search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியுள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
    இதில் பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ்வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட்ட  வளர்ச்சிப்பணிகள் குறித்தும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது. 

    ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, தெரு விளக்குகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்டபயனாளிகள், வீட்டுகட்டும் திட்ட பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

    கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பேசுகையில், தங்கள் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டவைகளை இது போன்ற கிராம சபை கூட்டங்கள் மூலமாக தீர்மானம் நிறைவேற்றி அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். 

    மேலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைவதற்காக, வேலை வாய்ப்பு பெறும் வகையில் பெண்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகும். இதன் மூலம் பெண்களை சார்ந்திருக்கும் குடும்பம் பொருளாதார வகையில் முன்னேற்றம் அடையலாம். அரசின் திட்டங்களை முழு மையாக பெண்கள் பயன் படுத்திக் கொண்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஆர்டிஓ விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சேகர், முரளிதரன், தாசில்தார் பாரதிவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கம்மார்பாளையம் பஞ்சாயத்து உள்ளது.

    இங்குள்ள இருளர் காலனி பகுதிக்கு தேவராஞ்சேரி ஆற்றின் கரையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதிக்கு ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. எனவே பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து பெரும்பேடு பகுதியில் குடிதண்ணீர் பிடித்து வந்தனர். பலமுறை ஊராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடத்துடன் பொன்னேரி பெரும்பேடு சாலை கம்மார் பாளையத்தில் 2 பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பொன்னேரி பெரும்பேடு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, வெளியூர் செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரியை வரச்சொல்லி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

    அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

    60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

    இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

    இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

    பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.



    பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.

    பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

    மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.

    ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
    தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?

    அதற்கான ஆலோசனைகள் இதோ...

    சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது

    ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

    முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.

    உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

    உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.



    வலுவான ‘பாஸ்வேர்டு’

    புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.

    வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

    பொது இடங்களில்...

    பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.

    உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.

    ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.

    பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.

    எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள். 
    இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருக்கிறது. அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும்.
    “எனது பெற்றோர் வசதி படைத்தவர்கள். நான் அவர்களுக்கு ஒரே மகள். கணக்கு பார்க்காமல் காசை வாரியடித்து எனக்கு ஊரே வியக்கும் அளவுக்கு திருமணம் செய்துவைக்க என் அப்பா திட்டம் போட்டுவைத்திருக்கிறார். நான் அவரிடம், ‘அப்பா.. ஐந்தாயிரம் பேரை திரட்டப்போகிறீர்கள். எல்லோரும் கஷ்டப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் குவியப் போகிறார்கள்.

    எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் முன்னால் ஏன் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தவேண்டும். தேவையில்லாமல் நமது உறவினர்களையும், உங்கள் நண்பர்களையும் அலையவைக்காதீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைய வேண்டிய சிம்பிளான விஷயம். எனது மனதுக்கு பிடித்தவரோடு நான் இணைந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். அதற்கு கூட்டம்.. கொண்டாட்டம்.. லட்சங்களில் பணச்செலவு போன்றவைகள் எல்லாம் தேவையில்லை’ என்று என் தந்தையிடம் சொல்லப்போகிறேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மையை நான் அவரிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்” என்று, திருமணம் பற்றி நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அதிரடியாய் கருத்து தெரிவித்திருக்கிறார், இளம் பெண் ஒருவர். அவர் வயது 25. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

    பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள பெண்களிடம், ‘மாறி வரும் திருமண விருப்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள், அடிப்படையையே புரட்டிப்போடும் அளவுக்கு அதிரடியாய் அமைந்திருக்கிறது.

    ‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, அது ‘தவறு’ என்று சொன்னவர்கள் 48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட அதே சதவீதத்தினர் அது ‘தவறில்லை’ என்று சொல்லும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களும், ‘எதிர்காலத்தில் ஒருவேளை அதுதான் சரி என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த சர்வே, ‘பெண்களின் மனநிலை மாற்றத்தை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் எங்கோ போய்விட்டன. சமூகம் இன்னும் பழைய நினைப்பில் இங்கேயே நின்று கொண்டிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறது.

