search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 2 நாளில் முடிவு வெளியாகும் என்று தெரிகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    சென்னை:

    விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கிய தே.மு.தி.க. இதுவரை 5 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

    தமிழக அரசியலில் மிக குறுகிய காலத்தில் 10 சதவீத வாக்கு வங்கிகளை பெற்ற கட்சி என்ற சிறப்பு தே.மு.தி.க.வுக்கு உண்டு. தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாறி மாறி வெற்றி-தோல்வியை கொடுத்துள்ளன.

    இதன் காரணமாக தே.மு. தி.க. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதமும் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருந்தது. ஆனால் அதன் பிறகு 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தே.மு. தி.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போனது.

    குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே இருந்த தொண்டர்களில் பாதி பேர்தான் வாக்களித்தனர். தற்போது அந்த கட்சிக்கு 3 முதல் 5 சதவீத வாக்குகளே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டாலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அது இருப்பதாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக தே.மு.தி.க. தலைவர்களுடன் பேசி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று முதலில் காய்களை நகர்த்தியது பா.ஜனதா தலைவர்கள்தான். எனவே டெல்லி பா.ஜனதா தலைவர்களிடம் தே.மு.தி.க. பேச்சு நடத்தியது. ஆனால் அதில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.

    இதையடுத்து தே.மு.தி.க.வை வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அ.தி. மு.க. ஈடுபட்டது. ஆனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை தே.மு.தி.க. கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதனால் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே 40 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. வின் நிலைப்பாட்டில் மாற்றம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. எந்த அணியில் சேரும் என்பது நேற்று இரவு வரை மதில்மேல் பூனையாக இருந்தது. ஆனால் இன்று காலை இது குறித்து சில தெளிவான தகவல்கள் தெரியவந்தன.

    தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டபோது அவர் மாறுபட்ட தகவலை தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை நாங்கள் தீர்மானித்து விட்டோம். இனி எங்கள் அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை” என்றார்.

    தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் சிலர் இதுபற்றி கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டோம். டி.டி.வி.தினகரன் பக்கம் போகும் பேச்சுக்கே இடமில்லை. எங்களது பலம் எங்களுக்கு தெரியும். விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம்” என்றனர்.


    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர்களுடன் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவும் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேசியது. இன்று காலையிலும் அந்த பேச்சு வார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதிகள் எண்ணிக்கை மட்டுமே இழுபறியாக இல்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்தப்படி உள்ளது. அதுபோல பா.ஜனதா தரப்பில் இருந்தும் சில உறுதி மொழிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் வரும் பட்சத்தில் தாங்கள் விரும்பும் தொகுதிகளை கண்டிப்பாக தந்தே தீர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். எனவே பேச்சு வார்த்தை ஓரிரு தினங்கள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

    இரு தரப்பினரும் விட்டு கொடுத்தால்தான் அ.தி.மு.க. அணியில் சுமூகமாக தே.மு.தி.க. இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க- தே.மு.தி.க. இடையே எப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்பது இழுபறியாகவே உள்ளது.

    2 நாளில் இதில் என்ன முடிவு ஏற்படும் என்பது தெரிந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பதை விட தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா ஆலோசனை வழங்கினார். #BJP #Amitshah #ADMK #OPS
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் எந்ததெந்த கட்சிகள் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. அணியில் தற்போது பா.ஜனதா, பா.ம.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளது. சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நேற்று மதுரை வந்த பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பின்போது கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் எத்தகைய அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியை அ.தி.மு.க. தலைமையிலான அணி என்று அழைக்கக்கூடாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்றார்.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் முதல்-அமைச்சருடன் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.



    அப்போது பன்னீர்செல்வம் அன்றைய தினம் தனக்கு கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகிகள் பா.ஜனதா பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அமித்ஷாவிடம் கூறினார்.

