என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95212"
- முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை.
- பழங்களை மட்டும் உட்கொண்டு வருகிறார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
ஆனால் முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், தன் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். 3-வது நாளாக நேற்றும் ஜெயிலில் வழங்கப்படும் உணவை அவர் உண்ணவில்லை. ஆனால் பழங்களை மட்டும் உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். அவர் மவுன விரதமும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
- இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று உணவு சாப்பிட மறுத்தார். மேலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை. 2-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
- அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
- கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.
வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்
தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த
சிறுவை தன் வாழ்வாம் எங்கள் சீராமன் மருகனாகும்
அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.
ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து
செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த
ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர்
செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.
-சேக்கிழார் தாசன்
- வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.
- மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.
செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம். இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அதனால் அந்த காலத்தில் ரிஷிகள் இந்த யெரை வைத்தார்கள்.
வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். இந்த நாளில் பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்யலாம். விவசாய வேலைகள் செய்யலாம். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.
செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியக் கிழமை வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிராச்சாரியார் அம்சம் பெற்றது இந்த கிழமை. சுப காரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும். இதனால்தான் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
- சிறுவாபுரி முருகனைப் போற்றி ஒரு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.
- அருணகிரிநாத சுவாமிகள் பாடியது மொத்தம் 10,000 திருப்புகழ் பாடல்கள்.
பழமையும், சிறப்பும் வாய்ந்த முருகனின் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அருணகிரிநாதர் முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். அருணகிரிநாத சுவாமிகள் பாடியது மொத்தம் 10,000 திருப்புகழ் பாடல்கள். அவர் வாழ்ந்த காலம் 15-ம் நூற்றாண்டு. அப்போது அவர் பாடிய 10,000 திருப்புகழ் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ 1330 திருப்புகழ்தான். அவற்றை அருணகிரிநாதர் 224 தலங்களில் பாடியுள்ளார். அப்படி அவர் பாடிய 224 தலங்களில் 9 இடங்கள் எதுவென்றே இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டறியப்பட்ட 215 தலங்களில் 35 தலங்களைப் பற்றி சிறப்பாகப் பாடியுள்ளார்.
"சிறுவாபுரி.... இந்த 35 தலங்களில் ஒன்றுதான். ஆனால்.. இந்த 35 தலங்களில் 8 தலங்களுக்கு மட்டுமே நான்கு திருப்புகழ் பாடியுள்ளார். அந்த 8 தலங்களில் ஒன்றுதான் சிறுவாபுரி. "பொதுவாக எல்லாத் திருப்புகழுமே, முருகனின் பெருமையை, அருமையைச் சொல்லும் பாடலாகும். ஆனால் அர்ச்சனைத் திருப்புகழ் என்பது, முருகனை வணங்கி வழிபடும் பாடலாகும். பழநி முருகனை போற்றி பாடப்பட்ட அர்ச்சனை திருப்புகழ்தான் 'நாதவிந்து கலாதி நமோ நம' என்ற பாடல். அதேபோல், சிறுவாபுரி முருகனைப் போற்றி ஒரு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.
'சீதள வாரிஜ பாதா நமோ நம
நாரத கீத விநோதா நமோ நம
சேவல மா மாயில் ப்ரீதா நமோ நம... மறைதேடும்' என்று தொடரும் அர்ச்சனைத் திருப்புகழ், சிறுவாபுரி முருகனின் சிறப்பைச் சொல்லும்.
சிறுவாபுரியில் வீற்றிருந்து அருள்செய்யும் கந்தக்கடவுளை, உள்ளார்ந்த பக்தியோடு நம் சிந்தையில் நிறுத்துவோம். நம் துயர்துடைத்து, நம்மை நலமோடும், சகல சவுபாக்கியங்களோடும் வாழ வைப்பான் கந்தன். இதைத்தான் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இப்படி பாடியுள்ளார்.
'சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தன் சிறுவை தனில் மேவு பெருமானே...'
'சிறுவாபுரி முருகன், சிறப்பு வாய்ந்தவன் மட்டுமல்ல தன்னை நாடிவரும் பக்தருக்கெல்லாம் வரங்களை வாரிக் கொடுப்பவன். இதையும் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.
'வீறாகிலீ அளகாபுரி வாழ்வினும் மேலாக
திருவாழ் சிறுவாபுரி வாழ்வே'
குபேரபட்டிணம் என்று அழைக்கப்படும், இந்திரனின் அளகாபுரி நகரம் போல், எல்லா வளங்களும் மிக அதிகமாக நிறைந்துள்ள சிறுவாபுரியில் குடிகொண்டுள்ள முருகன், வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என்று அருணகிரிநாதர் சொல்வது, வரம் மிகுந்த சிறுவாபுரி முருகனை, அடிக்கடி நாடி வந்து, அவனிடம் இருப்பு உள்ள வரங்களைப் பெற்றுச் செல்ல வாருங்கள்.. வாருங்கள்... என்று அழைப்பது போல் உள்ளது.
- ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
- உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் 20-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு புனிதநீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு துர்க்கை அம்மன், செல்வ விநாயகர், வன்னீஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு முளைப்பாலிகை, மங்கள சீர்வரிசை கொண்டுவருதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள், நிர்வாக அறங்காவலர்கள், பரிபாலன சபை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
- மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.கோவில் தினமும் காலை திறக்கப்பட்டுஇரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதே போல்நேற்று இரவும் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது 2 கோவில்களின் உண்டியல்கள்உடைக்க ப்பட்டு அதில்இருந்த காணிக்கை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளை நடந்த கோவிலுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டியல் மற்றும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரு. 20 ஆயிரமும், முருகன் கோவில் உண்டியலில் ரு. 5 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஆடி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார்.
பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் தங்கரத புறப்பாடு நடந்தது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலையிலேயே அடிவாரம், கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் அலைமோதியது.
ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்இழுவை ரெயில் மூலம் செல்ல ரெயில்நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, மலர் காவடி உள்ளிட்ட காவடி எடுத்து பழனி கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானையுடன் வீதி உலா நடந்தது.
- இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை விமர்சையாக கொண்டாடப்படும். இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வா னைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளினார். அங்கு இருக்கும் சுவாமி மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.
தொடர்ந்து இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
- மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்
- இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.
நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.
அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
- பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் வசதிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணிக்கு வருகை தந்து மலைப்பாதை திருப்படிகள் வழியாக மேலே நடந்து வந்து ஆய்வு செய்தார். பின்னர் முருகனை வழிபட்டார்.
- படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
- பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்