search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என்று அறிவித்துள்ள நிதின் கட்காரிக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி, பெண்ணாறு, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் இணைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த நிதின் கட்காரி கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தார். தற்போது பா.ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைக்க இருப்பதை தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்து இருப்பது பாராட்டக்கூடியதும், வரவேற்கத்தக்கதும் ஆகும்.

    வீணாக கடலுக்கு செல்லும் 1,100 டி.எம்.சி. அளவிலான கோதாவரி நதிநீரை தென்னக மாநிலங்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இருப்பதும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைக்க இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், மனிதன் வாழ்வதற்கு தேவையான குடிநீர் என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்த நிதின் கட்காரி அவர்களுக்கு எனது சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.

    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி காலை டெல்லி செல்கிறார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில் பா.ஜனதா கட்சி மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த முறையை போலவே இந்த முறையும் பா.ஜனதா கட்சி கூட்டணி மந்திரிசபையை அமைக்க முடிவு செய்துள்ளது.  பிரதமராக நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அன்று இரவு 7 மணிக்கு இதற்கான விழா நடைபெறுகிறது.


    பிரதமருடன் மந்திரிகள் சிலரும் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பா.ஜனதா கூட்டணி தலைவர்களும், பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். இதற்கு 30-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் டெல்லி செல்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அவரும் அன்றே புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது பயண திட்டம் பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இந்த 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் 5 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இது தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் மட்டுமின்றி தேசிய பா.ஜனதா தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாட்டில் மோடி அரசுக்கு எதிரான அலை வீசியதால்தான் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று பொதுவான காரணம் கூறப்படுகிறது. என்றாலும் தமிழக பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் இந்த தடவை குறைந்து போனதை மேலிடத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

    வாஜ்பாய் காலத்தில் அதாவது 1999-ம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 7.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அதன் பிறகு அந்த அளவுக்கு வாக்குகளை தமிழக பாரதிய ஜனதா பெறவில்லை. 2009-ம் ஆண்டு 2.3 சதவீதம் 2014-ம் ஆண்டு 5.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

    தற்போது 2019-ல் அது 3.7 சதவீதம் வாக்குகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதா சுமார் 2 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது.

    தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சதவீத வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமித் ஷா அலுவலகம் நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையை தொடர்பு கொண்டு பேசியது.

    அப்போது, “தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைந்தது ஏன்?” என்று விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழிசையிடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பா.ஜனதா ஆதரவாளர்கள் பலரிடமும் அமித் ஷா அலுவலகம் அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக பா.ஜனதாவில் மாற்றங்களை கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.


    தமிழ்நாட்டில் இந்த தடவை 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் இலக்கு வைத்திருந்தனர். அதை கருத்தில் கொண்டே அவர்கள் காஞ்சிபுரம், திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, தேனி, ஈரோடு நகரங்களில் நடந்த பிரமாண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனாலும் தோல்வி ஏற்பட்டது ஏன்? என்பது புரியாமல் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தமிழ் நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைய என்ன காரணம் என்று மேலிடத்துக்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த விளக்கத்தில், “தமிழக பா.ஜனதா தலைவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றவில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் இதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “தேர்தல் முடிவுகள் வெளியானதும், பா.ஜனதா மூத்த தலைவர் ராம்லால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தல் தோல்விக்காக கவலைப்பட வேண்டாம் என்றார். நாங்கள் மேற்கொண்ட தேர்தல் பணிகளை பாராட்டினார்” என்றார்.

    தமிழக பா.ஜனதா மீது மேலிட தலைவர்கள் கோபமாக இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    பத்திரிகையில் பல தகவல்கள் வருகிறது. இதில் எந்த தகவலுமே உண்மை இல்லை. அதை மோடியே சொல்லி விட்டார். அதனால் என்னைப் பொறுத்தமட்டில் கட்சி எங்களோடு இருக்கிறது.

