என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95081"
ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த நமது ஜெயலலிதா சொன்னதை போல் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரசு மீது அபாண்டமாக பழி கூறி தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரால் இனி ஒரு போதும் தமிழகத்தில் முதல்வராக முடியாது.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #KamalHaasan
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது.
செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
‘மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது’.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் கமல் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி?
பதில்:- தோல்விகள் தான் நம்மை வெற்றியை நோக்கி கூட்டிசெல்லும். தோல்வியை பார்த்து யாரும் தயங்கவேண்டாம். எல்லா தோல்விகளிலும் உங்களுக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தோல்விப்படிகளை தொடும் போது வெற்றிப்படி கண்ணில் பட்டுவிடும். எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய முடியும்.
கேள்வி :- குற்றசாட்டுகள் கூறும்போது ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?
பதில்:- ஆதாரம் இல்லாத சமயங்களில் குரல் எழுப்பலாம். யாராவது பார்த்திருப்பார்களா? அவர்களுக்கு சாட்சி சொல்வார்களா? என்று பார்க்கலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றசாட்டு சொல்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணகி, நீலி இருவருமே இருந்த ஊர் தான் இது. இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும்.
கேள்வி:- பெண்களுக்கு பாலியல் குற்றங்களை தெரிவிப்பதில் தயக்கம் இருக்கிறதா? புகார் சொன்னால் எதிராகவே திரும்புகிறதே?
பதில்:- தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். இந்த அவமானங்களை தாண்டி வந்துதான் நாம் நமது தரப்பு நியாயங்களை முன் வைக்கவேண்டும்.
கே :- நீங்கள் சந்தித்த தைரியமான பெண்மணி யார்?
ப:- என் அம்மா. அவருக்கு இணையான துணிச்சலான பெண்ணை சந்திக்க காத்திருக்கிறேன். என் அக்கா ஓரளவுக்கு தைரியமானவர்.
ப:- நிறைவேற்றப்படாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் பங்களிப்பு அதிகமானால் இது சரியாகும். எத்தனை சதவீதம் என்று இல்லை. எத்தனை சதவிதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கள் கட்சிக்கு உண்டு.
கே:- பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண் முன்னேற்றம் நடக்கும் என்பது சாத்தியமா?
ப :- இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. நாம் தான் மாற வேண்டும்.
கே:- பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க காரணம்?
ப :- ஆண்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் காரணம். அவர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது.
கே :- இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறதா?
ப:- ஆமாம். அதை இன்னும் அதிகரிக்க தான் உங்களைதேடி வந்துள்ளேன். மாணவர்களை தேடி நான் செல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் தான் அரசியலின் அடித்தளம். அரசியல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
கே:- விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
ப :- என் மீதான விமர்சனம் தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது. நல்ல விமர்சனங்கள் தான் என் வளர்ச்சிக்கான அங்கீகாரம்.
கே:- படித்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் வசிக்கும் படிக்காத பெண்களின் நிலை?
ப:- பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. உடனே தண்டனை தான்.
கே:- குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும்?
ப:- முதலில் சமமான பாசத்துடன் வளர்க்க வேண்டும். சமமான உரிமைகள் தரவேண்டும். இரண்டுமே குழந்தைகள் தான். பண்புகளை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
கே:- நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வந்து சாதிக்க முடியுமா?
ப:- நடுத்தர வர்க்கம் என்ன ஏழ்மை நிலையிலிருந்து கூட வரலாம். வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. இந்த தொழிலை நான் மதிக்கிறேன். இந்த தொழிலை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளை கொண்டு வர தயங்குவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என் மகள்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.
கே:- பெண்களின் சமுதாய பங்களிப்பு எப்படி இருக்கிறது?
ப:- ஜான்சி ராணி முதல் மம்தா பானர்ஜி வரை சொல்லலாம். சங்க காலம் முதலே பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
கே :- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?
ப:- வந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகம் போதவில்லை என்பது உண்மை. நம் காலத்திலேயே அதை பார்த்துவிடுவோம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதைத் தொடர்ந்து ‘ எந்த அரசு உத்தரவு வந்தாலும் இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்கும். நாம் சந்திப்பதை யாராவது தடுத்தால் கல்லூரிக்கு வெளியில் உங்களை சந்திப்பேன்.
