search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக திமுக, விடுதலை சிறுத்தை நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ParlimentryElection2019
    சேலம்:

    தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் இருந்த கட்சி கொடிகள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    இதே போல ஓமலூர் பஸ்டாண்ட் மற்றும் கார் நிறுத்தும் இடம் அருகே பல்வேறு கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது. இதில் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்ட நிலையில் அந்த பீடத்தில் இருந்த சின்னம், பெயர்கள் மறைக்கப்படாமல் இருந்தது.

    இதுகுறித்து கோட்ட மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார் (37) தேர்தல் விதி மீறியதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஓமலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குப்புசாமி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் ஆகியோர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதே போல சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் மணிவேல் (44) என்பவர் தனது கடை முன்பு மரக்கம்பில் தி.மு.க. கொடியை பறக்கவிட்டிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணிவேல் மீது சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதையொட்டி சென்டர் மீடியன் அமைந்துள்ள பகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆத்தூர் டவுன் போலீசார் தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மீது பொது சொத்துக்கு சேதப்படுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரத்தில் தேவராஜ் என்பவரது சுவரில் அனுமதியில்லாமல் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் மீது ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேவூர் அண்ணமார் கோவில் காவேரிப்பட்டி பிரிவு ரோட்டில் வாய்க்கால் திட்ட மதிப்பீடு பலகை உள்ளது. இதில் வரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டாம், நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் கோணக்கழுத்தானூரை சேர்ந்த பழனிவேல் (46) என்பவரை கைது செய்தனர்.

    தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள நீர்தேக்க தொட்டியில் உங்கள் ஓட்டை நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (41) என்பவரை கைது செய்த தேவூர் போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். #ParlimentryElection2019
    மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LSPolls #Venkatesan
    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #Venkatesan

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

    நேற்று பொள்ளாச்சி மற்றும் கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி ஸ்கீம் ரோட்டில் பெண்கள் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நூர் முகம்மது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியினர் கணபதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 14 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவள்ளூவர் திடலில் நாம் தமிழர் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 9 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் செயலாளர் முகம்மது ஷானவாஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 40 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 23 பெண்கள் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது வரை பொள்ளாச்சி பாலியல் விவகார போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #PollachiCase
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்தார். #PonManickavel

    திருவொற்றியூர்:

    சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சிலைகள், பிரதான கல்தூண்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ‌கைப்பற்றி வைத்துள்ளனர்.

    சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பிரதான பாதுகாக்கப்படவேண்டிய கற்கள் உள்ளன. இந்த கற்களை பாதுகாப்பாக வைக்க சிலை கடத்தல் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் உட்பட சில கோவில்களை தேர்வு செய்துள்ளனர்.

    இதையொட்டி இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் உயர் அதிகாரிகள் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இங்கு பிரதான கற்களை பாதுகாப்பாக வைக்க முடியுமா என்பது குறித்து வருவாய்த் துறை, அறநிலைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #PonManickavel

    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase
    தேனி:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

    இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

    நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளா£ர்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கம்பம் பஸ் நிலையத்தில் மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகர் பேச்சியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்துரை(52). இவரது மனைவி மயில்(45). இவர்களுக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாத காலமாக மயில் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள மகள் தேவயானி உடன் வசித்து வருகிறார். மயில் கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்று விட்டு கருநாக்கமுத்தன்பட்டிக்கு செல்வதற்காக கம்பம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சின்னத்துரை மயிலிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால், வெட்ட முயன்றார். மயில் கணவனிடமிருந்து தப்பிக்க அருகே உள்ள கடைக்குள் ஓடி ஒளிய முயன்றார். ஆத்திரமடைந்த சின்னத்துரை கடைக்குள் நுழைந்து மனைவியை வெட்டினார். இதில் அவரது 3 விரல்கள் துண்டானது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். #tamilnews

    கோவை அருகே தங்கையை காதலித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் நவீன்குமார் (வயது 24). அதே பகுதியில் பேனர் கடை நடத்தி வருகிறார். இவரும் ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். 

    சம்பவத்தன்று காதலியை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டருகே கொண்டு வந்து நவீன்குமார் இறக்கி விட்டார். இதனை பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் பார்த்து விட்டனர். அதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து நவீன்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இதனையடுத்து நவீன்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது இரவு ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக டிடிவி தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TTVDinakaran
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

    20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே இரவு 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்தார்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம் உள்பட 7 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்து அதிகாரிகள் உத்தரவை மீறுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல 23-ந்தேதி கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

    அப்போது மல்லியகரை கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், இரவு 10 மணிக்கு மேல் விதிமுறையை மீறி ஒலிபெருக்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாகவும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவு 11 மணிக்கு மேல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ததால் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், இரவு 12.45 மணியளவில் தம்மம்பட்டி பகுதியில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததுடன், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியதால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அதிகாரி உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #TTVDinakaran
    ஆரல்வாய்மொழியில் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் மீது போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மனைவி அமுதா, (வயது 40).

    இவர்களது மகன் விக்னேஷ், (17). இவரும், மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிமும் நெருங்கிய நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்றிரவு வாசிம் தனது நண்பர்கள் சிலருடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த விக்னேஷை சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க வந்த அவரது தாயார் அமுதாவையும் கையால் தாக்கினர். மேலும் அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    தாக்குதலில் விக்னேஷ் காயம் அடைந்தார். அவர், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமுதா, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    அமுதா அளித்த புகாரின் பேரில் மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிம், ‌ஷகில், ஷாஜித், பாரிஸ், அசிம், சல்மான் மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செண்பகராமன்புதூர் மாதவலாயம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கொண்டாடிய 4 மாணவிகள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack
    ஜெய்ப்பூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள்.

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதலால் நாடே பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஒரு மித்த குரல் எழுப்பப்பட்டுள்ளது.

    ஆனால் காஷ்மீர் மாணவிகள் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.எம். தனியார் பல்கலைக்கழகத்தில் 2-வது ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நசீர், உஸ்மா நசிர் ஆகிய 4 பேர் வாட்ஸ் அப்பில் பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் படங்களை வெளியிட்டு உள்ளனர்.

    காஷ்மீர் மாணவிகள் கொண்டாடும் இந்த படம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மத்தியில் வேகமாக பரவியது. இது குறித்து அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் 4 பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

    இதே போல ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்திலும் காஷ்மீர் மாணவிகள் குறித்து பல்கலைக்கழகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4 மாணவிகள் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இதே போல இமாச்சல பிரதேசத்தில் காஷ்மீர் மாணவர் ஒருவர் பயங்கரவாதிகளை புகழ்ந்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

    சமூக வலை தளங்களில் பயங்கரவாத தாக்குதலை புகழ்ந்தது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack
    திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு வசதி இன்றி இருந்தனர் கடந்த 2015ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் ஆதிதிராவிட மக்கள் நான்குவழிச் சாலை அருகே உள்ள கொக்கலாஞ்சேரி கண்மாய்க்குள் 12 சென்ட் இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது

    இந்நிலையில் நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி(60) இயற்கை மரணம் அடைந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக புதிய சுடுகாட்டிற்கு கொண்டு வரும்போது சுடுகாடு அருகே உள்ள இடத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இங்கு புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் மக்கள் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனிடையே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அன்னக்கிளியின் உறவினர்கள் கருப்பையா, மணிகண்டன், கருப்பு, ராமர், பாலா, சின்னா, ராசுக்குட்டி, மருதுபாண்டி, குருசாமி, மாரியப்பன், விஜயபாண்டி, பெரியாத்தாள் ஆகிய 12 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    ×