search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy
    கோவை:

    கோவை கொடீசியா மைதானத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை தலைகுனிய வைத்தது திமுக. எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். 

    ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினின் கருத்தை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. மிகப்பெரிய ஊழல் செய்த திமுகவினர் ஊழல் தொடர்பாக பிரச்சாரம் செய்கின்றனர்.

    நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

    40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வெற்றியை தருவோம். மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும். 40 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வளம் காணவும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்.

    மழைநீரை சேமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy
    கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசியம் பற்றி நான் பேசுவது குற்றமா? என கேள்வி எழுப்பினார். #LokSabhaElections2019 #PMModi
    கோயம்புத்தூர்:

    கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி  உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது: 
     
    வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என தமிழில் உரையை ஆரம்பித்தார்.

    உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது.  தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் , ஜெயலலிதா அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன்.

    எம்.ஜி.ஆர், ஜெ.வின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி வளமும் செல்வ வளமும் மிகுந்த கோவை நகரத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



    பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது. 

    தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.  நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக தரப்படும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

    நான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா? #LokSabhaElections2019 #PMModi 
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். #NaxalAttack #BJP #BHimaMandavi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    #NaxalAttack #BJP #BHimaMandavi
    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜிகே வாசன் பேசியுள்ளார். #gkvasan #bjpmanifesto

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணி ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகள் கூட்டணியாக இருந்தால், மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உறுதியாக கிடைக்கும்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது சுகாதார துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வந்தார்.

    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் 60 வயது பூர்த்தி அடையும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #gkvasan #bjpmanifesto

    பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #LokSabhaElections2019 #RajnathSingh #BJPManifesto2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். பெரும்பான்மை இல்லையெனில் நானோ, நிதின் கட்காரியோ பிரதமர் ஆவோம் என கூறுவது கற்பனையே.

    ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சாதி, மதம் மற்றும் சமயத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது. இந்து, முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. 

    2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ‘பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி ராஜ்நாத் சிங்கிடம் கேட்டபோது, ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh  #BJPManifesto2019
    நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். #LokSabhaElections2019 #Rajinikanth #BJPManifesto2019 #RiverLinkingProject
    புதுடெல்லி:

    சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். அந்த வகையில், தற்போது, நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.



    மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் இந்த திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடைபெற உள்ள தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, “எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதை ஏற்கனவே கூறிவிட்டேன். எனக்கும் கமலுக்குமான நட்பை கெடுத்துவிடாதீர்கள்” என்றார்.  #LokSabhaElections2019 #Rajinikanth #BJPManifesto2019 #RiverLinkingProject
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை ஜீரோ (பூஜ்யம்) என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



    இந்த கருத்திற்கு மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே பறக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருண்ணன், “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளதால் அக்கட்சியை நம்ப முடியாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேவால்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொண்ட விஸ்வேஸ்வர ராவ் ரெட்டியை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிச்சயமாக செய்து முடிக்கும். எதார்த்தமாக நடைமுறையில் செய்து முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் சொல்லி உள்ளது.

    இதற்கு முன்பும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் நேர்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் பா.ஜனதா மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.

    பா.ஜனதாவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. பா.ஜனதா மேக் இண்டியா திட்டத்தை மிகவும் பிரபலப்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.

    அதுபோல நிதி சீரமைப்புகளை பா.ஜனதா அறிவித்தது. இந்த திட்டங்களில் நிறைய முன்னேற்றம் வரும் என்று சொன்னது. ஆனால் நிதி சீரமைப்புகளும் தோல்வி அடைந்துள்ளன.

    பா.ஜனதா சொன்னது எல்லாம் தோல்வியை தழுவி உள்ளது. எனவே பா.ஜனதாவை நம்ப முடியாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo

    மகாராஷ்டிரத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வதால் உச்சக்கட்ட ஓட்டுவேட்டையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    மும்பை :

    மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11, 18, 23 மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    முதல் கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கண்ட 7 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து கட்சியினர் இன்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த 7 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா-சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    குறிப்பாக நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நானா படோலே ஆகியோர் நேருக்குநேர் மோதுகின்றனர்.

    இந்த தொகுதியில் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    சந்திராப்பூர் தொகுதியை பொருத்தவரை மத்திய உள்துறை இணைமந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றியை எதிர்பார்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். பா.ஜனதா தலைவரான இவரை எதிர்த்து சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுரேஷ் தனோர்கர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    வார்தாவில் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவி சாருலதா தொகஷ், பா.ஜனதா எம்.பி. ராம்தாஸ் தாதசை எதிர்கொள்கிறார்.

    கட்சிரோலி- சிமூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அசோக் நேடேவுக்கு முக்கிய எதிராளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாம்தியோ உசேந்தி விளங்குகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே யவத்மால் தொகுதியில் சிவசேனா எம்.பி. பாவனா காவ்லியை எதிர்த்து களம் காண்கிறார்.

