search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பெண்களின் பட்டுப்புடவைகளின் நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.
    காஞ்சிப்பட்டு முதல் பனாரஸ் பட்டு வரையில் பட்டு என்றாலே புடவைதான் நினைவிற்கு வரும். ஆனால் பட்டு நூலில் கண்ணை கவர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் நகைகள் பிரமிப்பூட்டுபவை. பெண்கள் தாங்கள் அணியும் பட்டுபுடவைக்கு ஏற்ப நகை அணிய விரும்பும் போது தங்க நகையையே விரும்புவர். ஆனால் தங்க நகைகளில் புடவைக்கு ஏற்ற நிறங்களில் அணிவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    பல வண்ண கற்கள் பதித்த கவரிங் நகைகள் போட்டாலும் அவை விலையுயர்ந்த பட்டுப்புடவைக்கு ஜோடியாவது சற்று சிரமம் தான். ஆனால் பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பட்டுப்புடவைகளின் அதே நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.

    பட்டு நூல் நகைகளின் வரலாறு :

    பட்டு நூல் நகைகள் வட இந்திய பகுதிகளில் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. பெரு நாட்டில் பட்டு நூல் நகைகள் அதிகம் பிரசித்தம். அதே வகை நகைகள் கொடைகானலில் உள்ள பழங்குடி பெண்கள் செய்து விற்று வந்தனர். ஆனால் தற்போது இளம் பெண்கள் விரும்பி அணிவதால் இந்நகைகள் பல இணையதள கடைகளில் விற்கப்படுகின்றன.

    புதிய டிசைன்கள் புராதனம் இணைந்து...

    பொதுவாக நகைகளில் பாரம்பரியத்தன்மை கொண்டவை ஆன்ட்டிக் வகைகள், சிறு ஆன்ட்டிக் மணிகள், ஆன்ட்டிக் தொங்கட்டான், ஜிமிக்கி, பென்டன்ட் போன்றவைகளை பயன்படுத்தி செய்யப்படும் பெரிய நெக்லஸ், ஜிமிக்கி, கழுத்தணிகள், வளையல்கள் போன்றவை மிகவும் கம்பீரமாக இருக்கும். இவற்றின் இடையே பட்டு நூல் சுற்றிய மணிகள் மிகவும் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

    வெள்ளை நிற கற்கள், முத்துக்கள், மணிகள் போன்றவைகளும் இந்த நகைகளில் செய்யப்படும் நகைகள் தூரத்தில் பார்த்தால் தங்க நகைகள் போலவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக பட்டுப்புடவையின் நிறங்கள் தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றிற்கான ப்ளவுஸ் துண்டை எடுக்கும் போது அதே நிறங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஆனால் பட்டு நூலுனால் செய்யப்படும் நகைகள் புடவையின் நிறத்திற்கு வாந்தமாக பொருந்தி விடுகிறது.

    பொடி முத்துக்கள் கொத்து கொத்தாக கோர்க்கப்பட்டு செயின் இடையேவும், இம்முத்துக்களால் ஆன காது வளையின் கீழ்புறம் தொங்கும் ஜிமிக்கியிலும், இதே முத்தக்கள் கொண்ட வளையல்களின் இடைஅயவும் பட்டு நூலினால் சுற்றப்பட்ட மணிகள் போர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் மிகவும் அழகாகவும் பட்டு புடவைகள் மட்டுமின்றி சுடிதார், ஜீன்ஸ், குர்தாவிற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. மிகவும் எடை குறைவாகவும், பெரிய அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கும் இந்த நகைகள் இளம் பெண்களின் மனம் கவர்ந்த நகையாக இருக்கும்.

    காஞ்சீபுரத்தில் நூதன முறையில் பெண்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கலெக்டர் கூறி்யுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு உள்ளிட்ட ஆற்றுபடுகைகளில் லாரிகள், மாட்டுவண்டிகள், டிராக்டர்கள் ஆகியவைகள் மூலம் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போலீசாரின் கடும் நடவடிக்கையால் மணல் திருட்டு பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டது என்றாலும் கோணிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சிலர் மணல் திருடி விற்று வருகின்றனர். இது காவல் துறையினருக்கு சவாலாக உள்ளது.

    இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆறு, ஏரிகளில் மணல் திருட்டை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கேட்டுக் கொண்டனர்.

    இருசக்கர வாகனங்கள் மூலம் செய்யப்படும் மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும், தற்போது பெண்கள் கூடையில் மணலை திருடி மேற்பகுதியில் காய்கறிகளை வைத்து கொண்டு மணல் திருடி செல்கின்றனர்.

