search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுக்கட்சியை தொடங்கிய அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசிவரும் தினகரன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

    தமிழக நலனில் அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு என்றும், துரோக ஆட்சி நடைபெறுகிறது என்றும் தினகரன் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் களத்திலும் இதனையே பலமான கோ‌ஷமாக எழுப்ப தினகரன் திட்டமிட்டுள்ளார்.



    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மோடி அரசுக்கு எதிராகவே பிரசாரம் செய்தார். மோடியா? இந்த லேடியா? என்றே சவால் விட்டார்.

    இந்த தேர்தலில் அதே பாணியை பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபட தினகரன் திட்டமிட்டுள்ளார். 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண முடிவு செய்துள்ள தினகரன் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கமே இருப்பதாக கூறிக்கொள்ளும் தினகரன், அது நிச்சயம் தனக்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும் என்றே கணித்துள்ளார்.

    அதே நேரத்தில் மேகதாது, முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து விட்டதாகவே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் கையில் எடுத்து தினகரன் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்ற தினகரன் அதன் பின்னர் அரசியல் களத்தில் பேசப்படும் நபராகவே மாறினார்.

    எனவே பாராளுமன்ற தேர்தல் களத்திலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 அணிகளுக்கும் தினகரன் சவாலாக இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
    ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர். #ADMK #EPS #OPS #Jayalalithaa
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித் தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர். ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர்.

    தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மாலை அணிவிக்க உள்ளனர்.

    அம்மா விரும்பியபடி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS #Jayalalithaa
    முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP #PMK
    சேலம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    சூரமங்கலம் பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:-

    தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில் அற்புதமான கூட்டணி உருவானதை பார்த்திருப்பீர்கள். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தமிழக மக்கள் விரும்பாத கட்சிகள், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி, இந்த ஆட்சி மீது சி.பி.ஐ. விசாரணை தேவை என்று ஓரிரு வாரங்களுக்கு முன்பாக மனு கொடுத்த கட்சி போன்ற கட்சிகள் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு ஒன்றாக கிணற்றில் குதிப்பது போன்ற அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்கள்.

    தமிழக மக்கள் என்றைக்கு இந்த ஆட்சி முடியும் என்று காத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக தேர்தல் வர இருக்கிறது. நீங்கள் அளிக்கும் உங்களின் ஒவ்வொரு வாக்கின் மூலம் தமிழகத்திற்கு விரோதமான கூட்டணிக்கு முடிவு கட்ட வாய்ப்பு வந்திருக்கிறது.

    ஒரு கூட்டணி பண மூட்டையோடு வரும். மற்றொரு கூட்டணி கட்சியின் பலத்தைக் காட்டுகிறேன் என்று வரும். அவர்கள் ஆண்ட கட்சி, மத்தியில் 16 வருடங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து உங்களின் வாக்குகளை வீணடிக்காமல், தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்திட, தமிழகம் தலைநிமிர்ந்திட, தன்னிறைவு பெற்றிடும் மாநிலமாக திகழ்ந்திட குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த கூடாது, தமிழக விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா.

    ஆனால் அவரது பெயரை சொல்லிக் கொண்டு தற்போது ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் காலில் விழுந்து ஏவல் அரசாக மாறி விட்டது.



    ஏற்றி விட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தனது பக்கம் இழுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அவர் ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக அல்ல. இதனை சேலம் மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொண்டு வரும். தமிழர் வாழ்வு மலர நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளன. வரப்போகின்ற தேர்தலுடன் முடியப் போகிற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இடுப்பில் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு எல்லோரும் கிணற்றுக்குள் குதிப்பதுபோல கூட்டணி அமைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு பலரையும் அழைக்கிறார்கள். அந்த கூட்டணிதான் எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.

    தே.மு.தி.க. எங்களுடன் கூட்டணிக்கு பேசவில்லை. நாங்களும் அவர்களுடன் பேசவில்லை. வைகோ வயதில் பெரியவர். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரைப்பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

    எங்களுக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்.

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மனோஜ் முன்ஜாமீனை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதில் இருந்தே அவர் மடியில் கனம் உள்ளது தெளிவாகிறது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். உண்மை எல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP #PMK
    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #PublicExam #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

    இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.

    பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது.



    இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார். #PublicExam #Sengottaiyan
    அதிமுக- பாமக இணைந்தாலும் திமுகவை தோற்கடிக்க யாராலும் முடியாது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
    சென்னை :

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்திலும், பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பேசிய தாவது:-

    ஊராட்சி சபை கூட்டம் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க பயன்பட போகிறது. இது கட்சிக்காக நடத்தக்கூடிய கூட்டம் அல்ல.

