search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    ஊராட்சி சபை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29-ந்தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வக்கீல் மனோகரன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அதில் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



    அப்போது, அரசு வக்கீல் மனோகரன் ஆஜரானார். நீதிபதி முரளிசங்கர் விசாரணை நடத்தினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் காலநீட்டிப்பு தேவைப்பட்டால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் மூலம் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Edappadipalanisamy #MKStalin
    கடந்த 5 ஆண்டு ஆட்சியில் 13 பேரை சுட்டுக் கொன்றது தான் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினரின் சாதனை என்று தூத்துக்குடியில் கனிமொழி பேசியுள்ளார். #kanimozhi #admk #bjp

    தூத்துக்குடி:

    முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசி தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளின் 5 ஆண்டு ஆட்சிகளில் தூத்துக்குடியில் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் இவர்கள் வேலை வழங்கவில்லை. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புல்லட் ரெயில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதை விட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தான் முக்கியம். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க.வினரின் 5 ஆண்டு ஆட்சியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தான் இவர்களின் சாதனையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #admk #bjp

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை தென்சென்னை தொகுதியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பிரசாரத்தை தொடங்கி 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (சனி) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    31-ந்தேதி (ஞாயிறு) பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
    #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #ADMK #KCPalanisami
    புதுடெல்லி:

    அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ‘அதிமுகவில் பொதுச்செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.


    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது மனுதாரர் கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதிமுக வேட்பு மனுவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #DelhiHC #ADMK #KCPalanisami
    விவசாயி முதல்வரானது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் திறமையானவரை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

    ஸ்டாலின், அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நமது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கொள்கை இல்லாதவர் என்று கூறுகிறார். பா.ம.க.வினர் கொள்கையுடன் செயல்படுபவர்கள். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களது முடிவு. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை படுதோல்வி அடைய செய்வோம்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கணக்கிட்டு பார்க்கும் போது அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி 40-க்கு 40 கண்டிப்பாக வெற்றிபெறும்.

    தி.மு.க.வினர், எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர். அழகு நிலையத்திலும், பிரியாணி கடையிலும், செல்போன் கடையிலும் பெண்களை தாக்கியவர்கள் யார் என்று எல்லாம் உங்களுக்கு தெரியும்.

    கோடநாடு கொலை வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினர் கூறினர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். பொய் குற்றச்சாட்டுகள் கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவண்ணாமலையில் காலி இடம் இருந்தால் போதும் தி.மு.க.வினர் உடனே பட்டா போடுவதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் சென்றது. உடனே ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு ஒன்றை தொடங்கி நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து அதனை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது உள்ள வழக்கில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் எங்களை பற்றி பேச தி.மு.க.வினருக்கு என்ன தகுதி உள்ளது.

    ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். இதுபற்றி நான் நேருக்கு நேர் பேச தயார், அவர் என்னிடம் மேடையில் விவாதித்து பதில் அளிக்க முடியுமா?. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.

     


    கடந்த 2 ஆண்டுகளில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழகம் தான். ஒரு பிரச்சினையை சமாதானம் செய்து வைத்தால் இன்னொரு பிரச்சினையை அவர்கள் தூண்டி விடுகின்றனர். ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது. தேர்தலை காரணம் காட்டி அதை தடுத்தி நிறுத்தியவர்கள் தி.மு.க.வினர். தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தேர்தலில் தி.மு.க. விற்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி மற்றும் போளூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அந்த பரிசை மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். மேலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் மக்களை ஏமாற்றும் போலியான தேர்தல் அறிக்கையாகும்.

    தி.மு.க.வில் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என்று குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். 40, 50 ஆண்டுகாலமாக கட்சியில் கஷ்டப்பட்டாலும் தொண்டர்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது. ஆனால் அ.தி.மு.க. வில் சாதாரண தொண்டனுக்குகூட பெரிய பொறுப்புகள் வரும். ஏன், என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு விவசாயி முதல்- அமைச்சராகிவிட்டான், நாம் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

    சாதாரண விவசாயியான நான் முதல்வரானது. ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. மண் வெட்டியை பிடித்து உழைக்கும் விவசாயி முதல்வராக கூடாதா?,

    தமிழகத்தில் விவசாயிகள் 65 சதவீதம் பேர் உள்ளனர். விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, குடிமராமத்து பணிக்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #EdappadiPalaniswami

    திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்று ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தென்மாவட்டத்தில் பா.ம.கவுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அறிவித்துள்ள மாதம் ரூ.6000, ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை திட்டமானது மாதவருமானம் ரூ.1000-க்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் யாரும் பயன்பெற முடியாது.

    காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. அதேபோல் 18 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வதாக கூறியுள்ள திட்டங்களை அப்போது ஏன் செயல்படுத்தவில்லை.

    ஊழலில் கூட்டணி அமைத்த காங்கிரஸ், தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. பதவி சுகம், வெற்றிக்கனவு ஆகிய அனைத்தும் தேர்தலுக்கு பின் தி.மு.க மறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.

    அந்த ஆசை கருணாநிதியோடு முடிந்துவிட்டது. மு.க.ஸ்டாலினுக்கு கடமையும், கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்தால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு பா.ம.க துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 10 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    ஊட்டி:

    நீலகிரி(தனி) பாராளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

    நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் 9 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவார்கள்.

    இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உடன் இருந்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மா.தியாகராஜன், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் (சுயேச்சை) எம்.ராமசாமி, சுயேச்சை வேட்பாளர்கள் அவினாசியை சேர்ந்த ஆறுமுகம், மஞ்சூர் அருகே கைகாட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி, கோவையை சேர்ந்த நாகராஜன், குன்னூர் அருகே எடப்பள்ளியை சேர்ந்த ராஜரத்தினம், ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்த ராஜா ஆகிய 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    நாம் தமிழர் கட்சி சார்பில், ஊட்டி அருகே நஞ்சநாடு கக்கன்ஜி பகுதியை சேர்ந்த மணிமேகலை தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில், மாற்று வேட்பாளராக குன்னூர் நகராட்சி முன்னாள் தலைவர் சரவணகுமார் வேட்புமனுவும் தள்ளுபடி ஆனது. சுயேச்சை வேட்பாளர்கள் கலைச்செல்வன், பந்தலூரை சேர்ந்த விஜயானந்தா கண்ணபிரான், காமராஜ் என மொத்தம் 5 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #nrcongress #admk
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதுவையில் பிரசாரம் செய்தார்.

    மதகடிப்பட்டு, வில்லியனூர், ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், மரப்பாலம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி. மு.க.கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர்கள் 2 பேரையும் தேர்வு செய்தால் புதுவையின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

    புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைவதில் நல்ல உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள். புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கை மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் மாநில அந்தஸ்து பெற்றுத்தர உறுதியாக செயல்படுவார். இந்த முயற்சிக்கு அ.தி.மு.க. உறுதுணையாக நின்று முழு முயற்சி எடுக்கும். புதுவையில் 3 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. மக்களுடைய தேவைகளையும், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. மாநில மக்கள் வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். ஏதோ ஒரு நாடகம் நடத்துவது போல ஆளும் கட்சி நடந்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர பேசினார். #opanneerselvam #nrcongress #admk
    ஆளும் கட்சி சார்பில் ஊழியர்கள் கூட்டம் என்ற பெயரில் பணம் வினியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #admk #kbalakrishnan

    ஈரோடு:

    ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கிளர்ந்து எழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு பக்கம் காவல் துறையின் மெத்தனமும் தவறும் இருக்கிறது.

    சமூக வலைதளங்களில் ஏராளமான ஆபாச படங்கள் வருகின்றன. இது ஒட்டு மொத்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    விவசாயிகளை கைது செய்வதற்கு போலீசார் காட்டும் ஆர்வத்தை பொள்ளாச்சி பாலியல் வழக்கில்ஆர்வம் காட்டாதது ஏன்?. பொள்ளாச்சி சம்பவம் நடந்து தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெற்றோர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அது அடங்காத நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த வழக்கில் இன்னும் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வில்லை. பாலியல் வன்முறை, சமூக விரோத சக்திகளில் ஈடுபடும் குற்ற வாளிகளை அரசு பாதுகாக்கிறது.

    ஜனநாயக உரிமைக்காக போராட கூடியமக்களையும் விவசாயிகளையும் தொழி லாளர்களையும் அடக்கு முறைகளை ஏவி அடக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நியாயமான உரிமைக்காக போராட கூடிய விவசாயிகள் மீது வழக்குப் போடுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும், 18 சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை உச்ச நீதிமன்றத்தில் மீதமிருக்கும் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் 4வது தொகுதியாக சூலூர் தொகுதியையும் சேர்த்து மே மாதம் 13-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.

    ஆளும் கட்சி சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு ஊழியர் கூட்டம் என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். பல இடங்களில் பணம் வினியோகிப்பதை வாட்ஸ்- அப் மூலமாக படம் வந்திருக்கிறது.

    ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன தான் ஆளுங் கட்சியினர் பண விநியோகம் செய்தாலும், வரம்பு மீறி சலுகைகள் அளித்தாலும் இந்த முறை வாக்காளர்களை பொறுத்தவரை பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.

