search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94589"

    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018
    டோராடூன்:

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி, மற்ற மாணவர்கள் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். சுமார் 55 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



    முன்னதாக அவர் பேசும் போது, யோகா உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு கருவியாகி உள்ளதாக கூறினார். இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா செய்து வருகின்றனர். 
    சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது. #Yoga #Meditation
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி(இன்று) முதல் 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.



    இப்பயிற்சிகளை யோகா ஆசான் சுத்தவெளி சபை ஏ.என்.தனசேகரன் நேரில் அளிக்கிறார். இந்த பயிற்சிகளை 3 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டோர் வரை அனைவரும் எளிதாக செய்யலாம்.

    யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் 21-ந் தேதி(இன்று) காலை 6.30 மணி முதல் ஆலந்தூர், மாலை 6 மணி முதல் எழும்பூர், 22-ந் தேதி காலையில் சைதாப்பேட்டை, மாலையில் டி.எம்.எஸ், 23-ந் தேதி காலையில் வடபழனி, மாலையில் அண்ணாநகர் டவர், 24-ந் தேதி காலையில் திருமங்கலம், மாலையில் செனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும்.

    தொடர் மெட்ரோ ரெயில் பயணம் உங்கள் பயணத்தை சுகமாக்கும். தொடர் யோகா பயிற்சிகள் உங்கள் உடல்நலனை வலுவாக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Yoga #Meditation  #tamilnews 
    புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். #yoga #yogaday
    புதுச்சேரி:

    காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கும் மஹாயோகம் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவையில் நடந்து வருகிறது.

    புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது.



    விழாவுக்கு மகாமகரிஷி அறக்கட்டளை விஜயானந்தன் தலைமை வகித்தார். ரமேஷ்ரிஷி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலகண்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், சுவிஸ் நாட்டு கம்பன் கழக தலைவர் சரவணபவ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    யோகாவில் 18 வயது முதல் 72 வயதுவரை உடைய பெண்கள் பங்கேற்று உணவு, உறக்கமின்றி யோகா செய்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. நிறைவு விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்கிறார். #yoga #yogaday

    உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.
    தற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.

    உடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் - பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.

    ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.

    பொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

    உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

    ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

    தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.
    மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.
    இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.
    பெயர் விளக்கம் : ‘அஷ்டாங்க’ என்றால் எட்டு அங்கம் என்றும் ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : கால்விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி வணங்குவதால், இது அஷ்டாங்க நமஸ்காராசனம். முழங்கால்களை தரையில் ஊன்றி உடலை முன்புறம் நீட்டவும். வயிறு மட்டும் தரையில் படாமல் இருக்க வேண்டும். வெளியே மூச்சுவிடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு : இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள் : கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும். 
    கணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகளை பார்க்கலாம்.
    கணினிகள் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகப் பணியைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் கணினிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இணையதளம் வழியே டி.வி. நிகழ்ச்சிகள் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் ரசிக்கப்படுகின்றன. மிச்சசொச்சம் அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்வோர் உண்டு. இப்படி சதா கணினியில் பணி செய்வது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கலாம். உடல்சோர்வு, மனச்சோர்வு, கழுத்துவலி, மணிக்கட்டு வலி, தோள்பட்டை மற்றும் விரல்களிலும் வலி உண்டாகலாம். கணினியால் உருவாகும் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகள்...

    * உங்கள் தலையை இடமும், வலமுமாக அசைக்கவும். அதுபோல முன்னும் பின்னுமாக அசைத்து பயிற்சி செய்யவும். மனதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நினைத்துக் கொள்ளலாம். தலை அசைவை ‘ஓ’ என்ற எழுத்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு அதன் போக்கிற்கு கழுத்தை அசைத்து தலைக்கு பயிற்சி கொடுக்கலாம். இது மேல்-கீழ், சுழிவு என அனைத்து வகை இயக்கங்களுக்கும் வழி வகுக்கும். இதனால் கணினியால் ஏற்பட்ட கழுத்து வலி மறையும்.

