search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். நாட்டில் நிகழும் அன்றாட சம்பவங்கள் குறித்தும், தன்னை பாதித்த விஷயங்கள் குறித்தும் சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.



    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேசமயம், வேறு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமூக வலைதளமான டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan  #Twitter
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PinarayiVijayan #Kamalhassan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

    அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

    ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Kamalhassan
    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KamalHaasan #MNMForCauvery
    சென்னை:

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், “காவிரி நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை சென்னை தி.நகரில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

    * தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரவேண்டும். சிற்றணைகள், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

    * காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அறிவிக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

    * அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை மேலும் அதிகரிக்கவேண்டும்.

    * விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனித்து தீர்வு காணவேண்டும்.

    * விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கவும் செயலாற்றவும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். அதற்காக வழிவகை செய்து, அதைத்தொடர்ந்து வழிநடத்த உதவியாக இருப்போம்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அளித்த பதில்களும் வருமாறு:-


    கேள்வி:- இந்த கூட்டத்தை 9 கட்சிகள் புறக்கணித்துள்ளதே? இந்த கூட்டத்துக்கு வர அவசியம் இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    கமல்ஹாசன்:- புரிதல் இல்லாமல், நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்ற விளக்கம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்கலாம். விளங்கி விட்டால் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், பா.ம.க.வும் இணைந்து போட்டியிடுமா?

    டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உள்ளாட்சி தேர்தல் முதலில் நடக்கப் போவது இல்லை. இது அரசியல் மேடை கிடையாது. பொதுவான மேடை. விவசாயிகளுக்காக நடத்தப்படுகிற மேடை. இதுபோன்ற பல மேடைகளில் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் கலந்துகொள்வோம். எங்களுடைய நோக்கம் விவசாயிகளை உயர்த்துவது தான். அதனால் இதில் அரசியலோ, அது சார்ந்தோ கருத்துகள் எதுவும் கிடையாது.

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் தொலைபேசியில் அழைத்ததாக சொன்னீர்கள். அவர் வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி இருக்கிறாரா?


    கமல்ஹாசன்:- நான் அழைத்தபோது, ‘நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்படி வந்தேன் என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார். இது அவருடைய எண்ணம். அவர் வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். வரவில்லை என்றால் பரவாயில்லை. இது இன்றுடன் முடிய போகிற கூட்டம் அல்ல. இனியும் தொடரும். அப்போதாவது வருவார் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக புதிய முதல்- மந்திரியை சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா?

    கமல்ஹாசன்:- அதை விடவும் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா? அதன்படி செயல்கள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவே, உறுதிப்படுத்தவே ஒரு குழு தேவைப்படுகிறது.

    கேள்வி:- விவசாய அமைப்புகள் எதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார்கள்?

    கமல்ஹாசன்:- நேர்மையை நம்பி இருக்கலாம் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் மட்டும் புறக்கணிக்கவில்லை, அவர் கூறியதால் தான் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வைகோவும் கூறியிருக்கிறார். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

    கமல்ஹாசன்:- இருக்கலாம். அல்லது அது ஒரு விதமான அரசியல். இது வேறு விதமானது. அவ்வளவுதான்.

    கேள்வி:- காவிரி இறுதி தீர்ப்பு விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

    கமல்ஹாசன்:- எது நியாயமோ அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டே இருப்போம். அதுக்காக மத்திய- மாநில அரசுகளை விமர்சிக்கவோ, அவர்களுடன் உரையாடவோ தேவையான யுக்தியாக, பாதையாக இருக்கிறதோ அதை மக்கள் நீதி மய்யம் தேர்ந்தெடுக்கும்.

    கேள்வி:- இந்த கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?