    உங்கள் பிரச்சினைகளை எல்லாம் நானே மாவட்ட கலெக்டரிடம் பேசி, என்னென்ன பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்று செய்யச்சொல்லி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இப்பிரச்சினைகள் எல்லாம் இருந்திருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போகிறோம்.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா கூட்டணி சேர்ந்திருக்கிறது. பா.ஜனதாவுடன் சேரக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னது ஜெயலலிதா. நீட் தேர்வு கொண்டு வந்த பா.ஜனதாவுக்கு பக்கபலமாக ஊழல் அ.தி.மு.க. சேர்ந்து உள்ளது.

    பா.ஜனதா தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்பது அ.தி.மு.க.வுக்கு தெரியும். வாங்குகிற ஓட்டுகூட பா.ஜனதாவுடன் சேர்ந்தால் கிடைக்காது என்று நன்றாக தெரியும். தெரிந்தும் சேர காரணம் பயம். மிரட்டி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது.

    கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த ஆட்சியை பற்றி அ.தி.மு.க. என்ற ‘கழகத்தின் கதை’ என்று சொல்லி, அ.தி.மு.க.வினர் அடித்து கொண்டிருக்கிற கொள்ளை, ஊழல்களை புத்தகமாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்.

    உயிரே போனாலும் அ.தி.மு.க.வுடன் சேர மாட்டோம். திராவிட இயக்கங்களின் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம் என்று சொன்னவர்கள் பா.ம.க. தலைவர் மற்றும் அந்த கட்சியில் இருப்பவர்கள். ஆனால், இன்றைக்கு சேர்ந்திருக்கின்றார்கள் என்றால் ஏதோ ஒரு ஆசை தான் காரணம். என்ன தான் கூட்டணி வைத்தாலும், தி.மு.க.வை தோற்கடிக்க யாராலும் முடியாது.

    ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா, பா.ம.க.வுடன் சேரவில்லை. பா.ம.க.வை ஒழிப்பது தான் முதல் வேலை என்றார் ஜெயலலிதா. அதேபோல் ஜெயலலிதாவை ஒழிப்பது தான் எங்கள் முதல் வேலை என்று டாக்டர் ராமதாஸ் சொன்னார். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களோடு கூட்டணி வைத்து இன்றைக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    மோடி அரசு இப்போது திடீரென விவசாயிகளுக்கு 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் கொடுக்க போவதாக அறிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுகிற பொய். ஆகவே இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #kadamburraju #admk

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் நல திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் மணிராஜ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு காயல்பட்டினத்தில் 5 இடங்களில் ரூ. 90 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டியும், ரூ 1.90 கோடி செலவிலான சாலை பணிகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பயோகேஸ் திட்டம், நகராட்சியில் சேவை குறைபாடுகள் மற்றும் ஆலோசனை பதிவு மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    காலத்திற்கேற்ப மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை உணர்ந்து நிறைவேற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக இந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நோன்பு காலங்களில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும், ஹஜ் மானியம் அளிக்கப்படும் திட்டத்தையும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயல்படுத்தினார். ஜெயலலிதா வழியில் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, தாசில்தார் தில்லைபாண்டி , சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், பொறியாளர் சுரேஷ், நகராட்சியின் முன்னாள் தலைவர்கள் வாவு செய்யது அப்துர்ரகுமான், வகீதா, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அபுல்ஹஸன் கலாமி, வாவு சுலைமான், அமானுல்லா, நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது இப்ராகிம், பேரவை செயலாளர் அன்வர், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்ற நிலைபாட்டில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குளம்பிப்போய் உள்ளார். அவர் அந்த தீர்ப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் வலுவான மெகா கூட்டணியாக அமைந்து வெற்றிகளை குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kadamburraju #admk

    அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்புநிதி வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ministerkamaraj #SpecialAssistance

    திருவாரூர்:

    தமிழ்மொழி காவலர் உ.வே.சாமிநாதய்யர் 165வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலைக்கு அமைச்சர் இரா.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டக் கலெக்டர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்வர் அறிவித்திருந்த இந்த சிறப்புநிதியினை பெற அனைத்துவகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்றசில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, தொழிலாளர்கள் தங்களுக்கு சிறப்புநிதி கிடைக்குமா? என்று கேட்டு வருகின்றனர். அவர்களின் கருத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    அப்போது சிறப்புநிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்புநிதி வழங்கப்படும். இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministerkamaraj #SpecialAssistance 

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #admk #pmmodi

    மேலூர்:

    மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில்நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பேசினர்.

    மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரல் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை ஓ,பி.எஸ்., இ.பி.எஸ். வழி நடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என சிலர் நினைத்து வருகின்றனர்.

    தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்பது போல கேட்காமல் கொடுத்து வரும் அரசு. அ.தி.மு.க. அரசு. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு தளபதியாக மட்டுமே தான் இருப்பார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைபெற்று வருகிறது.

    வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்து 2 அரை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ம.கவும் கூட்டணிக்கு வந்துள்ளனர்.

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல.

    வடமாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

    ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை.

    இரட்டை வேடம் ஸ்டாலின் போடுகின்றார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்த போது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர்.

    ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதா தான். சாக்கடை வசதி, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே இதற்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், விரகனூர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், நகர் செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி,பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜபார், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், பேருர் செயலாளர் மணிகண்டன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், முன்னால் கவுன்சிலர் சரவணக்குமார், அமைப்பு சாரா செயலாளர் அன்புச்செல்வம், பாசறை சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பிப்ரவரி 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கொண்டாடப்படும் என அ.தி.மு.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது. #Jayalalithaa #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிலையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை அம்மாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    இதற்கான பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் இணைந்து அம்மா பிறந்த நாளை சிறப்பாக நடத்த வேண்டும்.

    தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2019 அன்று ஆங்காங்கே அம்மா சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Jayalalithaa #ADMK
    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதியை பெறமுடியவில்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பதால் ரூ.20 கோடி என்ன, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, புரோகிதர்தான் கட்டாய திருமணமா? இல்லையா? என்பதை சொல்லவேண்டும், திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.

    அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-



    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அ.தி.மு.க.வில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் மு.க.ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலக் கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    8 முதல் 10 தொகுதிகளை கேட்ட பாஜகவிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக எடுத்து வைத்த வார்த்தைகள் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அசர வைத்தது. #ADMK #Edappadipalaniswami #OPS #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய தேசிய கட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமான பா.ஜனதா தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளுக்கு சம்மதித்ததை மற்ற கட்சியினர் அவமானமாக கருதி விமர்சிக்கிறார்கள்.

    அரசியல் பார்வையாளர்களும் பா.ஜனதா எப்படி 5 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டது என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் வெறும் 5 தொகுதிகளுடன் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து கொண்டதின் பின்னணியில் சுவாரசிய தகவல்கள் உள்ளன.

    டெல்லி பா.ஜனதா தலைவர்களும், தமிழக பா.ஜனதா தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களுடன் பல நாட்களாக கூட்டணி தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இறுதியில் 8 முதல் 10 தொகுதிகளுக்கு குறையாமல் பெற்று கூட்டணியை இறுதி செய்ய தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருந்தார். தமிழக பா.ஜனதா தலைவர்களும் 8 முதல் 10 வரையிலான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

    கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சு வார்த்தை நடந்தது.

    பா.ம.க.வுடன் உடன்பாடு எட்டிய மகிழ்ச்சியில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது. பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் மற்றும் தமிழக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., முனுசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    பா.ம.க.வுடன் கூட்டணி உறுதி ஆனதால் நமது கூட்டணி இனி வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று கூறியபடியே அ.தி.மு.க.வினரும், பா.ஜனதாவினரும் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். பா.ஜனதா தரப்பில் 8 முதல் 10 தொகுதிகள் கேட்கப்பட்டது.

    அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக எடுத்து வைத்த வார்த்தைகள் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அசர வைத்தது. தமிழக பா.ஜனதாவை பொறுத்த வரை அடிமட்டம் வரை சென்று தங்களின் செல்வாக்கு எப்படி? தொண்டர்களின் செயல்பாடு ஆகியவற்றை கணக்கெடுத்து கம்ப்யூட்டரில் பதிவேற்றி வைத்துள்ளனர்.

    ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு வட்டாரம் வாரியாக, பகுதி பகுதியாக பா.ஜனதா கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? எந்தெந்த வகைகளில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விலா வாரியாக பட்டியல் போட்டு பா.ஜனதா தலைவர்களின் முன்பு வைத்தார். இந்த நிலையிலும் நீங்கள் 8 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்கள்.

    நாம் கூட்டணி அமைப்பது வெற்றி பெறுவதற்குத்தான். பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு உதவியாக இருக்கிறோம். எனவே உங்களின் பலம்- பலவீனத்தை தெரிந்து கொண்டு நீங்கள்தான் இறங்கி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்தினார்.

    எடப்பாடி பழனிசாமி பட்டியல் போட்டு சொன்ன தகவல்களை கேட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் அசந்து போனார்கள். உடனே பியூஸ் கோயல், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் போனில் பேசினார். எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவலை விலாவாரியாக கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிடிவாதம் இல்லாமல் இறங்கி வந்து பேசி தமிழகத்தில் நமது கட்சியின் நிலையை சொல்லி இருக்கிறார்கள். நாம் 8 முதல் 10 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் எப்படி? என்றார்.

    அதற்கு அமித்ஷா நாம் அவர்களை எப்படியோ எடை போட்டோம். ஆனால் அவர்கள் இந்த அளவு தெள்ளத் தெளிவாக பேசி இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார்.

    தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. தமிழகத்தில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷாவிடம் பியூஸ் கோயல் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதன்பிறகே அமித்ஷா நமது வெற்றிதான் முக்கியம். 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்தே பா.ஜனதா 5 தொகுதிகளை பெற்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்துள்ளது. #ADMK #Edappadipalaniswami #OPS #BJP
    ×