search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் படுதோல்வி அடையும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk #dmk

    மதுரை:

    மதுரை பாண்டி கோவிலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணபலம்தான் உள்ளது. மக்கள் பலம் இல்லை. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் எண்ணம் எடுபடாது. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெறும். அ.ம.மு.க. கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம்.


    ஜெயலலிதாவுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. அ.தி.மு.க.வை கேவலமாக விமர்சித்த பா.ம.க.வுடனான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி யாகும்.

    விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சிப்பது தவறான செயலாகும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் தேர்தலில் படுதோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெற்று தமிழக உரிமைகளை பெற பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #dmk

    சோழிங்கநல்லூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #ADMK #ADMKCadres #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சோழிங்கநல்லுரில் அ.தி.மு.க. கொடி கம்பம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டபோது எஸ்.பாபு மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தை அறிந்து துயரம் அடைந்தோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #ADMK #ADMKCadres
    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    சேலம்:

    சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?

    பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே?


    ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தான் வருகிறார். குமரி மாவட்டத்திற்கும் அதுபோல தான் வருகிறார்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    பாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி உள்ளார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என்று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.

    பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆன பிறகு மீண்டும் நரேந்திர மோடி மனதின் குரல் மூலம் மக்களுடன் ரேடியோவில் பேசுவார்.



    பிரதமர் ரேடியோவில் பேசும்போது மக்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார். மக்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அதற்காக பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. நாகர் கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி, திங்கள்நகர், தக்கலை, புதுக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #DMDK
    ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தார்.

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சபா நாயகர் முடிவில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சக்கரபாணி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இதன் மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்றது. இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது. இறுதி விசாரணை முடிந்தால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.



    இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தி.மு.க., டி.டி.வி. தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது.

    ஆனால் விரைவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    திருச்சி:

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதற்கு சான்றாக இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு ஜெயலலிதா வழங்கியதுபோல, எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தொய்வின்றி வழங்கி வருகிறார். குறிப்பாக பொங்கல் பரிசு, 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் தவணையையும் வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

    கே: அ.தி.மு.க. கூட்டணி முழு வடிவம் பெறுவது எப்போது?

    ப: அதற்கான வடிவம் ஏற்கனவே அமைக்கப்பட்டு தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் அந்த அமைப்பில் உள்ளனர். அவர்கள் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள். அது ரசகியம் தான். கூட்டணி இறுதி வடிவம் பெற்றதும் அறிக்கை வெளியிடப்படும்.


    கே: அ.தி.மு.க.வில் தே.மு.தி.க. இடம்பெறுமா?

    ப: ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே ரகசியம்தான். எனவே தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பதும் ரகசியம்தான்.

    கே: அ.தி.மு.க. மீண்டும் திருச்சி தொகுதியை தக்க வைக்குமா?

    ப: அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திறமைக்கு உரியது. தற்போது நாங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ThambiDurai #ADMK
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அரசு நிலைப்பாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கான திட்டம். இது குறித்து பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோடி அரசானது விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அடிப்படையில் தான் இது தரப்பட்டிருக்கிறது.

    எந்த திட்டங்கள் ஆனாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல திட்டங்களை அறிவிப்பார்கள். அதே போல் இந்த மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. திட்டங்களை குறை சொன்னால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்.



    பின்னர் அவரிடம் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-

    2006 ம் ஆண்டு வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பலரின் பெயர் விடுபட்டிருப்பது உண்மை தான். விடுபட்டவர்களை தான் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதிகாரிகள் ஆய்வு செய்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக ரூ.2000 கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்காகத்தான் மனுக்களை பெற்று வருகின்றோம் என்றார். #ThambiDurai #ADMK
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK #DMDK
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது

    ரியல் எஸ்டேட் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மக்களுக்கு இலவசம் தருவதை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது. அ.தி.மு.க. அரசு மக்கள் நல அரசு, சமூக நீதிக்கான அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 5 லட்சம் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அதேபோல் 3.5 லட்ச காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

    எல்லோருக்கும் அரசு வேலை என்பது எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அதனால் பெண்கள், இளைஞர்கள் தொழில் முனைவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவது, பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், நெசவாளர்கள் போன்றவர்களுக்கு பல சலுகைகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. இது எல்லாம் தவறா? வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையாக 2,000 தருவது எந்தவிதத்திலும் தவறல்ல.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் தான் தேர்தல் கூட்டணி. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அதனால் தான் அரசியல் நாகரீகங்களுக்கு அப்பாற்பட்டு எங்களை கண்டபடி திட்டுகிறார்.

    டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.

    கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது.



    ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம்.

    தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூரில் உள்ள பள்ளியில் இன்று, காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை.

    மு.க.ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது தலைவனாக இருப்பதற்கு அழகல்ல.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரும் மனுவை கவர்னர் இதுவரை நிராகரிக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி கவர்னர் முடிவு எடுக்க அரசு வலியுறுத்த முடியாது” என்றார். #MinisterJayakumar #ADMK #DMDK
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ஜனதா மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. #ADMK #Vijayakanth #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு முதன் முதலில் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்தனர்.

    அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற சம்மதித்த விஜயகாந்த் முதலில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க.வுக்கு அதிக இடங்களை ஒதுக்க இயலாத நிலைக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.

    இதன் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க. கூட்டணியிலும் சுமூக நிலை உருவாகவில்லை.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்குமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 23 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதியை வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

     


    அதுபோல தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 22 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதிகளை வைத்துக் கொண்டு 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தே.மு.தி.க. குறைந்தபட்சம் 7, அதிகப்பட்சம் 9 என்ற எண்ணிக்கையில் இரு அணிகளிடமும் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

    தே.மு.தி.க. விரும்பும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. இரு கூட்டணியிலும் தொகுதிகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாக உள்ளது. என்றாலும் 5 முதல் 7 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் 40 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் அறிவிப்பை தே.மு.தி.க. மேலிடம் வெளியிட்டுள்ளது. விருப்ப மனு வாங்கும் கால கட்டத்துக்குள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிடமும் தொடர்ந்து பேசி எந்த அணியில் சாதகமான நிலை வருகிறதோ அங்கு சேரலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அங்கு சேர்ந்து விடலாம் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே எந்த கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது தே.மு.தி.க.வின் இலக்காக உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி தி.மு.க.- அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. அதற்கேற்ப தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இதுவரை தே.மு.தி.க. பிடி கொடுக்கவில்லை. இதனால் இழுபறி நீடித்தப்படிதான் உள்ளது.

    இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா தலைவர்கள் தற்போது மும்முரமாகி உள்ளனர். நேற்று சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், “எப்படியாவது தே.மு.தி.க.வை நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுங்கள். இதற்காக மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். விஜயகாந்தை விட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

    தே.மு.தி.க.வை இழுப்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி பியூஸ்கோயல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் புதியதாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்று பியூஸ்கோயல் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் விஜயகாந்தை திருப்தி செய்து தங்கள் அணிக்குள் கொண்டுவர முடியும் என்று பியூஸ்கோயல் கருதுகிறார்.

    கூடுதல் தொகுதிகளுக்கு தே.மு.தி.க. சம்மதிக்கும் பட்சத்தில் தொகுதி பங்கீட்டை உடனே முடிக்கவும் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் விரைவில் மீண்டும் சென்னை வர உள்ளார்.

    அவர் தே.மு.தி.க. தலைவர்கள் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை சந்தித்து இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா சமரசம் செய்தாலும் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே பா.ஜனதா புதிய சமரச திட்டத்தை தே.மு.தி.க. ஏற்குமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

    இதுகுறித்து தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பினரிடமும் பேசி வருகிறோம். 5 முதல் 8 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி உறுதியாகி விடும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதும் கூட்டணி அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்” என்றார்.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்துக்கு தே.மு.தி.க. எந்த முடிவையும் அறிவிக்காது என்று கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் தே.மு.தி.க.வை சமரசம் செய்து தங்கள் அணியில் சேர வைப்பதற்கு தி.மு.க. மூத்த தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    எனவே தே.மு.தி.க. எந்த கூட்டணி பக்கம் சாயும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. #ADMK #Vijayakanth #BJP

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

    ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



    ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

    மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

    வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

    அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



    அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    சென்னை:

    சென்னையில் ஜெ. பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    சென்னையில் ரூ 79 ஆயிரம் கோடியில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.  

    இன்னும் 3, 4 ஆண்டுகளில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளோம்.

    காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்?  மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி. திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப் பதவிக்கு வர முடியும்.


    இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் ஸ்டாலின். ராகுல் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறிய கருத்தை ஏற்க முடியாதென சந்திரபாபு நாயுடு கூறிவிட்டார்.

    தொழில்வளம் பெருக காரணம் அதிமுக அரசு தடையில்லா மின்சாரம் அளித்தது தான். உபரிமின்சாரம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    ×