என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94677"
- அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
- தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பூத்துக்கு 25 பேர் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 7500 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்கும்.
325 பூத்-ல் ஒரு ஓட்டு குறையும் என்றால் 325 ஓட்டு குறையும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். புதிதாக நமக்கு சாதகமானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உண்மையாக பாடுபட வேண்டும். அது தான் நிரந்தரம் ஐஎஸ்ஐ என்று ஒரு முத்திரை நல்ல பொருள் என்று அர்த்தம் . அது போல் அ.தி.மு.க. என்றால் ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி இருக்க வேண்டும்.
2500 பேர் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்-ஐ நீக்கினோம். உச்சநீதிமன்ற நீதிபதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
சட்ட விதிகளின்படி 2500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதில் அவர்கள் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையவே கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். செல்லாத நோட்டை பற்றி ஏன் நான் பேச வேண்டும்.
அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது
திமுக ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்பொழுதும் திமுகவுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் நாம் கொண்டு வந்த திட்டத்தை தவிர வேறு திட்டம் ஏதாவது திமுக ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்களா?
7.5% இடஒதுக்கீடு, மருத்துவமனை, தார் சாலைகள், மேம்பாலம், ஏழை பொதுமக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் சேலம் மாவட்டத்தில் காலத்தால் அழியாதவை. அதனால் தான் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாம் கைப்பற்றினோம். திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் ஆளுகின்ற கட்சி அதிமுக தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
- கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஓமலூர்:
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் நாமக்கல்லில் அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதனை தொடர்ந்து நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கினார். இங்கு வெளியூர்களில் இருந்து வந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடக்கிறது. முகாமில் நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.எல்.ஏக்கள் பாலசுப்பிரமணியன், மணி, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சுந்தர்ராஜன், ராஜமுத்து, மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடாஜலம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன.
- இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது.
சென்னை:
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி விட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசிய அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமையேற்கும் என்பது போன்றே தங்கள் கட்சியின் கருத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக இப்போதே களம் இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை கருத்து தெரிவித்துள்ள தினகரன் தேசிய கட்சி ஒன்றுடன்தான் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போதைய சூழலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியுடன் அ.ம.மு.க. கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம்பெற தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் டி.டி.வி. தினகரன் தனது நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் எதிர்காலத்தில் இணைய போவதையே டி.டி.வி. தினகரன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டினர். இதன்பின்னர் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" என்கிற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வேட்டு வைத்தார்.
தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றே பா.ஜனதா விரும்புகிறது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி உள்ளது. அப்போது டி.டி.வி. தினகரனை சேர்ப்பது தொடர்பாக இப்போதே எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுதவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இடம் மாறி பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி பார்த்தால் பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று தி.மு.க.வை எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மேலும் பல அமைப்புகளும் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வியூகத்தை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியை நிச்சயம் வீழ்த்தும் என்றும் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்துக்கு கோவை செல்வராஜ் தலைமை வகித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் சாமானிய தொண்டனும் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என்ற வகையில்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிகளை உருவாக்கினர்.
ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகள் இதனை தங்கள் சுயநலத்துக்காக திருத்தி மாற்றியுள்ளனர். இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் நன்கு புரிந்து வருகிறார்கள். புதிய சட்ட விதிகளை உருவாக்கியதால் மிட்டாமிராசுதார்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு இதனை மாற்றுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த நேர் வழிப்பாதையில் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
- அப்போது பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க. சார்பில்தான் வெள்ளிக்கவசம் வழங்கினேன் என்றார்.
ராமநாதபுரம்:
முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.
- தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும்.
- பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்.
அவனியாபுரம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை.
ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாஸ்கரன், முருகேசன், ஸ்ரீராம் ரங்கராஜன், வேல்முருகன், ஒத்தக்கடை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
- நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.
ஆலந்தூர்:
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் இதற்கு அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.
நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
- போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுதி! உழைப்பு!! உயர்வு!!! என்பதை தாரக மந்திரமாக கொண்டு, மக்களின் துணையோடு இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற விரைவில் அம்மாவின் நல்லரசை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.
- அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை:
சென்னையில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.
அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது.
- ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது.
சென்னை:
எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஓ.பி.எஸ்.சை 'பி' டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார். ஒரு போதும் இது நடக்காது. இது உயிரோட்டமுள்ள கட்சி. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம். ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம். இதனால் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள திராணி இல்லாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு ஓ.பி.எஸ்.சை பயன்படுத்தி எங்களை உடைக்க நினைக்கிறார்.
அது ஒரு போதும் நடக்காது. நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஓ.பி.எஸ்.சும், ஸ்டாலினும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஸ்டாலின் ஆலோசனைபடி தான் ஓ.பி.எஸ். செயல்படுகிறார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு வராமல் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்திற்கு குண்டர்களை அழைத்து சென்று அங்கு கதவுகளை உடைத்து அறைகளை சேதப்படுத்தி கம்ப்யூட்டரை சேதப்படுத்தி அங்கு இருக்கிற முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று இருக்கிறார்.
முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டார். அங்கேயும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
- சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். சட்டசபை விதிகளின் படி துணைத் தலைவர் பதவி கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்காததால் சபாநாயகர் செயலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி இன்று அதிகாலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதையும் மீறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரள ஆரம்பித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்தபடி அங்கு வந்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை பார்த்து எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷமிட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்காததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் எடப்பாடி பழனிசாமியிடம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் அரை மணி நேரமாவது எங்களுக்கு போராட அனுமதி தாருங்கள் என கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் 62 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த 7 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டனர்.
அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கைது நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர்.போலீசாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்த போதிலும் அங்கிருந்து கலைய மறுத்த அ.தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினார்கள்.
பின்னர் கைதான எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பஸ்களில் இருந்து கீழே இறங்கி வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. தர்ணா போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
- தடயை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். காவல்துறை தடையை மீறி உண்ணாவிரதமிருக்க பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் முனுசாமி, செங்கோட்டையின், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.
அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்