search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
    • அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய், டேவிட் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் கொம்பு, கத்தி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்கள் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    ஆப்கானிஸ்தான், காபூல் நகரின் பரபரப்பான பர்வான் பகுதியில் ஒரு வாகனம் மீது நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் திடீரென பயங்கரவாதிகள் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் பல சேதமடைந்தன. குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிகிறது.

    பயங்கரவாதி

    இதேபோல், வடக்கு தக்கார் மாகாணத்தின் தலைநகரான தாலுகானின் புறநகரில் விபத்தாக சில வெடி பொருட்கள் வெடித்ததில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பழைய உலோகங்களை விற்பனைக்காக சேகரித்துக் கொண்டிருக்கும்போது, தவறுதலாக வெடி குண்டு கையில் எடுத்தபோது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முந்தையக் கால போர்களில் விட்டுச்சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள், கண்ணிவெடிகளால்  நாட்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 பேர் கொல்லப்படுகின்றனர் அல்லது ஊனமுற்றோர்களாகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படியுங்கள்.. 3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா - பயணிகளை கண்காணிக்க இந்தியா உத்தரவு
    வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்- வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.

    ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

    முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போனில் மர்ம நபர் பேசினார். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில், திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோவில், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது கோவில் வளாகங்களில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்யப்பட்டது. மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.

    கோவில் சன்னதிகள், பக்தர்கள் செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. நேற்று சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெடிகுண்டு சோதனையால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதனிடையே பெருமாள் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக போனில் கூறிய மர்ம நபர் யார்? அவர் எதற்காக மிரட்டல் விடுத்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போன் எண்ணை வைத்து போனில் பேசிய நபர் எங்கிருந்து பேசினார் என்று கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.



    இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியையான ஷிரு விஜெமானே என்பவர், தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த இந்த 5 நாய்களும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இதில் தாய் நாய்க்கு 2 வயதும், மற்ற நாய்களின் வயது 6 மாதங்களும் ஆகின்றன.

    இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரஹெம்பிடா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் தனது 5 நாய்களையும் ஷிரு விஜெமானே ஒப்படைத்தார். ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்த நாய்கள் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.     #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog
    போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #mrvijayabhaskar #bomb

    சென்னை:

    இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள். தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்றும், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இலங்கையை போல கோயம்பேடு ஆழ்வார் திருநகரிலும் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் கடந்த சனிக்கிழமை பிடிபட்டார்.

    கர்நாடக மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் சிக்கினார்.

    நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரும் கைதானார். இப்படி தொடர்ச்சியாக வரும் மிரட்டல் போன்களால் சென்னை போலீசார் கலங்கிப்போய் உள்ளனர்.


    இந்தநிலையில் நேற்று இரவு அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டு தொலை பேசியில் பேசிய நபர் அமைச்சரின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடி குண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். ஆனால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவும் ஒரு மிரட்டல் போன் வந்தது. அதில் பேசிய நபர் இலங்கையில் வெடித்தது போல இன்னும் 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    போனில் பேசியவர் தனது பெயர் சாமி என்றும் மதுரையில் வக்கீலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த நபர் பேசிய எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் இப்போது இவ்வளவு தகவலைதான் தெரிவிக்க முடியும். மற்ற தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் சொல்லப்போகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் போனை துண்டித்தார்.

    மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் போனில் பேசிய மதுரை சாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போனில் பேசியவர் வக்கீல் என்று கூறியதால் அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. மிரட்டல் ஆசாமியை பிடிக்க மதுரை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #mrvijayabhaskar #bomb

    இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். #srilankablast #narayanasamy

    புதுச்சேரி:

    இலங்கையில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மி‌ஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது.

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அஞ்சலிக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

    உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். #srilankablast #narayanasamy

    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லிவாக்கம்:

    ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி காயத்ரி (வயது 11) நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வெடிபொருட்கள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார்.

    அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது 4 நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான 6 பேரிடமிருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறை வார்டன் கார்த்திகேயன் ரோந்து சென்றபோது வெடிகுண்டு வழக்கில் கைதான கார்த்திகேயன் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சிறை சூப்பிரண்டு கோபிநாத்திடம் சிறை வார்டன் புகார் கூறி பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைத்தார்.

    அதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

    வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

    அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

    உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    ×