தமிழகத்தை மாற்றும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது. இந்த கல்லூரியில் தான் முதன்முதலில் அரசியல்வாதி என்று கையெழுத்து இட்டேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மாற்றத்தை முன்னெடுக்க உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்’
இவ்வாறு கமல் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து. கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர்.
கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வுதான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க. தான். தனக்கு வந்த சிறிய பிரச்சனையை கூட தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கமலால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.
மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வராக அவர் உள்ளார். சபரிமலை விவகாரத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் யாரும் தலையிடக்கூடாது. காலம், காலமாக உள்ள நடைமுறையை மாற்றுவதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #RajendraBalaji #KamalHaasan
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு பிரச்சினையை எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டின் மீது ஆராய வேண்டி இருந்தால் ஆராய வேண்டும்.
கேள்வி:- பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறையில் அதிகமாக வருகிறதே?
பதில்:- சினிமா துறை என்று தனியாக சொல்லாதீர்கள். எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பதுதான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற விஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
கே:- மற்ற துறையை விட சினிமா துறையில் பாலியல் பிரச்சினை அதிகமாக இருக்கிறதா?
ப:- நாங்கள் செய்வதை எல்லாம் நீங்கள் படம் பிடித்து காட்டுகிறீர்கள். இதனால் கொஞ்சம் அதிகமாக தெரியலாம்.
கே:- தேவர்மகன்-2 உங்களுடைய கடைசி படமாக இருக்குமா?
ப:- அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கே:- தேவர்மகன்-2 என்று அரசியலுக்காக படத் தலைப்பு வைத்திருக்கிறீர்களா?
ப:- அப்படி இல்லை. ராஜ் கமலின் 6-வது படத்தை திருப்பி எடுக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. அதற்காக இந்த படத்தின் பெயரை குறிப்பிட வேண்டி இருக்கிறது. படத் தலைப்பு இன்னும் நான் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக அந்த பெயர் இருக்காது.
கே:- தரமான விஷயங்கள் தேவர்மகன்-2வில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
கே:- விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?
ப:- வந்தால் வரவேற்போம்.
கே:- 3 நாள் நிகழ்வில் நிறைய மாணவ-மாணவிகளை சந்தித்துள்ளீர்கள். ஆனால் கமல் மாணவ-மாணவிகளை சந்திக்க கூடாது என்று தமிழிசை கூறி இருக்கிறாரே?
ப:- எனக்கும் அவர்களுக்கும் நடக்கும் இந்த உரையாடலை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் பதட்டம் என்ன என்று எனக்கு புரிகிறது. பதட்டப்பட்டு என்ன பண்ணுவது? எங்களுக்குள் பரஸ்பரமாக நடக்கும் உரையாடல் அற்புதமான உரையாடல். ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய உரையாடல். அதனால்தான் அது நடந்து கொண்டிருக்கிறது.
கே:- உங்களின் அரசியல் செயல்பாடுகளை அமைச்சர்கள் விமர்சிக்கிறார்களே?
ப:- முன்னேற்றத்தின் அடையாளம்தான் அது. கவனிக்காமல் விட்டு விட்டால்தான் தப்பு. ரொம்ப கவனிக்கிறார்கள். நான் எது சொன்னாலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். அது நல்லது.
கே:- அவர்களின் விமர்சனம் நீங்கள் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறதா?
ப:- அது இருக்கட்டும். எதிர்ப்பு இருந்தால் இங்குள்ள கோவில்களுக்கு போகட்டும். இது நான் சம்பந்தப்படாத விஷயம். நான் அங்கு போனது கிடையாது. எனவே அதைப்பற்றி அதிகமாக தெரியாது. வெளியில் இருந்து கேட்ட கதைகள்தான். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமான இடங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் எனது கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Metoo #Kamalhaasan
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாமக்கல் என்பது இந்தியாவின் பேருந்து நிலையம். இங்கு பெட்ரோல், டீசல் விலை குறித்து சில உண்மைகளை மக்களிடம் தெரிவித்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 44 டாலராக இருந்த போது பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.
கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இப்போது 100 டாலரை தாண்டி நிற்கிறது. பெட்ரோல் விலை ரூ.87 வரை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம் கோடி என்பது எனக்கு வந்த தகவல். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.4.5 லட்சம் கோடி சம்பாதித்து வருகின்றனர்.
