search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94589"

    உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.
    பெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.

    இந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.

    5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.

    பயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.

    தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.

    பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும். 
    பெண்கள் இந்த ஆசனத்தை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கூபக எலும்பு நன்கு விரிவடைந்து பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும்.
    பெயர் விளக்கம்: பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள்.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும்படி வைக்கவும். கைவிரல்களை ஒன்றாக சேர்த்து, ‘உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும்.

    இது பத்த கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்நிலையில் 5 முதல் 10 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த ஆசன பயிற்சியை செய்யலாம்.

    பயிற்சிக்குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

    தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குளிக்ககூடாது.

    பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும் மற்றும் பலம் பெறும் சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள யோகப் பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும். 
    சூரிய பேதா பிராணாயாமம் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இன்று பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: ‘சூர்ய’ என்றால் சூரியன் என்றும் பேதா என்றால் அடைப்புகளை நீக்கி உள்ளே போ என்றும் பொருள்படுகிறது. இப்பயிற்சி பிங்களா நாடி சூரிய நாடியில் உள்ள அடைப்பை நீக்கி, அந்நாடியில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்துவதால் இப்பெயரில் அமைந்துள்ளது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

    வலது கையை மடக்கி, விரல்களால் நாசாக்ர முத்திரை செய்யவும். இடது நாசியை ஆள்காட்டி சிறுவிரல்களால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விடவும். வலது நாசியின் வழியாக மூச்சுக்காற்றை முடிந்த அளவு உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும்.

    வலது நாசியையும் கட்டை விரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். ஓரிரு வினாடிகள் அப்படியே இருக்கவும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியில் சுற்றுகளை அதிகரித்துக் கொண்டு போய் 15 முதல் 30 சுற்று வரை செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும் மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: இப்பயிற்சியில் வலது நாசியின் வழியாக மட்டும் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விட வேண்டும். இப்பயிற்சியின் துவக்கத்திலிருந்து முடியும் வரை இடது நாசி, ஆள்காட்டி, சிறுவிரல்களால் மூடியபடியே இருக்கட்டும்.

    தடைகுறிப்பு:
    இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, மனபடபடப்பு மற்றும் அமில பித்தம் போன்ற பித்த சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

    பயன்கள்: உடலில் பிராண சக்தி மிகும், வெப்பம் அதிகரிக்கும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் நன்மை அளிக்கிறது. ஜலதோசம் போன்ற கப சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடலிலுள்ள கிருமிகள் அழியும். இருமல், சீதளத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    சிம்பதடிக் நரம்பு மண்டலத்தை பிங்களா நாடி தூண்டி செயல்படுத்துவதால் இப்பயிற்சியினால் ரத்த ஓட்டம் விரைவடைந்து, சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்படையச் செய்கிறது. மனதை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. குறைந்த ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளது. உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

    குறிப்பு: சூரிய பேதா பிராணாயாமத்திற்குப் பிறகு சுவாசனத்தில் 8 நிமிடம் ஓய்வு பெறவும். 
    தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். எந்த வயதில் இருந்து தியானம் செய்ய ஆரம்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது.

    ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

    எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும். 
    நீங்கள் தொடர்ந்து பிராணாயாமம் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.
    பிராணாயாமம் என்றால் மூச்சுப்பிடித்து செய்வது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நம் அடிப்படை சக்திகளை கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சும்மா சில விஷயங்களைச் செய்வதன் மூலமே சக்தியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வரமுடியும். கட்டுப்பாடு என்றால் என் உடலில் மட்டுமல்ல, எனக்கு எங்கு வேண்டுமோ அங்கு சக்தியை செலுத்த முடியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் என் சக்தியை எடுத்துச் செல்லலாம். துவக்கத்தில் மூச்சினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றோம். அதன்பின் சக்தியின் மீது முழுமையான ஆளுமை எடுத்து வருகிறோம்.

    மூச்சு ஒரு கருவி மட்டுமே. சுவாசத்தை பயன்படுத்தாமலேயே சக்தியை நாம் கட்டுப்படுத்த முடியும். சக்திநிலையின் மீது கொண்டுவரும் கட்டுப்பாட்டிற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சுவாசத்தை ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். அதனால், பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.

    பிராணாயாமம் செய்யத் துவங்கியவுடன் சிலருக்கு எடை குறையும் வேறு சிலருக்கோ எடை கூடும். இதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.

