search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும்.
    • தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    கடந்த 10 வருடங்களாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி என்று ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டனர்.

    ஆனால் தருமபுரி மக்கள் ஏமாறவில்லை. இங்குள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

    தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    ஜெயலலிதா செயல்படுத்திய ஒவ்வொரு நலத்திட்டங்களாக முடக்கி வருகின்றனர். விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், சுகாதாரத்துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதாசம்பத், தண்டரை மனோகரன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குமரவேலு, நகர செயலாளர் ரவிக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 9 உள்ளன. இதன்படி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கமலக்கண்ணன், சாமிநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சேக்கலி, சைதை சுகுமார் மற்றும் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வைகுண்டராஜன், இனியன், மாவட்ட, வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம், வியாசை இளங்கோ, பாஸ்கர், ஜனார்த்தனன், சேவியர், லயன் ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் செம்பியம் மின்சார அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் மோகன், கோகுல், சாரதி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் துறைமுகம் எம். பயாஸ், ஆவின் அருள் வேல், எம். கண்ணன், எம்.சரவணன், எம்.பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியம், வெற்றிலை மாரிமுத்து, சந்தான கிருஷ்ணன், அருள்வேல், கண்ணன், சரவணன், சுரேஷ்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் தி.நகரில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா கலந்து கொண்டார்.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், எம்.கே.சிவா, புஷ்பா நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் பட்டாளத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் போரூர் காரம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    திருப்பூரில் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது வீட்டில் இன்று அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செய்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தற்போது பழைய பழனிசாமியாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.

    நிச்சயமாக அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும். நான் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம்.

    தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெற்றி மீது வெற்றி வந்து தன்னை சேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.
    • இன்று இரவு வடபழனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

    பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது.

    அதேபோல் கட்சியின் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியும் பலனில்லாமல் போனது. கட்சியில் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சி அலுவலக சாவியை கேட்பது எப்படி? என்று அந்த மனுவையே சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

    வெற்றி மீது வெற்றி வந்து தன்னை சேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார். இன்று இரவு வடபழனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இன்று முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நாளை (16-ந்தேதி) தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இன்று காலையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும். இது கட்சியினர் நம் பக்கம் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு மட்டுமல்ல. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக எடப்பாடி பழனிசாமியே அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.

    கட்சியின் 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களில் யாரையும் ஓ.பன்னீர்செல்வத்தால் இழுக்க முடியவில்லை. ஆனாலும் தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

    இதையும் முறியடிக்கும் வகையில் சுற்றுப்பயண வியூகத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.

    தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த பயணத்தின்போது கட்சி தொண்டர்களும் யார் பக்கம் என்பதை வெளிக்காட்டும் வகையில் தொண்டர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, அண்ணா பிறந்தநாள் விழா, ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு அதில் கவனம் செலுத்துகிறோம்.

    சுற்றுப்பயணம் எப்போது என்பது பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்றனர்.

    • விஜயகாந்த் மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார்.
    • தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா, ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

    விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு 5 மாணவ - மாணவிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் மடிக்கணினி, 1,350 பேருக்கு ரூ.3½ லட்சத்தில் வேட்டி- சேலை, 50 பேருக்கு ரூ.2½ லட்சத்தில் மருத்துவ உதவி என ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே விஜயகாந்த், இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும்தான் கொஞ்சம் தொய்வு. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார்.

    இன்றைக்கு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் பாதியிலேயே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு 2 என்ஜினீயர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். உங்களுக்கு மின்தடை வந்தால் சஸ்பெண்டு, கோடிக்கணக்கான மக்கள், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பேரை சஸ்பெண்டு செய்யப்போகிறீர்கள். தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.தான் இங்கு நடந்த மொத்த ஊழலுக்கும் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
    • ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் தற்போது மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்தநிலையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (16-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    மேலும் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள சாலை வழியாகத்தான் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு ஆகிய இடங்களுக்கு வழக்கமாக பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் 16-ந்தேதி காலை முதலே அங்கு தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்துக்கான மேடை அமைக்கும் பணிகள் நாளை தொடங்கப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    • சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.
    • எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    தர்ம யுத்தத்தில் தொடங்கி அதிகார யுத்தம் வரை போர்க்கள காட்சிகள் வேகமாகவும், விறு விறுப்பாகவும் நகர்ந்தாலும் முடிவு எப்படி அமையும் என்பது தான் தற்போதைய இறுதி கட்டத்தின் எதிர்பார்ப்பு. கிட்டத்தட்ட நிராயுதபாணி என்ற நிலையில் தான் போர்களத்தில் ஓ.பி.எஸ்.-ன் நிலை உள்ளது.

