என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆளும்மோடி அரசின் மீதான இந்த எதிர்ப்பு எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணி நிர்பந்தத்தினால் உருவான கூட்டணி. ஆனால் மதசார்பற்ற கூட்டணி கொள்கைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி.
மோடி மட்டுமே தேசத்தை பாதுகாக்கும் தலைவர் போல் முன்னிலைப்படுத்துகிறார்கள். நேரு மிகப் பெரிய தலைவர். அவரது மறைவுக்கு பிறகு நாட்டை பாதுகாக்கப் போகும் தலைவர் யார்? என்ற பயம் நாடு முழுவதும் எழுந்தது. லால்பகதூர், சாஸ்திரி அடுத்த பிரதமராக வந்தார்.
அந்த கால கட்டத்தில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்தோம். நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக் காக்கும் பல தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. கிறிஸ்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பது எங்கள் கூட்டணி தான் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதாவுக்கு சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. அதனால் தான் மதத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்கள்.
ஆனால், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் இந்துக்களும் பாதிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வரமுடியாது. பசு மாட்டுக்கு கொடுக்கும் பாதுகாப்பு நமக்கு இல்லை. திராவிடர் கழகம் இந்தியாவை பற்றி கவலைப்படும் கழகம். நாங்கள் பதவி கேட்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். மூடிய பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அதேபோல் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் மருத்துவக்கல்லூரிகளை மாவட்டம் தோறும் உருவாக்கினார். ஆனால் தற்போது அந்த கல்லூரிகளில் நம் பிள்ளைகளுக்கு இடம் இல்லை.
2014-ம் ஆண்டு வேலை கிடைக்கும் என்ற உறுதியில் பா.ஜனதாவுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பா.ஜனதா வெற்றி பெற்ற பின் ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறினார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
பா.ஜனதா கட்சி நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #kveeramani #bjp #parliamentelection
ஓட்டப்பிடாரம்:
பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலிங் கூடுவதால் வரிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 124 நாடுகளில் ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசுகிறார்.
தூத்துக்குடியை பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். ராஜ்யசபாவில் இதுவரை தூத்துக்குடியை பற்றி பேசாத கனிமொழிக்கு திடீர் அக்கறை ஏன்? அரசியலில் எனக்கு பயமே கிடையாது.
நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #kanimozhi #gsttax
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.
300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு.
இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.
தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.
நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElectoins2019 #MuralidharRao
பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு திருப்பூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரசார கூட்டங்களில் பேசினார்.
தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
ராமநாதபுரம், கோவையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேனியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் சேலத்தில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #Modi
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது. அதற்கு முந்தைய 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது. அதே சமயத்தில், பாஜகவின் பலம், 115-ல் இருந்து 99 ஆக குறைந்தது.
கடந்த 30 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி இதுவே ஆகும். அதன்பிறகு, இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் இழுக்கும் பணி நடந்தது. அதனால், இந்த பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், 8 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை விட 14 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றிருந்தது.
இந்த 8 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகள் சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் ஆகிய பிராந்தியங்களில் அமைந்துள்ளன. எனவே, அந்த பிராந்தியங்களில் பாஜக பலவீனமாக இருப்பது உறுதியாகி உள்ளது. மேற்கண்ட 8 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டும் தற்போதைய எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் ‘சீட்’ கொடுத்துள்ளது. ஒரு தொகுதியில் புதுமுகத்தை நிறுத்தி உள்ளது. மீதி 5 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனவே, பாஜக தடுமாறுவது போல் தோன்றுகிறது.
சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், செல்வாக்கு மிக்க சாதி தலைவர்களையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் வளைக்கும் பணியை பாஜக தொடங்கியது. இதற்கு ‘மிஷன் தாமரை’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இதன்படி, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் குன்வர்ஜி பவாலியா பாஜகவுக்கு இழுக்கப்பட்டு, மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு தாவினர். இன்னும் 6 பேர் தாவ தயாராக இருப்பதாக தெரிகிறது. சவுராஷ்டிரா பகுதியில் அதிகமாக வாழும் அகிர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு மிக்க மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜவகர் சாவ்டாவையும் பாஜக இழுத்து விட்டது. அதுபோல், வடக்கு குஜராத்தில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட சமுதாய இளம் தலைவர் அல்பேஷ் தாகோருக்கும் குறி வைத்துள்ளது. இதன்மூலம், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பிராந்தியங்களில் நிலவும் பலவீனத்தை சரிக்கட்ட போராடி வருகிறது.
பிரதமர் மோடியும் தன் பங்குக்கு பட்டிதார் சமூகத்தினரின் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதுவும், நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த மத்திய அரசின் முடிவும் பட்டிதார் சமூகத்தின் ஓட்டுகளை பெற்றுத்தரும் என்று பாஜக கருதுகிறது.
பாஜகவின் வியூகத்தை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட எழுச்சியை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா தைரியமாக கூறி வருகிறார்.
பாஜக, பிரதமர் மோடியின் கவர்ச்சியையே பெரிதும் நம்பி இருப்பதாக தெரிகிறது. மோடியின் பெயர், வளர்ச்சி, பாகிஸ்தானில் புகுந்து நடத்திய விமான தாக்குதல் ஆகியவை வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக நம்புகிறது. மோடியின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி உறுதிபட தெரிவித்தார். மொத்தத்தில், வெற்றியை ருசிக்க கடினமாக களப்பணியாற்ற வேண்டிய நிலையில் பாஜக இருப்பது தெளிவாகிறது. #BJP #PMModi
தூத்துக்குடி:
முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசி தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளின் 5 ஆண்டு ஆட்சிகளில் தூத்துக்குடியில் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் இவர்கள் வேலை வழங்கவில்லை. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புல்லட் ரெயில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதை விட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தான் முக்கியம். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க.வினரின் 5 ஆண்டு ஆட்சியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தான் இவர்களின் சாதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #admk #bjp
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையின்போது, தமிழிசையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் தமிழிசையின் மனு ஏற்கப்பட்டது.
பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது எனவும் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan #LokSabhaElections2019
75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.
புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.
அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.
இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.
1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.
இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்