என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபராதம்"
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் கவர், கப்புகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சேலத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், கறிக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவற்றை தவிர்த்து வந்தனர். அதற்கு பதிலாக துணிப்பைகள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் சில கடைகளில் ரகசியமாக பிளாஸ்டிக் கவர்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் இந்த கவர்களை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் ஆலமரத்துகாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம் என்று கூறினார்கள். உடனே நகர்நல அதிகாரி பார்த்திபன், சுகாதார அதிகாரி ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஆகியோர் வீரபாண்டி நகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஆலமரத்து காட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கட்டுக்காட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். 200 கிலோ மதிப்புள்ள இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். #PlasticBan
சென்னை:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. மாநில அரசுக்கு பிளாஸ்டிக் தடை விதிக்க அதிகாரமில்லை என்பதே முதன்மையான வழக்கு.
இந்நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடை மீறல்களுக்கான தண்டனை, அபராதம் போன்றவை அதிகார அத்துமீறல் மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.
இதுபோன்ற சிக்கலான நேரங்களில் வணிகர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.
பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருள் அறிமுகப்படுத்தாத நிலையில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட முன்வடிவுகள் அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு மட்டுமே வழி வகுக்கும். தினசரி வட்டிக்கு கடன் வாங்கி, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற லட்சக் கணக்கான சிறு, குறு வியாபாரிகளை இந்த சட்டம் வெகுவாக பாதிக்கும்.
பிளாஸ்டிக் பற்றிய அதீத விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே தடை செய்யப்பட்ட பொருட்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டு, அதற்குரிய வகையில் அபராத தண்டனையை மறுபரிசீலனை செய்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா அதில் கூறி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மா, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது. அப்போது, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள், ஏ.கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் பிப்ரவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாகேஸ்வர ராவ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். மேலும் சிபிஐ அதிகாரியை மாற்றியதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக இரண்டு அதிகாரிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #CBI #NageswaraRao
தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மறுசுழற்சி மற்றும் மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை கொண்டு செல்கிறார்கள். என்றாலும் ஒரு சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து 1 மாதம் கடந்த நிலையில் தற்போது மாநகராட்சி கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ரூ.100 முதல் ரூ.3 லட்சம் வரையில் 4 விதமான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் முதல் தடவை பிடிபட்டால் ரூ.1 லட்சமும், 2-வது தடவை பிடிபட்டால் ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக தொடர்ந்து உத்தரவை மீறினால் தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முதல் தடவை ரூ.25,000, 2-வது தடவை ரூ.50,000, 3-வது தடவை ரூ.1 லட்சம் என அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக மீறினால் வியாபார நிறுவனத்தை மூடுதல் அல்லது வாகன பறிமுதல் செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மால்களுக்கு முதல் தடவை ரூ.10 ஆயிரம், 2-வது தடவை ரூ.15 ஆயிரம், 3-வது தடவை ரூ.25 ஆயிரம் எனவும், நடுத்தரம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முதல் தடவை ரூ.1,000, 2-வது தடவை ரூ.2 ஆயிரம், 3-வது தடவை ரூ.5 ஆயிரம் எனவும் தொடர்ந்து மீறினால் நிறுவனத்தை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறிய கடைகளுக்கு முறையே ரூ.100, ரூ.200, ரூ.300 என அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Plasticban
இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும்.
கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தியர்களை தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிலும் கணிசமானவர்கள் கோவா கடற்கரைக்கு செல்ல தவறுவது இல்லை.
கோவா கடலோரத்தில் மது அருந்துவது மிக பிரதானமான பொழுது போக்காக உள்ளது. சுங்கவரி குறைப்பு காரணமாக கோவா கடற்கரையில் மிக குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதும் இதற்கு உதவுவதாக உள்ளது.
அந்த கூட்டத்தில் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா கடலோரத்தில் மது குடித்து விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து 3 மாதம் வரை சிறையில் அடைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
கோவா கடலோரத்தில் மட்டுமின்றி பொது இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #GoaBeach
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார். #CristianoRonaldo #TaxFraud #Football
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், உரிய இடங்கள் மற்றும் கொட்டகைகளில் கட்டிப்போடாமல் சாலைகளில் அவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறைந்தபாடில்லை. எனவே, அபராத தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நொய்டா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அனைத்து உரிமையாளர்களும் தங்கள் கால்நடைகளை தகுதியான இடங்களில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறார்கள். விபத்துக்களுக்கு வழிவகுக்கும் வகையில் சாலைகள் அல்லது பொது இடங்களில் கால்நடைகளை செல்ல அனுமதிக்கக் கூடாது. அவற்றை சரியான முறையில் கட்டி வைக்க தவறினால் அபராதத்துடன், உரிய தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் சாலைகளில் திரிந்த 475-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 75 கால்நடை உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்று சென்றுள்ளனர்.
நொய்டாவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் கோ சாலை நிறுவப்பட்டு, தற்போது 1,325 கால்நடைகள் பராமரிப்பில் உள்ளன. #NoidaAuthority
கூடலூர்:
கூடலூர் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யுவும், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனை மட்டும் பயன்பாடு தொடர்ந்து உள்ளதா? என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் சிவக்குமார், கம்பம் வருவாய் அலுவலர் பரமசிவம், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார உதவியளர்கள் குமார், தினே‘ மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் பைகள், டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த டீக்கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்ற 4 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.
மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதம் செலுத்தினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்