search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
    • நாளை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    அதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அதற்கு மறுநாள் (சனிக்கிழமை) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், வீரகனூர் 5 செ.மீ., நாலுமுக்கு 4 செ.மீ., ஸ்ரீவைகுண்டம், காக்காச்சி, ஊத்து பகுதிகளில் தலா 3 செ.மீ. சமயபுரம், பாலவிடுதி, கங்கவல்லி, பெலாந்துறை, அண்ணாமலை நகர், தேவிமங்கலம், ஸ்ரீமுஷ்ணம், பஞ்சப்பட்டி, நாகர்கோவில், தலைவாசல், தென்பரநாடு, சேத்தியாத்தோப்பு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.

    இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • அதிகாலையில் கொட்டிய பனியால் பொதுமக்கள் அவதி
    • தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெ ரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலை யில் வங்க கடலில் உரு வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்த தையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவ தால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.

    இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளா னார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாக னங்களை ஓட்டி சென்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் அவர்கள் பள்ளி களுக்கு புறப்பட்டு சென்ற னர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்க உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 15.2 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாநகர பகுதியில் பாளை பகுதியில் 4.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 36 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி முக்கில் 32 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதால், அறுவடை செய்யும் நிலையில் நெற்பயிர்கள் ஏராளமான இடங்களில் உள்ளன. அதன் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். அணைகளை பொறுத்தவரையில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதனால் அனைக்கு வினாடிக்கு 277.95 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த அணையின் நீர்மட்டம் 77.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இரவிலும் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் மட்டும் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 1.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை பெய்தது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 25.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கயத்தாறு, கடம்பூர், கழுகுமலையில் லேசான சாரல் மழை பெய்தது. கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    • 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.
    • குளங்கள் முழுமையாக நிரம்புவதற்காக பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி -திருச்செந்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் தலைமையில் 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.

    தைக்காவூர், அம்மன் புரம், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை, வடக்குதெரு, பிச்சி விளைபுதூர்.கந்தசாமிபுரம், காயாமொழி தெற்குதெரு, சீருடையார்புரம் கரிசன் விளை, சத்யாநகர், ராமசுப்பிரமணியபுரம் உட்பட 11 கிராமங்களில் பூமாதேவி ஆகிய பாரத மாதாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள வறண்டு கிடக்கும் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புவதற்கு வர்ண பகவான் அருள்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் நோய் நொடிகள் இல்லாமலும் தடைபட்ட செயல்கள் நீங்கவும், பூமியில்நல்ல விளைச்சல் உண்டாகவும், பாரத தேசம் செழிக்க வேண்டும் என்றும் பாரத தாயிடம் வழிபாடு செய்யப்பட்டது.

    இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் சுயம்புகனி, சித்ரா, மணிமேகலை, சிவகுமாரி, சக்திகனி, தங்கேஸ்வரி, பட்டு ரோஜா, சரஸ்வதி, முத்துக்கனி, செல்வகுமாரி, அமுதா, பவித்திரசித்தா, வளர்மதி, தாமரைச்செல்வி.வன சுந்தரி, தங்கச்செல்வி, சூரியகலா, சிங்கார கனி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, பூஜா, அமுதசுரபி, மல்லிகா,செல்வி உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிப்ரவரி 1, 2ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 1ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பிப்ரவரி 2ம் தேதி தூத்தூக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்கள் தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதிகளில் இந்த பகுதிக்கு செல்லவேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுருளி அருவியில் நீராட வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து சென்றது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக சீரான அளவு தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் நீராடி சென்றனர்.

    குறிப்பாக தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநாராயணன் கோவிலில் வழிபட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

    இந்நிலையில் சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதியான மேகமலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையினால் சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் இன்று காலை முதல் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் பிச்சை மணி தெரிவித்துள்ளார்.

    இதனால் சுருளி அருவியில் நீராட வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து சென்றது.

    இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகினாலும் தொடர்ந்து கடும் பனி, குளிர் நிலவி வருகிறது.
    • குளிர்ந்த காற்று வீசிய நிலையில் லேசான மழை தூறல் இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகினாலும் தொடர்ந்து கடும் பனி, குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறை பனி பொழிகிறது.

    சென்னையில் டிசம்பர் மாத இறுதியில் இருந்து குளிர் அதிகரித்து வருகிறது. வீட்டின் தரை ஐஸ் போல ஜில்லென மாறிவிட்டது. சூரியன் மறையத்தொடங்கியதும் குளிர் காற்றுடன் பனியும் நிலவி வருகிறது.

    ஜனவரி மாதத்தில் இருந்து குளிரும், பனியும் அதிகரிக்கத்தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுவதும் மின்விசிறி இல்லாமல் குளிர்ந்த காற்றால் இரவில் ரம்மியமான சூழல் நிலவியது.

    தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புற நகரில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசிய நிலையில் லேசான மழை தூறல் இருந்தது. மலை பிரதேசத்தில் இருந்தது போல உணரப்பட்டது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, 'வடக்கில் இருந்து கீழைக்காற்று மற்றும் குளிர்காற்று வீசுவதால் மிதமான வெப்பம் நிலவுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெயும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    கிழக்கில் இருந்து வரும் காற்றும் மேற்கில் இருந்து வரும் காற்றும் சேர்ந்து வருவதால் குளிர்காற்று நிலவுகிறது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்' என்றனர்.

    • மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டத.
    • கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளை யான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    அதுகுறித்து ஆய்வு செய்து அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயி களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளும் வகையில், இளையான்குடி வட்டத்திற்கு ட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பகுதிகளில் இது தொடர்பாக கணக்கெ டுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புக்கள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிடுவது மட்டுமின்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை உருவாக்கினர்.
    • முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் சடையனேரி, தாங்கை, தருவை ஆகிய 3 குளங்கள் பழமையான குளங்கள் ஆகும். இந்த 3 குளங்களை தவிர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக அய்யனார் குளம், மாநாட்சி குளம், தண்டுபத்து குளம் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை கடந்த ஆண்டு உருவாக்கினர். கடந்த ஆண்டு இதேநாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆறு வழியாக மணப்பாடு கடலுக்கு மழைநீர் சென்றது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டது, கடல் நீர் மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு பருவ மழையும் பெய்யவில்லை. சடையனேரி கால்வாயில் தண்ணீரும் வரவில்லை. இதனால் அனைத்து குளங்கள்.குட்டைகள். ஊரணி, கருமேனி ஆறு என எல்லாமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மழை வரும், குளங்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் தென்னை, வாழை, முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது. இந்த ஆண்டு இனி மழை வருமா?என்பது கேள்விக்குறியாகி விட்டது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. மழை வர வேண்டும், அல்லது கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும், இப்படி செய்யாவிட்டால் அனைத்து விவசாயமும் முழுமையாக அழிந்துவிடும் என்ற பெரும் கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

    • வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவு கன மழை பெய்தது. அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து துண்டாகின. கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் கூறும்போது, மழை-வெள்ளம் காரணமாக 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆபத்து இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பு குறைந்தபட்சம் வருகிற 18-ந்தேதி வரை தொடரும் என்று தெரிகிறது.

    ×