search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    சாக்கடையை சரி செய்ய சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

    சூலூர்:

    சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். சின்னியம் பாளையம், தென்னம் பாளையம், குரும்ப பாளையம், சூலூர் பிரிவு, வாகராயம் பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

    தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த இரு கட்சிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர். வரி போட்டு தறியை முடக்கிய மத்திய அரசும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநில அரசும் சரியானவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

    அதே போல் இவர்களுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் மற்ற அரசியல் கட்சிகளும் சரிவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இன்று தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் நாம் நிற்கிறோம். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சரி செய்யும் படி சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது.

    நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி நடந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.

    நானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

    நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை.

    என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்களுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.

    அதையும் ஊதியம் வாங்கி விட்டு தான் செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்வை முடித்து கொள்ளாமல் உங்களில் ஒருவனாக மனிதனாக வாழ விரும்புகிறேன். எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறேன்.


    ஜி.எஸ்.டி.யால் நெசவு, கைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களது மூத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்.

    அவர்கள் குழம்பி தான் போய் இருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது. என்னையும் சேர்த்து தான். என் தலைமுறைக்காரர்கள் குழம்பி விட்டார்கள். இதுவா, அதுவா என்று யோசித்து அரசியலில் நாங்கள் தொடர்ச்சியாக தோற்கும் கட்சிகளுக்கே ஒட்டு போட்டு கொண்டு இருக்கிறோம்.

    மக்களை மேம்படுத்தும் கட்சிதான் வெற்றி பெறும் கட்சிகளாக மாற முடியும். அக்கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை மாற்ற வேண்டியது உங்கள் கடமை.

    இந்த 4 சட்ட மன்ற தொகுதிகளில் இருக்கும் கட்சிகள் இருவரும் அரசியல் விளையாட்டாக பார்த்தாலும் நாங்கள் தமிழகத்தை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பாக அதை பார்க்கிறோம்.

    உங்கள் கடமையை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் நாளை நமதாகும்.

    இவ்வறு கமல்ஹாசன் பேசினார். 

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும் என்று சூலூர் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
    சூலூர்:

    சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

    சாராய கங்கை பெருகி ஓடும் இந்த நாட்டில் ஜீவநதிகள் வற்றிப்போய் கிடக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் நாடாள தகுதியற்றவர்கள்.

    தவறுகளையும் பித்தலாட்டங்களையும் செய்பவர்கள். அவர்களை குறைசொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம். மற்ற கட்சிகளை பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம்.

    குடிநீர் பற்றாகுறை தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. நேர்மையான அரசியல் நடந்தால் வீடு தேடி குடிநீர் கிடைக்கும். அதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் . 3 துறைகள் குழி தோண்டிக்கொண்டே இருக்கின்றன.

    அவர்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதில்லை என்பது தெரிகிறது . இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.எங்களை தூக்கி பிடிப்பவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல. மக்களும் தான். தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியும் என நல்ல நீர்நிலை ஆய்வாளர்கள், அறிவாளர்கள் சொல்கின்றனர் .

    டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மது விலக்கை கொண்டு வர முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். உலகத்தில் ஒரே நாளில் மது விலக்கை கொண்டு வந்தால் கோட்டையில் இருப்பவர்கள் சாராயம் காய்ச்ச போய்விடுவார்கள். மது விலக்கை மெது மெதுவாக கொண்டு வர முடியும். மக்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

    ஒருவர் குழியை தோண்டுவார். ஒருவர் மூடுவார். இப்படி பள்ளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதை சமப்படுத்த வேண்டிய நேரம் இது.

    சாராயம், போனஸ் கொடுத்து அழைத்து வரும் கூட்டத்திற்கு எங்கள் பெண்கள் போக மாட்டார்கள். விண்வெளியானாலும், விவசாயமானலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம்.

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும். அதனை நம்பி தைரியமாக மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். நேர்மை என்ற ஒரு வரியே மக்கள் நீதி மய்யம் என்று மார் தட்டி சொல்வோம்.