    கமல்ஹாசன்:- மக்களிடம் எடுத்துச் செல்வோம். தேவைப்பட்டால் எல்லாரும் சேர்ந்து எங்கே போய் போராட வேண்டுமோ, அங்கே போய் போராடுவோம். இது மக்கள் இயக்கமாக மாறிவிடும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறியதாவது:-


    இந்த கூட்டம் அடுத்து வரும் காலங்களிலும் அரசியலற்ற கூட்டமாக நடைபெறும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் எந்த நன்மையும் கிடைக்காது. தமிழகத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அணைகள் மாநிலத்தின் அதிகார வரம்பில் வரும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது.

    வாரியம் வேறு ஆணையம் வேறு. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. எஜமான் (பிரதமர் நரேந்திர மோடி) என்ன சொல்கிறாரோ அதை இங்கு இருக்கும் தமிழக அரசு செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    தமிழன் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். நானும், என் மகனும் தமிழர்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்போம். அடுத்து வர உள்ள எம்.பி. தேர்தலில் கர்நாடகாவின் ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு கபட நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் இரட்டை இலையை வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகத்தின் உரிமை விற்கப்பட்டுவிட்டது.

    வாரியம் என்று இருந்ததை ஆணையம் என்று மாற்றி வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும். பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீர்வளத்துறை பெற்றிருந்தால், இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது. தி.மு.க. இந்த கூட்டத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பங்கேற்றிருக்கமாட்டோம். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். ஆனால் எங்களை போன்ற கட்சியினருக்கு நேரடியாக அழைப்பு விடுக்காமல், தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக பங்கேற்றேன். கூட்டத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது.

    இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.  #KamalHaasan #AnbumaniRamadoss #MakkalNeedhiMaiam #MNMForCauvery
    சென்னை தியாகராய நகர் தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. #CauveryIssue #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இக்கூட்டம் கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் நோக்கத்தில் கூட்டப்படுகிறது என்றுதெரிவித்தார்.


    “நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது.

    இதில் கமல்ஹாசன், பா.ம.கா. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், நடிகர் நாசர், ஜமீலா நாசர், நடிகை ஸ்ரீபிரியா, ஏ.கே.மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன், அர்ஜுன் சம்பத், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு பற்றியும், விவசாயிகளுக்கான செயல் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். #CauveryIssue #MakkalNeedhiMaiam #KamalHaasan
    காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர் என்று விருதுநகரில் கமல்ஹாசன் பேசினார்.
    விருதுநகர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.

    நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் பொதுமக்களை சந்தித்தார்.

    சிவகாசியில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது, இப்போது இங்கு பெய்துள்ள மழையில் நீங்கள் நனைந்துள்ளீர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விசில் செயலி அமைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    அதைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, நான் விருதுநகர் வரும் போது ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை கேட்டேன். இந்த மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது தான் அந்த செய்தி. இதன்மூலம் காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் கண்ட கனவுகள் மீண்டும் பலிக்கும். அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.

    நான் தற்போது காமராஜர் வீட்டுக்கு சென்று வந்தேன். சிறிய தெருவில் அவரது வீடு உள்ளது. ஆனால் விசாலமான பாதையை அவர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கல்விக்கு காமராஜர் செய்த சேவை மகத்தானது. காமராஜர் நமக்கு காட்டிய பாதையை தற்போது செப்பனிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் அதனை செய்வோம்.

    இங்கு என்னைவிட மூத்தவர்கள் உள்ளனர். அவர்கள் காமராஜர் கண்ட கனவு பலிக்குமா? பலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த நிலை மாறி இன்று அவர்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. கால சுழற்சியில் காமராஜர் கண்ட கனவு பலிக்கும் நிலை ஏற்படும்.

    நாம் மேற்கொள்ளும் பணியில் பல்வேறு இடையூறுகள் வரலாம். அதனை எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். இங்கு திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது. உங்களது ஆசியுடன் லட்சியங்களை நிறைவேற்றுவேன்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.


    கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்தார்.#Kamalhassan #thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

    குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.

    இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

    யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



    ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

    அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan #thirumavalavan
    நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் என்று கமல்ஹாசன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்தார். பாளை முருகன்குறிச்சி நூற்றாண்டு மண்டபம் அருகே கூடிநின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பல காலங்கள் என்னுடன் சேவை செய்த நற்பணி மன்றத்தினர் இன்று கட்சிக்காரர்களாக மாறி வந்துள்ளீர்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பல புதிய முகங்கள் வந்திருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி. உங்கள் முகங்களை பார்ப்பதற்கும் மனங்களை பிடிப்பதற்கும் நான் வந்துள்ளேன். மீண்டும் வருவேன். உங்களை புரிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அவர் மேலப்பாளையம் சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு நின்று கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

    அவர்கள் மத்தியில் திறந்த காரில் நின்று கமல்ஹாசன் பேசியதாவது:-

    உங்களை தெரிந்துகொள்ளவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இது நீங்கள் நோன்பு இருக்கும் காலம் என்பதை தெரிந்து கொண்டேன். நேரம், காலம் தெரியாமல் வந்ததற்கு மன்னிக்கவும். இந்த இயக்கம் பெரிய இயக்கமாக மாறும்.

    இங்கு நிறைய இளைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பயணிக்கும் தூரம் வெகுதூரம். அடுக்கு மொழியில் பேசுவதைவிட அடுத்தவேலையை பற்றி பேசுவது முக்கியம். மக்கள் நீதி மய்யத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்காகவே செயலி உருவாக்கியுள்ளோம். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த செயலி தமிழர்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நெல்லை டவுண் வாகையடிமுக்கு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது சரித்திர புகழ் வாய்ந்த இடம். பெரிய தலைவர்கள் பேசிய இடம். பாரதி உலாவிய வீதி. இங்கு பேசுவது பெருமையாக உள்ளது. பெரிய அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளார்கள். நானும் வந்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம். மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல விசிலி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது தமிழகத்தை செதுக்கும் உளி. இந்த உளி உங்கள் கையில் இன்னும் கூர்மை பெறும். நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. இது நம்ம ஊர் என்ற மன்பான்மை வருகிறது. இங்கேயே தங்கிவிடலாம் என தோன்றுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர். இதுவரை நான் பணத்திற்காக வசனம் பேசினேன். இப்போது உங்கள் அன்பின் வெளிப்பாட்டை பேசி வருகிறேன். இது ஒத்திகை பார்த்து பேசுவது அல்ல. உங்களை பார்த்ததும் அன்பாக வருகிறது. உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். இதனால் பேச்சு வரவில்லை. இந்த அன்பிற்கு சினிமா மட்டும் காரணம் என கூறமுடியாது.

    இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து வருகிறேன். கடமையை செய்யுங்கள். ஒத்தகருத்துள்ள நிறைய பேர் உள்ளார்கள் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தபின் புரிகிறது. 30 வருடத்திற்கு முன்பு உங்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது. சாதனை என்பது சொல் அல்ல செயல். செயலை செய்வதற்கு செயலியை மக்கள் நீதி மய்யம் அறிமுகம் செய்துள்ளது. புதிய தமிழகம் படைக்கும் பொறுப்பில் பங்கேற்றுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்த் எனது நண்பர்கள் என்று தான் சொன்னதில்லை என்று நெல்லையில் சரத்குமார் தெரிவித்தார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு சிறிதும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் வாரியம் என்று கூறாமல் ஆணையம் என்று தாக்கல் செய்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு என்ன தண்டனை என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.

    கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மெஜாரிட்டியை பெற்று உள்ளது. ஆனால் அதை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதிய ஜனதாவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாக்குவதற்கு பாரதிய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்து உள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா ஆட்சி அமைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்திலும் தொங்கு சட்டசபை உருவாகலாம். அப்படி தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களை சந்தித்து வருகிறது.

    சமத்துவத்தை விரும்புகின்ற படித்த, அறிவுள்ள, தன்னம்பிக்கை, நேர்மை, திறமையுள்ள சரத்குமாரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். வருகிற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சர் ஆவேன்.