இது மக்களுக்கு சென்றடைய வேண்டும், அதை நீங்கள் கேட்க வேண்டும். மக்களுக்கான புரட்சி தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்கான அடையாளங்கள் இங்கே தெரிகிறது. அதற்கான தகவல்களை தர வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாகிறது.
நான் சொல்லும் புரட்சி கத்தியின்றி, ரத்தமின்றி தான். நம் போராட்டங்கள் எல்லாம் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிக்கிறது. இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கும்.
என்னை முழு நேர அரசியல்வாதியா என சந்தேகப்பட்டு கேட்கின்றனர். நான் சென்ற பல இடங்களுக்கு, அரியணையில் ஏறி அமர்ந்திருக்கும் பலர் செல்வதில்லை என்பது தான் உண்மை. நான் தொடந்து திரைப்படங்களில் நடிப்பதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ என தலைப்பு போட்டு எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளன.
அவரை விடவும் என்னை கேள்வி கேட்பவர்கள் முழு நேர அரசியல் வாதியா? எனக்கும் வைத்துக் கொண்டு, மக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகதான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.
முழு நேரமும் அரசியல் செய்து கொண்டு வேறு போக்கிடம் இல்லை என்றால், அவன் மக்கள் பணத்தில் அல்லவா கைவைப்பான். அரசியல்வாதி முழு நேரம் மக்களோடு தான் இருப்பான் என எதிர்பார்க்க கூடாது. அரசியல்வாதிகளுக்கும் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும்.
மேடைப் பேச்சு அலங்காரத்தில் உண்மையை மறைக்க முடியாது. அவர்களை விட தெளிவாக பேசி விட முடியும் என்று நம்பவில்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களை விட கண்டிப்பாக என்னால் பல மடங்கு நேர்மையாக இருக்க முடியும். அதற்கு ஏதுவாக நீங்களும் நேர்மையாக இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக இருந்தால் தான் நேர்மையான தமிழகம் உருவாகும்.
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடாதீர்கள். இதனால் அரசிடமிருந்து மக்களுக்கு சேர வேண்டியவை சென்று சேருவதில்லை. ஓட்டை பணத்துக்கு விற்கும் நிலை மாறினால், மக்களுக்கான தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெற முடியும்.
கிராம சபை என்பது, சட்டமன்றம், பாராளுமன்றங்களில் எடுக்கும் முடிவு அளவிற்கு இணையான பலம் கொண்டது. என்னால் இயன்றவரை நான் என் கடமைகளை செய்கிறேன். உங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் செய்ய வேண்டும். படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது. நீங்கள் உங்கள் கடமையை செய்தால், என் கடைமையை நான் ஆற்றுவது மிக, மிக எளிதாகும். நான் எதிர் பார்க்கும் நாளை நமதாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்செங்கோடு பழைய பஸ்நிலையத்தில் அவர் பேசும்போது, இந்த ஊரில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலநிலை உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இந்த நிலை மாற மக்கள் நீதிமய்யம் பாடுபடும். தமிழகத்தில் நேர்மையை மதிக்கும் காலம் நெருங்கி வருகிறது, என்றார்.
ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
எனக்கு ராசிபுரம் புதிது அல்ல. நற்பணி மன்றத்தினர், தொண்டர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். 3 தலைமுறை தொண்டர்கள் என இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடும்பத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.
ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறோம் என்று கூறி ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக காணப்படுகிறது. இதுவே அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி இருக்க வேண்டும்.
தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூட பார்க்க முடிகிறது. நான் போகும் இடமெல்லாம், வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமையுடன் இருக்கிறார்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. குருசாமிபாளையம், அத்தனூர் பகுதியில் நெசவு தொழில் முடங்கி கிடப்பதாக எங்களுக்கு சேதி வந்து கொண்டு இருக்கிறது. அதை சரி செய்யும் காலம் விரைவில் வரும்.
கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து போராட்ட களத்தில் குதிக்கும். அந்த போராட்டம் அமைதியாகவும், நியாயமாகவும் இருக்கும். புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சேலம்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘‘மக்களுடனான பயணம்’’ என்ற பெயரில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்றும், நாளையும் இந்த சுற்றுப்பயணம் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். பின்னர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
மக்களுடன் பேசுவதற்காக மகுடஞ்சாவடியில் மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் நடுத்தெருவில் நின்று பேசுகிறேன். ஆனால் அனுமதி மறுக்க, மறுக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கும்.