    இந்த ஆலோசனையின் போது பா.ஜனதா மேலிட பார்வையாளர் முரளிதர ராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தொடர்பாக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜனதா தலைமை தாங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா கூறிய யோசனைகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த சந்திப்பு வைரலாகி விமர்சனங்கள் எழுந்துள்ளளன. #BJP #Amitshah #ADMK #OPS
    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி பெரும் சரிவை சந்திக்கும் என்று பாரதீய ஜனதா கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். #amitshah #bjp #communistparty

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கிய தேர்தல் இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். அதற்கு கேரள மக்கள் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.


    சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு கம்யூனிஸ்டு அரசு துரோகம் செய்து விட்டது. கோவிலின் ஆச்சாரத்தை பாதுகாக்க போராடிய பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அய்யப்ப பக்தர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டு அரசு அதற்கான பலனை அனுபவித்தே தீரும். பக்தர்களுக்கு நீதியை மறுத்து அநீதி இழைத்த கம்யூனிஸ்டுகள் அழிவை சந்திக்கும் காலம் நெருங்கி விட்டது.

    உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. கேரளாவிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும். இங்கும் கம்யூனிஸ்டுகள் சரிவை சந்திக்கப்போவது உறுதி.

    கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே சபரிமலை பிரச்சினையில் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த இன்னொரு உத்தரவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டதா? அனைத்து மசூதிகளிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை இந்த அரசு அகற்றி இருக்கிறதா?

    கேரள மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் இந்த அரசு, அரசியல் செய்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் கேரளாவில் வன்முறை நடக்கும். இதுவே காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் ஊழல் செய்வார்கள்.

    இந்த இரு கட்சியினரும் இதைதான் மாறி மாறி செய்து வருகிறார்கள். அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி வருகிறீர்கள்.

    இந்த முறை கேரள மக்கள் மாற்றத்தை தரவேணடும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறும். ஊழல்வாதிகள், வன்முறையில் ஈடுபட்டோர் ஜெயிலுக்கு செல்வார்கள்.

    எனவே கேரள மக்கள் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. ஆனால் பாரதீய ஜனதா, மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு கேட்கிறது. இம்முறை கேரள மக்கள் அந்த வாய்ப்பை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #amitshah #bjp #communistparty

    பாராளுமன்ற தேர்தல் எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalaniswami #ADMK #PMK
    திண்டிவனம்:

    அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தமானது. இதையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார்.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜனதா கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் நமது கூட்டணியில் சேர இருக்கின்றன.

    ஜெயலலிதா இருந்த காலத்தில், அவர் நிறுத்தியிருந்த வேட்பாளர்களை எப்படி வெற்றிபெறச்செய்தீர்களோ, அதுபோல நாம் நின்றாலும் சரி, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் சரி, இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    அவ்வாறு வெற்றி பெறச்செய்தால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலுவாக இருக்கும். தமிழகம் வளமாக இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றாலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றால் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தில் தேவையான திட்டங்களை பாராளுமன்றத்தில் கேட்டு வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.

    எனவே நமது கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது இயக்கத்தின் மீது எத்தனை பேர் பழிசுமத்துகிறார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தொடங்கியபோது எத்தனை வழக்குகள் தொடர்ந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    வஞ்சக குணம்படைத்த, தீய சக்தி கொண்ட தி.மு.க.வை வேறோடு அகற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கின்ற முதல் பாராளுமன்ற பொதுத்தேர்தல். இது எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த தேர்தல் மூலமாக ஜெயலலிதா செய்த நன்மைகளை கிராமங்கள், பட்டிதொட்டிகளில் எடுத்துக்கூற வேண்டும். ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குகின்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. இதனை தமிழகத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami #ADMK #PMK
    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா 5-வது முறையாக ஆஜரானார். #RobertVadra
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த குற்ற வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே வதேராவுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி டெல்லி ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வரை 4 முறை வதேரா ஆஜரானார். இதைத்தொடர்ந்து 5-வது முறையாக நேற்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அவர் ஆஜரானார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வதேராவிடம் நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வதேராவை கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra 
    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். #kpmunusamy #kamal #admk

    திருவாரூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது.

    விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால் தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழக அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், இரா.துரைக்கண்ணு, வெல்ல மண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான திருமண சீர்வரிசை பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில் வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. விரைவில் யார்- யார் எங்களுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்.