    உங்கள் ஊரில் என்ன பிரச்சனை. அதனையே நாங்கள் தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறோம். மக்களின் மனதை அறிந்தே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் தீர்வுகளை கொடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது-

    அநீதியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம். எங்களுக்கு அலங்காரங்களுக்கு நேரம் இல்லை. மக்கள் பணி மட்டுமே எங்கள் நோக்கம். எங்களை கவிழ்ப்பதற்காக எத்தனை பண பெட்டிகள் கைமாறினாலும் எங்களை தடுக்க முடியாது.

    மக்கள் நீதி மய்யத்தை தூக்கி பிடிப்பவர்கள் இளைஞர்களும், பெண்களும் தான். நேர்மையாக இருந்தால் எதுவும் சாத்தியமே. அந்த நேர்மை எங்களிடம் உள்ளது.

    எனவே மாற்றத்தை உருவாக்க மக்கள் முன் வர வேண்டும். கோட்டையில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அநியாயத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் பணி செய்வதில் ஆர்வம் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்?

    பதில்:-தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படவேண்டும் என்பது எல்லோருடைய எதிர் பார்ப்பும் கூட. அவர்கள் எல்லா கட்சியினரையும் அழைத்து பேசி இருக்கலாம். அப்படி செய்யாமல் வேட்பாளர்களிடம் மட்டும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அது தவறு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல். எந்த திருத்தங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சரியான விளக்கங்கள் கொடுத்த பிறகே செய்யப்பட வேண்டும்.

    கே:- மதுரை மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் பலியான சம்பவம் பற்றி?

    ப:- சினிமா தியேட்டர் முதல் சின்ன சின்ன கடைகள் வரை ஜெனரேட்டர் வசதி இருக்கும்போது உயிரை காக்கும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமான வி‌ஷயம்.

    கே:- ஜெனரேட்டர் பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறதே?

    ப:- எல்லாமே இருக்கிறது. ஆனால் பழுதாகி இருக்கிறது என்பதுதான் அரசின் பிரச்சினையே...அரசே பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் என் கருத்து. அதை ஜெனரேட்டர் வைத்து சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கட்சி செலவுக்காக டி.வி. மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது.

    19-ந்தேதி நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்.

    அரசியலுக்குள் நுழையும்போதே சினிமாவில் நடிப்பதை விட மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அரசியல் என்பது தொழில் அல்ல. சினிமா தான் தொழில். வருமானத்துக்காக தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.

    பின்னர் அரசியலுக்காக நடிப்பை தியாகம் செய்யவும் தயார் என்றும் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இந்தியன் 2 படமே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார்.

    சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தேர்தலில் கமல் பிசியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கமலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் புதிய பரிமாணத்தில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்று முதல் சீசன் நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து சீசன் 2 ஆரம்பித்தது. இந்த முறை கமல் முழு அரசியல்வாதியாகி இருந்தார். எனவே அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை நிகழ்ச்சியில் அவர் வரும் பகுதிகளில் பார்க்க முடிந்தது.

    இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மகத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கவர்ச்சியும் கணவன் மனைவியான தாடி பாலாஜி-நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 2 சீசன்களின் வெற்றிக்கு பிறகு தற்போது பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிவிட்டது. மூன்றாவது சீசனுக்கான புரோமோ படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது.

    பூந்தமல்லி தனியார் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக்பாஸ் வீட்டை ஒட்டிய செட்டில் கமல்ஹாசன் கலந்து கொண்ட காட்சிகள் நேற்றும் இன்றும் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.


    போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாட்களில் புரோமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கு கமல் இந்த படப்பிடிப்பில் பிசியாகி விடுவார் என்கிறார்கள்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் அல்லாது கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்த படத்தை கமல் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தியன் படத்தில் ஊழல், லஞ்சத்தை கையில் எடுத்த கமல்ஹாசன் இதில் சாதி பிரச்சனைகளை கையில் எடுக்கிறார்.

    சாதி பிரச்சனைகள், சாதி அரசியல் ஆகியவை பற்றிய கதையாக உருவாகிறது என்கிறார்கள். இதற்காக பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு இடங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.

    கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்துவதால் அவரது அரசியல் பணிகள் பாதிக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-

    கமல்ஹாசனின் தொழில் என்பது நடிப்புதான். இதை அவரே பலமுறை கூறியுள்ளார். கட்சி செலவுக்காக தான் அவர் நடிப்பதை தொடர்கிறார். நாங்கள் மற்ற அரசியல் கட்சிகள் போல அல்ல. கமல் தன் சொந்தக் காசை செலவு செய்தும் மக்களிடம் நிதி வாங்கியும்தான் கட்சி நடத்துகிறார். கட்சி தொடங்கி இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

    எனவே, நாங்கள் தொடர்ந்து இதே வேகத்தில் செயல்படத்தான் அவர் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு என்பது வார இறுதிகளில் மட்டுமே நடக்கும்.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்தபோதே காலையில் படப்பிடிப்பு, மாலையில் கட்சிப்பணி என்று வேகம் காட்டியவர் அவர். எனவே சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்று இறங்கினாலும் கட்சியையோ அரசியலையோ அவர் விட்டுவிட மாட்டார்.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி அகில இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு கட்சியாக மாறும். நாங்கள் மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தை மட்டுமே நம்புகிறோம். நிச்சயம் அது எங்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் அமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் இருப்பார் இது உறுதி.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #KamalHaasan
    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சவுரிராஜனும் ஒட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர்களாக ஆர்.தங்கவேலு, ஜான்சன் தங்கவேலு, ஜே.எபினேசர், கே.பிரபு ஆகியோரும் திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளர்களாக கே.குருவைய்யா, வி.அண்ணாமலை, வி.ஷாஜி, ஜே.விஜய்பாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சினேகனும் தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.மூகாம்பிகா, சிகே.அருண், ஆர்.சுதாகரன், எம்.பிரபு மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் பொறுப்பாளராக ஏ.சந்திர சேகரனும் தேர்தல் பார்வையாளர்களாக தருமபுரி ராஜசேகரன், ஆர்.ஹரிஹரன், பூவை.ஏ.ஜெகதீஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam
    4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது. #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தல்களில் அவரது கட்சி களம் இறங்கியது.

    தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் களம் இறங்குவதாக அறிவித்த கமல் தனது பிரசார பயணத்தையும் வெளியிட்டார்.

    மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் அவர் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூறியதாவது:

    ‘4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் உறுதியாக போட்டியிடுகிறோம். வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தயாராகி விடும். நாளை அறிவிக்கப்படும்.


    நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் விடுமுறை என்பதால் வேட்பாளர்கள் வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்வார்கள். இந்த 4 தொகுதி தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் செய்த அதே தீவிர பிரசாரத்தை இந்த 4 தொகுதிகளுக்கும் கமல்ஹாசன் தர இருக்கிறார். அதற்காக சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி விட்டார்.

    இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க அறிவிப்பு வெளியிடவில்லை. அறிவிப்பு இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்றுதான் வேட்பாளர்கள் தேர்வு செய்துள்ளோம். தகுதியான, பலமான வேட்பாளர்களாக தான் இருப்பார்கள்.

    2 நாட்களாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. முதலில் எல்லா தொகுதி வேட்பாளர்களும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தலில் அவர்களுக்கு இருந்த நடைமுறை பிரச்சனைகள், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு அடுத்து எல்லா மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடந்தது. இதில் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டுக்கொண்டார். வேட்பாளர்களின் பிரச்சனைகளை கவனத்துடன் கேட்டார். இந்த மதிப்பாய்வு கூட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 4 தொகுதிகளுக்கான தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். #KamalHaasan #Perarasu
    கன்னியாகுமரி:

    விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.

    ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.

    ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களின் மன நிலை மாறவேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேசத்துக்கு செய்யும் துரோகம். இது நல்ல அரசியல் இல்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

    நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.

    கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.

    தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமி‌ஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமி‌ஷன் தடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.

    இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.

    ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.

    வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.

    இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu
    4 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3ந் தேதி தொடங்குகிறார். #TNAssemblyElection #KamalHassan
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.