    * இதேபோல தோள்பட்டை வலியை நீக்க, தோள்பட்டையை மேலும் கீழும் அசைத்து ஒரு வட்டம் (ரவுண்டு) அடிப்பதுபோல இயக்குங்கள். இப்படி சுமார் 10 முறை செய்துவிட்டு, பின்னர் அடுத்த தோள் பட்டையில் இதுபோல பயிற்சி செய்யுங்கள். அடுத்ததாக இரு தோள் பட்டைகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது நீண்ட நேர தட்டுச்சு செய்வதால் ஏற்படும் தோள்பட்டை வலியை மாயமாக்கும்.



    * மற்றொரு வகையிலும் தோள்பட்டைக்கு பயிற்சி அளிக்கலாம். கையை மடக்கி விரல்களால் தோள் பட்டையை தொட்டுக் கொண்டு கைகளை பக்கவாட்டில் சில சுற்றுகள் சுற்றலாம். இதேபோல எதிர் திசையிலும் சிலமுறை சுற்றி பயிற்சி செய்யலாம்.

    * அதிகமான தட்டச்சுப் பயிற்சியால் ஏற்படும் மணிக்கட்டு வலியையும் கணினி யோகாவால் போக்க முடியும். இதற்காக மணிக்கட்டை ஒரு வட்டமாக கடிகார சுழற்சியில் அசைக்கவும், பின்னர் எதிர் கடிகார சுழற்சியில் மணிக்கட்டை அசைக்கவும். இப்போது அடுத்த மணிக்கட்டில் இதேபோல பயிற்சி செய்யவும். பின்னர் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம்.

    * தரையில் அல்லது நாற்காலியில் நேராக அமர்ந்து கொண்டு தண்டுவடத்திற்கு பயிற்சி அளிக்கலாம். உடலை முடிந்தவரை (இடுப்பிற்கு மேல்பகுதியை மட்டும்) இடது புறத்தில் இருந்து வலது பக்கத்திற்கு திருப்புவது, பின்னர் வலதுபுறத்தில் இருந்து இடது புறத்திற்கு திருப்புவது என்று பயிற்சி செய்யலாம். பின்னர் அமர்ந்தபடியே குனிந்து அடிவயிறு தொடையில் படும் வகையில் படுத்து எழுந்தும், பின்னோக்கி முடிந்தவரை சாய்ந்து எழுந்தும் பயிற்சி செய்யலாம். இது முதுகுவலி, அசதி போன்றவற்றை அகற்றும். உற்சாகம் தரும்.

    சதா அமர்ந்த படி கணினியில் பணி செய்வதால், உடல் வெப்பமடையலாம். பாதங்களுக்கு சீராக ரத்த ஓட்டம் பாய்வதிலும் தடை ஏற்பட்டிருக்கலாம். இந்த பாதிப்புகளை சீராக்க, பாதத்தின் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிகால்களை உயர்த்தி நின்று சில வினாடிகள் பயிற்சி செய்யலாம். கால்வலியை போக்கி உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராகவும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறவும் இந்த பயிற்சி உதவும்.

    * உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்வது புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும். விரல்களால் தலையை கோரி விடுவது, அசைப்பது என தொடங்கி, கைகால்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யலாம், விரல்களை சொடுக்கி அதன் அயர்ச்சியைப் போக்கலாம். அன்புக்குரியவர்கள் இருந்தால் ஒருவருக்கு மற்றவர் மசாஜ் செய்துவிடுவது பாசப் பிணைப்பை அதிகரிக்கும்.

    * முழுக்க முழுக்க கணினியில் பணி செய்வர்கள் தினமும் 20 நிமிடம் இந்த கணினி யோகா பயிற்சி செய்வது உடல்சோர்வு தணித்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். நல்ல உறக்கத்தையும், உற்சாகத்தையும் தரும். அடுத்தநாள் பணிகளை ஆனந்தத்துடன் செய்ய இது அவசியமாகும்! 
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது.
    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் ஒருவார கால யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது.


