடைய 5 ஆண்டு பணியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? தேர்தலில் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன? குறிப்பாக தமிழகத்திற்கு என்ன செய்வீர்கள்?

    பதில்:- கடந்த 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை நிறைவேற்றப்பட்டு விடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய நாங்கள், முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

    கேள்வி:- ‘பி.எம். நரேந்திர மோடி’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு தேர்தல் கமி‌‌ஷன் தடை விதித்து இருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

    பதில்:- தேர்தல் கமி‌‌ஷன் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். நான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் பட்சத்தில், இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    கேள்வி:- பிரசார கூட்டங்களில் பாலகோட், புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதற்கு, உங்களிடம் தேர்தல் கமி‌‌ஷன் விளக்கம் கேட்டு உள்ளதே?

    பதில்:- தேர்தல் கமி‌‌ஷன் சுதந்திரமான அமைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் இதன் கட்டுப்பாட்டில் அடங்குவர். பா.ஜ.க.விடம் இது குறித்து விளக்கம் கேட்டால் அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும். தேச நலனுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் புகழை பேசக்கூடாது என தேர்தல் கமி‌‌ஷனின் விதிகளில் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.

    கேள்வி:- பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே?

    பதில்:- ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா? அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா? அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #BJP #ADMK
    மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அதிமுக தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும் என சட்டமன்றப் பேரவையில் நம் அம்மா ஒலித்திட்ட கடைசி சூளுரையை இதயத்தில் நிறுத்தி, நம் கருணைத் தாயின் அந்த நம்பிக்கையில் கடுகளவும் குறை நிகழ்ந்துவிடக்கூடாது எனும் குறிக்கோளோடு 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகத்தின் கூட்டணிக்கே வெற்றி என்னும் லட்சியத்திற்காகவும்; இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்தும் இலைத் தேர்தலாகும் என்னும் உறுதியோடும் அயராது உழைத்துவரும் கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளே, கனவுமிக்க இந்த இயக்கத்தை மடியிட்டு வளர்த்து வரும் அன்பிற்குரிய தாய்மார்களே, ஆற்றல் மிக்க செயல் மறவர்களே, கழகத்தின் பல்வேறு நிலைகளில் கடமையாற்றிவரும் கழக அடலேறுகளே!

    தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நம்மையும், நம் கழகத்தையும் வழிநடத்திய நம் அம்மா இல்லாத நிலையில், நாம் சந்திக்கும் முதல் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இது என்றாலும், நாம் அமைத்திருக்கும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் வென்று காட்டும் என்பது நிதர்சனமான உண்மை.

    இதனை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், கூலிக்கு மாறடிக்கும் சிலரையும் வைத்துக்கொண்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க திடமாக எண்ணி இருக்கும் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் போராடி வரும் நம் கழகத் தொண்டர்களின் எழுச்சியைத் தடுத்து, அவர்களிடையே ஒரு மனச் சோர்வை உருவாக்கிடும் யுக்தியோடும் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அடித்துக் குவித்து வைத்திருக்கும் அலைக்கற்றை பணங்களை இறக்கி, விதவிதமான விளம்பரங்களால் வாய்மையை வென்றுவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

    ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற பழக்கமோ, கவன சிதைவுக்கு ஆளாகிற வழக்கமோ நம் கழகத் தொண்டர்களுக்கு ஒருபோதும் இல்லை. “வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது” என்பது போல, கொண்ட குறிக்கோளை வென்றெடுப்பதில் இம்மியளவும் விலகாமல் சரித்திரம் படைப்பது தான் நம் கழகத்தின் வரலாறு.

    எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நமது பாதை சரியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம். இன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய நாமும், பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் மகத்தான சாதனைகளை, மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

    எஞ்சியிருக்கும் பணிகளை விரைவில் செய்து முடித்திடுவோம் என்கிற உளமார்ந்த உறுதியையும் அவர்களிடம் தருகிறோம். இதனால், அலை அலையாய் அணிவகுக்கும் மக்கள் இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள்.

    ஆனால், ஐந்து முறை ஆட்சி செய்த திமுகவும் சரி, ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும் சரி, தாங்கள் செய்த சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லாதவர்களாய்.... கச்சத்தீவை தாரை வார்த்ததும், காவிரி துரோகமும், இலங்கையில் அவர்கள் கரம் கோர்த்து நடத்திய இன அழிப்புப் படுகொலைகளும், அவர்கள் கண் முன்னே வந்து நிற்பதால், வெட்கப்பட்டுக்கொண்டு எடுத்துச் சொல்ல சாதனை எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் மீதும், கழகத்தின் மீதும், பாரதப் பிரதமர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள்.

    ஏற்கெனவே குற்றம் புரிந்தவர்களைக் கூட்டி வந்து, கொலைப் பழி சுமத்த சதித் திட்டம் தீட்டி மூக்கறுபட்டவர்கள், இனி என்ன செய்வது என்றே தெரியாத கையறு நிலையில் நின்றுகொண்டு கரன்சிகளை அள்ளிவிட்டு தி.மு.க.வின் அன்றைய திருமங்கலம் பாணியில் தேர்தல் ஜனநாயகத்தை விலைபேசத் திட்டமிடுகிறார்கள். இதற்கு சாட்சி தான்,



    தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் மலை மலையாய், கத்தை கத்தையாய் கைப்பற்றப்பட்டிருக்கும் கோடான கோடி பணம்.

