search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    எங்கள் கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் 2 அணிகள் தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளன. தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வரை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தி.மு.க. தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி தலைமையில் 20 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

    இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டன. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

    தி.மு.க.வுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இருந்தாலும் இன்னும் அணி என்ற வடிவம் பெறவில்லை.

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்க மாட்டார்கள். சி.பி.ஐ.யை வைத்து அச்சுறுத்தி தான் அ.தி.மு.க.வோடு பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மனமுவந்து கூட்டணி அமையாது.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அது அ.தி.மு.க.வுக்கு தான் நஷ்டம். பலவீனம் ஆகி விடும்.

    பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இருவரையும் சேர்த்து கொண்டால் கூட்டணியில் எண்ணிக்கைதான் கூடுமே தவிர பயன் இல்லை.

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தொல். திருமாவளவன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை கடந்த 2-ந் தேதி சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தேன்.

    அப்போது அரசியலை பற்றி பொதுவான வி‌ஷயங்களை ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. இதுவரை தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தர்மபுரி இளவரசன் மரணத்தில் அவர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் பா.ம.க. அவதூறு பரப்பினார்கள்.

    எனக்கு மிரட்டல்களும் வந்தன. சமூகவலைதளங்களிலும் அவதூறு பரப்பினார்கள்.



    நாங்கள் இரண்டு வி‌ஷயங்களில் தெளிவாக இருக்கிறோம். பா.ஜனதாவை எதிர்ப்பது மற்றும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    பா.ம.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் பேசினாலும் முடிவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெறும் என்பதே எனது கருத்து.

    அ.தி.மு.க. எந்த நெருக்கடியும் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அதில் கண்டிப்பாக பா.ஜனதா இடம்பெறும். ஆனால் பா.ஜனதா அரசு அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி வைக்கும். இதுதான் தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் நன்மை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
    நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.



    அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருநாவுக்கரசர் சமீபத்தில் ரஜினிகாந்தை அமெரிக்காவில் சந்தித்து பேசியதால் கட்சி கோபப்பட்டதாகவும், அதனால்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி என்று வைகைசெல்வன் கூறியுள்ளார். #Vaigaichelvan #Thirumavalavan

    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிக்காக அ.தி.மு.க. கதவு திறந்திருக்கிறது. வருகிற 8-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

    தி.மு.க. அணியில் இடம் பெறாத கட்சிகள் எங்களுடன் கூட்டணி பற்றி பேசி வருகின்றனர். பா.ஜனதா மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அது தொடர்பான ஆலோசனையும் நடந்து வருகிறது.

    கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதாக வெளியில் தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சக்தி என்ன என்பது தெரியும். அதிக தொகுதிகளை கேட்டு வாங்கினால் அது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.


     

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் தி.மு.க. கூட்டணி உடையும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி. அவர் ஒரு தொகுதி அல்லது 2 தொகுதி எதிர் பார்ப்பதாக தெரிகிறது.

    கடந்த காலங்களில் அவர் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தபோதுதான் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. எனவே வெற்றி முக்கியமா? தொகுதி முக்கியமா? என்பதை திருமாவளவன் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaigaichelvan #Thirumavalavan

    மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #mamata #pmmodi

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து மகாசபை நிர்வாகிகளை கைது செய்யக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி இந்தியாவின் அடையாளம். இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜாசகுன் பாண்டே மற்றும் நிர்வாகிகள் காந்தியை அவமதித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று பின்னர் இந்து மகா சபை உறுப்பினராகி காந்தியை சுட்டு கொன்றவர் கோட்சே. அவரது வாரிசுகள் இன்று மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர்தான் கவுரிலங்கேஷ், கல்புர்சி ஆகியோரை வீடு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள்.

    மேற்கு வங்காளத்தில் சாரதா சிட் பண்ட் வழக்கில் மம்தாவுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி சிலர் வற்புறுத்தப்படுகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது.


    மம்தா சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியதே சி.பி.ஐ. ஏவி விடப்பட்டிருப்பதற்கு காரணம். மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிந்தனை செல்வன், பாவரசு, எஸ்.எஸ். பாலாஜி, வன்னியரசு, இரா. செல்வம், வி.கோ, ஆதவன், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #mamata #pmmodi

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #parliamentelection

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன்.

    கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும், பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக பெண்ணாடத்தில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது 17-பி என்கிற பிரிவில் நடத்தை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்த அச்சுறுத்தல் பெரும்பான்மையான ஆசிரியர்களை பணிக்கு திரும்ப வைத்திருக்கிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு பெற்று இருக்கிறது. அவர்களுக்கு தமிழக அரசு என்ன பதில் செல்ல போகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் அவர்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection

    இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. #VCK #Thirumavalavan #Rahulgandhi

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

    அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    குடும்பம் ஒன்றுக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்குவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்து அளித்துள்ளார் . இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் அறிக்கையே ஆதாரமாகும்.

    ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிமக்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தது போல அண்டப்புளுகு அறிவிப்பு அல்ல ராகுல் காந்தியின் அறிவிப்பு. அது நேரு காலம் முதல் ஏழை எளிய மக்களின் பால் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு .

    இதுவரை விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பொதுவாக முன்வைக்கப்பட்டு வந்தது. அப்படி கடன் தள்ளுபடி செய்யும் போது அதனால் நிலமற்ற கூலி விவசாயிகள் எந்தப் பயனையும் அடைய முடியவில்லை.

    விவசாய வேலை நாட்கள் குறைந்து கொண்டே வருவதால், விவசாயம் செய்யப்படாத காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.

    இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து இரண்டு முறை கோரிக்கை மனுவும் அளித்திருக்கிறோம். இந்நிலையில் ராகுல் காந்தியின் அறிவிப்பு எங்களது கோரிக்கையை அனைத்து மக்களுக்கும் விரிவு படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VCK #Thirumavalavan #congress #Rahulgandhi
    கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அரசு நிர்வாகத்துக்கு முதுகெலும்பாக உள்ளவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். அவர்கள் முடக்கப்பட்டால், அரசு நிர்வாகம் முடங்கி விடும்.

    எனவே அவர்களை கைது செய்யும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மேலும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    திருமாவளவனின் தேசம் காப்போம் மாநாடு மற்றும் அவரது பேச்சு குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan #Thirumavalavan
    சென்னை:

    திருமாவளவனின் தேசம் காப்போம் மாநாடு மற்றும் அவரது பேச்சு குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் எத்தனையோ புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன், கக்கன்ஜி போன்ற தலைவர்களும் வாழ்ந்தார்கள்.

    அவர்களெல்லாம் ஒட்டு மொத்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர்கள். மக்களால் இன்றும் பாராட்டப்படுபவர்கள். செயற்கரிய செயல்களால் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள்.

    எந்த தலைவரும், எந்த ஒரு சமூகங்களுக்கு இடையேயும் காழ்ப்புணர்ச்சியை உருவாக்கியதில்லை. இன்றும் பல்வேறு இந்து இயக்கங்களும் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றுதான் முயற்சி எடுத்து பணிபுரிந்து வருகின்றன. ஒரு காலத்தில் இருந்த சூழ்நிலைகள் இன்று இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ராமானுஜரை விட ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி இருக்க முடியாது. அவரது குரு அவரை விட தாழ்ந்த சாதி. அவரை ராமானுஜரின் மனைவி உணவு கொடுத்து உபசரிக்காமல் அவமதித்து விட்டார். அந்த ஒரே காரணத்துக்காக கட்டிய மனைவி என்றும் பாராமல் அவரை துறந்தவர் ராமானுஜர். இந்த மாதிரி இந்தியாவில் எங்கும் நடந்தது இல்லை.

    எல்லா மக்கள் மீதும் பாசமும் பற்றும் கொண்டிருந்தவர். ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட பாடுபட்டதிலும் ராமனுஜருக்கு பெரும் பங்கு உண்டு.

    பல பெரியவர்கள், பல தலைவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த வழிகளில் சமூக பாகுபாடுகளை மாற்ற முயன்று இருக்கிறார்கள். அவர்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் சமூகத்தில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்போது நடத்தப்படுவது போல் வெறுப்புணர்ச்சி அரசியல் அதிகப்பட அதிகப்பட சமூகத்தில் பிளவுகள் தான் அதிகமாகும். சமூக ஒற்றுமை எந்த காலத்திலும் வராது.

    எந்த மதத்திலும், எந்த இயக்கத்திலும், எந்த நாட்டிலும் நூற்றுக்கு நூறு நல்ல வி‌ஷயங்கள் மட்டுமே இருப்பதில்லை. இதை தெரிந்தவர்தான் சகோதரர் திருமாவளவனும். இதை அரசியல் ஆக்குவது ஒன்று பட்டு வரும் மக்களையும், சமூக ஒற்றுமையையும் உருக்குலைக்கும் செயலாக மாறி விடும் என்ற அச்சம் தோன்றுகிறது.

    பறவைகள் கூட எங்கள் சாதி என்றவர் பாரதி. அந்த மாதிரியான மனநிலை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டும். என்னை விட தாழ்ந்தவர் என்று எவருமில்லை. என்னை விட உயர்ந்தவரும் எவருமில்லை என்ற மனநிலை வந்தால் மட்டுமே முன்னேற்றம் வரும்.