    எப்படி என்றால், ‘அம்மாவைப்போல் நானும் அதிகாலையிலே விழித்து கோலம்போடுவேன். அவரிடமிருந்து மீன்குழம்பும், சாம்பாரும் தயாரிக்க கற்றுக்கொண்டு, நீண்ட கூந்தலையும் பராமரிப்பேன். வெளியாட்கள் யாராவது வந்தால் வீட்டுக்குள் போய் முடங்கிக்கொள்வேன்.. என்ற கோணத்தில்தான் என் குடும்பம் என்னை கணித்துவைத்திருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உள்ள பெண்களாக எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சில நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கு தக்கபடி கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது உண்மையான சிந்தனையையும், செயல்பாட்டையும் அவர்கள் இனியாவது சரியாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும்’ என்று சர்வேயில் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.



    ‘உங்கள் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, பெண்கள் அளித்திருக்கும் பதில் யோசிக்கவைக்கிறது.

    ‘மத ஆச்சாரங்களின்படி ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கவேண்டு்ம். தகுதிக்கு மீறி அழைப்பிதழ்கள் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் வினியோகித்து, 500 பேர் கூட உட்காரமுடியாத இடத்தில் 5 ஆயிரம் பேரை அழைத்து கணக்கற்ற உணவுப் பொருட்களை வைத்து, யாரும் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இப்போது நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இதைத்தான் பல்வேறு திருமணங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சிரமத்தை எங்கள் திருமணத்தில் யாரும் அனுபவித்து விடக்கூடாது. அமைதியாக, மகிழ்ச்சியாக எங்கள் திருமணம் நடக்கவேண்டும்’ என்று 65 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    காதல் திருமண ஆர்வமும் பெண்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், ‘உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள உங்கள் பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர், ‘என்ன ஆனாலும் காதலித்தவரை கைவிடமாட்டோம்’ என்று கூறி யிருக்கிறார்கள். 30 சதவீதம் பேர், ‘காதலரைவிட பெற்றோர் முக்கியம். அவர்களது எண்ணங் களுக்கு மரியாதை கொடுப்போம்’ என்று நெகிழவைத்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர், ‘காதலுக்கு எதிர்ப்பு வந்தால் திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவோம்’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்கள்.

    ‘நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணின் வயது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, ‘ஆணுக்கு, எங்களைவிட ஐந்து வயது வரை கூடுதலாக இருக்கலாம்’ என்று 75 சதவீத பெண்களும், ‘ஐந்து வயதுக்கு மேல் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை’ என்று 7 சதவீத பெண்களும், ‘சமவயது இருந்தால் போதும்’ என்று 9 சதவீத பெண்களும், அதே சதவீதத்தினர் ‘ஆணுக்கு எங்களைவிட வயது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    ஜோதிட பொருத்தங்கள் பார்க்கும் விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 52 சதவீதம் பேர் கூறியிருக் கிறார்கள். ஓரளவு நம்புவதாக 37 சதவீதம் பேரும், முழுமையாக நம்புவதாக 11 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.

    இந்த சர்வே முடிவுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருப்பது உண்மைதான். அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும். ஆர்ப்பாட்டமான திருமணங்களும், அடுத்த சில மாதங்களிலே நடக்கும் விவாகரத்துக்களும் பெண்களின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் வெளிப்பாட்டை சர்வேக்களில் காண முடிகிறது” என்கிறார்கள்.