    உங்கள் ஜீரண சக்தி மந்தமாக இருந்தால் உணவை உடலாக மாற்றக்கூடிய திறன் குறைப்பாட்டுடன் உள்ளது என்று அர்த்தம். பிராணாயாமப் பயிற்சி துவங்கியவுடன் ஜீரண சக்தி அதிகரிப்பதை உணரலாம். இதனால் உணவை சதையாக மாற்றும் உங்கள் திறனும் அதிகரிக்கலாம். உணவினை வெறுமனே கழிவாக வெளியேற்றும் தேவை குறைந்து போகலாம். இதனால் உங்கள் உடல் எடை கூடலாம். அதுவே உங்கள் ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்போது நீங்கள் பிராணாயாமம் செய்யத் துவங்கினால் தாங்கள் உண்ணும் உணவு வேறொரு சூட்சும சக்தியாக உருமாற்றம் அடையும். இப்போது நீங்கள் உடல் எடையை இழக்கத் துவங்குவீர்கள். எத்தனை உணவு உண்டாலும் உடல் எடை குறைவதை கவனிக்க முடியும்.

    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

    பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது? ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.
    தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக் கட்டத்தில் பலர் ஆண்மைக் குறைவால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உட்டியாணா யோகா நிரந்தர தீர்வை தரும்.
    தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலக் கட்டத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அதிகம். இதன் பாதிப்பு ஆண்மைக் குறைவு வரை கொண்டு சென்றுவிடுகிறது. இதனால் பாலியல் விஷயங்களில் ஆர்வம் குறைந்துவிடும். இதனை சரிசெய்ய எளிய உட்டியாணா ஆசனத்தை செய்யலாம்.

    செய்முறை :

    விரிப்பில் இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும்.

    இந்த நிலையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இதனைத் தொடர்ந்து சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும். வயிற்றை உள்ளுக்குள் இழுத்து, ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தவும்.

    மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும்.

    ஆசனத்தின் பலன்கள் :

    மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும்.

    இடுப்பு சதைகள், இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும்.

    ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நல்ல பலன் தரும்.

    ஆசனத்தை தவிர்க்க வேண்டியவர்கள்:

    14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செய்யக் கூடாது.

    வயிற்றில் அறுவை சிகிச்சை, வயிற்றில் புண் இருப்பவர்கள், இதய பலவீனம் உள்ளவர்களும் ஆசனத்தை தவிர்க்க வேண்டும். 
    வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை பார்ப்போம்.
    அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை முதலில் பார்ப்போம்.

    வஜ்ராசனம்:

    பெயர் விளக்கம்:  தேவர்களின் தலைவரான இந்திரனின் கையில் உள்ள பலம் பொருந்திய வஜ்ராயுதம் போல இந்த ஆசனம் உடலுக்கு அதிக வலிமை அளிப்பதால் வஜ்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:  தரை விரிப்பின் மேல் அமர்ந்து, கால்கள் இரண்டையும் நேராக நீட்டி வைக்கவும்.  வலது காலை மடக்கி, வலது குதிகாலை வலது புட்டத்தின் அடியிலும், இடது காலை மடக்கி இடது குதிகாலை இடது புட்டத்தின் அடியிலும் வைக்கவும். இரு குதிகால்களுக்கு இடையில் புட்டம் இருக்கட்டும். முழங்கால்கள் இரண்டும் சேர்ந்திருக் கட்டும். பாத விரல்கள் முதல் முழங்கால்கள் வரைக்கும் விரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.

    முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி தொடை களின் மேல் கைவிரல் களால் சின் முத்திரை செய்யவும், முழங்கால்கள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும், கண்களை மூடவும் உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். ஆரம்பப் பயிற்சியில் சிலருக்கு வஜ்ராசனத்தில் அமரும் போது குதிகால் பகுதியில் அதிக வலி உண்டாகலாம்.

    அத்தகையவர்கள் இரு பாதத்திற்கு அடியில் மிருதுவான துணி ஒன்றை சுருட்டி வைத்து அதன்மேல் அமர்ந்து செய்யலாம்.  அல்லது அமருவதற்கு சரியாக இருக்கும் அளவு சிறிய இருகால் மனை ஒன்றை தரை விரிப்பின் மேல் வைத்து அதன் மேல் அமர்ந்து செய்யலாம். மனையின் இடை வெளியில் கால்களும் மனையின் மேல் புட்டமும் இருக்கட்டும்.

    பயன்கள்:  இந்த ஆசனத்தினால் தொடை, முழங்கால், கணுக்கால், பாதம், உறுதி பெறும்.