    ராம்டெக் தொகுதியில் சிவசேனா எம்.பி. குருபால் தான்னேவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோர் காஜ்பாயே போட்டியில் உள்ளார்.

    பண்டாரா- கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரபுல் படேல் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக நானா பஞ்சபூதே களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சுனில் மேன்தே களத்தில் உள்ளார்.

    7 தொகுதிகளிலும் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் இன்று நடைபெறும் கடைசிநாள் பிரசாரத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் சித்ரதுர்கா, மைசூருவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #PMModi #BJP #LokSabhaElections2019
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

    பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு அதாவது சிவமொக்கா, தார்வார், சிக்கோடி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே, தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கா்நாடகம் வருகிறார். அவர் மதியம் 1 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    அதை முடித்துக் கொண்டு மோடி மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பிரசார கூட்டத்தை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயில்களில் மெட்டல்-டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மைசூருவில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய காட்சி.

    மேலும் மைசூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் 12 குழுவினர், குதிரைப்படையினர், ரோந்துக்குழுவினர் என சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அதுபோல் மோடி வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மைசூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து மைசூரு-ஊட்டி சாலை, அரண்மனை அருகில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து சாமராஜா டபுள்ரோடு, ராமசாமி சர்க்கிள், ஜே.எல்.பி. ரோடு, ஆர்.டி.ஓ. சர்க்கிள், மகாத்மா காந்தி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

    சித்ரதுர்கா மற்றும் மைசூரு தேர்தல் பிரசாரத்தில் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி மீண்டும் 12, 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய கர்நாடகம் வருகிறார்.

    அதன் பிறகு 18-ந் தேதி (முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தினம்) வட கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.

    மோடி வருகையையொட்டி பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #PMModi #BJP #LokSabhaElections2019
    தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புதூர், கருமன்கூடல், சரல், செம்பன்விளை, இரும்பிளி பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நான் ஏற்கனவே எனது சம்பளத்தை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக செலவு செய்து வருகிறேன். இந்த தேர்தலில் எனக்கு போட்டியாக யாரும் இல்லை. மக்கள் முடிவு செய்து விட்டார்கள். பாரதீய ஜனதா தான் வெற்றி பெற வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அவர் தான் நமது வேலைக்காரன். அவர் பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளார். 40 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

    60 ஆண்டு கனவு திட்டமான துறைமுக திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன். தடுத்து நிறுத்துவேன் என கூறி வருகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் இங்கிருந்து நாங்குநேரிக்கு சென்று விட்டார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் தான் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

    பொதுமக்கள் சிந்தித்து பார்த்து தங்களது வாக்குகளை சிதறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp

    எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #bjp #pmmodi

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.ம. மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் மாநில துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் தமிழகத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. 18 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியும், மோடியை டாடி என சொல்கின்ற இந்த தமிழகத்தின் அடிமைகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கம்பெனியும் கூட்டணி வைத்துள்ளார்கள். அதேபோல மற்றொரு கூட்டணி, அது மதசார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தி.மு.க. வகிக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

    தமிழகத்தை புறக்கணித்த மோடி சார்ந்த பா.ஜனதாவுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என்று அ.ம.மு.க. அறிவித்திருக்கிறது. இதைப்போல ஸ்டாலின் அறிவிக்கத்தயாரா? என்று இந்த குமரி மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது, எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் சொல்வாரா?. சொல்லமாட்டார். வாய்ப்பு கிடைத்தால், பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைத்தால் அங்கும் அவர் சென்று விடுவார். ஆட்சி, அதிகாரத்தை நம்பித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கூட்டணியை, குறிப்பாக தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம்.

    இந்த முறையாவது தமிழக மக்களின் உரிமைகளுக்காக, தமிழர்கள் தலைநிமிர்வதற்காக, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக, தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்கள், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி, பாதுகாப்பான இயக்கம் அ.ம.மு.க. என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதி, மதத்தை கடந்து மக்களின் நலனில் அக்கறை எடுத்து உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார்? தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார்? அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சி எது? 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது? என்பதை எண்ணி நீங்கள் முடிவு செய்யுங்கள்.

    தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற அ.ம.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். உங்களை சிலர் குழப்புவார்கள். நீங்கள் குழப்பம் அடையாமல், தேசிய கட்சிகளைக் கண்டு ஏமாறாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் பரிசு பெட்டகம் சின்னம் பெற்றோம். நாங்கள் சமரசம் செய்து கொண்டால் எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கும். அம்மாவிற்கும், மக்களுக்கும் தான் தலைவணங்குவோம். வேறு எந்த சக்திக்கும் தலைவணங்க மாட்டோம்.

    2 கோடி பேருக்கு வேலை, ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னதை செய்தார்களா? நீட் தேர்வு, விவசாயிகளை, தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அம்மா அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கஜா, ஒகி புயல் சமயத்தில் மக்களை சந்திக்காத மோடி இன்று ஓடி, ஓடி வருகிறார். அம்மா மருத்துவமனையில் இருந்தபோதும் மோடி வரவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் என்னிடம் உள்ளார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார். 

    ×