search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94590"

    ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் இடுப்பு மற்றும் தொடையிலுள்ள அதிக சதையைக் கரைக்கிறது.
    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைக்கவும். சர்வாங்காசன நிலைக்கு வரவும். அதாவது, மூச்சை வெளியேற்றியவாறு கால்களை மேல் நோக்கி உயர்த்தவும். புட்டத்தை உள்ளங்கைகளால் தாங்கியவாறு கழுத்திலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் இடுப்புக்கு நேராக நிறுத்தவும். இது சர்வாங்காசன நிலை. மூச்சை உள்ளிழுக்கவும். கால்களை ஒன்றன் பின் ஒன்றாக பத்மாசன நிலையில் இருப்பது போல் மடக்கவும்.
    மூச்சை வெளியேற்றியவாறு கால்களை முகத்தை நோக்கிக் கொண்டு வரவும். கால் முட்டிகளை முகத்தில் வைக்கவும்.

    30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் கால்களை நிமிர்த்தி, பத்மாசன நிலையிலிருந்து வெளி வந்து தரையில் ஆரம்ப நிலையில் இருந்தது போல் படுக்கவும்.

    கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். தீவிர மூட்டுப் பிரச்சினை உள்ளவர்களும் பத்ம ஹலாசனத்தைத் தவிர்க்கவும்.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. தொப்பையைக் கரைக்கிறது. இடுப்பு மற்றும் தொடையிலுள்ள அதிக சதையைக் கரைக்கிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    கால் தசைகளைப் பலப்படுத்துகிறது. மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறது.
    இந்த ஆசனம் செய்தால் குளிர்காலத்தில் குளிரை சமாளிக்கவும், கால் நரம்புகள் குளிர்காலத்தில் சிலருக்கு இழுக்கும், அந்த மாதிரி நரம்புப் பிரச்சினைகள் வராது.
    ஸ்டெப் 1: விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும். கைகளை அழுத்தி வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு காலை தரையில் வைக்கவும். பின் இடது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும்.

    ஸ்டெப் 2: பின் இரு கைகளையும் அழுத்தி இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை தரைக்கு கொண்டு வரவும்.

    ஸ்டெப் 3: பின் இரு கால்களையும் படத்தில் உள்ளதுபோல் இடுப்பு வரை உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும். இதேபோல் இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.

    அர்த்த ஹாலாசனம் பலன்கள்: கணையம் நன்கு இயங்கும். வாயு பிரச்சினை சரியாகும். சுகர் சரியாகும் இடுப்பு வலி நீங்கும். இடுப்பு எலும்பு தேய்மானமாகாமல் திடமாக இயங்கும். குதி கால் வலி வராது. கால் பாத வீக்கம் வராது. குளிர்காலத்தில் குளிரை சமாளிக்கவும், கால் நரம்புகள் குளிர்காலத்தில் சிலருக்கு இழுக்கும், அந்த மாதிரி நரம்புப் பிரச்சினைகள் வராது.
    சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்கு இயங்க செய்யும் எளிய யோக பயிற்சிகள் உள்ளன, அதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்து சரிபடுத்தலாம். மிக எளிய பயிற்சி தான், இதன் மூலம் உடலை, உடல் உள் உறுப்பை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.
    ஒரு நாற்காலியில் அமரவும், நாற்காலியில், சற்று  முன் அமர்ந்து இரு கால்களையும் மெதுவாக படத்தில் உள்ளது போல் நீட்டவும். இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும். பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை தரைக்கு கொண்டு வரவும். இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும். காலை, மாலை சாப்பிடும் முன் இரண்டு முறைகள் பயிலவும்.

    பலன்கள்

    * அடிவயிற்றுக்கான சிறந்த யோகா பயிற்சியாகும் இது. வயிறில் உள்ள அனைத்து பகுதிகளும் அழுத்தம் பெறுவதால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.

    * கணையங்களின் செயற்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

    * குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த யோகாசனப்பயிற்சி உதவுகிறது.

    * இதை தினமும் தொடர்ந்து செய்வதால் இரைப்பை, குடல் போன்ற செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. மேலும்
    வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவை போக்குகிறது.

    * மலச்சிக்கலுக்கான இயற்கை வைத்தியமாக செயல்படுகிறது.

    * அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

    * கர்ப்பிணிகள் செய்யும் போது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்.
    இந்த ஆசனம் இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கால்களின் பாதங்களை முன்னும்,பின்னுமாக அசைத்து தளர்த்திக் கொள்வது முக்கியம். இடது முன்னங்காலை தரையில் ஊன்றி குதிகாலை மேல் நோக்கி தூக்கிய நிலையில் வைக்க வேண்டும்.

