என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
13 பேரை சுட்டுக் கொன்றது தான் அதிமுக-பாஜகவினரின் சாதனை- தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு
தூத்துக்குடி:
முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசி தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளின் 5 ஆண்டு ஆட்சிகளில் தூத்துக்குடியில் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் இவர்கள் வேலை வழங்கவில்லை. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புல்லட் ரெயில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதை விட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தான் முக்கியம். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க.வினரின் 5 ஆண்டு ஆட்சியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தான் இவர்களின் சாதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #admk #bjp
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்