search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
    இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.

    பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.

    இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.

    மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:



    * மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.

    * எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.

    * நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

    * பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.
    பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
    கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

    சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

    முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

    கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4¾ கலோரியை மட்டுமே தரும்).

    கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty Aci ds) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

    இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச் சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.

    அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரண மாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.



    விட்டமின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

    கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.

    குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

    ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும்.

    ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

    துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

    இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

    ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

    நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.

    பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

    கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம்.
    இது டிஜிட்டல் யுகம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் செல்போன், கணினி திரையில் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்தவொரு விஷயத்தையும் முன் பின் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்கன் கருத்துகளையும் அறிந்து கொள்வதோடு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடிகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்கள் சமூகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

    ‘ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம்’ என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் ‘லைக்’ கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

    சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

    நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.



    நம்மைப் பற்றி நம் குடும்பத்தை பற்றி பொது இடத்தில் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதைப் போல தான் இதுவும். எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் தோன்றாது. சைபர் கிரைம்கள் உருவாக இது போன்ற தகவல் பரிமாற்றங்கள் வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க மக்களிடையே போதுமான விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    மனோரீதியாக இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பல. எந்த ஒரு விஷயத்தையும் நேரில் சொல்ல தயங்குபவர்கள் கூட இப்படி சமூகவலைத்தள குழுக்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் பதிவு செய்யும் விஷயங்களுக்கு இணையாக தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். மனதில் பூட்டிவைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால் மனம் ‘ரிலாக்ஸ்’ ஆவதாக உணர்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது? என்று யாரும் யோசிப்பதில்லை.

    இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிடமுடியாது. இயந்திரத்தனமாக ஓடோடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நண்பர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கான சூழல் உருவாகாதபோது மன அழுத்தத்தை போக்க சமூகவலைத்தள குழுக்கள் உதவுகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    தொழில் சம்பந்தமான விஷயங்கள், முக்கிய ஆலோசனைகள், சாதனைகள், மதிப்புரைகள், வாழ்த்துகள், பாராட்டுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்போது சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க நேரிட்டால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கருத்து மோதல்கள் உருவாக வழிவகுத்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்வது வேறு, பலரோடு பகிர்ந்து கொள்வது வேறு. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

    சமீபகால ஆய்வின் படி சமூகவலைத்தளங்கள் பல உறவுகளைப் பிரித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்களால் பயனடையலாம். மாறாக அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.

    மின்சாரம் பயனுள்ளது தான். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மீறி பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்துவிடும். எல்லா தொழில் நுட்பமும் அப்படித்தான். ஒருபோதும் அவை மனித உணர்வுகளை பாதித்து விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதை சரி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே அவர் களின் பாதுகாப்புக்கு உலைவைத்துவிடும்.
    ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் இரும்பு சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு 18 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அதிலும் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் 27 மில்லி கிராம் வரை தேவைப்படும். கருவுற்றிருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும் போதுமான அளவு இரும்பு சத்து உடலுக்கு அவசியப்படுகிறது.

    மேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.



    பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது. பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம்.

    உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை. வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. 
    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத்  தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.

    ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்
    இயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.

    இதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

    மேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’’.
    பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.
    மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

    ஆஸ்டியோ போரோசிஸ்

    ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

    பைட்டோ ஈஸ்ட்ரோஜன்

    உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

    சென்ஈஸ்ட்ரோஜன் உணவுகள்

    ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

    கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.



    பழங்கள் காய்கறிகள்

    பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

    ஓமேகா 3 உணவுகள்

    ஒமேகா - 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

    நார்ச்சத்து உணவுகள்


    பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.

    ஈஸ்ட்ரோஜனை சமப்படுத்தும் யோகா

    தினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

    கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்சனைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் உருவாக்கப்படுகிறது.

    ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும் என்பதால், வியர்வையை உறிஞ்சாது. இதனால், சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும். இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடையும் தளர்வாக இருக்க வேண்டும்.