எவ்வளவு தடைகள் இருந்தாலும், அதை இந்த காளை எதிர்கொள்ளும். சட்ட சபையில் எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்த போது தொடர்ந்து கேள்வி கேட்டது மக்கள் நீதிமையம் தான். 60 கிராமங்கள் உடைய இந்த மகுடஞ்சாவடியில் பஸ் நிலையம் கிடையாது. அதை நான் உங்களுக்காக அரசிடம் கேட்பேன்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல. உங்களை சந்திக்க மீண்டும், மீண்டும் வருவேன். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாளை நமதே. இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் பேசும்போது, மக்களுக்கு தேவையான துணிகளை நெய்யும் உங்களால், புதிய தமிழகத்தை உருவாக்கவும் முடியும். நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன? என்பது உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டு அரசை விட சிறந்த திட்டங்களை செயல்படுத்த வேலைகள் நடந்து வருகிறது.
மல்லசமுத்திரம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. ஆனால் எல்லாநேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களின் வலிமை எங்களுக்கு தேவை என்றார்.
இளம்பிள்ளை அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வரும் பகுதியாகும். உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். ஜி.எஸ்.டி.வரியால் நீங்கள் மட்டும் அல்ல நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
நான் உங்களுக்காக வேலை செய்வதற்கு நீங்கள் எங்கள் கைகளை வலுப்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
2-வது நாளான இன்று காலை 9.30 மணிக்கு ஓமலூரில் மக்களுடனான பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார். 1 மணிக்கு மேட்டூரிலும், 4.30 மணிக்கு கெங்கவல்லியிலும், 5.30 மணிக்கு ஆத்தூரிலும், 6.30 மணிக்கு அயோத்தியாப்பட்டினத்தி லும், இரவு 7.30 மணிக்கு சேலம் பள்ளப்பட்டியிலும் பொது மக்களுடன் கலந்துரையாடுகிறார். 8.15 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். #KamalHassan #Kamalpolitics
மலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன.
எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.
வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.
மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
கமல்ஹாசன் 3 நாட்கள் பயணமாக இன்று சேலம் புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:-
கேள்வி:- மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்களே?
கே:- சிலை கடத்தல் வழக்கு பரபரப்பாகி இருக்கிறதே?
ப:- வெகுநாட்களாக நடந்து வந்து இருக்கிறது என்றுதான் அர்த்தம். கோவிலில் இருப்பவர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. கோயிலுக்கு சொந்தமான சிலைகள் நம்முடைய சொத்து. தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் உதவ முன் வந்தபோதும், எங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என தட்டிக்கழித்து விட்டனர்.
கே:- மீடூ என்ற பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழகத்திலும் சில பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் திரைத்துறையினர் கருத்து சொல்லவில்லையே?
ப:- இந்த விவாகரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் தான் கருத்து சொல்லவேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறு. மீடூ என்ற இயக்கம் மூலம் உண்மைகள் வெளிவந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். கண்ணகி காலத்தில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கிறது.
கே:- ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டோம் என்று நிதின் கட்காரி கூறி இருப்பது?
ப:- உண்மையை பேசக்கூடிய சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
கே:- ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறாரே?
ப:- அது வெறும் பேச்சு மட்டும் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 74 சதவீத வருகை பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வேன்களில் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.
ஆனால் மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். காலையில் 3 வேன்களில் வந்த மாணவ-மாணவிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதற்கிடையே மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகம் முன்பு முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏற்கனவே கைது செய்த மாணவ- மாணவிகளை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்களும் இந்த போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் பேட்டை கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களும் போராட்ட களத்துக்கு வந்து குவிந்தனர்.
பின்னர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் மட்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் வெளியே வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து மாணவர்கள் மத்தியில் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது போலீசாரிடம் எதிர்த்து பேசிய ஒரு சில மாணவ-மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தாக்கியவாறு இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்த சம்பவத்தால் பல்கலைக் கழக வளாகம் முன்பு உள்ள நெல்லை-தென்காசி ரோட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest #KamalHassan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்