    அதற்கு முன்னதாகவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கும் விவரங்கள் அடங்கிய பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 3, 4, 14-ந்தேதி ஓட்டப்பிடாரத்திலும், 5, 6, 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 10, 11, 17-ந்தேதி சூலூரிலும், 12, 13, 16-ந்தேதி அரவக்குறிச்சியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் வாக்குகளை திரட்ட உள்ளார்.

    ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே, கமல்ஹாசனின் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #TNAssemblyElection #KamalHassan

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
    12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.



    மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Rajinikanth #KamalHaasan #AjithKumar #Vijay 

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு தரப்பு பிரச்சனையால், படத்திற்கு சிக்கல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.

    இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.



    நாளை தேர்தல் நடைபெற்று முடிவுகள் மே 23-ந் தேதி வெளியாக இருக்கின்றன. எனவே கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    மேலும் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு தயாரிப்பு நிறுவத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஜூன், ஜூலையில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்குள் படத்தில் கமல் இடம்பெறும் காட்சிகளை படம் பிடிக்க ‌ஷங்கர் திட்டமிட்டுள்ளார். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar

    இந்த தேர்தலில் நிச்சயம் 10 சதவீத வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் கடினமாக இருந்ததா?

    பதில்:- கடினமாக இல்லை. சினிமாவில் பணிபுரிவது என்பது வேறு. வெயில், பயணம், கதாநாயகிகளுடன் நடனம், வில்லன்களுடன் சண்டை என்று இருக்கும். அரசியலில் அப்படி இல்லை. வில்லன்களுடன் அமைதியாக மோதவேண்டி இருக்கிறது. ஆனால் நடிகனாக எனக்கு மக்களிடம் கிடைத்த அன்பைவிட இப்போது அதிக அன்பு கிடைக்கிறது.

    கே:- இந்த தேர்தலை உங்களுக்கான ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாமா?

    ப:- இல்லை. எனக்கான ஆசிட் டெஸ்ட் என்பது நான் டுவிட்டரில் இருந்து நேரடி கள அரசியலுக்கு வந்தபோதே முடிந்துவிட்டது. நான் மனதளவில் ஏற்படுத்திக்கொண்ட ஆசிட் டெஸ்ட் அது.

    கே:- உங்கள் கணிப்புபடி உங்கள் கட்சியின் கள நிலவரம் என்ன?

    ப:- நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட சிறப்பாகவே இருக்கிறது. 5 சதவீதத்துக்கு மேல் நாங்கள் வாக்குகள் பெற்றாலே பெரிது என்றார்கள். ஆனால் நான் அப்படி திருப்திபட்டுக் கொள்ளவில்லை. பதிலாக எங்களை நாங்களே தீவிரப்படுத்திக் கொண்டோம். பணம் கொடுக்காமல் முழுக்க முழுக்க பிரசாரத்தை மட்டுமே நம்பினோம். நிச்சயம் 10 சதவீத வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    கே:- 10 சதவீதம் என்பது முழு வெற்றி ஆகாது. ஆனால் குறிப்பிடத்தக்க சதவீதம் தான். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தயாராகிறதா?

    ப:- சூழ்நிலை வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தருகிறேன். இவர்கள் இருவருடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்.

    கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தவறான கூட்டணியில் சேர்ந்து விடுகிறார்கள்.

    அவர்கள் என்னுடன் இருந்து இருக்க வேண்டும். அந்த கூட்டணியை மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். தி.மு.க., அ.தி.மு.க, ஒன்றும் தீண்டத்தகாத கட்சிகள் இல்லை. ஆனால் அவை விமர்சனங்களுக்குட்பட்டவை. எனவே அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.



    கே:- அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்களும் முக.ஸ்டாலினும் நண்பர்களாக இருந்தீர்கள். இப்போது அந்த நட்பு எப்படி இருக்கிறது?

    ப:- நான் அவர் தந்தையுடன் நெருக்கமாக இருந்த அளவுக்கு அவருடன் இல்லை. எனவே அரசியலுக்குள் நுழைந்ததால் நண்பரை இழந்த உணர்வு இல்லை. அவர் தந்தையை சந்திக்கும்போது அவரையும் சந்தித்துள்ளேன். மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார். நானும் அப்படியே அவரிடம் இருப்பேன். இவ்வளவுதான் எங்கள் நட்பு.