    ஆனால், நெறிபிறழாத வழியில் எதற்கும் அஞ்சாது நாம் செய்த சாதனைகளை, நாம் மீட்டெடுத்த உரிமைகளின் பெருமைகளை மக்களிடம் வீடு வீடாய் எடுத்துச்சொல்லி ஓட்டு வேட்டையாடிவரும் எங்களின் உயிரினும் மேலான கழகக் கண்மணிகளுக்கும், கூட்டணி இயக்கங்களின் குலையா உறுதிகொண்ட தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நாம் தர்மத்தின் வழியில் நிற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, அகில இந்திய சூ.சு. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றோம்.

    மேலும், தோழமைக் கட்சிகளான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய புரட்சி பார்வர்ட் பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும், சங்கங்களும், கழகக் கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் உளமார்ந்த ஈடுபாட்டுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். இப்படி, மக்களை ஈர்க்கும் காந்தங்கள் எல்லாம் நம்முடன் இருப்பதோடு, புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரது மனமார்ந்த ஆசியும், வாழ்த்தும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் நமக்குள்ளது. அதனால், நம் கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. எனவே, வாக்களிக்கும் வைபவத் திருநாளான ஏப்ரல் 18 வரை கழக கண்மணிகள் அனைவரும் மிகுந்த விழிப்போடு கண் துஞ்சாமல் களப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

    நாம் வலைதளத்தில் மட்டுமே வாழும் கட்சி அல்ல. நாம் தரைதளத்தில் ஆழமாய் வேர்விட்டு ஆயிரம் ஆயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற ஆலவிருட்ச இயக்கம்.

    நாம் ஊடகங்களால் மட்டுமே தூக்கிப் பிடிக்கிற இயக்கம் அல்ல. ஊர் சனங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறை யாசனமிட்டு அமர்ந்திருக்கும் நிகரில்லா பேரியக்கம். இதனை கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சத்தில் நிறுத்தி, விரோதமும், குரோதமும், துரோகமும் திரை மறைவு கூட்டுவைத்து கழகத்தை வீழ்த்தலாம் என காணும் கனவை சுக்குநூறாக்கி, நாம் “கோடிச் சிங்கத்தின் தைரியம் குடியிருக்கும் வீரத்திருமகளின் வளர்ப்பு” என்பதை உறுதிசெய்யும் தருணம் இது.

    ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் ஆண்டு தவம் இருந்தானாம்; சொர்க்க வாசல் எப்போது திறக்கும் என்று. அப்போது ஒரு கணம் கண்மூடி திறந்திருக்கிறான்.

    அந்த இடைவெளியில் சொர்க்கவாசல் கதவு திறந்து மூடிக்கொண்டதாம். அதுபோல, சில நேரங்களில் சில வருடங்களை விட சில விநாடிகள் முக்கியமாகி விடும். ஆம், கழகத் தொண்டர்களாகிய நமக்கு இப்போதைய ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

    ஆளுக்கு ஒரு ஓட்டு, நம் அம்மாவுக்கு ஒரு ஓட்டு, நம் இல்லத்து ஓட்டோடு மக்கள் திலகத்திற்காக இன்னொரு ஓட்டு என்பதையும் நெஞ்சத்தில் நிறுத்தி கடமையாற்றிடவும், கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகில் இன்னொரு இயக்கம் இல்லை என்பதை சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து உணர்த்திடவும், எங்கள் அருமை கழகத் தொண்டர்களே, நீங்கள் அனைவரும் கண் துஞ்சாமல் கடமையாற்றிட அன்போடு வேண்டுகிறோம்.

    மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, கிளி தெரியவில்லை, கிளியின் கழுத்து மட்டுமே தெரிகிறது என்று சொல்லியடித்த மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அ.தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் உழைத்திடுவீர்.

    கழகத்தின் ஆட்சிக் கால பெருமையையும், நாம் காவேரி உரிமையை மீட்ட பெருமிதத்தையும், நீர்நிலைகளை தூர்வாரி நீராபானம் கொண்டு வந்ததையும், மின் மிகை மாநிலமாய் மீட்டெடுத்த பெருமையையும், நிலப்பறிப்பு, அபகரிப்பு இல்லாத நிம்மதியான சட்டம்-ஒழுங்கை நிகழ்த்தி காட்டிய சிறப்பையும், மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேன்மையையும், அரை நூற்றாண்டு கனவாகிய அத்திக்கடவுஅவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமையையும், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்த நம் மகோன்னதத்தையும் மக்களிடம் பணிவோடு எடுத்துரைத்து வாகைத் தோரணம் அமைப்போம்.

    நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றியையும், இம்மியளவும் குறையாத வகையில் இடைத்தேர்தலில் மொத்த வெற்றியையும் ஒருசேர வென்றெடுத்து, வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் சாய்ந்துறங்கும் நம் தங்கத் தாரகையாம் அம்மா, பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது பொற்பாதக்கமலங்களில் காணிக்கையாய் சமர்ப்பிப்போம்; அ.தி.மு.க.வின் கூட்டணிக்கே மகத்தான வெற்றி என்பதை இனிப் பாக்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Loksabhaelections2019 #ADMK #EPS #OPS
    மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் நேற்று தபால் வாக்குப்பதிவு செய்த போலீஸ்காரர்களிடம் ஓட்டு கேட்டார்.

    இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கமீனா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LoksabhaElections2019

    ×