    இது போன்று செல்பவர்கள் அனைவரையும் சோதனையிடுவது சாத்தியமில்லை. பெண்களே மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே இது போன்று மணல் திருட்டில் பெண்கள் ஈடுபடவோ, ஈடுபடுத்தப்படவோ கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
    பெண்களிடம் திரை உலகில் மின்னும் ஆசை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அழகாக இருக்கும் பெண்கள் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறைந்த வயதில் நிறைய பணமும், புகழும் சம்பாதிக்க திரை உலகம் ஏற்றது என்ற கருத்து அவர்களிடம் வலுப்பெற்றிருக்கிறது. அதனால் படிக்கவேண்டிய வயதில் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. கல்வி மீதான நம்பிக்கையும் குறைகிறது.

    திரைப்பட கல்லூரிகள், விளம்பர துறை, மாடலிங் துறை போன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏதேனும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் படிப்பைக்கூட பாதியில் விட்டு விடுகிறார்கள். பணம், புகழ் எல்லாவற்றையும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வகை பதற்றம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    தங்களது பிள்ளைகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்காக கல்வி, திருமணம் போன்றவைகளை தள்ளிப்போடவும் தயாராக இருக்கிறார்கள். நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து கற்கவேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அங்கு கற்கும்போதே நட்சத்திரமாகிவிட்டதைப் போன்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு வாழ்க்கைதான் இப்போது நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. கனவிலே வாழ்க்கை நடத்துகிறார்கள் பல கன்னிப்பெண்கள்.

    பல பெண்களை பெற்றோர்களே சினிமாவில் திணிக்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க விடுகிறார்கள். படிப்பு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதோ அந்த டி.வி. விளம்பரத்தில் வருவது என் பெண்தான் என்று பலரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்வி என்பது எதிர்காலத்தின் அஸ்திவாரம். இதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொண்டால்தான் பின்பு குழந்தைகளுக்கு புரியவைக்க முடியும்.



    சினிமா மோகம் சிறுவயதிலே குழந்தைகளிடம் ஏற்பட பெற்றோரின் நடவடிக்கைகளும், குடும்பச் சூழலும் ஒரு காரணம். இப்போதெல்லாம் குழந்தைகள் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும்தான் கண் விழிக்கிறார்கள். வெகு நேரம் அதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். பெற்றோர்களும் விட்டது தொல்லை என்று கருதி, அதை தடுக்க முன் வருவதில்லை. அதன் மூலம் கண் பாதிக்கப்படுகிறது. அறிவு வளர்ச்சியடைவதில்லை. ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. வெளி உலக தொடர்பும் இல்லாமல் போகிறது. திரைக்காட்சிகளுக்குள்ளே மூழ்கி கிடக்கும்போது எதிர்கால ஆர்வமும் அதை சுற்றித்தான் ஏற்படுகிறது. அவர்களிடம் வயதுக்கு மீறிய பேச்சு இருக்கிறது. அதை அறிவு என்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவு என்பது சிந்திக்கும் திறனையும், எதிர்கால சரியான திட்டமிடுதலையும் உள்ளடக்கியது.

    முன்பு சர்க்கஸில் மிருகங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவை மனிதன் கற்றுக்கொடுத்ததை அப்படியே திருப்பிச் செய்யும். அது அறிவல்ல, பழக்கம். அதுபோல் குழந்தைகளுக்கும் தேவையில்லாதவைகளை கற்றுக்கொடுத்து, பழக்கப்படுத்தக்கூடாது. குழந்தைகளால் இந்த உலகத்தில் இருந்து நிறைய அனுபவங்களை பெறமுடியும். அவைகளை குழந்தைகள் பெற வழிகாட்டவேண்டும். திரை கவர்ச்சிக்குள் குழந்தைகளை சிக்கவைக்க வழிகாட்டக்கூடாது.

    ஆண்களுக்கும் சினிமா ஆசை உண்டு. ஆனாலும் அதிக சினிமா தாக்கம் பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே அவர்கள் தங்களை சினிமா நடிகைகளைபோல் பாவித்துக்கொண்டு, அவர்களைப் போலவே மாற நினைக்கிறார்கள். உடலை வெளிக்காட்டும் கவர்ச்சி உடைகளை சினிமாவிற்கு உண்டான ஒரு தகுதியாக கருதுகிறார்கள். விதவிதமான சிகை அலங்காரம், ஒப்பனைகள் என்று தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். எந்த அளவு இவை எல்லாம் அவர்கள் எதிர்காலத்தை வளப்படுத்த உதவும் என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.

    கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் திருமணமும் நடக்காமல், வேறு வேலைக்கும் போக முடியாமல் சினிமா ஆசையும் நிறைவேறாமல் அந்தரத்தில் நின்று விடுகிறார்கள். இதுதான் பரிதாபம். வயதுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய ஒப்பனை இது மட்டுமே சினிமா தகுதியல்ல. அப்படியே எல்லா தகுதிகளும் இருந்தாலும் எல்லோருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்லவும் முடியாது.

