search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95181"

    பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair

    லண்டன்: 

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார். 

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமாக உரையாற்றினர். 

    இதனிடையே, 1972-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்



    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டம் ஒத்திவைக்கவேண்டும் என பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த முடிவு பிரிட்டனை பெரிய அளவில் பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், நமது அரசு நாட்டின் நலன்களைப் பற்றிய யோசனை செய்வதை விட்டுவிட்டு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரின் நன்மைக்காக செயல்பட்டு வருகிறது, தலைவராக இருக்கவேண்டிய பிரதம மந்திரி ஒரு பிணை கைதியை போல உள்ளார். 

    இதற்கிடையில், பிரிட்டனின் வருங்காலத்திற்காக போராடுவதில் முக்கிய பங்கு கொண்டுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் அதை செய்ய மறந்துவிட்டார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியால் முடியாது என்பதால் பாராளுமன்றம் தன்னைத் தானே உறுதிப்படுத்த வேண்டும்.

    இப்போது மக்கள் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும், ஏன் எனில் எப்படிப்பட்ட நாடு வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது பிரிட்டனுக்கு பெரிய அடியாக இருக்கும். நாம் யோசிக்க அவகாசம் வேண்டியுள்ளது. எனவே மார்ச் 2019 என்ற காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும்.இரண்டாம் உலக போருக்கு பின்னர் நாம் எடுக்க இருக்கும் முக்கிய முடிவு இதுதான். 

    உலகின் மிகப்பெரிய வணிகச் சந்தை மற்றும் மிகப்பெரிய அரசு யூனியன் என்னும் அந்தஸ்தை பிரிட்டன் இழந்துவிட்டது. அமெரிக்கா தனது முக்கிய நட்பை இழந்துவிட்டது. ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு நாம் தான் என்று கூறி கொள்ளலாம். ஆனால் அது உண்மையல்ல. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவெடுத்த பின்னர், அமெரிக்கா உடன் பிரிட்டம் நெருக்கமாக இருக்கிறதா?, உறவு பலமாதாக இருக்கிறதா? 

    இவ்வாறு அவர் கூறினார். #Brexitbecomeslaw #UKleaveEU #TonyBlair
    பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்ஸ், இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி நேதன்யாகுவை ஜெருசலேம் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். #PrinceWilliam #Netanyahu #Israel
    ஜெருசலேம்:

    பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு அரச குடும்ப உறுப்பினராக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமரின் வருகையையொட்டி இஸ்ரேலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஜெருசலேம் இல்லத்தில் இவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இந்த சந்திப்பு குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. #PrinceWilliam #Netanyahu #Israel
    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுடியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் மூன்று பேர் ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    லண்டன்:

    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் இன்று காலை மூன்று நபர்கள் ரெயில் மோதி பலியாகியுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எப்படி அவர்கள் மூவரும் ரெயில் மோதி இறந்தனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
    பிரிட்டனில் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.
    லண்டன்:

    ஒரு காலத்தில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

    இதேபோல் செக் பரிமாற்றம், டிமாண்டு டிராப் பரிமாற்றம் போன்றவற்றுக்கும் கண்டிப்பாக வங்கிக்கு செல்ல வேண்டும்.

    ஆனால், இப்போது எல்லாவற்றையுமே ஆன்லைன் மூலம் செய்து விடலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. கையில் இருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து கொண்டே பணபரிமாற்றம் உள்ளிட்ட அத்தனை பணிகளையும் செய்து விடலாம்.

    இதன் காரணமாக மக்கள் வங்கிகளுக்கு செல்வது மிகவும் குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே அனைத்து பரிமாற்றங்களையும் செய்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வங்கிக்கு செல்வது வெகுவாக குறைந்து இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராததால் வங்கிகளை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரிட்டனில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. 2015-ல் இருந்து 2018 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 2900 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன.

    இப்போது மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    2014-க்கு பிறகு பொதுமக்கள் வங்கிக்கு வருவது 40 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வது 73 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இதனால் தான் தொடர்ந்து வங்கிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நாட்வெஸ்ட் மட்டுமே 635 கிளைகளை மூடி இருக்கிறது.

    எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும், லாய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடி இருக்கின்றன. நாட்டிலேயே ஸ்காட்லாந்து பகுதியில்தான் அதிக அளவில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கின்றன.

    ஆன்லைன் வங்கி நடைமுறை வந்ததற்கு பிறகு பல நாடுகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. #Tamilnews
    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NiravModi #NiravInUK #NiravPoliticalAsylum
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.



    இதேபோல் விஜய் மல்லையாவையும் இந்தியாவிடம் ஒப்படைக்ககோரி லண்டனில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NiravModi #NiravInUK #NiravPoliticalAsylum
    இந்தியாவில் பிறந்த இந்துஜா சகோதரர்களை பிரிட்டன் நாட்டின் இரண்டாவது கோடீஸ்வர குடும்பமாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. #Hindujabrothers #ukannualrichlist
    லண்டன்:
     
    பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

    2018-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் 21.05 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 20.66 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

    இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.

    பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குழுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது.

    இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகில் உற்பத்தியாகும் 4 கார்களில் ஒன்றுக்கு தேவையான இரும்பை சப்ளை செய்யும் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல்(67) கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டு 14.66 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இவர் பின்தங்கியுள்ளார். #Hindujabrothers #ukannualrichlist
    ×