    எனக்கு வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. இறைவன் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைத்து இணைந்து செயல்படுவேன், இணைந்து ஆட்சி அமைப்போம். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் பேசி கூட்டணி முடிவு எடுக்கப்படும். கமல், ரஜினி எனது நண்பர்கள் என்று நான் சொன்னதில்லை.

    அவர்கள் என்னுடன் திரைத்துறையில் ஒன்றாக பயணிப்பவர்கள். நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திப்பது வரவேற்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

    மக்களை பாதிக்கக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நான் தென்காசி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். விடுபட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளேன். அந்த தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். விரைவில் தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு நடத்தப்படும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

    பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



    கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

    பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்வதாகவும் அதற்கு வழிகாட்டி மக்கள் தான் என்றும் பணகுடியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeediMaiam #KamalHaasan
    நெல்லை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார்.

    இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பணகுடியில் அவருக்கு நெல்லை மாவட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் செந்தில்குமார் தலைமையில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பணகுடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசினார்.

    உங்களை நான் அறிந்து கொள்ள மேற்கொண்டுள்ள பயணம் இது. மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது. அதற்கு வழிகாட்டி நீங்கள்தான். உங்கள் ஆசி இல்லாமல் அந்த பயணத்தை தொடர முடியாது. உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது. கண்ணோடு கண் பார்த்து உங்கள் அன்பை அறியும் இந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

    திரைப்படம், டி.வி. மீடியா மூலமாக உங்களை ஏற்கனவே சந்தித்து வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக என்னை நீங்கள் பார்த்துள்ளீர்கள். பக்தர்கள் தரிசனம் என்பது போல உங்களை தரிசிக்க வந்துள்ளேன். மக்களின் தேவைகளுக்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் திசையன்விளை, உவரி ஆகிய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். கமல்ஹாசன் வருவதை அறிந்ததும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். கமல்ஹாசன் பேசும் போது அவர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள்.

    வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்க
    பகுதியில் மக்கள் திரண்டு நின்ற காட்சி.

    இதன் பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மணப்பாட்டில் மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்பு அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து கமல்ஹாசன் இன்று மாலை 4மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.

    மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, இன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    பின்னர் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். #MakkalNeediMaiam #KamalHaasan
    குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்ததாகவும், மக்களின் அன்பில் மிதந்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கன்னியாகுமரி:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இரவில் அவர், கன்னியாகுமரியில் ஓய்வு எடுத்தார். இன்று காலை குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அதன் பிறகு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்ட கமல்ஹாசனை நிருபர்கள் சந்தித்து குமரி மாவட்ட சுற்றுப்பயணம் எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கமல்ஹாசன் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்தது. ‘மக்களின் அன்பில் நான் மிதந்தேன்’ என்றார். பின்னர் அவர் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் அடங்கிய குழு தினந்தோறும் திட்டம் வகுக்கிறது என்று நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசினார்.

    இரவு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இங்கு வந்துள்ளேன். நான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. ஆனால் சிறு பிள்ளையாக இருக்கும்போது எனது ஆசான் டி.கே. சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.

    ஒருவகையில் பார்த்தால் நான் கல்வி கற்ற ஊர்களில் இதுவும் ஒன்று. நான் கற்ற கல்வி கலை தான். அதை எனக்கு கற்று தந்த ஆசான் இந்த ஊர்க்காரர் தான். அவ்வை சண்முகம் என்று நாடு போற்றும் அந்த அறிஞரின் கடைநிலை மாணவன் நான்.

    இன்று இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் நடுவில் நின்று பேசுவீர்களா? என்று 10, 15 வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் பேசுவேன் சினிமாக்காரன் தானே கூட்டத்தை பார்த்து பேசுவேன் என்று சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது சினிமாக்காரனாக அல்ல. உங்களில் ஒருவனாக, உங்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். இது தமிழகம் ஒரு புது மாற்றத்தை நோக்கி நகரும் வேளை. அதை நகர்த்தப்போகும் கரம் உங்களின் கரங்கள். இந்த கரங்களின் உதவியுடன் தான் நாளை நமதாகப் போகிறது.