    கலாசாரம் முக்கியம்! அது காப்பாற்றப்படவேண்டியது அவசியம்! 
    ஆண்கள் கலக்கி கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கார் டிரைவர்களாக பணிபுரிவதோடு மட்டுமின்றி, புதிதாக கால் டாக்சி நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவும், சிலர் பகுதி நேரமாகவும் டிரைவர் பணியை தொடர்கிறார்கள். இவர்களுக்கு முறையாக கார் ஓட்டும் பயிற்சியும், பொதுமக்களுடன் இனிமையாக பேசிப் பழகும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விசேஷ பாதுகாப்பு பயிற்சிகள், மனோதிட பயிற்சிகள், தியான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான நேரங்களில் சுயமாக முடிவெடுக்கும் தைரியத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆபத்துகளை துணிச்சலாக சமாளிக்கும் முறைகளையும் கற்றிருக்கிறார்கள். இத்தகைய பயிற்சிகள் அனைத்தையும் அவர்கள் பெற ஒரு வருடமாகியிருக்கிறது.

    இந்த பெண் கால் டாக்சி டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்தோடு பழகுகிறார்கள். அது மட்டுமின்றி ஏதாவது பொருட்களை அவர்கள் காரில் மறந்துவிட்டுச் சென்றாலும், தேடிப்பிடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்கள். பெண்கள் எந்த நேரமும் பயமின்றி பாதுகாப்புடன் பயணிக்கலாம் என்ற சூழலை இந்த கால் டாக்சி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

    இரவு நேர பணி செய்யும் பெண்கள், தனியாக பயணிக்கும் பெண்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். சில நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பயணிப்பார்கள். அவர்களுக்கும் நாங்கள் கார் ஓட்டுகிறோம். கடைசியாக இறங்கும் பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்புவோம். இதன் மூலம் வீட்டில் உள்ளவர் களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்க நாங்கள் காரணமாக இருக்கிறோம்.

    எங்கள் டிரைவர்கள் பெண்கள் என்பதால் அவர்களும் முழுநேரமும் எங்கள் கண்காணிப்பிலே இருப்பார்கள். அவர்கள் வீடு போய் சேரும் வரை எங்கள் தகவல்தொழில்நுட்பம் அவர்களை பின்தொடரும். அவர்கள் எப்பொழுதும் கண்ட்ரோல் ரூமுடன் தொடர்பிலேயே இருப்பார்கள். டெல்லி காவல்துறையின் தொடர்பும் எங்கள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. பயமின்றி கார் ஓட்டி பலரது பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

    கார் ஓட்டுவது மட்டும் வேலையல்ல. பொதுமக்களிடம் நாகரிகமாக பழகுவது, அவசரகாலத்தில் உதவுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எல்லாமே எங்கள் பெண் டிரைவர்களின் பணியின் ஓர் அங்கம்தான். அதனாலேயே மக்கள் எங்கள் சேவையை பெரிதும் விரும்புகிறார்கள். நடிகர் அமீர்கான் டெல்லி வந்தால் எங்கள் நிறுவத்தில்தான் கார் பதிவு செய்வார். தனக்கு மிகவும் பிடித்த நிறுவனம் என்று பலமுறை எங்களை பாராட்டி இருக்கிறார். தொழிலதிபர்கள், நடிகைகள், முக்கிய புள்ளிகள் என் பல தரப்பினரும் எங்கள் பெண் டிரைவர்களின் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆதரவற்ற பெண்கள் பலர் நம்பிக்கையோடு எங்களுடன் சேர்ந்து ஓட்டுனர் பயிற்சி பெற்று இன்று நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். 
    பீகார் மாநிலத்தில் நாட்டையே உலுக்கிய காப்பகத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு காப்பகத்தில் 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். #AasraShelterHome #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முசாபர்ப்பூர் எனும் பகுதியில் இயங்கி வந்த சிறுமியர் காப்பகத்தில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது சிறுமிகள் என்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நேபாளி நகர் எனும் பகுதியில் இயங்கிவரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக அந்த பெண்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே அவர்கள் உயிரிழந்ததாகவும் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், அந்த 2 பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே மரணம் அடைந்து இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

    முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடியதாகவும், காப்பகத்தின் அருகில் இருப்பவரின் தொந்தரவு காரணமாக அவர்கள் தப்பியோடியதாகவும் காப்பகம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. #AasraShelterHome #Bihar
    பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறை அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள். சிறைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், அறிவுரை வழங்கப்பட்டது. பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    காணாமல் போன சிறுவர், சிறுமியர்களை விரைந்து கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள பிடி கட்டளைகளை நிறைவேற்ற தணிகுழு அமைக்க வேண்டும். பற்றியும், ஒவ்வொரு கிராமத் திலும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு பர்வேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும்.
    இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. 2014-ம் ஆண்டில் 89 ஆயிரமாகவும், 2015-ல் 94 ஆயிரமாகவும் இருந்த குற்றங்கள், 2016-ல் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை வழக்குகள் 2015-ல் 319 ஆக இருந்தது, 2016-ல் 421 ஆக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் காதுகேளாத சிறுமிக்கு பலரால் ஏற்பட்ட விபரீதம்போல் இப்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    எங்கோ யாருக்கோ நடந்தது என்று தாய்மார்கள் இனியும் கருதிக்கொண்டிருக்காமல், இந்த பிரச்சினை தன் வீட்டு குழந்தைகளையும் பாதிக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். அப்படி ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் வீட்டில் இது போன்ற பாதிப்பு உருவாகாமல் தடுத்தால்தான், ‘இது நம்ம நாடு.. இனி இது நடக்கக்கூடாது..’ என்ற நிலையை உருவாக்கமுடியும்.

    “பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைகளோடு நீங்கள் இரவு உணவு சாப்பிடும்போது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் டெலிவிஷனில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது உங்கள் கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையிடம் மனம்விட்டுப்பேச வேண்டிய பொன்னான நேரத்தை இழந்துவிடுகிறீர்கள்.

    அந்த நேரத்தில் சுமுகமான சூழலை உருவாக்கி, அமைதியாக அன்றாட நிகழ்வுகளை பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தால் உங்கள் மகள் பள்ளி வாகனத்திற்கு காத்திருந்தது முதல், அதில் ஏறியது, பயணம் செய்தது, அந்த டிரைவர் தன்னோடு நடந்துகொண்டது, பள்ளியை சென்றடைந்தது.. பள்ளியில் நடந்தது.. என்று ஒவ்வொன்றையும் உங்களிடம் கூறுவாள். அப்போது எங்கேயாவது பிரச்சினைக்குரிய விஷயம் நடந்திருக்கிறதா? பாலியல் தொந்தரவு ஏதேனும் நடந்துள்ளதா? என்பதை தாய்மார்களால் கண்டறிந்துவிட முடியும்.

    அதுபோல் பேசி, சிரித்து, விளையாடி, குழந்தைகளுக்கு சோறூட்டினால், குழந்தை மகிழ்ந்து தாயிடம் எல்லாவற்றையும் பேசும். அப்படி பேச வேண்டிய குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து அதற்குள் அதனை சிறைபடுத்திவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் குழந்தைகளுக்கு பேசுகின்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொடுத்தால்தான், தங்களுக்கு ஏற்படும் அதுபோன்ற அவஸ்தைகளை அவர்கள் தாயிடம் சொல்வார்கள்.

    பெரும்பாலான பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுடன் எப்படி பொழுதுபோக்குகிறீர்கள்? என்று கேட்டால், சினிமாவுக்கு போகிறோம்- மாலுக்கு போகிறோம்- சுற்றுலாவுக்கு போகிறோம் என்று சொல்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்று குழந்தையோடு இருட்டறையில் அமர்ந்து, திரையையே பார்த்துக்கொண்டிருப்பதை, குழந்தையுடன் நேரத்தை செலவிடுதல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

    அதுபோல் ஷாப்பிங் செல்வதும், அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் குழந்தையுடனான பொழுதுபோக்கு அல்ல. குழந்தையோடு சுற்றுலாவுக்கு சென்று, அங்கே ஓய்வின்றி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து பார்த்துவிட்டு, அந்த நேரத்தை எல்லாம் குழந்தையோடு செலவிட்டேன் என்று கூறுவதும் சரியல்ல. குழந்தைக்கான நேரத்தை அதனோடு மட்டும் செலவிடவேண்டும். அந்த நேரத்தில் வேறு தொந்தரவோ, அடுத்தவர்களின் தலையீடோ இருக்கக்கூடாது.