    முகிலன் காணாமல் போய் 1½ மாதங்கள் ஆகி இருக்கிறது. அவர் இருக்கிறாரா இல்லையா? என்பதே சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக முகிலனை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #admk #kbalakrishnan

    அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். #LokSabhaElections2019 #ADMK #Ramadoss
    ஆரணி:

    ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூரில் பிரசாரம் செய்தார். ஆரணியில் அவர் பேசியதாவது:-

    ‘‘சென்னையில் இருந்து கொண்டுதான் அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் நான் மட்டும்தான் கிராம பகுதியில் இருந்துகொண்டு விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு அரசியலையும் நடத்துகிறேன். இதனால் விவசாயிகளின் பிரச்சினைகள் எனக்கு தெரியும்.

    எங்கள் கட்சியில் மத்திய மந்திரியாக அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி, அன்புமணி போன்றவர்கள் காலத்தில் ஏராளமான ரெயில்வே துறையில் அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 108 அவசர ஆம்புலனஸ் திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது.

    அந்த திட்டங்கள் தொடர இந்த மெகா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் மறந்து கூட எதிரணிக்கு ஓட்டு போடாதீர்கள்’’ என்றார்.

    தேர்தல் பிரசாரத்தில் எல்லா கூட்டங்களிலும் மக்களிடையே ஒரு எழுச்சி தெரிகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி உங்களில் ஒருவர். அவரது வெற்றிக்கு இரவு பகலாக பாடுபட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இந்த மெகா கூட்டணி அமைக்ககாரணம் என்ன வென்றால் இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அமைக்கப்பட்டதாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 500 கடைகளை மூடி, படிப்படியாக கடைகள் மூடப்படும் என்றார். அதை நாங்கள் தற்போது கூறி வருகிறோம். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சாராய ஆலைகளை வைத்து நடத்தி வருகிறார்கள். தி.மு.க. அரசு மக்களுக்கு, தமிழ் வளர்ச்சிக்கு, சமூக நீதிக்கு எதுவும் செய்யவில்லை. வெற்றி நமக்கு உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #Ramadoss



    இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் பிரதமர் மோடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #TNMinister #RajendraBalaji #PMModi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்று கூறி உள்ளார். அவருக்கு வேண்டுமானால் வில்லனாக தெரியலாம். ஆனால் இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் மோடி. நாட்டுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்க்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர். சமூக விரோதிகளுக்கு தான் மோடி வில்லன்.

    ராகுல்காந்தி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை மோசடியானது. கனிமொழியின் தாயார் தனது மகள் ஜெயிக்க வேண்டும் என்று கோவிலுக்கு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் பதவிக்கு நிற்ககூட தகுதியில்லை என்று கூறியவர் வைகோ.

    ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினுடன்தான் வைகோ கூட்டணி வைத்துள்ளார். தி.மு.க. போட்ட வழக்கில்தான் ஜெயலலிதா மனஉளைச்சல் அடைந்தார். அவரது இறப்புக்கு தி.மு.க.வும் காரணம்.

    தினகரன் அனுதாபத்தால் ஓட்டு வாங்க முடியாது. அவர் சர்வாதிகாரிபோல் நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அ.தி.மு.க. தான் ஆளப்போகிறது. தி.மு.க. அதை பார்க்கப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNMinister #RajendraBalaji #PMModi
    அதிமுகவுடன் வருகிற தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK
    திருப்பூர் :

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணனை ஆதரித்து பல்லடத்திலும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து வெள்ளியங்காடு நால்ரோடு, எம்.எஸ்.நகரிலும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுக-தேமுதிக கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக-தேமுதிக கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளுடன் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் போற்றும் கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. கருத்து கணிப்புகளில் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று தெரிவிக்கிறது. நாட்டை காப்பதற்கு பிரதமர் மோடி வர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவமாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை. மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்.

    அதிமுக, தேமுதிக கட்சிகள் ராணுவ கட்டுப்பாடு கொண்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திரையுலகில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கு நல்லதை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி தேர்தல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியுடன் தொடரும்.



    பல்லடம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில் அதிகம் உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் வெற்றி பெற்றதும் டெல்லி சென்று நெசவாளர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காடா துணி தயாரிப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.

    பின்னலாடை நகரான திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், 4-வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றால், போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்.

    தென்னிந்திய நதிகளை இணைத்தால் நாடு வல்லரசாகும். தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைப்படுத்தப்படும். வேற்றுமைகளை மறந்து தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி கொங்கு மண்டலம் அதிமுக வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×