என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
சென்னை:
பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.
பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.
தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.
உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #SubramanianSwamy #PMModi
தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக்கூடிய உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #TamilisaiSoundararajan
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். எங்கள் அணிதான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான் தங்கம் (மேற்கு), அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்து பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 3 பவுன் தங்க சங்கிலி, 3-வது இடத்தை பிடிப்பவருக்கு 1 பவுன் மோதிரமும் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தெரிவித்து உள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection
பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன்சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.
இதை தொடர்ந்து தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.
சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
அவர் 2009 தேர்தலில் 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2014 தேர்தலில் 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அந்த தொகுதியில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.
சத்ருகன்சின்கா, வாஜ்பாய் மந்திரிசபையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #congress #shartrughansinha
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜனதா எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
பிரகாஷ்ராஜ் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு இருந்தார். தற்போது அந்த கட்சியையும் அவர் விமர்சித்து இருப்பதால் காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. #LSPolls #PrakashRaj
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
அரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், மேலும் சிலர் மேடையில் ஏறியதால் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர். இதில் பாஜக விவசாய சங்கத் தலைவர் அவ்தேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #StageCollapsed #HoliMilan
உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி இணையதள பயன்பாட்டளர்களை கவரும் முனைப்புடன் கடந்த வாரம் 'காவலாளி (சவுகிதார்) நரேந்திர மோடி ' என தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர் மாற்றம் செய்தார்.
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati #BSP #PMModi #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்