    பின்பு குதிகால் மீது படத்தில் உள்ளது போன்று உடலின் பின்பகுதியை வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மடக்கி வலது கால் பாதமானது இடது தொடை மீது வயிற்றுடன் ஒட்டிய நிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும். 2 கைகயையும் மார்புக்கு நேராக கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

    இது தான் ஆஞ்சநேய ஆசனத்தின் அமைப்பாகும். இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும். ஆசனப்பயிற்சியின் போது சுவாசம் சாதாரண நிலையில் இருப்பதுடன் செய்து முடித்த பின்பு கால்களை மாற்றி இதே முறையில் வலது காலை ஊன்றி ஆஞ்சநேய ஆசனத்தை செய்யலாம்.

    பயன்கள் :

    முகம் பொலிவு பெறவும், தொடை தசை இறுக்கம் குறையவும், தட்டையான பாதத்தை சரி செய்யவும், மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது. முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
    உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஏதேனும் சம்பவங்கள் உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கினால் அதை யோகா பயிற்சி செய்வதின் மூலமாக நாம் குணப்படுத்தலாம்.
    யோகா என்பது உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். உலகம் முழுவதும் பெரும்பாலானோர் யோகா செய்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளனர். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு உள்ளது.

    யோகா செய்வதால் பல நன்மைகள் உண்டாகும். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொருத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம்.

    முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு போன்றவற்றை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மன இறுக்கம், அபரிமித உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

    உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது. தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது. சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு வகைகளை (பாஸ்ட்புட்) தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் யோகா செய்யக்கூடாது. யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது.

    உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் யோகாவை தங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களும் கூட மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாவை பின்பற்ற சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஏதேனும் சம்பவங்கள் உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கினால் அதை யோகா பயிற்சி செய்வதின் மூலமாக நாம் குணப்படுத்தலாம்.

    எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை நினைத்து அல்லது உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுவதால் ஏற்படுவதே மனப்பதற்றம் இதைப்போக்குவதற்கு நாம் யோகாவை சரியாக பயன்படுத்த வேண்டும். யோகா உங்கள் மனதில் உள்ள அனைத்து பிரச்சினையையும் தீர்க்க உதவியாக இருக்கிறது என்று ஏராளமான ஆய்வில் தெரியவந்துள்ளது. கோடை காலங்களில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கும் மற்றும் அதீத உழைப்பினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் நாம் யோகாவை தினமும் காலையில் செய்ய வேண்டும். நாம் எப்படி நம் உடல் உஷ்ணத்தை சமமாக வைத்துக் கொள்கிறோமோ அப்பொழுது தான் நம்முடைய ஆரோக்கியமும் தீர்மானிக்கப்படுகிறது.

    உங்கள் உடலையும் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள யோகா பயிற்சி மிகவும் அவசியம். உங்கள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சரியாக செலுத்த யோகா பயிற்சி உதவுகிறது. அதை தவிர்த்து இதயத்தில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும், அதன் உறுதித்தன்மையை அதிகரிக்க யோகா பயன்படுகிறது. இதயத்தில் உண்டாகும் எல்லா பிரச்சினையும் தீர்க்க யோகா அதிகமாக உதவுகிறது என பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரமாகவும் மற்றும் கவுரவமாகவும் வாழ வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் அதில் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சியும் செய்ய வேண்டும்.

    இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மன பிரச்சினை அனைத்தும் தீர்ந்து எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள், இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உங்கள் அடுத்த தலைமுறைகள் உங்களை முன்னோடியாக பார்ப்பார்கள். எதிலும் நோக்கமில்லாமல் எந்நேரமும் கவலையாக இருப்பவர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா இயற்கையாகவே உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை வலுவாக்குகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செயல்பட்டு உங்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் எந்த கவலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ உதவுகிறது. இரவில் தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது நள்ளிரவில் விழிப்பு வருபவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.
    யோகக்கலை மூலம் சரியான சிகிச்சையாக அதுவும் அனைத்து வயதினரும் செய்யும் வகையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தே சுகர் நீங்கி சுகமாக வாழும் யோகச் சிகிச்சையை காண்போம்.
    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். எதிரில் மூன்றடி தூரத்தில் மற்றொரு நாற்காலியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கால்களையும் மெதுவாக எதிரில் உள்ள நாற் காலியில் நீட்டவும். இப்பொழுது கைகளை தலைக்குமேல் உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டு கால் பெரு விரலை கைகளால் தொடவும் தலையை மெதுவாக முட்டை நோக்கி சாய்க்கவும். பத்து விநாடிகள் முதல் இருபது விநாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக கைகளை தலையை உயர்த்தி சாதாரண நிலைக்கு வரவும். இதே போல் ஐந்து முறைகள் பொறுமையாக செய்ய வேண்டும்.