    தேர்தல் சமயத்தில் கொள்கை அடிப்படையிலும், வெற்றி நோக்கத்தின் அடிப்படையிலும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அ.தி.மு.க , பா.ஜனதா இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் கருதியும், வெற்றி நோக்கம் கருதியும் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, பா.ம.க. வுடன் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணியை வைத்துள்ளோம்.

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை. அவர் பேசுவதெற்கெல்லாம் பெரியவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூருக்கு வந்ததும் தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் எண்ணிப் பார்த்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி தினகரனின் குடும்பத்தார் பாக்கெட்டில் இருப்பது போல் நாடகமாடினார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வரமாட்டார்கள் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் எங்களுடன் பா.ம.க. வந்த விட்டது. இப்போது காசு கொடுத்து கூட்டணி வைத்ததாக கூறி வருகிறார்கள்.

    தி.மு.க.விடம் காசு இல்லையா. ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியது தானே?. இது காசுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #kamal #admk 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    திருமலை:

    தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று காலை திருப்பதி வந்தனர்.

    அவர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பட்டு வஸ்திரம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் கோவில் வளாகத்தை பியூஷ் கோயல் சுற்றி பார்வையிட்டார். தம்பிதுரை அவருக்கு இடங்களை சுட்டிகாட்டி விளக்கமளித்தார்.

    இதையடுத்து தம்பிதுரை அளித்த பேட்டியில்:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. , பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம் என்றார். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    இது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. பக்கம் எல்லாம் வெட்டு குத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.

    தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.

    எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

    தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.

    28-ந் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழ் நாட்டில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    புல்வாமாவில் இந்திய வீரர்கள் சிந்திய ரத்தம் வீணாகப் போகாது. ஊழலில் திமுகவும் காங்கிரசும் சமம் என ராமநாதபுரத்தில் இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #ParliamentElection #BJP #AmitShah
    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, அமித் ஷா இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்தார். முன்னர் மதுரை வந்த அமித் ஷாவை விமான நிலையத்தில்  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் என்ற 2 வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.



    பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்திற்கு எள்முனை அளவு கூட இடம் அளிக்காது. புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம். நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.

    தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன. ஊழலைப் பொருத்தமட்டில் திமுகவும் காங்கிரசும் சமம். நல்லாட்சியை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் சமம். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

    இந்த கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். #ParliamentElection #BJP #AmitShah
    மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். #BJP #Amitshah #ADMK #OPS
    அவனியாபுரம்:

    மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.

    பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார்.

    அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் காத்திருந்து சந்தித்து பேசினார்.



    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என இதுவரை தெரியவில்லை.

    பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திடம், அமித்ஷா கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. #BJP #Amitshah #ADMK #OPS
    தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #DMDK #Vijayakanth #ADMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய இருகட்சிகளும் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் தொகுதிகள் எண்ணிக்கை ஒதுக்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் மீதம் 27 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த 27 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடத்தை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த 4 கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அ.தி.மு.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    சிறிய கட்சிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கியது போக மீதம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் களம் இறங்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் எஞ்சி இருப்பது 3 தொகுதிகள்தான்.

    எனவே அந்த 3 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க. தலைவர்களிடம் அ.தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர். இது தே.மு.தி.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது. தே.மு.தி.க.வினர் முதலில் 14 தொகுதி வேண்டும் என்றனர். பிறகு 9 தொகுதி கேட்டனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா தரப்பில் அவை ஏற்கப்படாததால் நேற்று தே.மு.தி.க. தலைவர்கள் சற்று இறங்கி வந்தனர். பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டிருப்பது போல 7 தொகுதிகளாவது தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் இதையும் அ.தி.மு.க. ஏற்கவில்லை.

    மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க. சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை நேற்று மதியம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் திட்டம் இல்லை என்று தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. 3 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    1. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை தவிர்த்து விட்டு டி.டி.வி.தினகரன் அல்லது கமல்ஹாசனுடன் கூட்டணி சேருவது.

    2. யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுவது.

