search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    கமல் அழகாக இருந்ததால் தான். அவரை சப்பாணி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாகவும், அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு பிடிக்கிறது என்றும் படவிழாவில் பாரதிராஜா பேசினார். #Maragathakkaadu
    ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, 

    " இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.



    கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

    இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது. 



    மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்" என்றார்.

    விழாவின் முடிவில் `மரகதக்காடு' படத்தின் இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார். #Maragathakkaadu #BharathiRaja

    நானும் கமல் ரசிகன் என்ற முறையில், அவர் மீது எனக்கு சிறிய வருத்தம் இருப்பதாக படவிழாவில் பேசிய சுரேஷ் காமாட்சி சமூக மாற்றத்திற்கான மரகதக்காடு படத்தை பாராட்டும்படி கோரிக்கை விடுத்தார். #Maragathakkaadu
    கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, 

    "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன. தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நன்றி.



    தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால், அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா, இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

    நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன், உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து, இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்யுங்க. வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி" என தனது மனக்குமுறலை கொட்டினார். #Maragathakkaadu #KamalHaasan #SureshKamatchi

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ரூபினி விரைவில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Roobini
    ரூபினி, 1980-களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    ரஜினியுடன் `மனிதன்’ படம் பண்ணும்போது எனக்குப் 16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..’ பாடல் நல்ல ரீச். அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம், ‘நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை’னு சொல்வார். ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி. அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஆளோட நடிக்கிறோம்ங்கிற வி‌ஷயம் எனக்குத் தெரியாமபோச்சு.

    கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கவுதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க. நான், `அப்பு’ கமலின் காதலி கேரக்டரை செலக்ட் பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப முக்கியம்ல... அதனாலதான்.



    பட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல் பண்ணவில்லை’னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப் பார்க்கும்போது ஒரே ஷாக். எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று... அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்’ பண்னேன்.

    உங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம்?

    என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம், `பத்தினி பெண்’. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை’னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன். அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட வீட்டுக்கு என்னை அழைத்தார்.

    என் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம் முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை. இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன்.

    `விஜபி 2’ படத்தின் புரமோ‌ஷன் வேலைகளுக்காக தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும், பார்ப்பேன். நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு வந்துட்டுப் போகலாம்ல... பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம். #Roobini

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிராலம் ஒருவர் இணைந்துள்ளார். #Indian2 #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. 

    கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    இந்தியன்-2 ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan

    உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாகவே நடிச்சிட்டுப் போகட்டும் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Rajini #Kamal
    சுகாசினி தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கிறார். மற்றபடி கணவர் மணிரத்னத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் `16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்களிலும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய வி‌ஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.

    கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோ‌ஷமாதான் இருக்கு. கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.



    மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்களை பார்த்து சந்தோ‌ஷமா இருக்கு.

    அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே...’ என்று பதில் அளித்திருக்கிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர். 



    இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனராம். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

    இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan

    கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. #Vikram #KamalHaasan #AksharaHaasan
    விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். 

    விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Vikram #KamalHaasan #AksharaHaasan

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை உக்ரைனில் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
    ‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.

    `இந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகே‌ஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ‌ஷங்கர்.



    கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். #Indian2 #KamalHaasan

    நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #KamalHaasan #jayakumar
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரட்டை வேடம் போடுவது தி.மு.க.வின் வழக்கம். நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை என்றுகூட சொல்லலாம். இதுபற்றி காங்கிரஸ் தான் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணி மாறுவதற்கு வசதியாக தி.மு.க. திட்டம் வகுத்துக்கொள்ளும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

    ஆனால் நாங்கள் எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம், ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை.

    அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம். அதில் நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல நடிகர் விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது.


    தேர்தல் வரும்போது நல்ல திட்டங்களை தந்த எங்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கோஷ்டி மோதல் என்பது கற்பனையான கதை. அவர்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது வழக்கமான ஒன்று. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுகின்றனர்.

    லண்டன் ஓட்டல் விவகார வழக்கில் இருந்து விடுவிக்க தி.மு.க. தலைவரிடம் கொஞ்சியது யார்? இதை உணர்ந்து தான் ஜெயலலிதா வீட்டு பக்கம் வரக்கூடாது என்று டி.டி.வி.தினகரனை விரட்டி அடித்தார். தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொண்டு இருந்தவர் டி.டி.வி.தினகரன்.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பணியை தொடங்கும். மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் தான் வேலைகளை இப்போதே தொடங்கிவிடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #jayakumar
    இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிகத்தூர் கிராமத்தை தத்து எடுத்ததில் இருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. மழைபெய்து உள்ளதால் தண்ணீர் தொடர்பான பணிகள் செய்ய முடியவில்லை. கழிப்பறைகள் கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கான பணிகள் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு உள்ளோம்.

