search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி ஹரிந்தர் சிங் கல்சா, இன்று பாஜகவில் இணைந்தார். #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் சிங் கல்சா. ஷிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கல்சா, அந்த கட்சி சார்பில் பதிண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 முதல் 1998 வரை எம்பியாக இருந்தார். பின்னர் 2014ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவர், பதேகர் சாகிப் தொகுதியில் (தனி) இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு பாஜக, ஷிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஷிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இதில், பதேகர் சாகிப் தொகுதியில் ஷிரோமணி அகாலி தளம் சார்பில், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தர்பரா சிங் குரு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அகாலி தளம் இன்னும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    காங்கிரஸ் அமைத்திருப்பது ஊழல் கூட்டணி என்று பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். #BJP #PiyushGoyal #Congress
    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் ராமநாதபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மக்கள் 130 கோடி பேர் நலமுடன் வாழ வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.


    தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஊழல் கூட்டணி அமைத்துள்ளது.

    இவ்வாறு கூறினார். #BJP #PiyushGoyal #Congress
    உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #ModiCampaign #LokSabhaElections2019
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டேன். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி ஆதரித்தீர்கள். இந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் திரும்ப தருவதாக கூறினேன். நான் செய்த பணிகள் தொடர்பான அறிக்கையை உங்கள் முன் வைப்பதாகவும் கூறினேன்.

    உங்களின் ஆதரவினால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம். நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையும், செய்யாதவற்றையும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

    இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.



    இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ModiCampaign #LokSabhaElections2019
    மி‌ஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan #MissionShakti
    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது. மி‌ஷன் சக்தி சாதனையை மோடி பகிர்ந்து கொண்டதில் தவறில்லை. மி‌ஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.



    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏழைகளை பற்றி சிந்திக்காதவர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தூத்துக்குடி துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்று பீட்டர் அல்போன்ஸ் தவறான வாதத்தை தெரிவித்து வருகிறார். சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 2-ந்தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தூத்துக்குடி வருகிறார். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். குற்றப்பரம்பரை என தெரிவித்ததை தவறாக சித்தரிக்கின்றனர்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் பன்னாட்டு விமான நிலையம், புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan #MissionShakti
    நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, தனக்கு காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் இருப்பதாக கூறியுள்ளார். #Loksabhaelections2019 #Nitingadkari #BJP
    நாக்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் துறைகளின் மந்திரியான நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    நேற்று நாக்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

    நான் சாதி, மதம், மொழி, மற்றும் எந்த கட்சியினைச் சார்ந்தவர் என பாராமல் அனைத்து மக்களையும் சமமாக கருதி பணியாற்றி உள்ளேன். இதன் விளைவாக காங்கிரசின் ஆதரவாளர்களும், அலுவலகங்களில் பணியாற்றும் பலரும் எனக்கு போன் செய்து, நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றலாம். ஆனால் எங்கள் இதயம் உங்களின் சேவை குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் என கூறுகின்றனர். இதனால் எனக்கு எல்லா இடங்களிலும் ஆதரவு இருப்பது  உறுதியாக தெரிகிறது.



    மேலும் பாஜகவினர் மக்களிடம் சென்று நம்பிக்கையுடனும், பணிவுடனும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நம்பிக்கைக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். மக்களிடையே கனிவான முறையில் நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டுமே தவிர, கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.

    நான் மக்களிடம் சென்று, பிற கட்சியினரின் பெயர்களை  கூறி, அவதூறு பேசி வாக்கு சேகரிக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே கூறி பிரசாரம் மேற்கொள்வேன். கடந்த தேர்தலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் சொல்வதை தான் செய்வோம்.

    மக்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும். மக்களுக்கான பணிகளை செய்து அவர்களின் இதயங்களை வென்றுள்ளோம். இந்த முறையும் பாஜக வெற்றி பெறும் என்பது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #Nitingadkari #BJP #Congress



    ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார். #PiyushGoyal #congress #bjp

    கோவை:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-

    இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.

    தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.

    அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp 

    பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரியாங்குப்பத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இல.கணேசன் பேசியுள்ளார். #pmmodi #ilaganesan

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. சிறைக்கு சென்றவர்கள், செல்லப்போகிறவர்கள் என இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

    சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை கைது செய்ய முடியாது. தேர்தல் வரை அவர்கள் வெளியில் இருக்கலாம். எந்த மாகாணத்திலும் எதிர் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்படியே சேர்ந்தாலும் ராகுல்தான் பிரதமர் என யாரும் கூற வில்லை.

    ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறுகிறார். விழிப்பாக இருந்து தப்பு செய்கிறவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செல்லும் இடமெல்லால் மோடி, மோடி என்கின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #ilaganesan

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். #subramanianswamy #bjp #parliamentelection

    அவனியாபுரம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று 2 முறை மத்திய அரசிடம் கூறினேன். 2001ல் சரத்யாதவ் அமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பிரபுல் படேல் விமான நிலைய திறப்பு விழாவில், முத்துராமலிங்க தேவரின் பெயரை கூற முயன்ற போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலவரம் வரும் என தடுத்தார்.

    தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயர் சூட்ட அனுப்பிய திட்டத்தை நிராகரித்தவர் ஓ.பி.எஸ்.தான்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் போட்டியிடத்தான் எனக்கு விருப்பம்.


    ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்கிருந்து கொடுப்பார்? வங்கியில் இருந்தா கொடுப்பார்?

    இவ்வாறு அவர் கூறினார். #subramanianswamy #bjp #parliamentelection

    மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாரதிய ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். #sumalatha
    மாண்டியா:

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். சார்பில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.

    சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மாண்டியா தொகுதியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்தவில்லை.

    சுமலதாவுக்கு காங்கிரசார் சிலரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் அவருக்கும் நிகிலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    இதற்கிடையே சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பா.ஜனதாவின் தேர்தல் வியூகம் குறித்து முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர் டி.ஆர். சித்தராமையா கூறும் போது சுமலதாவுக்கு மாண்டியா தொகுதியில் நிறைய ரசிகர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர்.

    ஆனால் அவருக்கு பூத் கமிட்டி அளவில் தொண்டர்கள் இல்லை. எனவே அதை பூர்த்தி செய்ய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் சுமலதாவுக்கு உதவ முடுக்கிவிடப்படுவார்கள் என்றார்.#sumalatha
    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி கொண்ட 31 வேட்பாளர்கள் பட்டியலில் கவுதம் காம்பீர் பெயர் இடம் பெற்றுள்ளது. #GautamGambhir
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    டெல்லி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே அங்கு 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பா.ஜனதா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பா.ஜனதா இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் உள்ளது. காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வேட்பாளர்களை பொறுத்து புதுமுகங்களை களம் இறக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தலைவர்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி கொண்ட 31 வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மாநில பா.ஜனதா தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் கவுதம் காம்பீர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    புதுடெல்லி தொகுதியில் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்கலாம் என்று மாநில பா.ஜனதா தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மீனாட்சி லேகி வெற்றி பெற்றார். அவருக்கு பதில் இந்த தடவை காம்பீர் களம் இறங்க உள்ளார்.

    காம்பீர் பெயருடன் மேலும் 2 பேர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளனர்.

    புதுடெல்லி தொகுதி தவிர வடக்கு மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக், தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட உள்ளது. #GautamGambhir
    முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.


    இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று திடீரென டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். இன்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதில் கூறியிருந்தார். தனது உரையை தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகத்தில் பார்க்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன முக்கிய தகவலை மோடி வெளியிட உள்ளார்? என்று பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டனர். இதனால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
    இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது என்று பாஜக மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?

    அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.


    சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?

    ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    ×