    இந்த ஆசனம் நாற்காலியின் உதவியால் அழகாக நாம் செய்துவிட முடியும். இதன் பலன்கள் அளவிடற்கரியது. கணையம் மிக நன்றாக இயங்கும். சிறுநீரகம், சிறுநீரகப் பை நன்கு சக்தி பெற்று இயங்கும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் சரியாகும். ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும். வயிற்று உள் உறுப்புக்கள் அனைத்தும் பிராண சக்தி பெற்று மிகச் சிறப்பாக இயங்கும்.

    பொறுமையாக, நிதானமாக இந்த ஆசனத்தை இரு நாற்காலியின் உதவியால் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும்.
    உடலையும், மனதையும் செம்மையாக்கும் யோகா பயிற்சி மூலம் நிச்சயமாக சுகர் வராமல் வளமாக வாழலாம். இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய பயிற்சிகளை காண்போம்.
    இன்று சமுதாயத்தில் நிறைய நபர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய குறைபாடு சுகர் (நீரிழிவு) என்ற நோய். ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிறைய நபர்களுக்கு சுகர் உள்ளது. அதற்காக பலவித மருந்துகள் எடுத்து உடல், மன சோர்வுடன் வாழ்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு நம்மிடமே உள்ளது. அது தான் யோகக்கலையாகும். இந்த யோகக்கலை மூலம் சரியான சிகிச்சையாக அதுவும் அனைத்து வயதினரும் செய்யும் வகையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தே சுகர் நீங்கி சுகமாக வாழும் யோகச் சிகிச்சையை காண்போம்.

    சுகரும் - மனமும்

    நமது மனதில் எழும் எண்ணங்கள், உணர்வுகளுக்கு ஏற்ப நமது உடலில் சுரப்பிகள் சுரக்கும் தன்மைகள் மாறுபடுகின்றது. மனதில் கவலை, டென்ஷன், கோபம், பயம், எரிச்சல் இருந்தால் கணையம் ஒழுங்காக சுரக்காது. கணையத்தில் உள்ள இரு செல்கள் ஆல்பா/ பீட்டா செல், இதில் பீட்டா செல் இன்சுலினை சுரக்கின்றது. நாம் முதலில் மனதளவில் நல்ல நேர்முகமான எண்ணத்துடன் வாழ வேண்டும். அதற்குத்தான் முத்திரைகள் பயன்படுகின்றது.
    முத்திரை என்பது கை விரல் நுனிகள் மூலம் மனித உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உள் உறுப்புக்களை சிறப்பாக இயங்கச் செய்யும் கலையாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிமையான அருமையான கலையாகும். நம்பிக்கை மட்டும் வேண்டும். உங்களை நம்புங்கள், நமது உயிர் ஆற்றலை நம்புங்கள். உடலையும், மனதையும் செம்மையாக்கும் யோகா பயிற்சி மூலம் நிச்சயமாக சுகர் வராமல் வளமாக வாழலாம். இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய பயிற்சிகளை காண்போம்.

    நேரம் காலை 4 மணி முதல் 7 மணிக்குள்ளும், மதியம் 12 முதல் 2 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளும் சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும்,

    சின் முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து விநாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும் . அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    இம் முத்திரை மனதில் உள்ள பயம், கவலை எரிச்சல், மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும் முத்திரையாகும். நேர்முகமான எண்ணங்களை கொடுக்க வல்லது. எதிர் மறை எண்ணங்களை அழிக்க வல்லது. இதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், மூச்சோட்டம் சமமாக இயங்கும். நல்ல பிராண சக்தி உடல் முழுக்க கிடைக்கும். எல்லா நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கும்.

    வருண முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் சுண்டு விரல், பெரு விரல் நுனியை இணைக் கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரை மூலம் கணையம் நன்றாக இயங்கும். அதில் உள்ள குறைபாடுகள் நீங்கும். சரியான அளவு இன்சுலின் சுரக்கும்.