    பெண்களின் வாழ்க்கையில் சினிமா கட்டாயம் இல்லை.. ஆனால் கல்வி கட்டாயம்.. 
    கடந்த 6 மாதங்களில் வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
    சென்னை:

    ரெயில் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 6 மாதத்தில் பயணிகள் தவறவிட்ட 1,385 உடமைகளை மீட்டு தந்துள்ளனர். ரெயில் பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்பட்ட 735 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    பல்வேறு பிரச்சினைகளுக்காக வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ரெயில் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததோடு, குற்றத்தில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தனர்.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்களையும் மீட்டுள்ளனர். 51 ஆயிரத்து 701 விதிமீறல் சம்பவங்களில் தொடர்புடையோரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 256 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவி எண் ‘182’ மூலம் 368 புகார்களும், ‘டுவிட்டர்’ மூலம் 501 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அங்கே அவர்களோடு தங்கும் தோழிகளைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது.

    கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. கல்லூரி காலத்தில் பெற்றோரின் வருமானத்தில் ஆஸ்டல் வாழ்க்கை அமையும். அதில் விளையாட்டுத்தனமும், கலாட்டாவும் அமைந்திருக்கும். கல்வி கற்பது மட்டுமே பொறுப்பான ஒரு செயலாக இருப்பதால் அந்த காலகட்டம் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி சக மாணவிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் சிந்தனையும், செயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் பெருமளவு பிரச்சினை ஏற்படாமலே அவர்களது கல்லூரி ஆஸ்டல் வாழ்க்கை முடிந்துவிடும்.

    ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைபார்க்கச் செல்வது அப்படியானதல்ல. பல்வேறு சூழலில் இருந்து வரும் பல பருவத்தினர் அங்கே ஒன்றிணைவார்கள். அங்கு தங்கியிருக்கும் எல்லா பெண்களுக்குமே பல்வேறு குடும்ப பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும். ‘பாதுகாப்பாக தங்கியிருக்கவேண்டும். கவனமாக வேலைக்குச் சென்று திரும்பவேண்டும். சரியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலனை பராமரிக்க வேண்டும். பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண் களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களோடு அறையில் உடன் தங்கியிருக்கும் தோழிகள், தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டால், அது கவலைக்குரிய விஷயமாகிவிடும்.

    ‘‘என் ஆஸ்டல் தோழிக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்விடும். அப்போது நான் பக்கத்தில் இருந்து அவளை கவனிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள். என்னால் சில நேரங்களில் முடியாதபோது அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் பல்வேறு குடும்ப பொறுப்புகளை சுமந்துகொண்டு, குடும்பத்தை பிரிந்து இங்கே தங்கியிருந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் என் வேலையை பார்ப்பதா? அல்லது இவளுக்கு ஆயா வேலை பார்ப்பதா என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்” என்று புலம்புகிறாள், அந்த பெண்.

    “என்னுடைய பொருட்கள், ஆடைகள் என்று எல்லாவற்றையும் என் அறையில் தங்கியிருக்கும் ஒருசில பெண்கள் என் அனுமதி இல்லாமலேயே அணிந்து கொள்கிறார்கள். நான் எங்காவது வெளியே புறப்பட நினைக்கும்போது நான் விரும்பும் ஆடைகள் எல்லாம் அழுக்காக கிடக்கும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்ல பழக்கம்தான். ஆனால் எனக்கு தேவைப்படும்போது நான் யாரிடம் போய் கேட்பது?” என்று கேள்வி எழுப்புகிறார், இன்னொரு பெண்.

    “என் ரூம்மேட் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து விட்டது என்று சொல்லி என் கைபேசியை பயன்படுத்துகிறாள். தடுக்க முடியவில்லை. அவளுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் எனக்கு வருகிறது. அது அவ்வளவு நன்றாக இல்லை. நான் அவள் இல்லை என்று சொன்னால்கூட யாரும் நம்புவதில்லை. அடிக்கடி பேசி தொந்தரவு செய்கிறார்கள். நான் வீட்டிற்கு போயிருந்தபோதும் அப்படி ஒரு அழைப்பு எனக்கு வந்தது. அதை என் அப்பா எடுத்துப் பேசி பெரிய பிரச்சினையாகி விட்டது. இதை எல்லாம் என் தோழிக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது” என்கிறார் ஒரு பெண்.