    எம்.ஜி.ஆர்... அதற்கு அடுத்ததாக ஜெயலலிதா ஆகியோரைப்போல் ஆளுமையும், செல்வாக்கும், மிக்க தலைமை அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனாலும் அந்த இயக்கத்தை கட்டி காப்பதற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற ஏக்கம் அந்த இயக்கத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அதனால் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை தலைமையேற்று வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

    இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்று எல்லோரும் சேர்ந்து தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். முதல்வர் பதவி என்பது சும்மாவா? வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் முயற்சிப்பார்கள். அந்த வகையில் அடுத்த கட்டமாக சசிகலாவும், முதல்வர் பதவியை நோக்கி நகர தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரச்சினை வந்தது. பதவியை துறக்கும்படி சசிகலா தரப்பினர் நெருக்கடி கொடுக்கவே அவரும் துறக்க வேண்டிய கட்டாயம் ஆயிற்று.

    வேறு வழி தெரியாமல் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்கினார். அந்த யுத்த முழக்கம் எதிர்தரப்பை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. முதல்வர் முடிசூட சசிகலா தயாரானார். எம்.எல்.ஏ.க்கள் கழன்று விடாமல் இருப்பதற்காக கூவத்தூரில் சிறைபடுத்தினார்கள். சசிகலா கணக்கு இப்படி இருக்க இன்னொரு பக்கம் அவருக்கு எதிரான கணக்கு வேறு விதமாக முடிவு செய்யப்பட்டது.

    சொத்து குவிப்பு என்ற அஸ்திரம் இன்னொரு திசையில் இருந்து பறந்து வந்து மொத்தத்தையும் துவம்சம் செய்தது. சசிகலாவின் கனவு தகர்ந்தது. சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது தனது விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு அவர் ஜெயிலுக்கு சென்றார். முதல்வராக அறிவிக்கப்பட்டாலும் சட்ட சபையில் பலத்தை நிரூபிக்க வேண்டிய நடைமுறை வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினர் நடுநிலை வகித்தார்கள்.

    இ.பி.எஸ் தலைமையில் ஆட்சி தேர் சரியான திசையில் நகர்ந்தது. ஆனால் இ.பி.எஸ்க்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளின் காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக பிரிந்தார். ஆக அ.தி.மு.க. 3 அணிகளானது. தினகரனை பொறுத்தவரை தனி கட்சியாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

    எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல இ.பி.எஸ்சுக்கும், ஓ.பி.எஸ்சுக்கும் டி.டி.வி தினகரன் பொது எதிரியாக இருந்ததால் இருவரும் இணைந்து கட்சியை வலுப்படுத்தலாம். நம்முடைய பலத்தையும் பெருக்கி கொள்ளலாம் என்று திட்டம் வகுத்தார்கள். அதன் விளைவாக இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் கைகோர்த்தார்கள்.

    பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை தூக்கினார்கள். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கி ணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளோடு கட்சியை புதிய பாதையில் வழிநடத்த தொடங்கினார்கள். முதல்வராக இ.பி.எஸ், துணை முதல்வராக ஓ.பி.எஸ் என்று கட்சியும், ஆட்சியும் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.