    சுமண முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண் களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

    அபான வாயு முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் நடுவில் கட்டை விரலை வைக் கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    மணிபூரகச் சக்கரா தியானம்

    ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைப்பதாக எண்ணுங்கள். இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    இந்த தியானம் வயிற்று உள் பகுதியில் உள்ள கணையத்தை மிக நன்றாக இயங்கச் செய்கின்றது. அதில் உள்ள குறைபாட்டை நீக்கி நல்ல பிராண சக்தியை தருகின்றது. மனித உடலில் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியை நன்கு இயங்கச் செய்யும். அதில் மணிபூரகச் சக்கரம் கணையத்தை நன்கு இயங்கச் செய்கின்றது.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை ஒரு முத்திரை சிகிச்சையாக எடுத்துக் கொள்ளுங்கள் நாற்காலியில் அமர்ந்து தினமும் பயிலுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்களில் மிக நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
    உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்து கொள்ளவும். பின்னர் கும்பகாசன நிலையில் இருந்து உங்களை சதுரங்கள் தண்டாசனத்திற்கு கீழே இறக்கவும்.

    இதை செய்வதற்கு உங்கள் பாதங்களை நகர்த்தி முன்னால் வரவும் மற்றும் உங்கள் மேல் கைகளால் கீழே வரவும். உங்கள் மேல் கைகளால் 90 டிகிரி (படத்தில் உள்ளபடி) கோணத்தை செய்யவும்,

    நீங்கள் பிளாங்க் போஸில் செய்வது போல் உங்கள் விலா மற்றும் தசைகளையும் இழுத்து வைத்துக் கொள்ளவும். உங்கள் முதுகுதண்டை நேராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் தோள்களை கீழே இறக்காமல் நேராக முன்னோக்கி இருப்பதை உறுதி செய்யவும்.

    நீங்கள் நிலையற்றதாக நினைத்தால், உங்கள் முழங்கால்களை இறக்கிக் கொள்ளலாம். இங்கிருந்து திரும்பவும் பிளங்க போஸ் அல்லது மேல்நோக்கி எதிர்கொள்ளும் நிலைக்கு வரவும். இதை 10 முறைகள் திரும்பச் செய்யுங்கள்.

    பயன்கள்

    கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.
    வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Four-footed Pose என்று அழைக்கப்படுகிறது.
    செய்முறை

    விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால், முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பற்றிக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்களை விரிக்கவும். ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். ஆசன நிலையிலிருந்து வெளியேற, இடுப்பைத் தரையில் வைத்து, கணுக்கால்களை விடுவித்து கால்களை நீட்டவும்.

    தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சதுஷ் பாதாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. கைகளை நீட்சியடையச் செய்வதுடன் வலுப்படுத்தவும் செய்கிறது. தோள்களை நீட்சியடையச் செய்கிறது, அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் நலனைப் பாதுகாக்கிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது. கால் வலியைப் போக்குகிறது; கால்களைப் பலப்படுத்துகிறது. உடல் அசதியைப் போக்குகிறது.
    மணிப்பூரக சக்கரம் ஆங்கிலத்தில் Solar Plexus Chakra என்று அழைக்கப்படுகிறது. மணிப்பூரக சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.
    மனித உடலின் எட்டு (சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு பதிவைப் படிக்கவும்) முக்கிய சக்கரங்களில் மூன்றாவதாக உள்ள சக்கரம் மணிப்பூரகம் ஆகும். வடமொழியில் மணிப்பூர என்று அழைக்கப்படும் இச்சக்கரத்தின் பொருள் ‘பிரகாசமான நகை’ என்பதாகும். மணிப்பூரக சக்கரம் ஆங்கிலத்தில் Solar Plexus Chakra என்று அழைக்கப்படுகிறது.