    இப்படி ஆஸ்டலில் தங்கியிருந்து வேைல பார்க்கும் பெண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

    ஆஸ்டல் தோழி ஒருவருக்கு முகப்பரு வந்திருக்கிறது. உடனே இன்னொரு தோழி தான் முகப்பருவுக்கு பயன்படுத்திய மருந்தை அவளுக்கு கொடுத்து, இரவில் பூசிக்கொண்டு தூங்கும்படி கூறியிருக்கிறாள். அவளும் அவ்வாறே செய்ய, மறுநாள் காலையில் விழித்து பார்த்தபோது அந்த பெண்ணின் முகம் சிவந்து வீங்கிபோய் இருந்திருக்கிறது. அந்த மருந்து அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கிவிட்டது. அதனால் அந்த தோழி களுக்குள் சண்டை உருவாகிவிட்டது. கடைசியில் இருவருமே தங்கள் அறைகளை காலிசெய்துவிட்டு போயிருக்கிறார்கள்.



    “ஒருமுறை எனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு போக வேண்டும். தனியாக போக முடியவில்லை. ரூம்மேட்டை துணைக்கு அழைத்தேன். அவளோ ‘தன்னால் வர முடியாது. முக்கியமான பிறந்தநாள் பார்ட்டிக்கு போக வேண்டும்’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இரவு நேரங்களில் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக தூங்குவதுபோல் சிலர் நடிப்பார்கள். சிலர் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றாலே, உதவி கேட்டுவிடுவோம் என நினைத்து பயந்து ஒதுங்குவார்கள். அதே நேரத்தில் அவசர காலத்தில் கை கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார், ஒரு பெண்.

    “அவசர தேவைக்கு திடீரென்று பணம் கேட்பார்கள். இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. சொன்னால் நட்பு முறிந்துவிடும். கொடுத்தே ஆக வேண்டும். கொடுத்தால் அதை திருப்பித் தரும் எண்ணம் சிலருக்கு இருக்காது. ஒருசிலர், ‘உன்னிடமிருந்து பணம் வாங்கிய நான்காம் நாளே திருப்பித்தந்துவிட்டேனே! உனக்கு நினைவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களால் நானும் சில முறை பணத்தை இழந்திருக்கிறேன். எனது சின்னச்சின்ன பொருட்கள் அடிக்கடி காணாமல் போய்விடும். அது பற்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், பிரச்சினைதான் உருவாகும்..” என்று வருத்தத்தோடு சொல்கிறார், சென்னையை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர்.

    ஆஸ்டல் வாழ்க்கை அருமையாக அமைய..

    கூடுமானவரை விலை உயர்ந்த பொருட்களை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். தொலைந்தால் யாரையும் கேட்கமுடியாது. கேட்டால் சண்டை வருமே தவிர பொருள் வராது.

    உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தக்கபடி நடந்துகொள்ளுங்கள்.

    உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை உங்கள் அறை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகளை மற்றவர் களுக்கு கொடுக்காதீர்கள். அது சில நேரங்களில் நீங்களே எதிர்பாராத விதத்தில் கொலைக்கு சமமாகிவிடும்.

    கூடுமானவரை மற்றவர்களை வேலை வாங்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

    எல்லோருக்குமாக சேர்த்து மற்றவர்கள் வேலை செய்யும்போது, கூடுமானவரை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    மனதில் எதையாவது வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். முடிந்த அளவு புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் வலம் வாருங்கள்.

    அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுங்கள். ஆனால் ஞாபகமாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறைகூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். 
    பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
    பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

    இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.

    பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

    இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

    35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது.

    இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

    எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.

    மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

    சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

    நோயைத் தடுக்கும் முறைகள்
     
    நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்.

    உணவில் கல்சியம், வைட்டமின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
     
    மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
    டெல்லி ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.#KidneyDonate
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.

    அதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்தது.

    3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.

    ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரேஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  #tamilnews  #KidneyDonate
    மன்னார்குடியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காளிகவுண்டன் தெருவில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

    அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
    சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.

    அம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்!

    அதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.

    அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.

    அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.



    டீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.

    ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.

    எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.

    பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.



    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.

    காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

    அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணைய தளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 2-வது இடத்திற்கு வர உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது.

    இந்த நிலையில் ‘கூகுள் இந்தியா’ இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணைய தளத்தை அமைத்துள்ளது. hwgo.com (ஹெல்பிங் உமன் கெட் ஆன் லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் அதை பயன்படுத்த தேவையான அடிப்படை விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.

    கம்ப்யூட்டர் அடிப்படையில் தொடங்கி, இணைய அடிப்படை, இ-மெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன் படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது. இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டும் இந்த தளத்தில், இணையத்தை பயன்படுத்தி பயன் அடைந்த பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது. இணைய பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும் கூட, இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
    ×