    எனக்கு சிலர் அறிவுரை சொன்னார்கள். எதற்கு மெனக்கிட்டு இவ்வளவு தூரம் போக வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் சனி, ஞாயிறு அன்று பேசினால் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமே. உடம்பு வலியில்லாமல் சென்னையில் இருந்தே செய்யலாமே என்று அறிவுரை வந்தது.

    ஒரு பக்கம் பார்த்தால் அறிவுப்பூர்வமாக அது சரியாக இருக்கலாம். ஆனால் உணர்வுப்பூர்வமாக உங்களை சந்திப்பதற்கு நிகரானது எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்காக அந்த 4.5 கோடி பேரை நான் மதிக்கவில்லை என்றில்லை. அவர்களை நான் உணர்கிறேன். இங்கே நான் உங்களை பார்க்கிறேன், உணர்கிறேன். நீங்களும் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கண்களை பார்க்க முடிகிறது. அந்த அன்பை பார்க்க முடிகிறது.

    மக்கள் நீதி மய்யம் என்ன செய்யும் என்று பட்டியல் போடும் வேளை இதுவல்ல. ஆனால் யாருக்காக செய்யும் என்பதை சுட்டிக்காட்டலாம் உங்களுக்காக. இங்கே நாங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறோம்.


    நான் இப்போது மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை, பயணம் உங்களை பற்றி நான் கற்றுக் கொள்வதற்காக. உங்களுக்கு செவி சாய்ப்பதற்காக. இப்பொழுதே உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து விடுவேன் என்று மார்தட்டி கொள்ள முடியாது. என்னை போலவே உங்கள் பால் அன்பு கொண்டவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உங்களுக்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக எப்படியெல்லாம் நாம் குறைகளை தீர்க்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திற்காக பிரத்யேகமாக 17 பேர் அடங்கிய அந்த ஹார்வேர்ட் குழு தினந்தோறும் இதற்காக யோசித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் செய்திகள் சேகரித்துக் கொடுத்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் குறைகளை அறிந்து கொஞ்சம், கொஞ்சமாகஅவர்களிடம் அதை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது பேச்சு இதை செய்யப் போகிறேன், அதை செய்யப் போகிறேன் என்று மார்தட்டும் வீண் பேச்சாக இருக்காது.

    என் மவுனத்தை கலைக்க சொல்கிறீர்கள். என்னுடைய மவுனம் எப்போதோ கலைந்து விட்டது. நீங்கள் மவுனமாக இருந்ததால் இதுவரை நானும் மவுனமாக இருந்தேன். இன்று நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்கும் நேரமிது.

    நான் உங்களிடம் பேச வந்தது, உங்களிடம் கேட்க வந்தது அனைத்தையும் நீங்கள் பட்டியல் போட்டு கொடுங்கள். எங்கள் கட்சியினர் உங்கள் ஊருக்கு வருவார்கள். கிராம சபை கூட்டங்களில் அனைவரும் பங்கேற்று குறைகளை கூறுங்கள். இதனை நான் பல இடங்களில் தெளிவாக வலியுறுத்தி உள்ளேன்.

    குளச்சலில் மீனவ நண்பர்களை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டேன். நாகர்கோவிலிலும் எனக்கு பல புகார்கள் வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராகி விட்டவர்கள், தயவு செய்து மய்யம் விசில் என்ற செயலியை உங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேச நினைத்ததை எல்லாம் அதில் சொல்லலாம். அதை என்னால் கேட்க முடியும். உங்கள் குறைகளை கேட்க வேண்டியது என் கடமை. அதை நான் கேட்டே தீருவேன். மீண்டும் வருவேன், வரவேண்டி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    ×