     

    அப்போது அது மனம்விட்டுப் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால், குழந்தையின் மனதில் இருக்கும் எல்லா விஷயங்களும் வெளிவரும். எல்லாவித சந்தேகங்களுக்கும் அது தாயிடம் விடைதேடும். அதை நுட்பமாக கவனித்தால் குழந்தைக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஏதாவது நடந்திருந்தால், நடந்துகொண்டிருந்தால், தெரிந்துவிடும். முளையிலே அதனை கிள்ளி எறிந்துவிடலாம்..

    “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்காக நாம் அரசாங்கத்தையோ, சமூகத்தையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும். குழந்தை பள்ளியில் இருந்து வந்த உடன் என்ன படித்தாய்? எவ்வளவு மதி்ப்பெண் வாங்கினாய்? ஆசிரியர் உன்னை பாராட்டினாரா? என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கிறார்கள். வேனில் என்ன நடந்தது? வேன் டிரைவர் எப்படி நடந்துகொண்டார்? பள்ளியில் என்னவெல்லாம் நடந்தது? என்று கல்விக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு விஷயங்கள் பற்றியும் பேசவேண்டும்.

    பல தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். நான் சொல்வதைகேள், ஒழுங்காக இருந்து படி, தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசாதே, சும்மா இருக்காதே எதை யாவது செய்.. என்று கட்டளையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி கட்டளையிடும்போது தாய், குழந்தைக்கு இடையேயான சுமூக உறவில் முட்டுக்கட்டை விழுந்து விடும்.

    அந்த குழந்தை தாயிடம் மனந்திறந்து பேசாது. அப்படி பேசாதபோது குழந்தைக்கு பாலியல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது தாய்க்கு தெரியாமல் போய்விடும். பொதுவாக பெண் குழந்தை வயதுக்கு வந்த பின்பே தாயார் அதன் மீது அதிக கவனம் செலுத்துகிறார். 9,10 வயது சிறுமிகளுக்கு பாலியல் பாதிப்பு எதுவும் நடக்காது என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். பத்து வயது சிறுமி, அவளது பெற்றோருக்கு மட்டும்தான் குழந்தை. அவளை பார்க்கும் அனைவரும் அவளை குழந்தையாக தான் நினைப்பார்கள் என்று தவறாக கருதி விடக்கூடாது.

    ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ‘யாரும் குழந்தைகளை எந்த ‘டச்’சும் செய்யக்கூடாது’ என்று வலியுறுத்துங்கள். ‘பெற்றோரும், டாக்டரும் தவிர வேறு யாரும் உன்னை எக்காரணத்தைக் கொண்டும் தொட அனுமதிக்காதே. எந்த உறுப்பு என்றில்லை. உன் உடல் முழுக்க பொக்கிஷம்தான். எங்கே தொட்டாலும் நீ தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். தற்காப்புக் கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    முன்பு கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. பாட்டிகள் தனது பேத்திகளிடம் மனம்விட்டுப்பேசி அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்துவிடுவார்கள். நேரத்தை செலவிட்டு குழந்தைகளை பக்குவப்படுத்தி வளர்ப்பார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் இல்லாததால் எதற்கெடுத்தாலும் உடனே ‘சைக்காலஜிஸ்ட் ஒப்பீனியன்’ கேட்க செல்கிறார்கள். குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டு, மனோதத்துவம் பேசி பலனில்லை.

    பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதுபோல், ஒவ்வொரு தாயும் தனது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். 
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் காப்பகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் 26 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UP #ShelterHomeProbe
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில் இயங்கி வந்த சிறுமிகள் காப்பகத்தில் சிறுமிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த காப்பகத்தில் இருந்து சிறுமி ஒருவர் தப்பிவந்து போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காப்பகத்தின் மேலாளர்கள் இருவர் கைது செய்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அனைத்து காப்பகத்திலும் சோதனை நடத்துமாறும் உத்தரவிட்டார்.

    முதல்மந்திரியின் உத்தரவின் பேரில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அந்தவகையில், அசல்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் காப்பக குறிப்பேடில் பதிவு செய்யப்பட்ட 15 பெண்களில் 12 பேர் காணவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காப்பக நிர்வாகி கூறுகையில், அனைத்து பெண்களும் பணிக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், முறையான பதிவு ஏதும் காப்பக நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை.

    அதேபோல், அஸ்ட்புஜா நகர் பகுதியில் இயங்கிவந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பெண்கள் மாயமானது கண்டறியப்பட்டது. இந்த காப்பக நிர்வாகத்தினரும் முறையான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை.

    இரண்டு காப்பகங்களில் இருந்தும் 26 பெண்கள் மாயமான நிலையில், விரைவில் அந்த பெண்கள் குறித்த தகவல்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லையெனில் இந்த இரண்டு காப்பகங்களிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #UP #ShelterHomeProbe
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர்.
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர். இந்த கொக்கி பின்னலாடைகள் பார்க்க அழகாகவும், இடைவெளியுடன் காட்சி தரும் உருவங்களும் மனதை கவரும். அதுபோலவே கொக்கி பின்னல் வடிவமைப்பில் க்ரோசெட் நகை வடிவமைப்பிலும் வந்துள்ளன.

    அதாவது மெல்லிய வடிவில் பலதரப்பட்ட உருவங்கள் பின்னப்பட்ட அமைப்பில் அழகுடன் தங்க நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பழைய வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறுபட்டவாறு உள்ளது. அதாவது தங்க தகடுகளில் உருவம் பதியப்பட்டு, எம்போஸ் செய்யப்பட்டவாறும் தான் நகைகள் உருவாயின. சில மெல்லிய தங்க கம்பிகள் மற்றும் தற்போதைய இயந்திர உதவியுடன் நகைகள் வடிவமைக்கப்பட்டு ஆனால், க்ரோசெட் நகைகள் என்பது தங்க தகட்டில் உருவம் அழுத்தப்பட்டு வேண்டாத பகுதி தங்கம் வெளியேற்றப்பட்டு ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலும் மற்றும் துளைகள் உள்ளவாறும் உள்ளன.

    இதில் அதிக தங்கம் சேர்க்கப்படாமல் எடை குறைவான நகையாகவே காட்சிப்படுத்தப்படும். பெரிய அளவிலான நகைகள் முதல் சிறிய நகைகள் வரை இந்த க்ரோசெட் எனும் கொக்கி பின்னல் வடிவமைப்பில் அழகுடன் உருவாக்கி தரப்படுகின்றன. வலை பின்னல் ஓவியமாய் காட்சி தரும் இந்நகைகள் இளவயதினரை அதிகமாக கவர்கின்றன.

    க்ரொசெட் காதணிகள்

    மெல்லிய வலலைப்பின்னல் காதணிகள் என்பது சிறு கம்மல் மற்றும் தொங்கும் அமைப்பு என்றவாறு உள்ளது. இதில், தொங்கும் பகுதி என்பதில் அழகுடன் பூக்கள், கொடிகள், இலைகள் போன்றவை வலை பின்னல் அமைப்புடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த காதணிகள் அதிக எடையின்றி தினசரி அணிய ஏற்றவாறு உள்ளது. அதாவது கூண்டு அமைப்பில் தொங்கு பகுதி இருபுறமும் இடைவெளியுடன் கூடிய டிசைன் அமைப்பில் காணப்படுகிறது. ஒரு பக்கமுள்ள அதே டிசைன் பின்பகுதியில் இருப்பதால் தூர இருந்து பார்க்கும்போது காதணி ஜொலிப்புடன் அழகிய உருவ அமைப்பில் வெளிப்படுத்தும். சில காதணிகள் மிக இறுக்கமாக பின்னப்பட்டு பூ அமைப்பிலும், உட்புறம் வெற்றிடமாக அதே நேரம் வெற்வேறு உருவ தோற்ற பொலிவை மாற்றி தரும் வகையிலும் காட்சி தருகின்றது. இதில் தொங்கும் அமைப்பில்லாத ஸ்டெட் காதணிகளும் கிடைக்கின்றன.



