என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94930"
அரியலூர்:
திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரை அறிமுகம் செய்தது நான் தான் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அரியலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அ.தி.மு.க. பணத்தை இந்த தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணி பேரம் பேசி அமையவில்லை. அ.தி.மு.க. கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அமைந்தது.
தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து அதை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும்.
ராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். பா. ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தேசத்தை காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார். அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை பார்க்க வில்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார். #ramadoss #thirumavalavan
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துகிறார் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி திருமாவளவனை தாக்கி பேசினார்.
இந்த நிலையில் நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ராமதாஸ் தன் மீது கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறிய ராமதாஸ் தி.மு.க. ஒரு துரோக கட்சி, அது அழிந்துபோககூடியது. ஆகவே தி.மு.க. வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.
அதில் இருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றைவாரி தூற்றி வருகிறார். நான் ஒளிவு மறைவு இன்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன்.
தி.மு.க.வில் கூட்டணி சேர்ந்தால் சீட்டு மட்டும் தான் கிடைக்கும், நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி, பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி.
நம்மிடம் ஒரே குரல்தான் ஒழிக்க வேண்டும். மோடியை விரட்டி அடிக்க வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது தான்.
மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க. அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன.
விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்ரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வெளி நாடு சென்றுவருகிறார். மொத்தத்தில் கார்ப்ரேட் பிரதமராகவே உள்ளார்.
இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. சாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் மதவாதமா? ஜனநாயகமா? என்று முடிவு செய்யவேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்கவேண்டாம். எந்த காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பா.ஜ.க. வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியை சொல்லிமட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றமும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Ramadoss
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.
2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.
தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.
விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இவரிடம் செல்லும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி சமூகத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இதனை எண்ணி வெட்கபடுகிறோம், வேதனை படுகிறோம். ஆகையால் இந்த தேர்தலில் நீங்கள் அவருக்கு கொடுக்கும் பரிசு அவர் இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை 30 வருடங்களுக்கு முன்பாகவே திறந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. அதே போன்று அவரது காடு வெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையையும் ஒழித்தார். மேலும் பெரியாரே செய்ய துணியாத அழகாபுரம் கோவில் பிரச்சனையில் இரு சமூகத்தினரையும் மாலை அணிய வைத்து உள்ளே அழைத்து சென்றார்.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நானும், குருவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தை நானும் காடுவெட்டி குருவும் போராடி பெற்று தந்தோம். ஆட்சிக்கு வராதபோதே பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறோம். இது போன்று எவ்வளவோ சொல்லி பார்த்தோம், பேசி பார்த்தோம் நடக்கவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை வந்து உள்ளது.
மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #ramadoss #parliamentelection
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.
அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
அரியலூர்:
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடி மீண்டும் வேண்டாம் என்ற முழக்கத்தோடு இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.
மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்புணர்வோடு தேர்தலை நடத்த வேண்டும். மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக எப்படி அலை வீசியதோ? அதே போல் இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக வெளிப்படையாக அலைவீசுகிறது. 40 தொகுதியிலும் நேரமிருந்தால் பிரசாரத்தை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection #tngovt
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- உங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்காமல் பானை சின்னம் ஒதுக்கியது ஏன்?
பதில்:- மோதிரம் சின்னம் கேட்டுதான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தோம். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் போட்டியிடும் எங்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 18-ந்தேதி மனு செய்தோம்.
நாங்கள் கேட்ட மோதிரம் சின்னம் வேறு ஒரு புதிய கட்சிக்கு ஒதுக்கி விட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2011, 2014, 2016 ஆகிய 3 பொதுத்தேர்தல்களிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். அதன் அடிப்படையில் மோதிரம் சின்னம் கோரினோம். எங்களுக்குதான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால் புதிய ஒரு கட்சிக்கு அதை ஒதுக்கி விட்டார்கள்.
பின்னர் வைரம், பலாப்பழம், மேஜை மற்றும் பானை ஆகிய சின்னங்களை கேட்டோம். கடைசியாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பானை சின்னம் கொடுக்காமல் ‘ஸ்டூல்’ சின்னம் ஒதுக்கியுள்ளனர்.
முதன் முதலாக 6 பாராளுமன்ற தொகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.
