search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன் இருந்த உடல் போல் மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

    * தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு மளமளவென ஏறாமல் தடுக்கச்செய்யும்.

    * தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

    * அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர் ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

    * அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பது கர்ப்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.
    பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர்.
    விழா காலங்களில் தொடர்ச்சியாக வருகின்ற காரணங்களால் ஆடை வடிவமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் புதிய புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை சந்தையில் விற்பனைக்கு தருகின்றனர். பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. அதுபோல் திருமண நிகழ்வுகளுக்கும் லெஹன்கா சோலி விரும்பி அணிகின்ற ஆடையாகவே உள்ளது.

    லெஹன்கா சோலி என்பது உடனுக்குடன் அணிந்து கொள்ளவும், வேறு உடைக்கு மாறும்போது சுலபமாக கழட்டி மாற்றி கொள்ளவும் முடியும். அதுபோல் பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். அதுபோல் லெஹன்கா என்பது சிலகாலம் வரை வைத்திருந்து அணியக்கூடிய வகையில் இருக்கும்.

    உடனே சிறியதாக மாற்றம் அடையாது. அதுபோல் உடல் அளவில் ஏதும் மாற்றம் ஏற்பட்டாலும் சிறு மாற்றம் செய்து அணிய வசதியான ஆடையாகவும் உள்ளது. தற்போது லெஹன்கா சோலி என்பதில் கீழ் பகுதி பேண்ட் என்றவாறு பலோசா மற்றும் ஷராரா பேண்ட் போன்றவை வந்துள்ளன. இது புதிய லெஹன்கா ஆடை வகையாக மாற்றம் பெற்றுள்ளன. லெஹன்கா சிறப்பிடம் பெறுவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கவே செய்கின்றன.

    லெஹன்கா சிறப்பு மிக்க துணி வகைகள்


    லெஹன்கா என்பது பெரும்பாலும் அதிக எம்பிராய்டரி மற்றும் மேல் வேலைப்பாடுகளுடன்தான் காணப்படும். இந்த சீசனில் அதில் சற்று மாறுபட்டு கனமான அதிக உயர்தர தையல்களுடன் கண்கவரும் வகையில் உயர்ரக துணிகளான பராகோட், பனாரஸி பட்டு, காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற தாய பட்டு துணிகளுடன் உருவாக்கப்படுகின்றன. அதிக எம்பிராய்டரி இல்லாமல் உயர்ரக பட்டு துணி என்பதில் மைசூர் பட்டு மற்றும் பனாரஸி பட்டு துணி லெஹன்கா அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன. சாதாரணமாக அணியக்கூடிய வகையில் பட்டு துணி லெஹன்கா இருப்பதுடன் அதிக விலையின்றியும் கிடைக்கின்றது.

    கோப்பு படம்

    மேற்புற ஓவிய வேலைப்பாடுகள்

    ஓவியம் சார்ந்த (அ) கலைநயம் சார்ந்த பிரிண்ட் செய்யப்பட்டவை அதிகமாக உள்ளன. அதாவது அழகிய ஓவியங்கள், மார்டன் ஆர்ட், முரலி மற்றும் பாரம்பரிய ஓவியக் கலைகளான ஆஸ்டெக் மற்றும் மெரேக்கான் ஓவியப்பாணியிலான வடிவங்கள் அழகுற துணிகளின் மீது பி ரிண்ட் செய்யப்படுவதால் அவை ஆடம்பர வடிவமைப்பை தருகின்றன. இந்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியின் ஓரப்பகுதியில் பிரம்மாண்ட அளவில் நெய்யப்படும் சில லெஹன்காகள் வருகின்றது. எம்பிராய்டரி செய்யப்பட்டு அதிக கனமான லெஹன்கா போலன்றி எடை குறைந்த இந்த லெஹன்கா அணிவதற்கு இலகுவாக உள்ளது.

    பூ வேலைப்பாடு லெஹன்கா

    லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

    பெரிய ஜாக்கெட் அமைப்புடன் கூடிய லெஹன்கா

    லெஹன்கா ஜாக்கெட் அமைப்பு என்பது இடுப்பு வரை மட்டுமே இருக்கும். புதிய ஜாக்கெட் என்பது முழு அளவு அதாவது இடுப்பிற்கு கீழ் பகுதி வரை இறங்கியவாறும், முழுக்கை அமைப்புடன் பிரம்மாண்ட ஆடை வடிவமைப்புடன் இருக்கின்றன. இந்த ஜாக்கெட் என்பது அதிக வேலைப்பாட்டுடன் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி பிளைன் லெஹன்கா என்றவாறும் சில வருகின்றன. அதாவது ஓரப்பகுதியில் மட்டும் பட்டையான லேஸ் வைக்கப்பட்டு உடல் பகுதி ஏதும் பிரிண்ட் செய்யப்படாது பிளைன்-ஆக உள்ள லெஹன்காவும் சற்று வித்தியாசமாக காட்சி தருகின்றது. லெஹன்கா சோலி தன் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டை குறைத்து கொண்டு பிரிண்டட் லெஹன்கா சோலிகளாக உலா வருகின்றன. 
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...