    அழகிய க்ரோசெட் பென்டன்ட்

    செயின்களில் மாட்டக்கூடிய பெரிய மற்றும் பென்டன்ட் அழகுடன் கொக்கி பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய பென்டன்ட்களை விட க்ரோசெட் பென்டன்ட் அணிபவருக்கு கூடுதல் பொலிவை தருகின்றது. வித்தியாசமான உருவ அமைப்பு மற்றும் பின்னல்கள் கொண்டவாறு நீள் சதுரம், வட்டம், இதயம், கூம்பு வடிவிலான பென்டன்ட்கள் கிடைக்கின்றன. சில பென்டன்ட்கள் இரட்டை வளையங்கள், இரட்டை முத்துகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

    க்ரோசெட் மோதிரங்கள்

    க்ரோசெட் மோதிரங்கள் முந்தைய மோதிரம் போன்ற வடிவமைப்பில் இல்லாத மாறுபட்டவாறு உள்ளன. வட்டம், சிமிழ், சதுரம், நீள்சதுரம் என்றவாறு கீழ் பகுதி தங்க தகடு என்றவாறு மேல் மூடியப்பகுதி காட்சி தருகிறது. பூ மற்றும் அழகிய பின்னல்கள் இருபுறமும் உள்ளவாறும் மோதிரட் கிடைக்கிறது. இந்த க்ரோசெட் மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நாம் உண்ணும் உணவு துகள்கள் உட்புறம் சேர வாய்ப்பு அதிகம்.

    க்ரொசெட் நெக்லஸ்கள்

    கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும் சோக்கர் நெக்லஸ்களாக க்ரோசெட் நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அழகிய கிறுக்கல் ஓவியங்கள் போல் காட்சி தரும் வகை விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளதுடன் அனைவர் பார்வையும் க்ரோசெட் நெக்லஸ் மீது தான் விழும். இதில் மஞ்சள் உலோக பின்னணி மட்டுமல்லாது சில ரேடியம் பூசப்பட்ட மாடல்களும் கிடைக்கின்றன.

    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்ணடிமை என்ற இரும்பு கூண்டிலிருந்து இன்றைய பெண்கள் சுதந்திர பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காவல்துறை, சட்டத்துறை, அரசியல், தகவல் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் பெரிய பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர்.

    மருத்துவ துறையிலும் பெண்கள் வியக்கத் தக்க சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்தியாவை வழிநடத்திய பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்திருக்கிறார். பல பெண்கள் முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்து இருக்கிறார்கள். இருந்து கொண்டும் இருக்கிறார்கள். விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லா இந்திய வம்சா வளியை சேர்ந்தவர் தான்.

    போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்து விட்டனர். விளம்பர துறையிலும் பெண்கள் நல்ல நிலையை அடைந்து உள்ளனர். உலக அழகிப்போட்டியிலும் இந்திய பெண்கள் மகுடம் சூடி இருக்கிறார்கள். குடும்ப பெண்கள் தங்கள் வீட்டு கடமைகளை முடித்துவிட்டு பகுதிநேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர். வேளாண்மை துறையிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுபோல பல துறைகளில் பெண்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படிப்பிலும் மாணவிகள் முதலிடத்தை பிடித்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளார்கள். அதேபோல மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் நல்ல முறையில் படித்து தாய், தந்தையருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போமாக.

    ×