கேரளா, கர்நாடகாவில் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். சிதம்பரத்தில் போட்டியிடும் நான் பானை சின்னத்தில் கட்டாயம் வெற்றி பெறுவேன்.
கேள்வி:- உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி தி.மு.க. உங்களை நிர்ப்பந்தம் செய்ததா?
பதில்:- தி.மு.க. தரப்பில் இருந்து அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை. உதய சூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்று கருதி அப்படி ஆலோசனையை சொன்னார்கள். ஆனால் வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு எடுத்தோம்.
இந்த 2 தொகுதிகளிலும் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கேள்வி:- பானை சின்னம் மக்களுக்கு வெகுவாக போய் சேருமா?
பதில்:- மக்களுக்கு வெகுவாக போய் சேரும். இதில் எந்த சிக்கலும் இருக்காது.
பதில்:- தினகரன் அணியினர் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். அது எங்கள் கூட்டணிக்கு சாதகமாகவே அமையும்.
கேள்வி:- 18 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் பற்றி?
பதில்:- சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு வாழ்வா? சாவா? என்கிற பிரச்சனை. தி.மு.க.வை பொறுத்தவரையில் சட்டமன்றம், பாராளுமன்றம் இரு தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்கிற வேகத்துடன் செயல் திட்டங்களை வரையறுத்துள்ளோம். இரண்டிலும் தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
சிதம்பரம் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி திருமாவளவன் இன்று தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும் இந்நாள் வரை ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை.
முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம். அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். பின்னர் வைரம் சின்னத்தை தெரிவித்தோம். அது கிடைக்கும் என உறுதி அளித்தார்கள்.
ஆனால் 2 நாட்கள் கழித்து அதுவும் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். மூன்றாவதாக பலாப்பழ சின்னம் கேட்டோம். அதுவும் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்றார்கள். நான்காவதாக டேபிள் சின்னத்தை கேட்டு இருக்கிறோம். 4,5 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் அந்த சின்னத்தை ஒதுக்கவில்லை. இப்போது வேறொரு பட்டியலை அனுப்புங்கள் என்கின்றனர்.
இந்த நிமிடம் வரை சின்னம் ஒதுக்கப்படாததற்கு ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அதனை முடிவாக சொல்ல இயலாது. ஒவ்வொரு முறையும் நான் போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.
அதனால் 2 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது நல்லது அல்ல. இனி காத்திருக்க முடியாது. குறைந்த நாட்களே உள்ளதால் தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது சிரமமானதும் கூட. 6 சட்டப்பேரவைகளை உள்ளடக்கிய பரந்த பாராளுமன்றத் தொகுதி விழுப்புரம்.
சிதம்பரம் தொகுதியைப் போன்று விழுப்புரம் தொகுதியில் கட்சிக்கு வாக்கு வங்கி திரட்சி என்பது உறுதிப்படுத்தப்படாதது. விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் கள நிலவரம் வெவ்வேறானவை. விழுப்புரத்தில் வீம்புக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைய விருப்பமில்லை.
இன்னும் பெருவாரியான மக்களின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்டல் அந்த தொகுதியில் இல்லை என புரிந்துகொள்ள வேண்டும். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவோ, திமுக அழுத்தம் காரணம் எனவோ எண்ண வேண்டாம்’.
இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #PollachiAbuseCase #Thirumavalavan
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி உடன்பாடு முடிந்தது.
விரைவில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கூட்டணி தொகுதி பங்கீட்டுக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதில் எந்தவித தொய்வும் இல்லை. எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன். தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்து உள்ளது. பா.ம.க. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித வெற்றி வாய்ப்பும் கிடையாது. மாறாக அ.தி.மு.க., பா.ஜ.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு விழ வாய்ப்பு உண்டு.
தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குகிறது. அரசு கஜானாவில் இருந்து ஓட்டுக்காக மக்களிடம் பணம் கொடுப்பது போல் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு கவர்னர் தடை போடுகிறார். மோடி அரசு தேர்தல் நேரத்தில் கூட அவர்களை விடுவிக்க மறுக்கிறது.
முகிலன் மாயமானது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தி காவல்துறைக்கு உரிய வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #tngovt #centralgovernment #modi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்