search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94793"

    ஹோம்லி வேடத்தில் நடித்து வந்த நடிகை பட வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த மூன்றெழுத்து நடிகை ஒருவர் கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தாராம். அவர் ஹோம்லி வேடத்தில் நடித்த அந்த படத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்ததாம். இப்படி வெற்றி வாகைசூடிய அந்த நடிகைக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லையாம்.

    பொறுத்து பார்த்த அந்த நடிகை ‘ரூட்’டை மாற்றி, வில்லியாக ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகும் பட வாய்ப்புகள் வராததால், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். தொடர்ந்து படு கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். நடிகையின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.

    தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி பிசியாக இருக்கிறாராம். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழிகளில் பல படங்கள் கைவசம் வைத்துள்ளாராம். பட வாய்ப்பு அதிகரித்து வருவதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.

    சம்பாதிக்கும் பணத்தை வைத்து புதிய படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை. இதையறிந்த சக நடிகைகள், தயாரிப்பில் இறங்க வேண்டாம் என்றும், சம்பாதித்த பணத்தை வீணாக்கிடாத என்றும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
    இளம் நடிகர் ஒருவர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இயக்குனர் ஒருவரை டார்ச்சர் செய்து வருகிறாராம்.
    குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நடிகராக வலம் வருபவர், சில ஆண்டுகள் பல சர்ச்சைகளில் சிக்கி படங்களில் நடிக்காமல் இருந்தாராம். பிறகு மனதை மாற்றிக் கொண்டு படங்களில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்த நிலையில், கொரோனா வந்து கெடுத்துவிட்டதாம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் நடித்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால், முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க முடிவு செய்து அவரை டார்ச்சர் செய்து வருகிறாராம் நடிகர்.
    அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கதாநாயர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
    முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்ட கதாநாயகி, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது வேறு கதாநாயகர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுக்கிறாராம். 

    தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் “டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை” என்கிறாராம். அதுபோல் ஆபாச காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் நடிகையின் கணவர் வீட்டார் கொடுக்கும் அழுத்தம் என்கிறார்கள்.
    முன்னணி நடிகராக இருப்பவர் தனது படம் ஒன்று சூப்பர் ஹிட்டானதால், சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம்.
    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர், கடன் பிரச்சனையில் இருக்கிறாராம். இதனால், பல பிரச்சனையில் சிக்கி இருந்த நடிகர் ஒரே நிறுவனத்திற்கு இரண்டு, மூன்று படங்களில் ஒப்பந்தமானாராம். அப்போது நடிகர் 15 கோடி சம்பளம் வாங்குவதாக கூறினார்களாம்.

    தற்போது நடிகர் நடித்த படம் ஒன்று சூப்பர் ஹிட்டாகி 100 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனால், தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதை கேட்ட பல தயாரிப்பாளர்கள் ஷாக்காகி இருக்கிறார்களாம். ஒரு படம் ஹிட்டானதற்கே இப்படியா என்று புலம்பி வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், உச்ச நடிகை அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பெரிய நம்பர் நடிகைதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம். இவர் அளவிற்கு யாரும் இன்னும் சம்பளம் வாங்கவில்லையாம். இந்நிலையில், இவர் வாங்கும் சம்பளம் அளவிற்கு தற்போது ஒரு கேட்டு இருக்கிறாராம். 

    சமீபத்தில் கணவருடன் சண்டை போட்ட நடிகைதான் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். நானும் முன்று, நான்கு மொழிகளில் நடிக்கிறேன். கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறாராம். மேலும் பாலிவுட்டிலும் எனக்கு மவுசு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக இருப்பவரின் செயலால் மற்ற நடிகைகள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.
    தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள நடிகை ஒருவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளர்கிறாராம். சம்பள விஷயத்தில் நான் தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே பாரமாக இருந்ததில்லை என்று கூறி இருக்கிறாராம்.

    இதைக்கேட்ட மற்ற சக நடிகைகள், நடிகை மீது கடுப்பாக இருக்கிறார்களாம். காரணம் விசாரித்தால் மற்ற நடிகைகள் பலரும் அதிக சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், பட வாய்ப்பை பிடிக்க அந்த நடிகை இப்படி சொன்னதாக அனைவருக்கும் தெரிந்து இருக்கிறதாம். இதனால் நடிகை மீது அனைவரும் கோபமாக இருக்கிறார்களாம்.
    முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பட வாய்ப்புக்காக தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் கொழு கொழு என்று வந்த நடிகை, குறுகிய காலத்திலேயே பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தாராம். இவர் நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால், அதிக சம்பளமும் வாங்கி வந்தாராம். திடீரென காதல் பிரச்சனையில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்தாராம்.

    ஒரு வழியாக பிரச்சனைகளை எல்லாம் முடித்து விட்டு, நிம்மதியாக இருக்கிறாராம். ஆனால், பட வாய்ப்பை பிடிக்க முடியவில்லையாம். இதற்காக தீவிரமாக உடல் எடையை குறைத்த நடிகை, கவர்ச்சி பக்கம் செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தாராம். இதனால் வந்த பட வாய்ப்புகளும் பறிபோனதாம். தற்போது மனதை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம் நடிகை.
    நான்கெழுத்து நடிகை ஒருவர் தனது ரூட்டை மாற்றி காமெடி பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள நான்கெழுத்து நடிகை பற்றி காதல் கிசுகிசு தான் அடிக்கடி வருமாம். இதனால் நாயகிக்கு படவாய்ப்புகள் குறைந்ததால், காதலை மறைத்து வந்தாராம்.

    நாயகி நடிப்பில் தற்போது சில படங்கள் தயாராகி இருக்கிறதாம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேய் படம் ஒன்றுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் வருத்தப்பட்ட நடிகை இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

    தனது ரூட்டை மாற்றி, அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை, தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறாராம்.
    இனிப்பு கடை நடிகை தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சி போட்டியில் இறங்கியிருக்கிறாராம். தனது ஒவ்வொரு படம் திரைக்கு வரும்போதும் தன்னை கவர்ச்சி படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதை அவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறாராம்.

    இரண்டெழுத்தில் டைட்டிலை கொண்ட ஒரு தெலுங்கு படத்தில், இதுவரை நடித்திராத அளவுக்கு படுகவர்ச்சியாக அவர் நடித்து இருக்கிறாராம். “எல்லாமே என் ரசிக கண்மணிகளுக்காக” என்று வாயெல்லாம் பல்லாக சொல்கிறாராம், இனிப்பு கடை நடிகை! 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, சமீபத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதால், நடிகையின் வீட்டில் மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தினார்களாம்.

    நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை தான் ஒப்பந்தமான படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்த நிலையில், நடிகையின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நாயகி காதலில் விழுந்திருப்பதாக கூறினாராம். அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு ஏதோ சொல்லி குழப்பியிருக்கிறாராம். எனினும் நாயகி காதலில் விழுந்திருப்பது உறுதியாகியிருப்பதால், அவரது காதலர் யார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    ×