    ஒற்றை தலைமையாக இருந்தால் தான் கட்சியை சரியாக நடத்த முடியும் என நினைத்து ஒற்றை தலைமைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி என்ற நிலை வந்ததும் தனது அதிகாரம் குறைந்து விடும் என கருதிய ஓ.பன்னீர்செல்வத்தால் ஒற்றை தலைமை என்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    சமாதானமாக பேசியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கினார். பொதுக்குழுவை கூட்டி யாருக்கு ஆதரவு என்பதை நிரூபித்து விடுவோம் என்று கங்கணம் கட்டி இ.பி.எஸ் களம் இறங்கினார். கடந்த ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு என்று தேதி குறிக்கப்பட்டது. அன்றைய பொதுக்குழுவில் இ.பி.எஸ்சை பொதுச் செயலாளராக அதாவது ஒற்றை தலைமைக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகளை முன் எடுத்தனர். இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட ஓ.பி.எஸ் பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விடிய விடிய கோர்ட்டில வழக்கு விசாரணை நடந்தது. ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். புதிதாக எந்த பதவி தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்ற கோர்ட்டு உத்தரவோடு அந்த பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் அத்தனை தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறி விட்டு ஜூலை 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த பொதுக்குழு வானகரத்தில் நடந்து கொண்டு இருந்த போது தலைமை கழகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    இதனால் அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. மீண்டும் வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திறகு சாதகமாக வந்தது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் அலுவலகத்தின் சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதோடு பொதுக்குழு செல்லும் என்றும் அறிவித்தது. அலுவலக சாவியையும் இ.பி.எஸ்சிடம் வழங்க உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்துள்ளது. தலைமை கழகத்தின் சாவி இ.பி.எஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று அறிவிக்கப்பட்டது. கட்சி, அலுவலகம் எல்லாம் இ.பி.எஸ். வசமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியின் பக்கம் எம்.எல்.ஏ.க்களின் பலமும் அதிகமாக உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களும் 90 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சட்டத்தின் துணை கொண்டு அதாவது சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்று புதிய முயற்சியை மேற்கொண்டும் பார்த்தார். அதுவும் எடுபடாமல் போனது. இப்போது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பெரும்பாலானோர் இ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள்.

    சட்டமும், இ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்து இருக்கிறது. அதாவது கொஞ்சம், கொஞ்சமாக ஓ.பி.எஸ்சின் கை பலவீனமாகி வருகிறது.

    இப்போது அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரை நம்பி இருக்கும் சிலரிடம் எழுந்துள்ளது.

    பா.ஜனதா கைகொடுக்கும் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் வலுவாக கால் பதிக்க போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியில் பிளவுகள் ஏற்படுவதால் தனக்கு பலன் கிடைக்குமா என்பதை தான் எதிர்பார்க்கும். எனவே பா.ஜனதாவும் இந்த விஷயத்தில் நைசாக நழுவிவிட்டது. இப்போதைய நிலையில் போர்க்களத்தில் நிராயுதபாணியாக ஓ.பி.எஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அடுத்து அவர் எடுக்கப்போகும் முடிவை பொறுத்து தான் அவரது எதிர்காலமும், அவரை நம்பியிருக்கும் சிலரது எதிர்காலமும் அமையும்.

    துணை முதல்வர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இனி மாற்று கட்சிகளில் இணைவது சாத்தியம் இல்லை. அப்படி ஒரு அக்னி பரீட்சைக்கு அவரும் தயாராக மாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே வழி சண்டை வேண்டாம். சமரசமாக போய்விடுவோம் என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இப்போதைய சூழ்நிலையில் இவ்வளவு குடைச்சல் கொடுத்த ஓ.பி.எஸ். மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்ப்பதில்லை என்று இ.பி.எஸ் தரப்பு கூறினாலும் சூழ்நிலைகள் மாற வாயப்பு உண்டு என்கிறார்கள்.

    இதை விட எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. எனவே இ.பி.எஸ் தலைமையை ஏற்று ஓ.பி.எஸ் கட்சிக்கு வந்தால் நிச்சயம் இ.பி.எஸ் ஏற்றுக்கொள்வார், ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தொண்டர்களும் அதைத்தான் விரும்புவார்கள் என்கிறார்கள்.

    தன் பக்கம் நிர்வாகிகள் சாய்வார்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து யாரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லவில்லை.

    தென் மாவட்டங்களின் தனக்கென்று தனி செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அதை வெளிப்படையாக காட்ட தவறி விட்டார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எதையும் முன்னெடுக்கவில்லை. சமுதாய ரீதியாக கட்சியினரை திரட்ட எடுத்த முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த கருணாநிதியின் பெருமைகளை புகழ்ந்தும், தொடர்ந்து தி.மு.க.வின் சில செயல்பாடுகளை பாராட்டியதும் கட்சியினர் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்க வைத்தது.

    அரசியலில் இப்போதைய நிலையில் அதிர்ஷ்ட காற்று திசை மாறியே வீசுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் மங்குமா? பிரகாசிக்குமா? என்பதை வரும் காலம்தான் நிர்ணயிக்கும். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுதானே யதார்த்தம்.

    ×