    சிலர், குளிர்ச்சி இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவது, குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்துகொள்வது போன்ற பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். இது, மிகவும் தவறான பழக்கங்கள். ஈரமான ஆடைகள், பல்வேறு நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமையும். இதைத் தவிர்க்கவும். சரியான வழிகாட்டலின்றி, வீட்டு வைத்தியம் செய்யவும் வேண்டாம். இது சிலருக்கு அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்துவிடும். 
    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். கேலி செய்பவர்களை பார்த்து அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும்.
    ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினிகிடக்கலாமா?’ என்று தினமும் யோசிக்கிறார்கள். சமூகமும் குண்டானவர்களை சற்று கிண்டலாகத்தான் பார்க்கிறது. உண்மையில் சற்று குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை.

    உடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஆனால் பேஷன் ஷோக்களில் ‘பிளஸ் சைஸ்’ எனப்படும் பூசி மெழுகினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அதிக மவுசு இருக்கிறது.

    பெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை கணக்கிடுவது எளிது. உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100-ஐ கழித்து விட்டால், சரியாக எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். 165 செ.மீ. உயரம் கொண்ட பெண்ணின் ஆரோக்கிய எடை 65 கிலோ என்று எடுத்துக்கொள்ளலாம். ‘பாடி மாஸ் இன்டக்ஸ்’ அடிப்படையில் பார்த்தால் 19-க்கும் 25-க்கும் இடையில் இருப்பவர்கள் சரியான எடையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 18.5-க்கு கீழ் இருப்பவர்கள் போதுமான உடல் எடை இல்லாத ஒல்லிப்பெண்கள். 25 முதல் 30 வரை இருப்பவர்களை பிளஸ் சைஸ் கொண்டவர்கள் என்றும், 30-க்கு மேல் இருப்பவர்களை குண்டானவர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    குண்டாக இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பார்கள். கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவார்கள். அதனால், குண்டானவர்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்வார்கள். அப்படி முடங்குவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கி, எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையை உருவாக்கிவிடும்.

    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். வருந்தினால் உங்கள் உடலில் கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன் அதிகம் சுரந்து, கூடுதலாக உங்களை குண்டாக்கிவிடும். உங்கள் உடல் எடையை எப்போதுமே நீங்கள் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன்என்றால் சைஸ் ஜீரோ என்பது திறமைக்கான அடையாளம் அல்ல. திறமை வேறு, உடல் அமைப்பு வேறு உண்மையை உணர்ந்து எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.

    உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.

    உடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கிவைக்கவேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்லவேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

    உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொதுவாகவே தங்களை மற்றவர்களுக்கு மத்தியில் மறைத்துக்கொள்ள விரும்புவார்கள். தூண்களுக்கு பின்பும், சுவர்களுக்கு பின்பும் தங்களை மறைக்க வழிதேடுவார்கள். அதுபோல் தங்கள் உடையை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவும் முனைப்புகாட்டுவார்கள். அதெல்லாம் சரியான வழிமுறை அல்ல. மற்றவர்கள் முன்னால் தைரியமாக நிமிர்ந்து நடக்கவேண்டும். அங்கும் இங்குமாக மறைய வழி இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. அதுபோல் உடை விஷயத்திலும் தெளிவாக இருக்கவேண்டும்.

    தேவையில்லாமல் அவ்வப்போது உடைகளை இழுத்து சரிசெய்யக்கூடாது. இதற்கு தேவையான பக்குவத்தை பெறவேண்டும் என்றால், மற்றவர்கள் முன்பும், பொது இடங்களிலும் எந்த தயக்கமும் இன்றி முன்னேறிச் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு நடக்கக்கூடாது. கேலி செய்தாலும் ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். கேலி செய்பவர்களிடம் எல்லாம் சண்டையிடத் தொடங்கினால் தன்னம்பிக்கை குறைந்து விடும்.
    சிறந்த சேவை பிரியும் பெண்கள் சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநலத் துறையின் மூலம் 2018-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம், விருதுக்கு பெண்களின் நலன், மேம்பாட்டிற்காக பணிபுரியும் தகுதியான தனிநபர், தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

    மேலும் விருது வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.

    தாங்கள் செய்த சேவை குறித்த உரிய விவரங்கள், அத்தாட்சியாக படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்களும் தர வேண்டும்.

    பிறந்த தேதி, கல்வித்தகுதி, போன்ற முழு முகவரியுடன், தொலைபேசி எண்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#tamilnews
    மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
    நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.

    ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

    பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

    இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

    ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.



    ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

    ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

    பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
    பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
    பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.

    ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

    சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.



    இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.

    பிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.

    வேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    ×