search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் 336 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    கோவை:

    கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை மாநகரில் மத்திய சரகத்தில் 44, கிழக்கு சரகத்தில் 27, மேற்கு சரகத்தில் 32, தெற்கு சரகத்தில் 22 என மொத்தம் 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்), 285 (எளிதில் தீப்பற்றும் பொருட்களை கையாளுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் 14 பேர், பேரூர் சரகத்தில் 10, கருமத்தம்பட்டி சரகத்தில் 8, பொள்ளாச்சி சரகத்தில் 12, வால்பாறை சரகத்தில் 15 என மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல திருப்பூர் மாநகரில் தெற்கு சரகத்தில் 47, வடக்கு சரகத்தில் 73 பேர், புறநகர் பகுதிகளில் 32 பேர் என மொத்தம் 152 பேர் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். #tamilnews
    சென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

    அதிக தொகைக்கு பொருட்களை வாங்கினால் பரிசு என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்கிறது. இதனால் துணி, நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தநிலையில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டல், பார் ஆகியவற்றில் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 அங்குல கலர்டிவி, குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வழங்கப்படும் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வசனத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லபா அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களின் படங்கள் மற்றும் ஓட்டல் பெயருடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசில் பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மானேஜர் வின்சென்ட் ராஜ் (25), பார் அதிபரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

    பார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர் தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

    மதுஅருந்துவோருக்கு குலுக்கல் முறையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி, வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, பரிசு குலுக்கலுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை:

    தீபாவளி நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பரிசு பொருட்கள், இனிப்புகள், பட்டாசு உள்ளிட்டவைகளை இனாமாக வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று அதிகாரிகள் பெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை மாநகராட்சி அலுவலகத்திலும் உயர் அதிகாரிகள் தீபாவளி பரிசு பொருட்கள் பெருவதாக கிடைத்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 20 போலீசார் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள நகர பொறியாளர் அறைக்கு பல ஒப்பந்ததாரர்கள் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகர பொறியாளர் அறைக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து நகர பொறியாளர் அரசு மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சம் ரொக்கம், தலா 10 கிராம எடை கொண்ட 12 வெள்ளி காசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், 2 வெள்ளி டம்ளர், பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சுமார் 3 மணி நேரம் அதிகாரி அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதிகாரியிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நகர பொறியாளர் அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக அதிகாரி அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஒரு சஸ்பெண்டு அதிகாரி பின்புலமாக இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    நேற்று காலை முதல் மாலை வரை நகர பொறியாளர் அரசு மாநகராட்சி பணிகளில் ஈடுபட்டார். சரியாக 7.30 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஏற்கனவே இதே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்படதாகவும் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
    நாகர்கோவில் அருகே பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் வடசேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அந்த மாணவியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை தகாத வார்த்தையால் பேசியதுடன் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் மாணவியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணமான ஆசிரியை கைது செய்யக்கோரி, பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. இளங்கோவன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், உதவி தலைமை ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323 ஐ.பி.சி. ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தற்கொலைக்கு முயன்ற மாணவியை மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.



    இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு எடுத்துள்ளது. இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் துணை மேலாளர் மீது வழக்குபதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தனியார் ஓட்டல்களுக்கு மது வினியோகம் செய்வதற்கு அதிக பணம் வசூல் செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பெஞ்சமின், ரேமா மற்றும் போலீசார் செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோன் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணிக்கு சென்றனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகளையும், ஊழியர்களையும், தங்களது இருக்கையில் அமருமாறு கூறினர். அவர்களது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது மேலாளர் சுந்தரவள்ளி, துணை மேலாளர் சம்பத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதிகாரிகளால் சரியான பதில் கூறமுடியவில்லை.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றினார்கள்.



    பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக டாஸ்மாக் துணை மேலாளர் சம்பத் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. #tamilnews
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது56). இவர் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகனுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

    இதை நம்பி ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆண்டோ ஜெனிபர், டெல்பின்மேரி, பார்த்திபன், ஆண்டனி அஞ்சலி ஆகியோர்களின் வங்கி கணக்குகளில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 900 செலுத்தினேன்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டப்பணிகள் குழு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி ரூ.24 லட்சம் மோசடி செய்த ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். #tamilnews
    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மண்ணார்க்காடு காஞ்சிரப்புழாவில் ஆக்கிரமிப்புக்கு எதிராக வன ரேஞ்சர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனையடுத்து வன அதிகாரியை கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., விஜயதாஸ் வனரேஞ்சருக்கு போன் செய்து உனது காலை உடைப்போன் என்று மிரட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில்வன அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மண்ணார்க்காடு போலீசார் எம்.எல்.ஏ., விஜயதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து எம்.எல்.ஏ., விஜயதாஸ் கூறும்போது, வன ஊழியர்கள் பழங்குடி மக்களை வீடு புகுந்து மிட்டியுள்ளனர். அவர்களின் விவசாய நிலங்களில் உள்ள தண்ணணீர் குழாயை உடைத்து பயிர்களை சேதப்படுத்தினர்.