    தமிழக பா.ஜனதா மீது பா.ஜனதா தலைமை கோபமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் கட்சிக்கு எங்களை பற்றியும் தெரியும். தமிழகத்தில் இருந்த களத்தை பற்றியும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு இன்று வாரணாசி தொகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.

    பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

    முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.


    மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.

    காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன் கைப்பட அபிஷேகம் செய்த அவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.


    இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார்.

    பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
    தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக சொன்னதை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ராகுல்காந்தியை முழுமையாக ஆதரித்து கட்சியை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினோம்.

    உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் தேர்தல் முடிவு குறித்து அறிய சில காலம் ஆகும். அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களித்து உள்ளனர். தென் மாநிலங்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது தான் இந்த தோல்விக்கு காரணம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனை வட மாநில தலைவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் செல்வோம். கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. கிரண்பெடி எல்லா திட்டங்களையும் தடுத்து நிறுத்தியதால் அதன் எதிரொலி தேர்தலில் இருந்தது.

    மாநில வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து பிரதமருடன் இணக்கமாக இருக்கிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்வதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த காலத்தில் பிரதமர் சொன்னார். ஆனால் மாநிலத்தில் சுயாட்சி தரவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் மூலமாக தொல்லை தந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில்  மாபெரும் வெற்றிபெற்று, குறிப்பாக குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

    கமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கு வந்திருக்கிறேன் என குறிப்பிட்ட மோடி அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

    தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார். பின்னர், காந்திநகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார். 
    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக இன்று மாலை அகமதாபாத் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
     
    அகமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய மோடி, சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 மாணவ-மாணவிகளின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்த வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதா, வேண்டாமா? என்று நேற்றுவரை பெரிய மனக்குழப்பத்தில் இருந்தேன். சூரத் தீவிபத்தில் தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களது எதிர்காலத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களின் மனக்காயங்களை ஆற்றும் சக்தியை அளிக்குமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர்  தெரிவித்தார். 

    ஆறாம்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக அமோக வெற்றிபெற்று 300-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று நான் பேசினேன். அதனால் என்னை பலர் கேலி செய்தனர். ஆனால், நான் கணித்தவாறு வலிமையான அரசாங்கம் அமைய மக்கள் பெருவாரியான வெற்றியை எங்களுக்கு அளித்துள்ளனர்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கி வந்திருக்கிறேன். வரும் ஐந்தாண்டுகள் 1942-1947 ஆண்டுகளுக்கிடையிலான காலக்கட்டத்தைப்போல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். உலக வரிசையில் இந்தியா முன்னர் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் ஆண்டுகளாக அடுத்த ஐந்தாண்டுகள் அமையும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

    அவர் பேசி முடித்த பின்னர் அங்கு திரண்டிருந்தவர்கள் தங்களது கைபேசியில் உள்ள விளக்குகளால் மேடையை நோக்கி ஓளிவீச வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர், அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார்.

    இன்றிரவு தனது தாயாரை சந்திக்கும் பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னர் நாளை வாரணாசி தொகுதிக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.

    பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

    வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 

    இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைப்பார்.
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.

    இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

    அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.

    ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.

    இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.

    மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.

    உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

    மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.


    மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

    ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது நாவடக்கம் தேவை. ஒரேயொரு தவறான கருத்து எல்லா காரியங்களையும் பாழடித்து விடும் என பாஜக புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும்  நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும்.

    குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக வரிசையாக அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.



    சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தே தீரவேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளது. பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிகளில் முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விலகி இருங்கள்.

    இதை நீங்கள் தவிர்த்தால் ஏராளமான பிரச்சனைகளையும் நீங்கள் தவிர்த்து விடலாம். நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தும் பலனில்லை என்னும் அளவுக்கு தவறான ஒரேயொரு கருத்து அவை அத்தனையையும் பாழாக்கி விடும்’ என வலியுறுத்தினார்.
    ×