    நியூயார்க் நகரில் நடைபெற்ற இரண்டு மணிநேர யோகாசன நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவத்தி மற்றும் ஏராளமான உள்நாட்டு மக்களும், இந்தியர்களும் பங்கேற்றனர். சுதந்திர தேவி சிலையின் பின்னணியில் சூரிய நமஸ்காரம், பிராணாயமா உள்ளிட்ட மூச்சு பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

    வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில் பகுதி மற்றும் சில முக்கிய பெருநகரங்களில் நான்காவது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. #InternationalYogaDay #YogaDaycelebrations #USYogaDay
    யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
    யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட் களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

    கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

    முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.

    ‘‘தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.

    தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

    வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.

    ‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது’’ என்று பார்பரா கூறுகிறார்.



    தண்ணீர் ஆசனம் போலவே, தண்ணீர் மீது மிதக்கும் பலகை மீது செய்யும் ஆசனமும் பிரபலமாகி வருகிறது.

    இதுபற்றி நிகில் கபூர், ‘‘நீங்கள் யோகாசனத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறவராக இருந்தாலும் சரி, தண்ணீரில் மிதக்கும் பலகையில் கை வைத்ததுமே, இது வேறு மாதிரி என்று உணரத் தொடங்கிவிடுவீர்கள்’’ என்கிறார்.

    அலைச்சறுக்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தண்ணீர்ப் பலகை யோகாசனம் பிடிக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல வெளிநாட்டவரும் அலைச்சறுக்குப் பிரியருமான மேரி டைசியாக், தான் இந்தியா வரும்போது இந்த யோகாசனத்தை கற்க இருப்பதாகக் கூறுகிறார்.

    ‘‘நான் இதை தண்ணீரில் செய்து பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட கடினமாகவே இருந்தது. ஆனாலும் நான் அதை ரசித்தேன். தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களைச் செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன் படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது’’ என்று சொல்கிறார்.

    ‘‘மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது, தசைப்பிடிப்பு தன்மையைக் குறைக்கிறது’’ என்றும் பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

    தண்ணீர் யோகா சனத்தைப் போலவே, ஜும்பா நடன அசைவுகளை தண்ணீருக்குள் மேற்கொள்ளும் அக்வா ஜும்பாவும் யோகாசனப் பிரியர்களை கவரத் தொடங்கியுள்ளது.

    இதுதொடர்பாக மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட் செய்தித்தொடர்பாளரான தீவிகா நிஜாவன் கூறும்போது, ‘‘அக்வா ஜும்பாவை தண்ணீருக்குள் மேற்கொள்ளும்போது தண்ணீரின் எதிர்ப்புத்தன்மையானது தசைத் திரட்சியை அதிகரிக்கவும், உடம்பின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும் உதவுகிறது’’ என்று சொல்கிறார்.

    இனியென்ன, தண்ணீரில் தாராளமாய் மிதக்கலாம்! நீடித்த ஆயுளுடன் வாழலாம்!

