search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    அரியலூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி மேல காலனி தெருவை சேர்ந்தவர் கங்காதேவி(வயது 29). இவருக்கும், கடலூர் மாவட்டம் சி.அரசூர் கிராமத்தை சேர்ந்த இன்பராஜாவுக்கும்(34) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது 3 மகன்களுடன் கங்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கங்காதேவி கூலி வேலைக்கு சென்று மகன்களை படித்து வைத்து வருகிறார்.

    இருப்பினும் இன்பராஜா அடிக்கடி கங்காதேவி வீட்டிற்கு சென்று, அவரிடம் மது குடிக்க பணம் கேட்பது வழக்கம். அதேபோல் அவர் சம்பவத்தன்று இரவு மது குடிக்க, கங்காதேவியிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. கங்காதேவி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் மனமுடைந்த இன்பராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

    மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களுக்கும் சிறப்புப்படை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


    சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியானில் ஹெப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள்,  ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JKEncounter #Militants 
    சிரியா நாட்டில் உள்ள ஈரான் ராணுவ முகாம்களை குறிவைத்து இன்று இஸ்ரேல் விமானப்படை நடத்திய ஆவேச தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது ஏவுகணைகள் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால் ஆவேசமடைந்த இஸ்ரேல் அரசு சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள உள்நாட்டு மற்றும் ஈரான் நாட்டின் ராணுவ முகாம்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.


    டமாஸ்கஸ் விமான நிலையம் அருகாமையிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடந்த இந்த தாக்குதலில் அரசுக்கு ஆதரவான படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். #Israelibombardment #bombardmentinSyria
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பத்காம் மாவட்டத்திற்குட்பட்ட  ஹப்பாட்நகர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே தேடுதல் வேட்டை, துப்பாக்கிச் சண்டையாக மாறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினரால் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார், டுவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளனர்.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு, பயங்கரவாதிகள் மாநிலத்தில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter #Militants 
    செய்யாறு அருகே குடும்பத்தினருடன் கோவிலுக்கு ஆட்டோவில் வந்து விட்டு திரும்பியபோது மாயமான ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
    செய்யாறு:

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. பொங்கலையொட்டி இவர்கள் தங்கள் உறவினர்களுடன் ஆட்டோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சேராம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்டோவில் சென்னைக்கு புறப்பட்டனர். காஞ்சீபுரம் சாலையில் இருமந்தாங்கல் கிராமத்திற்கு அருகே சென்றபோது ஆட்டோவை நிறுத்திவிட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி மகேந்திரன் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

    ஆட்டோவில் காத்திருந்த அவரது மனைவி மஞ்சுளா மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மகேந்திரனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். இறந்து கிடந்தது மகேந்திரன்தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். கழிப்பறைக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாயார் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். பதில் இல்லை.

    உடனே இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அந்தோணி ஆரோக்கியதாஸ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். வேறு அறையில் மற்ற 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் உடலில் காயங்கள் இல்லை.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில் பின்வரும் தகவல்கள் வெளியாயின.

    தற்கொலை செய்துகொண்ட அந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஷோபனா, மகன் ரித்திக் மைக்கேல், மகள் ரியா ஏஞ்சலின் ஆகியோர் ஒரு படுக்கை அறையிலும், தாயார் புவனேஸ்வரி மற்றொரு படுக்கை அறையிலும் பிணமாக கிடந்தனர். அந்தோணி ஆரோக்கியதாஸ் மனைவி, குழந்தைகள் இருந்த படுக்கை அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதன்மூலம் குடும்பத்தினரை அந்தோணி ஆரோக்கியதாஸ் ஏற்கனவே கொன்று விட்டு அவர்களை தூக்கி வந்து படுக்கையில் போட்டு விட்டு அதன்பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றுதெரிகிறது. நேற்று மதியம் அனைவரும் சாப்பிடும் போது குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்தோணி ஆரோக்கியதாஸ் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதை சாப்பிட்ட அவர்கள் இறந்த பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரவக்குறிச்சி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்தவர் புபேந்தர். இவரது மனைவி செல்வி (வயது 27). அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகள் ஹரிப்பிரியா (18). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

    இதையடுத்து வெங்கமேட்டில் இருந்து பாதயாத்திரை குழுவினருடன் செல்வி, ஹரிப்பிரியா பழனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அரவக்குறிச்சி அருகே கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சித்தப்பட்டி காலனி பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, செல்வி, ஹரிப்பிரியா மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிப்பிரியா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

    இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஹரிப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷாராணி (வயது56). இவர் உறவி னர்களுடன் சத்னா மாவட் டத்தில் இருந்து பன்னா நகருக்கு பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது உஷா ராணிக்கு வாந்தி ஏற்பட்டது. பஸ் வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில் அவர் பஸ் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுத்தார்.

    அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் தலை பலமாக மோதியது. பஸ் வேகமாக சென்று கொண்டு இருந்ததால் மோதிய வேகத்தில் தலை நசுங்கி துண்டானது.

    இந்த சம்பவத்தை பார்த்த பஸ் பயணிகளும், சாலையில் சென்று கொண்டு இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து துண்டிக்கப்பட்ட தலை யையும், உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பஸ்சை படுவேகமாக ஓட்டியதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 54 பேர் காயம் அடைந்தனர். #MexicoFire
    மெக்சிகோ:

    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்தார்.


    மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. #MexicoFire
    ராசிபுரம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா, முள்ளுகுறிச்சி அருகேயுள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். விவசாயி. இவரது மகள் பரமேஸ்வரி (வயது18). மெட்டாலா அருகிலுள்ள பிலிப்பாகுட்டை தேர்பிள்ளையார்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகன் சபரீஸ்வரன் (22). இவருக்கும் பரமேஸ்வரிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பொங்கல் பண்டிகைக்கு வீட்டுக்கு வரும்படி பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் சபரீஸ்வரன் ஆகியோரை வரதராஜ் குடும்பத்தினர் அழைத்தனர். இதையொட்டி பரமேஸ்வேரி பொங்கல் பண்டிகைக்கு பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று அவரது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது கணவர் சபரீஸ்வரன் பொங்கலுக்கு மறுநாள் போகலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதையொட்டி கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே பரமேஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமேஸ்வரியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சபரீஸ்வரனின் உறவினர்களும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்த நிலையில் பரமேஸ்வரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவனை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பரமேஸ்வரி இறந்தது தொடர்பாக அவரது தாயார் சந்திரா ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கிராமந்தி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை அருகே அரிசி ஆலை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை அம்பாள்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 60). இவர் வயலோகத்தில் கோவில் வீதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் அந்த அரிசி ஆலை உள்ளே பார்த்த போது, அங்கு சிங்கமுத்து விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×