    கே:- சக அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்டு டிவியை உடைக்கும் வீடியோவை வெளியிட்டீர்கள். அவர்கள் மீதான கசப்புணர்வுதான் காரணமா?

    ப:- நான் மீண்டும் கூட டிவியை உடைப்பேன். ஆனால் அது தனிப்பட்ட நபரை குறித்து அல்ல. நான் அரசியலுக்குள் நுழையும்போது அவர்கள் மீதும் அரசியல் மீதும் கசப்புணர்வு இருந்தது. ஆனால் இப்போது மக்களை களத்தில் சந்தித்த பின்னர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசியலை பொறுத்தவரை நான் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பேன். எனவே என்னிடம் தனி நபர் தாக்குதல் இருக்காது.

    கே:- ஆக்ரோ‌ஷம் என்பதுதான் உங்கள் அரசியல் பாணியா?

    ப:- நான் காந்தியை பின் தொடர்பவன். அவர் செய்த ஆக்ரோ‌ஷ அரசியல் தான் என்னுடையதும். ஆக்ரோ‌ஷம் என்பது என்னுடைய பேச்சில் தான் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் ஆக்ரோ‌ஷம் இருக்கும். இந்த கோபம், ஆக்ரோ‌ஷம் என்பதை நம்முடைய செய்தியை வலுவாக கொண்டு சேர்க்க மட்டுமே பயன்படுத்துவேன்.

    கே:- கேரள முதல்வர் பினராயி விஜயனும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்களா?

    ப:- நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே பினராயி என்னை நீண்ட பயணத்துக்கு தயாராகுமாறு கூறினார். கெஜ்ரிவால் என்னிடம் ‘நாங்கள் செய்து காட்டி விட்டோம். உங்களாலும் முடியும்’ என்று ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் தான் எனக்காக வாக்கு கேட்டார். எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

    கே:- நீங்கள் எதிர்பார்த்த 10 சதவீதத்துக்கும் குறைவான அல்லது 5 சதவீத வாக்கு பெற்றால் என்ன செய்வீர்கள்?

    ப:- நான் நீண்ட பயணத்துக்கு தயாராகி தான் வந்துள்ளேன். என் எஞ்சிய முழு வாழ்க்கையையும் அரசியலுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை தளம் தான்.

    கே:- ஒரு அரசியல்வாதியாக உங்கள் பலம், பலவீனம் என்ன?

    ப:- என்னுடைய பலம் என்பது அரசியல்வாதிகளை மாற சொல்லாமல் மக்களிடத்தில் இருந்து மாற்றங்களை தொடங்குவது. நான் எப்போதுமே என் கட்சியின் தலைவராக நினைப்பது அல்ல. துணைத்தலைவர் தான். தலைவராக நினைப்பது மர்பியின் விதியைத் தான். அந்த விதியில் கூறப்பட்டு இருப்பது என்ன என்றால் தவறாக சென்றுவிடும் என்று நினைத்தால் அது தவறாகவே சென்று முடியும்.

    கே:- அரசியலுக்குள் வந்தபின்னரும் முக தோற்றங்களை மாற்றுகிறீர்களே?

    ப:- அது இந்தியன் 2 படத்துக்கான கெட்டப். அரசியலுக்காக நீண்ட மீசை வைத்தேன். மக்கள் இதுபோன்ற மாற்றங்களை ரசிக்கிறார்கள். எல்லா கெட்டப்புகளும் போரடித்து விட்டது. இப்போது முழு அரசியல்வாதியாக மீசையை வைத்துள்ளேன்.

    கே:- இந்த மீசை ஸ்டைல் குறிப்பது என்ன?

    பதில்: அது சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் விமர்சிக்கும் கமல்ஹாசன் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.

    மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். 

    சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர்.

    ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #Kamalquestions #KamalPoliticalEntry #MNM

    அவரது வீடியோ பதிவைக்காண..,



    ×