search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94747"

    இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரி வரி விதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால் விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதன் பேரில் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 21 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.48க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.71.73 ஆக உள்ளது.

    பெட்ரோல், டிசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Petrol #Diesel
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    நாகப்பட்டினம்:

    நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையினை தினசரி உயர்த்தும் பெட்ரோலிய நிறுவனங்களையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார். 
    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை 42 காசுகளாகவும், டீசல் விலை 32 காசுகளாகவும் குறைந்தது.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்த்தப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83-ஐ கடந்தது. பெட்ரோல், டீசல் விற்பனை மீது மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால், அவற்றின் விலை குறைந்து விடும் என்ற கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை விலக்க மறுத்த விட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெட் ரோல், டீசல் விலை கடந்த வாரம் முதல் குறையத் தொடங்கியது. நேற்று பெட்ரோல் விலை 21 காசும், டீசல் விலை 15 காசும் குறைந்தது.

    இன்றும் (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை வட மாநிலங்களில் 40 பைசாவும், டீசல் விலை 30 காசும் குறைந்தது.

    மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பு மாறுபடுவதால் தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது. டீசல் விலையில் 32 காசுகள் குறைந்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.95 ஆக இருந்தது.

    டீசல் விலை லிட்டர் ரூ.72.08 ஆக உள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சில காசுகள் வித்தியாசத்தில் தங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்கின்றன.

    இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் ஒவ்வொரு பங்கிற்கும் ஒவ்வொரு விதமாக உள்ளன. இந்திய எண்ணை நிறுவனங்கள் இன்று 11-வது நாளாக விலையை குறைத்துள்ளதால் இதுவரை லிட்டருக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது.

    பெட்ரோல் விலை சில தினங்களுக்கு பிறகு மீண்டும் 80 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. #Petrol #Diesel
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று 14 காசு குறைந்து ரூ.80.80க்கு விலை குறைக்கப்பட்டது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.94 ஆகும். நேற்று 14 காசு குறைந்து இது ரூ.80.80 ஆனது.

    இதே போன்று நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 72.82-க்கு விற்பனையானது. நேற்று இது 10 காசு சரிந்து ரூ.72.72 ஆனது.

    நேற்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது. 
    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.09 ஆக இருந்தது.

    ஆனால், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  #Petrol #Diesel
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வரும் நிலையில் நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்த்து. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.    #Petrol #Diesel #tamilnews 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப்பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மாதம் தொடர்ச்சியாக 20 நாட்கள் அதிகரித்தால் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயையும், டீசல் 73 ரூபாயையும் தாண்டியது.

    இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.

    இந்த நிலையில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.31 ஆகவும், டீசல் ரூ.73.14 ஆகவும் இருந்தன. அவற்றின் விலை 30-ந்தேதி முதல் இன்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது.

    4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன.

    கடந்த 30-ந்தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன. 31-ந்தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன.

    பெட்ரோல் நேற்று 6 பைசாவும், இன்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

    ஆனால் விலை உயரும் போது 25 பைசா, 30 பைசா, 35 பைசா என அதிகரித்தது. விலை உயர்த்தப்பட்ட அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #PinarayiVijayan #PetrolDiesel
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. 

    இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறையும். இது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    தற்போது, கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 74.05 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. முதல் மந்திரியின் உத்தரவை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. 
    #PinarayiVijayan #PetrolDiesel
    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. #petrol #diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்ததை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்தபடி உள்ளது.

    இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் எண்ணை உற்பத்தியும், ஏற்றுமதியும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. இதுவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதனால் பெட்ரோலியம் பொருட்கள் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) 17-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலையில் 17 காசு அதிகரிக்கப்பட்டது.

    டீசல் விலையில் 15 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (காலை 6 மணி) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.43 ஆக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் 73.18 காசுக்கு விற்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுகளும் வரி விதிப்பதால் , அவற்றின் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில் இந்தியாவில் மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.24க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.73.79 ஆக உள்ளது.

    தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.43 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.31 ஆகவும் உள்ளன. தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை முடிவுக்கு கொண்டுவர விரைவில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.#petrol #diesel
    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டது. சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்த இவற்றின் விலை 20 நாட்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 13-ந்தேதி முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. 15 நாட்களாக தினமும் 20 காசு, 30 காசு என அதிகரித்தது. ஏறக்குறைய பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் சிறிது சிறிதாக கூடி பெட்ரோல் லிட்டர் ரூ.80-ம் டீசல் ரூ.72-ம் தாண்டியது. இன்று அவற்றின் விலை மேலும் உயர்ந்தது.

    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலை போக்குவரத்து செலவு அதிகரிப்பால் தொடர்ந்து உயருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ‘குருடாயில்’ விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருவதுதான் முக்கிய காரணமாகும். மற்ற நாடுகளை விடவும் நம் நாட்டில் பெட்ரோல்- டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அவற்றின் மீது மத்திய- மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் முக்கிய காரணம். குருடாயிலில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றி நிர்ணயிக்கப்படும் விலையை விட மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி அதிகமாகும்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்க தலைவர் கே.பி. முரளி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு முன் வரவேண்டும். மாநிலம் விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய அரசின் சுங்கவரி போன்றவை சதவிகித அடிப்படையில் நிர்ணயித்துள்ளது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலை விகிதாச்சார முறையில் வரியை நிர்ணயித்து வசூலிப்பதால் குருடாயில் விலை உயரும் போது வசூலிக்கும் வரியும் அதிகரிக்கிறது. அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்காமல் ஒரு லிட்டருக்கு வாட் வரி, சுங்க வரி என நிர்ணயம் செய்தால் மக்களை பாதிக்காது. சதவிகித அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதே விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும்.

    சர்வதேச சந்தையில் குருடாயில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் லிட்டருக்கு இவ்வளவு வரி என்று விதித்தால் இந்த அளவிற்கு உயர வாய்ப்பு இல்லை. குருடாயில் விலை உயரும் போது அரசு வாட், சுங்க வரியை குறைத்து விலை உயர்வை தவிர்க்கலாம். விலை குறையும் போது வரியை அதிகரித்து சரி செய்து கொள்ள முடியும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குள் பெட்ரோல் - டீசல் கொண்டு வந்தால் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்க முடியும். பெட்ரோல்- டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இன்னும் அதுபற்றி தெளிவாக எதையும் கூற வில்லை. பெட்ரோல்- டீசல் மீது 50 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறது. எனவே எண்ணை விலையை வரம்புக்குள் வைத்துக் கொண்டால் பொது மக்களிடம் இருந்து எதிர்ப்பு வராது. மக்களும் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petrol #Diesel
    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது. நாட்டு பொருளாதார சுமையை விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகத் தேர்தலின்போது 19 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையை ஏற்றாமலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர் விலையேற்றம் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.

    மக்கள் நலன், தொழில்கள், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மத்திய அரசு அறிக்கை மட்டுமே விடாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பலமுறை வலியுறுத்தியிருந்தது போல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்ற போதிலும் தமிழக அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்கு முழு ஆதரவு நல்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×