என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். இதற்கு 30-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் டெல்லி செல்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
அவரும் அன்றே புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது பயண திட்டம் பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் 5 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இது தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் மட்டுமின்றி தேசிய பா.ஜனதா தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் மோடி அரசுக்கு எதிரான அலை வீசியதால்தான் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று பொதுவான காரணம் கூறப்படுகிறது. என்றாலும் தமிழக பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் இந்த தடவை குறைந்து போனதை மேலிடத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
வாஜ்பாய் காலத்தில் அதாவது 1999-ம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 7.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அதன் பிறகு அந்த அளவுக்கு வாக்குகளை தமிழக பாரதிய ஜனதா பெறவில்லை. 2009-ம் ஆண்டு 2.3 சதவீதம் 2014-ம் ஆண்டு 5.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.
தற்போது 2019-ல் அது 3.7 சதவீதம் வாக்குகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதா சுமார் 2 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சதவீத வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமித் ஷா அலுவலகம் நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையை தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது, “தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைந்தது ஏன்?” என்று விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழிசையிடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பா.ஜனதா ஆதரவாளர்கள் பலரிடமும் அமித் ஷா அலுவலகம் அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக பா.ஜனதாவில் மாற்றங்களை கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இந்த தடவை 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் இலக்கு வைத்திருந்தனர். அதை கருத்தில் கொண்டே அவர்கள் காஞ்சிபுரம், திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, தேனி, ஈரோடு நகரங்களில் நடந்த பிரமாண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனாலும் தோல்வி ஏற்பட்டது ஏன்? என்பது புரியாமல் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழ் நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைய என்ன காரணம் என்று மேலிடத்துக்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த விளக்கத்தில், “தமிழக பா.ஜனதா தலைவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றவில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “தேர்தல் முடிவுகள் வெளியானதும், பா.ஜனதா மூத்த தலைவர் ராம்லால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தல் தோல்விக்காக கவலைப்பட வேண்டாம் என்றார். நாங்கள் மேற்கொண்ட தேர்தல் பணிகளை பாராட்டினார்” என்றார்.
தமிழக பா.ஜனதா மீது மேலிட தலைவர்கள் கோபமாக இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
பத்திரிகையில் பல தகவல்கள் வருகிறது. இதில் எந்த தகவலுமே உண்மை இல்லை. அதை மோடியே சொல்லி விட்டார். அதனால் என்னைப் பொறுத்தமட்டில் கட்சி எங்களோடு இருக்கிறது.
தமிழக பா.ஜனதா மீது பா.ஜனதா தலைமை கோபமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் கட்சிக்கு எங்களை பற்றியும் தெரியும். தமிழகத்தில் இருந்த களத்தை பற்றியும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.
பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக சொன்னதை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ராகுல்காந்தியை முழுமையாக ஆதரித்து கட்சியை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினோம்.
உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் தேர்தல் முடிவு குறித்து அறிய சில காலம் ஆகும். அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களித்து உள்ளனர். தென் மாநிலங்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது தான் இந்த தோல்விக்கு காரணம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனை வட மாநில தலைவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் செல்வோம். கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. கிரண்பெடி எல்லா திட்டங்களையும் தடுத்து நிறுத்தியதால் அதன் எதிரொலி தேர்தலில் இருந்தது.
மாநில வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து பிரதமருடன் இணக்கமாக இருக்கிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்வதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த காலத்தில் பிரதமர் சொன்னார். ஆனால் மாநிலத்தில் சுயாட்சி தரவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் மூலமாக தொல்லை தந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.
பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.
அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.
ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.
இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.
மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.
மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்