    பெயர் விளக்கம்:

    ஜாலந்தர பந்த்:  ஜாலந் என்றால் வலைப் பின்னல், வலை போன்ற அமைப்பு என்றும் ‘தர’ என்றால். ஆறாகப் பாய், ஒரு தொடர் ஓட்டம் என்றும் பொருள் படுகிறது. ஜாலந்தர பந்தம் என்றால் கழுத்துப் பகுதியில் உள்ள வலை போன்ற நாடிகளில் செல்லும் பிராணவாயு மற்றும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் என்று பொருள் படுகிறது.

    செய்முறை:  வஜ்ராசனத்தில் அமரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைத்து இரு கை விரல்களாலும் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும் உடலை தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக முடிந்த அளவு மூச்சுக் காற்றை இழுத்து நிறுத்தவும். மெதுவாக தலையை தாழ்த்தி முகவாய்க்கட்டை, கழுத்துப்பட்டை எலும்பை தொகுப்பு அழுத்தி வைக்கவும். மூச்சை வெளியே விடாமல் 5 முதல் 10 வினாடி அப்படியே நிலைத்திருக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை மற்றும் முதுகுப் பகுதியின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.



    பயிற்சி குறிப்பு: கழுத்து நரம்புகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்கள், முரட்டுத் தனமாக கழுத்தை வளைக்காமல் முடிந்த அளவு செய்யவும். நாள்பட சரியாக வந்து விடும்.

    எடை குறைப்பு:
    கழுத்து நரம்பு வலி, தலை கிறுகிறுப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

    பயன்கள்:
    தைராய்டு, பாரா தைராய்டு, நன்கு இயங்க உதவுகிறது. தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, அடைப்பு நீங்கும் மன அழுத்தம் படபடப்பு, கோபம் குறையும் மனம் அமைதியுறும்.

    அக்னி சார தௌதி


    பெயர் விளக்கம்: இப்பயிற்சி ஜீரண கருவிகளை தூய்மைப்படுத்தி ஜடராக்னியை விருத்தி செய்வதால் அக்னி, சார தௌதி என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும், மூச்சை ஆழமாக உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டு நுரை யீரலில் இருக்கும் காற்றை முடிந்த அளவு வெளியேற்றவும். முதுகை வளைக்காமல் சிறிதளவு முன் பக்கம் உடலை சாய்க்கவும், உள்ளங்கைகளை முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். தலையை தாழ்த்தி ஜாலந்தரபந்தம் செய்யவும். மீண்டும் மூச்சுக் காற்றை உள்ளுக்கு இழுக்காமல் இருந்து வயிற்றை சுருக்கி முடிந்த அளவு முதுகுடன் வயிற்றுத் தசைகளை ஒட்டி இருக்கும்படி செய்து உடனே வயிற்று தசைகளை விரித்து வயிற்றை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வரவும்.

    இப்படியே வயிற்றுத் தசைகளை உள்நோக்கி இழுப்பதும் மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதுமாக 5 முதல் 10 முறை அவரவர் தேக நிலைக்கு தக்கபடி செய்யவும், இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை சில நாட்கள் 3 முதல் 5 சுற்று வரை செய்யவும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு 10 சுற்று வரை செய்யலாம். ஒவ்வொரு சுற்றுக்கு இடையிலும் தலையை மேலே உயர்த்தி சாதாரண மூச்சுடன் சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

    கவனம் செலுத்தவேண்டிய இடம்:  மூச்சின் இயக்கம், வயிற்றுத்தசை சுருங்கி விரிதல் மற்றும் மணிப்புர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு:  இந்த பயிற்சியில் தொடர்ந்து வயிற்று தசைகளை சுருக்குவதும், விரிப்பதுமாக செய்யும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கக்கூடாது.

    எப்பொழுது பயிற்சி செய்யலாம்:  காலையில் வெறும் வயிற்றில் செய்யலாம். ஆசனம் அல்லது பிராணாயாமத்தின் முடிவிலும் செய்யலாம்.

    தடைக்குறிப்பு: வயிறு, குடல்புண், உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, தைராய்டு சுரப்பி அதிக அளவு இயக்கு நீரை சுரத்தல் போன்ற குறைபாடு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

    பயன்கள்: வயிற்றுத்தசை மற்றும் உதரவிதானம் பலம் பெறும். அஜீரணம், மலச்சிக்கல், அதிக அமில சுரப்பு நீங்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், அதிக அமில சுரப்பு நீங்கும், மந்தமாக செயல்படும் கல்லீரல், சிறுநீரகம், கணையம் நன்கு இயங்கும் ஆற்றல் பெறும், தொந்தி குறையும். வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும், சோர்வு நீங்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும். மன அழுத்தம், எந்த காரியத்திலும் மந்தமாக செயல்படுதல் போன்ற குறைபாடுகளை நீக்கவும் இந்த பயிற்சி பயன்படுகிறது.
    பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.
    பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

    மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.

    ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.

    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

    நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.

    பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

    முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுவதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.

    அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.

    மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.

    பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

    ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம். 
    சூரிய நமஸ்கார யோகாவை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    உடலின் இயக்கத்திற்கு முக்கியமாக பயன்படும் சுரப்பிகளுக்கும், உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதன் மூலம் மூப்பையும், பிணிகளையும் எளிதில் அணுக முடியாதபடி தடுத்து நீண்ட ஆயுளை அளிக்கிறது.

    உடலின் இயக்கம் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படுவதால் சிறுவயதினரின் உடல் மன வளர்ச்சி சரியாக அமைய உதவுகிறது. உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச் சதைகளை கரைத்து அழகான உடல் வடிவை அளிக்கிறது. கல்வி பயில்வோருக்கு பரீட்சை நேரத்தில் உண்டாகும் பயம், படபடப்பை நீக்குகிறது.

    சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது. 
    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

    தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.

    வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

    அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

    சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

    இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணுங்கள்.

    இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.

    ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்துங்கள்.

    பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம.. ராம' என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜெபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108-ன் மடங்காக இருக்கட்டும்.

    இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

    முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ெஜபமும் உதவுகின்றன. 
    சூரிய நமஸ்காரம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பயிற்சி செய்யும் முறை : புதியதாக பழகுபவர்கள் தினமும் 2 முதல் 3 சுற்று பயிற்சி என ஆரம்பித்து சில வாரங்களுக்கு ஒருமுறை உடல் வலிமைக்கு ஏற்றபடி சில சுற்றுக்களை அதிகப்படுத்திக் கொண்டு போய் ஒரு வேளைக்கு 12 சுற்று வரை பயிற்சி செய்யலாம். 12 சுற்றுகளுக்கு அதிகமாக செய்பவர்கள் நிலை 4ல் பின்னோக்கி வைத்த காலையே மீண்டும் நிலை 9ல் முன்னால் வைத்து ஒவ்வொரு சுற்றிலும் இதே போல் இரண்டு கால்களையும் மாற்றிச் செய்ய வேண்டும்.

    சூரிய நமஸ்காரத்தை 27 சுற்றுகளுக்கு அதிகமாக தினமும் காலை, மாலை செய்பவர்கள் வேறு ஆசனப் பயிற்சிகள் செய்யாமலேயே அதிக அளவு பயனைப் பெற முடிகிறது. ஆனால் 27 சுற்றுக்களைவிட அதிகமாக 54, 108 சுற்று செல்ல விருப்பம் உள்ளவர்கள் குருவின் நேரடிப் பார்வையில் பயில்வது நல்லது.

    தடைகுறிப்பு : குடலிறக்கம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்யக் கூடாது. பெண்கள் மாதவிலக்கு நாட்களில் செய்யக்கூடாது.

    பயிற்சிக்குறிப்பு : பருவ காலத்திற்கு தகுந்தபடி பயிற்சி செய்ய வேண்டும். குளிர் காலத்தில அதிகமாகவும் கோடை காலத்தில் சற்று குறைத்தும் பயிற்சி செய்வது நல்லது. தன் சக்திக்கு மீறிய அளவு அதிக சுற்றுப் பயிற்சி செய்யக் கூடாது. எவ்வளவு சுற்றுக்களை களைப்பின்றி செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் மட்டும் பயிற்சி செய்யவும்.

    சூரிய நமஸ்காரத்தையும் உடற்பயிற்சிகளையும் ஒன்றாக செய்யக் கூடாது.

    இந்த ஆசனம் தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் கிடைக்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை : பத்தாம் நிலையிலிருந்து நேராக நிமிர்ந்து கைகளை மேலே உயர்த்தவும். அதே சமயம் இடுப்பிலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதியை பின்பக்கமாக வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை வளைப்பதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : மேலே உயர்த்திய கைகளை அதிகமாக அகற்றாமல் உங்கள் புஜ அளவில் வைக்கவும். ஆரம்பப் பயிற்சியில் முதுகை பின்னால் அதிகமாக வளைக்க முடியாதவர்கள் முடிந்த அளவு முதுகை வளைத்து செய்யவும். இப்பயிற்சியில் பின்நோக்கி முதுகை வளைக்கும் போது முழங்கால்களை மடக்கக் கூடாது.

    தடைகுறிப்பு : பலகீனமான இருதயம் உடையவர்கள் தலைசுற்றல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் அதிகமாக பின் வளைந்து செய்யக்கூடாது.

    பயன்கள் : தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும். 
    ×