    மைசூருவில் கடந்த ஆண்டை போலவே மீண்டும் ஒரு பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை வரும் ஜூன் 21-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InternationalYogaDay
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம், மைசூருவில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. ஒரே இடத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    இந்நிலையில், சுகாதர ஆர்வலர்கள், நமது பண்பாட்டு கலையான யோகவை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு மைசூருவில் மீண்டும் ஒரு  பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    உலக யோகா தினம் கொண்டாடப்படும் தினமான ஜூன் 21-ம் தேதி மைசூரு மாவட்டம் சாமுண்டி பகுதியில் உள்ள மைசூரு ரேஸ் கிளப்பில் இந்த நிகழ்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    ஆனால், போதிய நிதி இல்லாத காரணத்தினால் கின்னஸ் சாதனை அலுவலகத்துக்கு இந்நிகழ்ச்சியை பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல இம்முறை சாதனையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  #Yoga #InternationalYogaDay
    மூளைக்கு அதிக அளவு சுத்த ரத்தமும், பிராண சக்தியும் கிடைப்பதால் எதையும் தெளிவாக சிந்திக்கும் திறனும், நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படவும் முடிகிறது.
    பெயர் விளக்கம்:- நாடி என்றால் சூட்சும பிராண வாயு செல்லும் பாதைகள், சோதனா என்றால் சுத்தி என்று பொருள். இந்த பிராணாயாமப் பயிற்சி நாடிகளை சுத்தப்படுத்துவதால் நாடி சோதனா பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:- சுகாசனம், அர்த்த பத்மாசனம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அமரவும். தலை, கழுத்து முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின்முத்திரையை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். வலது கையை மடக்கி, வலது கை விரல்களால் நாசாக்ர முத்திரை செய்து வலது நாசியை கட்டை விரல்களால் அடைத்து இடது நாசி வழியாக மூச்சுக்காற்றை முழுவதுமாக வெளியே விடவும்.

    நாடி சோதனா பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி

    இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசியையும் மோதிர சுண்டு விரல்களால் அடைக்கவும், அப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து, வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும்.

    வலது நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும். வலது நாசியை கட்டை விரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். இடது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும். இது நாடி சோதனா பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது.

    புதியதாக பழகும்போது சில வாரங்கள் 6 முதல் 10 சுற்று பயிற்சி செய்து தொடர்ந்து தினமும் செய்யும் பயிற்சியில் சுற்றுக்களை அதிகரித்துக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை மாலை பயிற்சி செய்யலாம்.

    பிராணாயாமத்தில் மூச்சை இழுக்கும் கால அளவும் மூச்சை வெளியே விடும் கால அளவும் சமமாக இருக்க வேண்டும். ஆரம்ப பிராயத்தில் சிலருக்கு சுவாசத்தின் போக்கு வரவு சரியாக அமையாவிட்டாலும், தொடர்ந்து செய்யும் பயிற்சியில் சரிவர அமையும். கவனம் செலுத்த வேண்டிய இடம்:- சுவாச இயக்கத்தின் மீதும், ஆக்ஞாசக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு:- நாடி சோதனா பிராணாயாமத்தை பகலில் செய்யும்போது இரண்டு நாசிகளில் மாற்றிச் செய்வதில் முதலில் இடது நாசியின் வழியாக மூச்சை வெளியே விட்டு பிறகு இழுக்க வேண்டும். பிராணாயாமத்தை முடிக்கும் போதும் இடது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்கவும். இரவில் பயிற்சி செய்யும்போது முதலில் வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விட்டு, பிறகு மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். முடிக்கும் போதும் வலது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்கவும்.

    யன்கள்:-மூளைக்கு அதிக அளவு சுத்த ரத்தமும், பிராண சக்தியும் கிடைப்பதால் எதையும் தெளிவாக சிந்திக்கும் திறனும், நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படவும் முடிகிறது. பீனியல் மற்றும் பிட்யூட்டரி நன்கு செயல்படத் தூண்டுவதால் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற சுரப்பிகள் நன்கு இயங்கி வயதுக்கு ஏற்ற உடல், மன வளர்ச்சி சீராக அமையும்.

    உடல் மன இயக்கத்துக்கு ஆதாரமான இடா, பிங்களா நாடிகளில் சமமாக பிராணவாயு செலுத்தப்படுவதால் மனஅழுத்தம் நீங்கும். கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவாற்றல் அதிகரிக்கும் 72,000 நாடிகளும், தூய்மை பெறும்.
    உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.
    பொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

    உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

    ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

    தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.
    மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கான யோகப் பயிற்சிகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பெலும்புகள் நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.

    காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும். இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பலன்கள்

    இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.
    ×