search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94842"

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஒளிப்பரப்பு செய்கிறது.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

    சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

    இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும், இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, திருமணம் முடிந்த பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்திருந்தார். அதன் பின்னர், சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

    இதனால் ஓடிடி நிறுவனம் தங்களுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்களை பகிர்ந்தது ஒப்பந்தத்தை மீறியதாக கருதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
    • இவர் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி, நயன்தாராவின் 75-வது படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. மேலும், இப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத கால திருமண நாளை கொண்டாடினர்.
    • தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் நடிகை மலைக்கா அரோரா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.


    தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் பிரபல நடிகை மலைக்கா அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மலைக்கா பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்... உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    1998-இல் வெளியான "உயிரே" என்ற தமிழ் படத்தில் இடம்பெற்ற "தக்க தைய்ய தைய்யா" பாடலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் மலைக்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர்.
    • தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.



    கடந்த ஜூன் 9ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது. இந்த ஜோடி தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், விக்னேஷ் தனது சமூக ஊடக பதிவில் இந்த படங்களைப் பகிர்ந்து கொண்டார்.



    ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள், இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:- "இதற்கு மேல் யார் என்ன கேட்க முடியும்! எங்கள் திருமணத்தின் போது இந்த அடக்கமான, கனிவான, அழகான மற்றும் அற்புதமான மனிதர் எங்களுடன் இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன்! பாட்ஷாவும் அவருடனான நேரமும்! பேரின்பம்! பாக்கியம்.



    ரஜினிகாந்த் சார் - எங்கள் திருமணத்தை மிகவும் நேர்மறை மற்றும் நல்லெண்ணத்துடன் அவரது மதிப்புமிக்க வருகையால் ஆசீர்வதித்தார். எங்கள் சிறப்பு நாளின் ஒரு மாத நிறைவு விழாவில் சில சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை ஷாலினி அஜித், நடிகர் சூர்யா-ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சரத் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அவர்கள் தங்கள் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
    • திருமணத்திற்கு பிறகு இருவரும் தேனிலவு சென்று தாயகம் திரும்பியுள்ளனர்.

    விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இந்திய திரையுலகின் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    திருமணத்திற்கு பின்னர் தேனிலவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புதிய படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவர் எழுதிய நான் பிழை பாடலில் இடம்பெற்றுள்ள 'நான் பிறந்த தினமே' என்ற வரியை குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். 

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
    • இந்த போட்டியில் 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த நயன்தாராவின் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. நயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

    விக்னேஷ் சிவன் -நயன்தாரா

    இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன்ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த விண்ணப்பித்துள்ளது. டெண்டரில் இறுதியாகும் ஐந்து நிறுவனங்களில் ஒன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
    • திருமணத்திற்கு பிறகு இருவரும் தேனிலவு சென்றுள்ளனர்.

    சமீபத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்தான். 20 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை தனியார் ஓடிடி நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கியது.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    திருமணத்தை வேத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த வேத விற்பன்னர்களுக்கு மட்டும் பெரிய தொகைக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இந்த ஒரு செலவை மட்டும் நயன்தாரா கொடுத்திருக்கிறார். மற்றவையெல்லாம் தனியார் ஓடிடி நிறுவனம் செய்திருக்கிறது. இதே போல இவர்களது தேனிலவு பயணத்தையும் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. தாய்லாந்தில் பிரபலமான த சியாம் ஓட்டலில் ஏற்பாடு செய்திருக்கிறது.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்த ஓட்டல் நிறுவனமும் இந்த நட்சத்திர ஜோடிகளை தங்களின் சிறப்பு விருந்தினர்களாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தேனிலவு முடிந்து திரும்பியிருக்கும் இருவரும் ஓட்டல் நிர்வாகத்திற்கும், பயண ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். 

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
    • திருமணத்திற்கு பிறகு இருவரும் தேனிலவு சென்றுள்ளனர்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் தேனிலவு பயணத்தை முடித்துக் கொண்டு அஜித் படத்தின் பணிகளைத் தொடங்க இருக்கிறார். இதற்காக தனது உதவி இயக்குனர்களை தாய்லாந்து அழைத்துச் சென்றிருப்பதாக தெரிகிறது. நேரம் கிடைக்கும் போது கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேனிலவு முடிந்து வரும் போது முழுக்கதையையும் பக்காவாக தயார் செய்து விடுவார் என்கிறார்கள்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்


    இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தாங்கள் எடுக்கும் படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது நயன்தாரா தாலியோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்ட பிறகு நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். இது அட்லீ படக்குழுவினருக்கு தெரிந்து இருவரையும் தேனிலவுக்கு செல்ல வற்புறுத்தினார். ஆனால் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இதனால் ஷாருக்கான் தரப்பு தனது தேதி இப்போதைக்கு இல்லை. அதனால் படப்பிடிப்பை சில வாரங்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று அட்லியிடம் தெரிவித்தது. அட்லியும் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை என்று நயன்தாராவிடம் தகவல் சொல்ல வேறு வழி இல்லாமல் விக்னேஷ் சிவனுடன் தாய்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்றிருக்கிறார். இங்கு நயன்தாராவை சூரிய வெளிச்சத்தில் போட்டோ எடுத்து பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நேற்று நடைபெற்றது.
    • திருப்பதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் நேற்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர் . இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

    இந்நிலையில், திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையைஅ தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நேற்று நடைபெற்றது.
    • திருப்பதியில் கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர்

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமரிசையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.


    நயன்தாரா-விக்னேஷ் சிவன்
    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.




    இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர் . இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  

    ×