search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.

    அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீகந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது.

    வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் கங்கணம் அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகள் உள்பட பலர் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

    பின்னர் அலகுமலை மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு மற்றும் திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்திருந்தனர்.

    • சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
    • மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.

    நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்... சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்!

    சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

    இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.

    தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

    இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

    ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

    ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

    கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    • 29-ந்தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
    • 30-ந்தேதி "சூரசம்ஹார லீலை "நடைபெறும்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் .நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழாவின் தொடக்கமாக 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும், 8.10 மணியளவில் சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதி (நம்பி பட்டருக்கு) காப்பு கட்டப்படுகிறது. இதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கம்பத்தடி மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    வருகின்ற 29-ந்தேதி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிக்குள் கோவிலுக்குள் ஆலயப்பணியாளர்கள் திருக்கண்ணில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் "சக்திவேல்" பெறக்கூடிய வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் சிகரமாக 30-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    • கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது
    • விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, அன்னதானம் நடைபெறும்.

    தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு செக்கர்கிரி வேலவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 12.30 மணிக்கு காப்புகட்டுதல், அன்னதானம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    30-ந் தேதி காலை 9.30 மணிக்கு வேலவன் செக்கர்கிரி மலையில் இருந்து பல்லக்கில் எழுந்தருளல், மாலை 4 மணிக்கு செக்கர் கிரி வேலவன் போர்க்கோலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்தில் எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், பின்னர் சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெற்றிவேலவன் மயில்வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    31-ந் தேதி காலை 9 மணிக்கு செக்கர்கிரி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல், 10 மணிக்கு அபிஷேகங்கள், 11 மணிக்கு செக்கர் கிரி வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளல், தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தோவாளை செக்கர் கிரிசுப்பிரமணியசாமி கோவில் நிர்வாககுழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை போன்றவை நடைபெறும்.

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்டுதல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை போன்றவை நடைபெறும்.

    30-ந் தேதி காலையில் வவ்வால் குகை பாலமுருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 4 மணிக்கு பாலமுருகன் போர்காலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சூரனை பாலமுருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பின்னர் வாணவேடிக்கை, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பாலமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.

    31-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் மாபெரும் அன்னதானமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • இந்த விழா 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது

    நாகர்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் சிறுவர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட்டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பாலமுருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது. 26-ந்ேததி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப்போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார்.

    29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

    30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகியவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ராஜமன்னார் தலைமையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப்படுகிறது.

    31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ்ராம அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு மணிகோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவேலன், கவுரவத்தலைவர் அருள்குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • கடந்த 32 நாட்களாக முருகன் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார்.
    • முருகன் உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது.

    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் முருகன். இவரது உடல் நலம் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவரது மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா (வயது 81) மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் நளினியும், அவரது கணவர் முருகனும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றனர். தற்போது என் மகள் நளினி பரோலில் வெளியில் வந்து வேலூரில் என்னுடன் தங்கி உள்ளார்.

    வேலூர் சிறையில் உள்ள என் மருமகன் முருகனை கடந்த 8-ந் தேதி என் வக்கீல்கள் புகழேந்தி, எழிலரசு ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது முருகன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 32 நாட்களாக அவர் இறைவனை வேண்டி விரதம் இருக்கிறார். அதனால், அவரது உடல் எடை 63 கிலோவில் இருந்து 43 கிலோவாக குறைந்துள்ளது. கையும் நடுங்கியுள்ளது. அவரது உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து இருப்பதாக கருதுகிறேன்.

    எனவே, அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், சிறை துறை.டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 9-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். என் மனுவை பரிசீலித்து சிகிச்சையை முருகனுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.
    • பழனி ஆலயத்தைப் பற்றிய சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் மூன்றாவதாக வைத்து போற்றப்படுவது, 'பழனி'. இங்குதான் போகர் என்னும் மகா சித்தரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட முருகன் சிலை இருக்கிறது. இதனை செய்து முடிக்க போகருக்கு 9 வருடங்கள் பிடித்ததாம். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

     இத்தல முருகப்பெருமானுக்கு தினமும் ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வானது, 5 முதல் 7 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், அதன்பிறகு அடுத்த அபிஷேகம் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ நடைபெறாது.

     தண்டம் தாங்கி ஆண்டிக் கோலத்தில் இருக்கும் இத்தல இறைவனுக்கு 'தண்டாயுதபாணி' என்று பெயர். இவருக்கு, சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய் ஆகிய நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும், அபிஷேகத்தில் பன்னீரும் சேர்க்கப்படும். இந்த அபிஷேகப் பொருட்களில், சந்தனம், பன்னீர் தவிர மற்றவை அனைத்தும், தண்டாயுதபாணியின் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்படும். அவரை முழுமையாக அபிஷேகிப்பது சந்தனமும், பன்னீரும் மட்டும்தான்.

     நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் சிலை, மிகவும் சூடாக இருக்கும். எனவே இரவு முழுவதும் அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடை பெறும்போது, அங்கு வரும் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

     தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் அணிவிக்கப்பட்ட ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம் ஆகும்.

     தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில், ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. இந்த மரகத லிங்கத்தை தரிசிக்க, வலதுபக்கமாக சென்று தீபம் காட்டுதல் வேண்டும். தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.

     பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னிதியிலும், இன்னொன்று போகர் சமாதியின் மேலும் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

    • வேலூர் ஜெயிலில் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார்.
    • முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த மாதம் தன் மீது உள்ள வழக்கு ஒன்றை விரைந்து முடிக்க கோரி முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதனால் முருகனின் உடல்நிலை மோசமாகி உள்ளது. நேற்று ஜெயிலில் இருந்த முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முருகனுக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து முருகன் உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான். முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள். முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பு பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார். புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ,உ,ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பெ£ருள்படும். அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த தாகவும் கூறப்படுகிறது. முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    வளம் மிகுந்த வாழ்வு அமைய வரம் மிகுந்த

    சிறுவை முருகனை வழிபட வாருங்கள்.

    சிந்தையிலே எப்போதும் குடியிருப்பான்

    சிறுவை முருகன்'

    • நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.
    • வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    இன்று கார்த்திகை விரத நாள். இன்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய கார்த்திகை விரத நாள். எனவே, இந்தநாளில், முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

    முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்வதும் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

    செவ்வரளி மாலை சார்த்தி முருகனை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகியுங்கள். நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

    • வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
    • வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இன்று காலைமுருகன் ஜெயிலில் உணவு சாப்பிடவில்லை. 7-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர் ஜெயிலில் வக்கீல் புகழேந்தி முருகனை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    வேலூர் சிறையில் இருக்கும் முருகனை சந்தித்தேன். அவர் யாரிடமும் பேசாமல் உணவு உண்ணாமல் "ஜீவ சமாதி" அறநிலை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரிகளுக்கு தன்னை விடுதலை செய்ய விருப்பம் இல்லை. தனக்கு போராட உடலிலும் மனதிலும் சக்தி இல்லை என்று எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.

    சிறைத்துறை அதிகா ரிகள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×