என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95081"
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
9-ந்தேதி:- நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, பாலக்காடு, கரிமங்கலம், தர்மபுரி,
10-ந்தேதி:- அரூர், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மாலை நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவை நான் வரவேற்கவில்லை. இருந்தாலும் முன்பு போல அவர் செயல்படமாட்டார் என நம்புகிறேன். மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் நாம் குறுக்கீடு செய்ய கூடாது. இருந்தாலும் முன்பு செய்ததை தற்போதும் செய்வார்கள் என எண்ண வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது பண்ணமாட்டார் என நாம் நினைக்கவேண்டாம். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ByElection #MakkalNeedhiMaiam
சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
ஒரு சிலர் தங்கள் ஓட்டுக்களை விற்பதனால் ஊழலின் பாரம் நம் அனைவரின் மேலும் விழுகிறது. ஓட்டுகளை விற்பதனால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களாகிய நீங்கள் தான் மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் என்னிடம் என் அரசியல் அனுபவம் குறித்து கேட்கிறார்கள். இவர்கள் 40 வருடங்களாக என்ன செய்யக் கூடாது என்பதை கோட்டையில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள். எனவே அவர்களுக்கு எனது நன்றி.
பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது. மய்யம் விசில் செயலி மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கான பெருமை வாய்ந்த ஆயுதம். அது சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது.
மய்யம் விசில் செயலியை கொண்டு வளமான இந்தியாவை உருவாக்க முடியும். மய்யம் விசில் செயலியை இன்று பலர் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் அதிகமானோர் அதைப் பயன்படுத்துவதற்கு உதவியாக பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம்.
உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது நாட்டைக் கட்டமைப்பதும் முக்கியம் என்பதை மாணவ- மாணவிகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய அரசியல் சூழலை புரிந்துகொண்டு உங்களுக்கு எது தவறாக தோன்றுகிறதோ அதை மாற்றுவதற்கான வலிமை கொள்ள வேண்டும். எனது முன் அமர்ந்திருக்கும் நீங்கள் தான் நாட்டின் தலைவர்கள்.
முன்னதாக தென் சென்னை வாரிய கோட்டூர் நறிக்குறவர் என்கிற குருவிக்காரர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தயாரித்த மாலைகளை கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோருக்கு அணிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் நான் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். 50 வருடமாக ஆட்சியில் இல்லாமல் இருந்தும் காங்கிரசுக்கு பலமான அடித்தளம் இருக்கிறது. மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மத்தியில் ஆளும் மோடி மீதும், தமிழகத்தில் ஆளும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.-க்கு எதிராகவும் அலை வீசுகிறது.
தேர்தல் நேரத்தில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவேன். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவேன். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கட்டுப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார்.
ஆனால் இவற்றில் எதை யாவது மோடி நிறைவேற்றினாரா? மத்திய பா.ஜனதா ஆட்சியில் 100 சதவீத ஊழல் நடக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு மக்கள் பணத்தை பல்வேறு வரிகள் மூலம் பிடுங்குகிறார்கள்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பாலியல் புகாரில் சிக்கினார். மோடி எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். மக்கள் கிளர்ந்து எழுந்ததால் அக்பர் பதவி விலகினார். உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மந்திரிகள் மீதே கற்பழிப்பு வழக்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ரபேல் போர் விமானம் வாங்கியதால் நடந்த ஊழல் குறித்து ராகுல்காந்தி விளக்கம் கேட்டு சில மாதங்கள் ஆன பிறகும் மோடி பதில் சொல்லவில்லை. சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் டுவிட்டரில் பதிவு செய்யும் மோடி ஏன் ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்?
மத்தியில் நடைபெறும் ஊழல் அரசை போல் மாநிலத்திலும் ஊழல் அரசு நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் உறவினருக்கு விட்டுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. இவற்றை கோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தனி விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதாவுக்கு அடித்தளம் இல்லை. எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக மோடி அ.தி.மு.க. அரசை ஆட்டி வைக்கிறார். டெல்லியில் மோடி வாசிப்பதற்கு ஏற்ப தமிழ் நாட்டில் இவர்கள் ஆடுகிறார்கள்.
ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும், மோடியின் நிர்பந்தத்தால் தற்போதைய அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ளது. தி.மு.க. மூழ்கும் கப்பல் அதில் இணைபவர்களும் மூழ்குவார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறி இருப்பது மிகப்பெரிய ஜோக். யார் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தேசிய அளவில் வகுப்பு வாத பா.ஜனதா அரசை வீழ்த்த மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
பா.ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 2004 தேர்தலை விட மகத்தான அளவில் 39 தொகுதிகளையும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்.
மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் எங்கள் கூட்டணியில் இணையலாம். கமல்ஹாசன் காங்கிரசுடன் சேர விருப்பம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க. அல்லாத காங்கிரஸ் என்பது முரண்பாடாக உள்ளது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கமலுக்காக தி.மு.க.வுடன் உள்ள உறவை காங்கிரஸ் முறிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கோபண்ணா, அருள்பெத் தையா, சி.பி.செல்வம், அசன்சேக் ஆகியோர் உடன் இருந்தனர். #Kamalhaasan #DMK #Congress #sanjayDutt
ஆரணியில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் உள்ளது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.
சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
தி.மு.க.வுடன் இருந்தால் தான் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் தற்கொலை செய்து கொள்வதை போல் தமிழகத்தில் காங்கிரசின் நிலைமை மாறி விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Congress #NanjilSampath
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். இது எனக்கான அடையாளம் இல்லை. ஏற்கனவே சினிமா மூலம் மக்களுக்கு என்னை தெரியும். தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறிந்து இருக்கிறோம்.
தமிழகத்தில் வருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. தற்போது இல்லை. அது கூட்டணியா? என்று இப்போது சொல்ல முடியாது.
சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, ஏனென்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில் சபரிமலையில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.
கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதுபற்றி கேட்டதற்கு அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.
துரைமுருகன் உங்களைப் பற்றி கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு கமல் பதில் அளிக்கையில் துரை முருகன் நடிப்பு பிடிக்க வில்லை என்றார்.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
கமலின் மக்கள் நீதி மய்யம் -காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கமலும் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. எனவே தி.மு.க.வை கழட்டி விட்டு காங்கிரஸ் அப்படி ஒரு முடிவை எடுக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதற்கிடையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க கமல் முயற்சி செய்வதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நடிகர் கமல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணிக்குள் வரவிரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்துக்கு பாராட்டுக்கள். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #congress #dmk
சென்னை:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள தேர்தலுக்காக தமிழகத்தில் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன.
ராகுல் தலைமையிலான காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது “மக்கள் நீதி மய்யம்” கட்சி பாராளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கடந்த வாரம் அறிவித்தார். அந்த கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியானது.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ்- கமல் ஹாசன் அமைக்கும் கூட்டணியில் தி.மு.க. இடம் பெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. திட்ட மிட்டு இருப்பதால் தி.மு.க.விடம் இருந்து விலகி, மற்ற கட்சிகளை அரவணைத்து மெகா கூட்டணியை உருவாக்கவே காங்கிரசும் விரும்புவதாக கூறப்படுகிறது.
கூட்டணிக்காக கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள முயற்சியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் கொடுத்த இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலாக கூட்டணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த முயற்சியின் பின்னணியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் சதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டமாகும். அதை ஏன் கமல்ஹாசன் ஆதரிக்கிறார்?
இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் 30 முதல் 35 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளது. வரும் தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. எனவே மக்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற சற்று கூடுதல் வாக்குகள் தேவையாகும். அந்த வாக்குகள் காங்கிரசிடம் உள்ளது.
காங்கிரஸ் வாக்குகள் கிடைக்காதபட்சத்தில் தி.மு. க.வால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது. எனவே நடிகர் கமல்ஹாசன் தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிகள் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வகையிலேயே அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #dmk #congress #kamalhaasan #vck #rahul
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்ததை ஏற்க மறுத்து விட்டது.
இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது? இப்படி செய்தது? என்று அடுத்த கட்சியை குறை கூறக்கூடாது.
சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் சபரிமலை கோவிலுக்கு ஒரு மரபு உள்ளது. அதுவும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்று தேவசம் போர்டு தனது உரிமையை பெற வேண்டும்.
இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும்.
கமலை பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சப்பாணி என்று கூறியது தவறு. அரசியலில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
தினகரன்-காங்கிரஸ் கூட்டணி பற்றி கட்சிகள் எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. நாங்கள் தற்போது ஒரு கூட்டணியில் இருக்கும் போது, வேறு கூட்டணி எப்படி வைக்க முடியும்? கமல்ஹாசன், ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசுடன் இணைவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Sabarimala #SupremeCourt
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஆபத்து என்றார்.
இது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி என்றும், சப்பாணி குழந்தை என்று விமர்சித்த அமைச்சரை பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி இருந்தார்.
இது குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசன் என்னை தீய சக்தி என்று சொல்கிறார். நான் தீய சக்தியா? நல்ல சக்தியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
நான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் மக்களையும், பெண்களையும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.
தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறேன். இதே போல் கமல்ஹாசனும் மக்களையும், பெண்களையும் சந்தித்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.
தமிழகத்தில் பாலியல் ரீதியான புகார்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எடப்பாடி தலைமையிலான அரசு எவ்வித குற்றச்செயல்களுக்கும் அனுமதி அளிக்காது. இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ரெயில் கொள்ளையில் கூட கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #RajendraBalaji
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்