    3. அ.தி.மு.க. தரும் தொகுதிகளைப் பெற்று கொண்டு, அந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவது.

    மேற்கண்ட மூன்று விதமான முடிவுகளில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதையே பெரும்பாலான தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே அ.தி.மு.க. தலைவர்களிடம் பேசி, அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளை கேட்டுப் பெற முடியுமோ அவ்வளவு தொகுதிகளை வாங்கலாம் என்ற மன நிலைக்கு தே.மு.தி.க.வினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களும் சற்று இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. மூத்த மந்திரி ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார்.

    இதை அடிப்படையாக கொண்டு தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்றும் அந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. ஒதுக்கி கொடுக்கும் 5 தொகுதிகளை தே.மு.தி.க. ஏற்குமா, என்று பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அந்த 5 தொகுதிகளும் நாங்கள் விரும்பும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வின் இந்த நிபந்தனையை அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டால் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை இதில் இறுதி கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது.  #DMDK #Vijayakanth #ADMK

    பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி இந்தியாவை பாதுகாக்காது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார். #BJP #AmitShah
    பெங்களூரு :

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர், அவர் கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷா, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கர்நாடக பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, வேட்பாளர்கள் தேர்வு குறித்து கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தேவனஹள்ளியில் நடந்த ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களின் ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய குடிமக்கள் பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), கம்யூனிஸ்டு கட்சிகளும், மம்தா, ஆகியோரும் பிறநாடுகளில் இருந்து ஊடுருவி இந்தியாவில் வசிப்பவர்களை விரட்டி அடிக்க விரும்புவது இல்லை. இவ்வாறு ஊடுருவி வருபவர்களை அவர்கள் வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்கு வங்கி அல்ல. அவர்கள் இந்திய நாட்டுக்கான அச்சுறுத்தல்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. அசாமில் மட்டும் 40 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

    காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பாதுகாக்கப்படவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் பாஜக கட்சிக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியமானது.

    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கின்றன. இந்த கூட்டணி அந்தந்த கட்சிகளின் கொள்கை, நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த கூட்டணிக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது.

    பெங்களூரு தேவனஹள்ளியில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், அமித்ஷாவுக்கும், மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கும் மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

    மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தெரியாது. ஒருவேளை, தேவேகவுடாவும் பிரதமராக விரும்பலாம். இதுபோன்ற கூட்டணி ஒருபோதும் இந்தியாவை முன்னேற்றம் அடையவும், பாதுகாக்கவும் செய்யாது. இளைஞர்களின் பொருளாதார வளத்தையும் உயர்த்தாது.

    ராகுல்காந்தி விவசாயிகளை தவறான பாதையில் அழைத்து சென்று தனக்குத்தானே பள்ளம் தோண்டி கொள்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் ஒரு முறை மட்டும் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 3 கோடி விவசாயிகள் மட்டும் பயன் அடைந்தனர். ஆனால், பாஜக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.75 ஆயிரம் கோடிகளை ஒதுக்கி 13 கோடி முதல் 15 கோடி விவசாயிகளுக்கு பயன் கிடைக்க செய்கிறது.

    அதன்படி பார்த்தால் பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தால் விவசாயிகளுக்காக ரூ.7.5 லட்சம் கோடியை வழங்கும். இந்த சிறிய கணக்கு கூட ராகுலுக்கு தெரியவில்லை. உருளைக்கிழங்கு பூமிக்கடியில் விளையுமா?, பூமிக்கு மேல் விளையுமா? அல்லது தொழிற்சாலையில் கிடைக்குமா? என்பது ராகுலுக்கு தெரியாது. ஆனால் அவர் உத்தர பிரதேசத்தில் உருளைக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுவதற்கு யார் எழுதி கொடுக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை.

    கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி கிளர்க்காக உள்ளார். சித்தராமையா சூப்பர் முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் பாதியளவிலான முதல்-மந்திரியாகவும் இருக்கிறார். இது ஒருபோதும் கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லாது. கர்நாடகத்தை போன்ற ஒரு கூட்டணி ஆட்சி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #AmitShah
    ×