search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95042"

    போலி நிறுவனங்களை தொடங்கி ஜி.எஸ்.டி. வரி ரூ.40 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்த பின்னர், அதனை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை கட்டுபவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு ஒன்று தனியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பிரிவு, ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், சென்னை மற்றும் மதுரையில் போலியான நிறுவனங்களை நடத்தி ஜி.எஸ்.டி. வரியை தாக்கல் செய்தது போல கணக்கு காட்டி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரையில் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் இதில் 2 பேர் போலியான கம்பெனிகளின் பெயரில் பொருட்களை வாங்கியது போலவும், அந்த பொருட்களை கொண்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது போலவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒரு கம்பெனியை கூட தொடங்காமல் 30 கம்பெனிகளை தொடங்கி நடத்தியது போன்று கணக்கு காட்டியுள்ளனர். இதற்காக தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.220 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்தது போல கணக்கு காட்டியுள்ளனர்.

    தொழில் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு ஏற்ப தொழில் முனைவோர் உள்ளீட்டு வரி வரவை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) திரும்ப பெற முடியும், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த பணம் வரி வருவாயாக திரும்ப கிடைக்கும்.

    அந்த வகையில்தான் சென்னையை சேர்ந்த 2 பேர் ரூ.220 கோடி ஜி.எஸ்.டி. வரியை கட்டியதாக ஏமாற்றி ரூ.40 கோடி ரூபாயை மோசடியாக பெற்றுள்ளனர்.

    இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன் பின்னணியில் மேலும் சிலர் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி மோசடியை தடுப்பதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுவையிலும் தனியாக ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதுபோன்று செயல்படுபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றக்கோரி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய வணிகர் சம்மேளனம் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதுகுறித்து பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை விதிக்க கோரியும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் போராடி வருகிறார்கள்.

    மத்திய - மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணி 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் சென்று பங்கேற்கிறார்கள். புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்கின்றனர்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தென்மண்டல கூட்டம் நடத்தப்பட்டு 3 நாள் தொடர் கடை அடைப்பு போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    போலி விலைப்பட்டியல் மூலம் சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த பெண் தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GST

    சென்னை:

    சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் பூனம் சர்மா. இவர் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.

    இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் எதுவும் வாங்காமல் போலி விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் ரூ.43 கோடியே 52 லட்சம் ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜி.எஸ்.டி. இயக்குனரக சென்னை வடக்கு முதன்மை கமி‌ஷனர் ராகேஷ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி மோசடி சட்டத்தின் கீழ் பூனம் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் இவரையும் சேர்த்து சென்னையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வர்த்தகர் தனராம் என்பவர் கைது செய்யப்பட்டார். 29-ந்தேதி திலீப்குமார் (45). கைதானார். இவர் ஸ்டீல், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். #GST

    சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக இந்த ஆண்டு தாக்கல் செய்ய வேண்டிய ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கைக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

    இந்நிலையில், GSTR-9, GSTR-9A மற்றும் GSTR-9C படிவங்களை (ஃபார்ம்) தாக்கல் செய்யும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    மேற்கண்ட படிவங்கள் ஜி.எஸ்.டி. தொடர்பான பொது இணையவெளியில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill 
    மத்திய பாஜக மற்றும் மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஜி.கே.வாசன் பேசினார். #gkvasan #tngovt #centralgovernment #tamilmaanilacongress

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    த.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதை காண முடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2,3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. ரூ.1000 கோடி நிவாரணம் என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும்.

    வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருவது தெரிகின்றது.

    மாநில அரசை பொருத்த மட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களை செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. அதனை கண்டித்து வரும் 8-ந்தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மாற்று நிலைபாட்டில் ஈடுபட கூடாது. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அரசு மாற்று வேலையை வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது. பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய மோடி இதுவரை தர வில்லை. மேலும், கருப்பு பணத்தை இதுவரை மீட்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்களின் மீது அக்கறையில்லை. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை பிரதமர் பார்க்காதது கண்டனத் திற்குரியது. த.மா.கா.எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ.1லட்சும் நிவாரணத்துக்கான காசோலை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞான தேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா? என்பது குறித்து மத்திய தணிக்கை குழு விரைவில் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது. #GST #CAGAuditReport

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கனவே அமலில் இருந்த 17 வகையான வரிகள் நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி. வரியின் கீழ் ஒரே வரியாக கொண்டு வரப்பட்டது.

    5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டது. இதில் வியாபாரிகளும், தொழில் துறையினரும் சுட்டிக்காட்டிய குறைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு பல அத்தியாவசிய பொருட்கள் குறைந்த வரி விகிதத்தில் கொண்டு வரபப்பட்டன.

    மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது. முதலில் தற்காலிக பண வீக்கம் அதிகரித்தாலும் அதன்பிறகு பொருட்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

    ஜி.எஸ்.டி. வரியால் பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். மக்கள் அதிகமாக பொருட்களை வாங்கி பயனடைய முடியும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அது முதலீடாக மாறும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா என்பது குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு நடத்தியது.

     


    இதில் ஜி.எஸ்.டி., பதிவு செயல்படுத்தும் உரிமை, கணக்கை உரிய முறையில் தாக்கல் செய்து வரியை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகள், ஜி.எஸ்.டி. தொகுப்பு முறை திட்டம், வரி செலுத்துதல் எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், எதிர் காலத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படும் என்பது உள்ளிட்ட ஜி.எஸ்.டி.யின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணைய அலுவலகத்துக்கும், கணக்கு தணிக்கை குழுவினர் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11-ந்தேதி தொடங்க இருக்கிறது. அப்போது இந்த ஆய்வு பற்றிய அறிக்கையை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. #GST #CAGAuditReport

    ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

    குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


    ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

    அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

    வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

    இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். #GST #RaghuramRajan #IndiaEconomicGrowth
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன.

    கடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.

    இந்தியா தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.

    இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும்.

    வாராக்கடன் பிரச்சினையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.

    இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சினையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும்.

    இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார். 
    மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #Petrol #Diesel #GST
    சண்டிகார்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சண்டிகாரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.



    ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறையும். இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கான தங்கள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

    ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பா.ஜனதா கட்சி மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamdasAthawale #Petrol #Diesel #GST 
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai
    கரூர்:

    கரூர் குள்ளம்பட்டியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்கள் தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என கூறியிருக்கிறார்.

    இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாவின் ஆட்சி. ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும். தீர்ப்பு எப்படி வந்தாலும் அது அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதி சேர்க்கும் வகையிலும், வலிமை சேர்க்கும் வகையிலும்தான் இருக்கும்.

    புகார்கள் காரணமாக சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இதன் மூலம் சி.பி.ஐ. மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. சி.பி.ஐ. எந்த நிலையில் இருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை.


    இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.

    தமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக டெல்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று தேசிய கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் இந்தி படித்தவர்களே இங்கு வந்துதான் வேலை பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத அரசாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டர் போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.

    எங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #ThambiDurai #MLAsDisqualificationCase
    அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Trump #CurrencyMonitoringList
    வாஷிங்டன்:

    ஒரு நாடு கரன்சி சந்தையில் தொடர்ந்து தலையிட்டாலோ, அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருந்தாலோ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். அதன்படி அமெரிக்க கருவூலத்தின் கண்காணிப்பு வளையத்தில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இருந்தன. 

    இந்த பட்டியலில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவையும் முதல் முறையாக சேர்த்தது. இந்தியா அதிக அளவில் டாலரை வாங்கியதாலும், அமெரிக்காவுடனான வர்த்தக உபரி குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாலும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்தியாவின் பெயர், இந்த கண்காணிப்பு பட்டியலில் நீடித்தது. 

    ஆனால், 6 மாதம் கழித்து வெளியிடப்படும் அடுத்த அறிக்கையில், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியா கடந்த 6 மாதங்களாக மேற்கொண்டு வரும் அன்னிய செலாவணி நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டால், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும் என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. #CurrencyMonitoringList
    ஆவடி மற்றும் புதூரில் வணிகர்களுடன் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார். 23-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #vikramaraja #gst

    சென்னை:

    சில்லறை வணிகத்தில் அந்திய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி., பிளாஸ்டிக் தடை சட்டம் ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 23-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பு சங்கங்களின் தொகுதி கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் ஆவடியிலும், புதூரிலும் நடந்தது.

    மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், மாவட்டச் செயலாளர் அம்பத்தூர் ஹாஜி கே.முகம்மது, மாநில துணைத் தலைவர் அய்யார் பவன் அய்யாத்துரை, ஆவடி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம். துரைராசன், ஆர்.வேலுச்சாமி, தங்கதுரை, மனோகரன், குருசாமி, திருமாறன், மாறன், முகமது ஷெரீப், மகாலிங்கம், பொன் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    உண்ணா விரதத்தில் மேற்கு மாவட்ட அடையாளமாக மஞ்சள் துண்டு அணிந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் மாவட்ட செயலாளர் ஹாஜி முகம்மது சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார். #vikramaraja #gst

    ×