    இருப்பிடம்:  தொப்புள் மற்றும் மார்பெலும்பிற்கு இடையில் உள்ள பகுதி

    மணிப்பூரக சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

    1) அர்த்த கடி சக்ராசனம்

    2) திரிகோணாசனம்

    3) உத்கடாசனம்

    4) பார்சுவோத்தானாசனம்

    5) அஷ்வ சஞ்சாலனாசனம்

    6) ஆஞ்சநேயாசனம்

    7) அஷ்ட சந்திராசனம்

    8) சதுரங்க தண்டாசனம்

    9) வசிஸ்தாசனம்

    10) பரிகாசனம்

    11) பார்சுவ பாலாசனம்

    12) நவாசனம்

    13) அதோ முக கபோடாசனம்

    14) ஏக பாத இராஜ கபோடாசனம்

    15) த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம்

    16) உபவிஸ்த கோணாசனம்

    17) வக்கிராசனம்

    18) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

    19) சேதுபந்தாசனம்

    20) ஏக பாத சேதுபந்தாசனம்

    21) சதுஷ் பாதாசனம்

    22) சலபாசனம்

    23) இராஜ புஜங்காசனம்

    24) பத்ம மயூராசனம்

    25) சர்வாங்காசனம்

    26) ஹலாசனம்

    27) பத்ம ஹலாசனம்

    28) அர்த்த சிரசாசனம்

    29) விபரீதகரணி
    நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் வலுப்படுத்தக் கூடியது வஜ்ராசனம் ஆகும். இந்த வஜ்ராசனத்தின் கூடுதல் நன்மைகளை பற்றி அறிவோம்.
    செய்முறை

    வஜ்ராசனம் செய்ய முதலில் தரை விரிப்பில் உட்கார்ந்து மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கால்களில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

    உங்கள் முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்க குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இரு கால்களின் தொடைகளும் முறையே உங்கள் கால்களில் ஓய்வெடுக்க வேண்டும். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொட வேண்டும்.

    உங்கள் கைகளை உங்கள் முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதுகை நேராக வைத்து உங்கள் பார்வையை நேராக முன்னோக்கி பாருங்கள். தலை நேராகவும், கன்னம் ஆனது தரைக்கு இணையாகவும் இருக்க வேண்டும். உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் மெதுவாக காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். உங்கள் கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும்.

    5 முதல் 10 நிமிடங்கள் இதே நிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் படிப்படியாக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் இந்த யோகாவை செய்யலாம்.

    உங்களுக்கு முழங்கால் வலி இருந்தாலோ அல்லது முழங்கால் அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள். குடலிறக்கம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் யோகா பயிற்சியாளரின் உதவியுடன் வஜ்ராசனம் செய்வது நல்லது.

    பயன்கள்

    வஜ்ராசனம் நம் செரிமானத்தை அதிகரிக்கிறது, தொப்பையை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வஜ்ராசனம் செய்து வரலாம்.

    நம்மை அமைதியாக வைக்கவும், மன அழுத்தம், பதட்டம் இவற்றை குறைக்கவும் உதவுகிறது. இரவில் நல்ல தூக்கத்தை தரவும் தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்த உதவி செய்கிறது. உயர் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. இது பல்வேறு இதய நோய்க் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

    இடுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. பிரசவத்த பிறகு பெண்களுக்கு சிறுநீரை அடக்க முடியாத தன்மை இருக்கும். அந்த மாதிரியான சிறுநீர் அடங்காமையை போக்க உதவுகிறது. இது பிரசவ வலிகள் மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது.

    தொடை மற்றும் கால் தசைகளின் நெகிழ்வுத்தன்மையையும் நமது இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சுற்றியுள்ள தசைகளையும் அதிகரிக்க உதவுகிறது. விறைப்பு காரணமாக அந்த பகுதிகளில் உள்ள வாத வலியை போக்க இது உதவுகிறது.

    நமது கீழ் முதுகின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் அவ்வப்போது ஏற்படும் முதுகு வலி மற்றும் அசெளகரியத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

    இந்த ஆசனம் நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி ஆகிய நோய்களை நீக்கும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறையும்.
    ராஜ யோகிகள் நீண்ட நேரம் தவத்தில் ஆழ்ந்திருக்க முதுகெலும்பு, முதுகு வலுவாக நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு ஒட்டி இருக்க வேண்டும், தொந்தியை கரைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனம் யோகமுத்திராசனம், ராஜயோக சாதகருக்கு உதவும் ஆசனமாதலால் யோகமுத்திராசனம் எனப் பெயர் பெற்றது.

    செய்முறை :

    தரைவிரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். இரு குதிங்கால்களையும் உள்ளங்கையால் மூடிக் கொள்ளவும். முதுகை வளைத்து குனிந்து தரைவிரிப்பை மூக்கால் தொடவும். சுவாசத்தை விட்டுக் கொண்டே நிமிரவும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்யவும். இதுவே யோக முத்திராசனம் ஆகும். இந்த ஆசனத்தை பெண்களும் செய்யலாம்.

    பலன்கள் :

    நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி ஆகிய நோய்களை நீக்கும்.

    முதுகெலும்பை பாதுகாக்கும்.

    தொந்தியை முழுவதுமாக கரைக்கும்.

    மார்பை விரிவடையச் செய்யும்.
    ×