    அதற்கு அடிப்படை தேவை கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம். இந்த மூன்றும் ஏற்பட்டால் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். காமராஜரின் அமைச்சரவையில் கக்கன்ஜி எப்படிப்பட்ட அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார்? அவரிடம் எவ்வளவு ஆளுமை இருந்தது? இன்றும் மக்களால் எந்த அளவு நேசிக்கப்படுகிறார் என்பது தெரியாதா?

    எனவே மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றத்துக்காக திருமாவளவன் போன்ற தலைவர்கள் செயல்பட்டால் அது தான் இந்த தேசத்தை காக்கும். மக்களை காக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #Thirumavalavan
    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த தேசம் காப்போம் மாநாட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். இது தேர்தலுக்கான வெற்றிக் கூட்டணிக்கு அடித்தளத்தை அமைக்கின்ற மாநாடாக இருந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்- புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த மாநாடு தேர்தலுக்கான பிரசார பொதுக்கூட்டமாக தேர்தல் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. பிரியங்காவுக்கு பதவி வழங்கியதில் பிரதமர் உள்பட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மோடி பதறுவதில் இருந்தே பிரியங்காவின் முக்கியத்துவம் தெரிகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது ராகுல்காந்தியின் யுக்தியை காட்டுகிறது.

    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான குழுவை அமைத்துள்ளது. அவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள். எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    கொடநாடு விவகாரத்தில் தி.மு.க. முன் வைத்திருக்கிற கோரிக்கைகள் நியாயமானது. இதில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருக்கும்போது விசாரணை நடத்தினால் உண்மை வெளியில் வராது.

    எனவே அவர் பதவி விலக வேண்டும். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியே முன்வந்து சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaikalKatchi #Thirumavalavan
    தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.

    இதற்கிடையே இன்று காலை மாநாட்டு திடலில் இறுதிகட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்கள் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு கம்யூனிஸ்டு செயலாளர்கள் இரா.முத்தரசன், பால கிருஷ்ணன் மற்றும் ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக அமையும். சனாதனத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்பது பெருமைக்குரியதாகும். தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொல்.திருமாவளவனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக மாநாட்டு திடலை பார்வையிட வந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் வரவேற்றனர்.
    கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan

    திருச்சி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேசம் காப்போம் மாநாடு ஜனவரி 23-ல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள், தேசிய, மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது நாட்டிற்கு ஆபத்தானது. ஆகவே மதச்சார்பற்ற சக்திகளின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதால் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் ஜனநாயகம், மதச் சார்பின்மை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பங்கேற்க அழைக்கிறேன்.

    இந்த பொங்கல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. காரணம் கஜா புயல் பாதிப்பு, அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட நீர் சிக்கல்களால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு நிறுவன கொள்கைகளால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை விவசாயிகள் பாதுகாப்பு நாளாக நினைவு கூர்கிறோம்.

    கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக சாமுவேல் மேத்யூஸ் சுமார் 15-16 நிமிட வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகியோரை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்தது.

    இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதிபதி விடுவித்துள்ளார். தமிழக காவல்துறை அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யும் அளவு வழக்குகளை பதிவு செய்யவில்லை. இது காவல்துறை, தமிழக அரசின் தடுமாற்றத்தினை வெளிப்படுத்துகிறது.

    முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை குழுவோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அது அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் வாய்ப்பு என கருதி கேட்டுக் கொள்கிறோம்.


    கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் அந்த அளவு சேதாரங்கள் ஏற்பட வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட வருவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.

    ஆனால் எதிர்பார்த்தபடி பிரதமர் வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். இதனை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பதோடு, தேர்தலில் தக்க பாடத்தினை பா.ஜ.க.விற்கு புகட்டுவார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் பயணிக்கிறது. அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த கூட்டணியில் 9 கட்சிகள் மற்றும் பல கட்சிகள் உள்ளனர். இதில் 2-வது கருத்திற்கோ மாற்றுக்கருத்திற்கோ இடமில்லை.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என கூறியுள்ளது. ஒரே அணியிலோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிடலாம். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே சமீப காலமாக இடைவெளி இருப்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது. இரு அணிகளுக்கும் இடையே தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை. பா.ஜ.க. வுடன் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அது தமக்கு தாமே குழி தோண்டுவது என வி.சி.க. கருதுகிறது.

    இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இருதுருவ போட்டியையே பார்த்துள்ளோம். 3-வதாக ஒரு கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவிலோ, மாநில அளவிலோ வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலும் அப்படித்தான். தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறுகிறதா? இல்லையா? என்பது தான் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து திருமாவளவன் மாநாடு நடைபெறும் ஜி கார்னர் மைதானத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan

    ×