    100 கழிப்பிடங்கள் கட்ட எவ்வளவு நாள் தேவைப்படுமோ அதற்குள் கட்டப்படும். அதற்கு மேல் ஆகாது. அரசு அனுமதி தந்து பணிகள் தொடங்கியதும்தான் எப்போது முடிக்கப்படும் என்று கூறமுடியும்.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. எங்களுக்கு என்ன சரி என்று படுகிறதோ அதை செய்வோம். கட்சியின் கட்டமைப்பு பற்றி நாங்கள் சொல்லவில்லை. ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுவது உங்களுடைய யூகம். கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பு இல்லை. நிர்வாகிகள் நேர்காணல் நடத்தப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஆனால் நான் வேறு நிகழ்வுகள் இருப்பதால் அதில் பங்கேற்கவில்லை.

    நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைப்பது பற்றி சட்டவல்லுனர்களுடன் கேட்டுதான் கருத்து சொல்ல முடியும்.

    இந்தியா முழுவதும் காவிமயம் ஆக்க முயற்சிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு பாடம் புகுட்டுவோம் என்று கூறுவது மு.க.ஸ்டாலினின் கருத்தாகும். எங்களுடைய கருத்தை நேரம் வரும்போது தெரிவிப்போம். மத்திய அரசு காவி மயத்தை பரப்புகிறதா? என்பதைப்பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதுபற்றி திரும்ப திரும்ப பேசுவது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    கமல் ரசிகர் ஒருவர் உருவாக்கி இருக்கும் டைம் இல்ல என்ற படத்துக்கு நடிகர் சிம்பு ஒரு பாடலை பாட இருக்கிறார். #Simbu #STR
    டைம் இல்ல என்ற படத்துக்கும் சிம்பு ஒரு பாடல் பாட சம்மதித்து இருக்கிறார். கமல் ரசிகர் ஒருவர் அவரை போலவே நாத்திக கருத்துகளை பேசுகிறார்.

    அம்மன் சிலையை கிண்டல் செய்ய போக 30 நாட்களில் உயிர் இழந்து விடுவாய் என்று அசரீரி குரல் ஒலிக்கிறது. அந்த 30 நாட்களை ஹீரோ எப்படி கடந்தார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் இது. 30 நாட்களில் 15 நாட்களை ஜாலியாக கழிக்கிறார் ஹீரோ. அப்போது பாடுவது போன்ற பாடலை சிம்பு பாடவிருக்கிறார்.

    உற்சாகமாக ஆட்டம் போடும் வகையிலும் அதே நேரத்தில் கருத்தோடும் எழுதப்பட்டிருக்கிறது பாடல். கதாநாயகன் மனு பார்த்திபனே தயாரிப்பாளராகவும் கால் பதித்துள்ளார்.
    பட்டிமன்ற நடுவரும், மக்கள் நீதி மய்யத்தின் முதன்மை நிர்வாகியுமான ஞானசம்பந்தனின் மகன் திருமணம் இன்று மதுரையில் நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். #KamalHaasan
    மதுரை:

    பட்டிமன்ற நடுவரும், மக்கள் நீதி மய்யத்தின் முதன்மை நிர்வாகியுமான ஞானசம்பந்தனின் மகன் ஞானகுரு-மீனாட்சி திருமணம் இன்று மதுரையில் நடந்தது.

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் கவிஞர் வைரமுத்து, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், நடிகர் பாண்டியராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    பெருமிதம் பொங்கும் தகப்பனாராக ஞானசம்பந்தனை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நட்பை உறவாக மாற்றும் வித்தை தெரிந்தவர் அவர். வேடிக்கை பார்க்க வந்த என்னை நண்பராக மாற்றியவர். நட்புபாராட்ட வந்த என்னை உறவினராக மாற்றி பெருமை சேர்த்தவர். அவரிடம் நட்பு பாராட்டுவதில் என்னைபோல் பலருக்கும் போட்டி உண்டு.

    இந்த திருமணத்தில் நான் ஒரு கருவி அல்ல. ஒரு உறவாக வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளேன். வாழ்க்கை நீளமாக இருக்க வேண்டும். வாழ்த்து சுருக்கமாக இருக்க வேண்டும். அதுபோல் மணமக்கள் வாழ்க்கை நீண்டிருக்க வேண்டும். அவர்கள் பிள்ளைகளை பெற்று தமிழ் பிள்ளைகளாக வளர்த்தெடுக்க வேண்டும். அது பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan
    ×