    1987-க்கு முன்பே இங்கு குடியிருந்த மக்களிடம் அதற்கான ஆவணங்களும் உள்ளன. இது குறித்து வன ரேஞ்சருக்கு போனில் அறிவுரை மட்டுமே கூறினேன். மிரட்டவில்லை. மிரட்டியதுபோன்ற குரல் என்னுடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். #FafaleDeal #YashwantSinha #ArunShourie #PrashantBhushan
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரிகளான யஸ்வந்த் சின்கா, அருண் சோரி ஆகியோர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி புகார் செய்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் குற்ற முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.



    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தங்கள் புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரித்து அது குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #Mullaperiyardam #TNGovernment
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.



    கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதே சமயம் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்னும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவு இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வுக்கு எதிரானவை. எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார். #Mullaperiyardam #TNGovernment

    ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும், குரல் பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும், வழக்கு தொடரப் போவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
    சென்னை:

    ‘மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஒலிநாடா ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது.

    ஆனால், இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விஷயம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நான் கடுமையாக எதிர்க்கும் காரணத்தினால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு நட்சத்திர ஓட்டலில் நான் யாருடனோ இருப்பது போன்று போலியான புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் பரப்பினார்கள். அது உடனடியாக என் கவனத்துக்கு வந்து, சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    அதில் தோல்வியடைந்தவர்கள் அந்த குடும்பத்தை நான் முழுமையாக எதிர்க்கின்ற காரணத்தால், என்னை நேரடியாக எதிர்க்கின்ற திராணி இல்லாதவர்கள், ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடியோவிலேயே போலியான ஆள் ஒருவர் இருப்பது போன்று செய்யலாம். ஆடியோவிலும் போலியாக பேசுவது போன்று செய்யலாம். அப்படி ஆடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    இதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டியவர்கள். எனவே, சட்டப்படி அதனை எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டவர்கள் நிச்சயம் அந்த கும்பல் தான். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுக்கும்போது என்னிடம் ஒரு ஆடியோ இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். போலியாக தயாரித்திருக்கிறார்கள். மிகவும் கெட்டிக்காரர்கள்.

    அந்த கூட்டமே ஒரு மோசடி மற்றும் ஏமாற்றும் கூட்டம். அப்படி இருக்கும்போது இது அவர்களுக்கு கைவந்த கலை. இதற்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. சிங்கங்கள். எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் வழக்கு தொடருவீர்களா?

    பதில்:- நிச்சயமாக வழக்கு தொடருவேன். போலீசில் புகாரும் கொடுப்பேன்.

    கேள்வி:- இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

    பதில்:- வெளிப்படையாக சசிகலாவின் குடும்பத்தினர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்கள், அவர் தான் மாபியா கும்பலே... அவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எதிர்க்கிறேன் என்றால் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வினரின் உணர்வு, எண்ணம் மற்றும் குரல்களை பிரதிபலிக்கின்றேன். அதனால் என் மீது அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

    கேள்வி:- ஆடியோவில் உள்ளது போன்று நீங்கள் யாரிடமும் பேசியதே கிடையாதா?

    பதில்:- கிடையவே கிடையாது. சவாலாக சொல்கிறேன் இப்படி நான் பேசியதே கிடையாது.

    கேள்வி:- பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறதே?.

    பதில்:- உங்கள் (செய்தியாளர்) பெயர் கூட அதில் போடலாம். என்னுடைய கையெழுத்தா அதில் இருக்கிறது? டி.ஜெயக்குமார் என்று நான் ஒருத்தானா இருக்கிறேன்? இது ஒரு திட்டமிட்ட சதி. இதுபோன்ற சதிகளை நான் 1982-ம் ஆண்டில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது ஒரு விஷயம் கிடையாது.

    கேள்வி:- ஆடியோ விவகாரத்தில் பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?

    பதில்:- நான் 100 சதவீதம் தயாராகத்தான் இருக்கிறேன்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இழுக்க பார்ப்பதால் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- மறைந்திருந்து கிரிமினல் வேலைகளை செய்வதில் டி.டி.வி.தினகரனுக்கு நிகர் டி.டி.வி.தினகரன் தான். எங்கு மறைத்து வைத்தாலும் சரி, சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கண்டிப்பாக நிற்காது. அ.தி.மு.க. அரசை காப்பாற்றுவதற்கு கண்டிப்பாக அந்த 18 பேரும் திரும்புவார்கள். மறைத்து வைக்கலாம் ஆனால் அது நடக்காத காரியம். சசிகலாவை ஜெயிலில் பார்ப்பதற்கு ‘டோக்கன் செல்வன்’ சென்றிருக்கிறார். முன்னோட்டமாக அங்கு நானும் வருகிறேன் என்று சொல்வதற்கு தான் சென்றிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MinisterJayakumar
    பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் 4 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஜோதிக்குமார் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் லாட்ஜில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது நிறுவனத்திற்கு தெரியாமல் அதிகமாக பில் போட்டு கொடுத்து குறைவாக கணக்கு காண்பித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த சம்பவம் லாட்ஜின் மேனேஜருக்கு தெரியவந்தது.

    அவர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஜோதிக்குமாரிடம் விசாரித்ததில் அவர் ரூபாய் 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் பெருந்துறை போலீசில் மேனேஜர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×