    பேஸ்புக் தகவல்களில் உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளிக்காதீர்கள்.

    இன்டர்நெட் சென்டர்கள், கல்லூரி, நண்பர்களின் கணினிகள் மூலம் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்தால், வேலை முடிந்ததும் லாக் அவுட்செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் பேஸ்புக் கணக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

    உங்களுடைய போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிடும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நட்பு வட்டாரங்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக் செட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.



    நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்கள் என உங்கள் சொந்த விஷயங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தம்பட்டம் அடிக்காதீர்கள்

    தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்காதீர்கள். புள்ளிவிபரங்களின் படி பேஸ்புக்கில் உள்ள ஓவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 130 நண்பர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 130 பேரில் உங்களுக்கு எத்தனை பேரை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் உள்ளது? என்பதை அறிந்து பின்னர் அவர்களை மட்டும் பின்தொடருங்கள்.

    உங்கள் குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். குறிப்பாக சிறிய குழந்தைதானே என ஆடை அணியாத உங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிட வேண்டாம்.

    பேஸ்புக்கில் உள்ள உங்கள் நட்பு வரிசையை அனைவரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக்கில் வைக்காதீர்கள்.

    உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள், ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பும் நபர்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்யுங்கள். உங்கள் சக நண்பர்களிடமும் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை ரிப்போர்ட் செய்ய சொல்லுங்கள்.
    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பெண் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். #Sabarimala

    புனே:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புனேயை சேர்ந்த பெண் ஆர்வலர் திப்தி தேசாய் வரவேற்றார். சம உரிமைக்காக போராடி வரும் அவர் சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல போவதாகவும் அறிவித்தார்.

    இந்தநிலையில் திப்தி தேசாய்க்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அவருக்கு 200-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அதில் சிலவற்றில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அவரது பேஸ்புக் பக்கத்திலும் மிரட்டல் வந்துள்ளது. அதில் சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். இதுபற்றி திப்தி தேசாய் கூறியதாவது:-


    நான் சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று அறிவித்தது முதல் எனக்கு கொலை மிரட்டல் வருகின்றன. மேலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் எனது புகைபடத்தை போலியாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்கள்.

    கடந்த காலங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த முறை இடைவிடாது அருவருக்கத்தக்க வகையில் அவதுறுகள் வருகின்றன என்றார். #Sabarimala

    சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த இயலாது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினர்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்று திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படும். மறுநாள் 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி வருகிற 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது.



    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அவசர ஆலோசனை நடத்தினார். பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சபரிமலையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு தொடங்கி உள்ளது என்று தீர்ப்பு வெளியான மறுநாள் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் நேற்று முதல் மந்திரி பினராயி விஜயன், தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேவசம் போர்டுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தினார். இதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்த பின்பு தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு என ஆச்சாரங்களும், அனுஷ்டானங்களும் உள்ளன. அதனை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தேவசம் போர்டு அதனை நிச்சயம் கடைபிடிக்கும்.

    கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றால் சில அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். நிலக்கல், பம்பையில் இதற்கான ஏற்பாடுகளை எளிதில் செய்து விடலாம். ஆனால் சபரிமலை சன்னிதானத்தில் பெண்களுக்கென பிரத்தியேக ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமம்.

    சன்னிதானத்தில் இருந்து 18 படியேறி அய்யப்பனை தரிசிக்க செல்ல வேண்டும். இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். பெண்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கென தனி வரிசை அமைக்க வேண்டும். இப்போது அதற்கான சாத்தியம் சபரிமலையில் இல்லை. சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த இயலாது.

    அதே நேரம் பெண்களுக்கான கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கலாம்.

    பெண்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க உடனடியாக 100 ஏக்கர் நிலம் தேவைப்படும். நிலக்கல் பகுதியில் இதனை வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதியிலும் சுமார் 250 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

    இது பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது. அந்த நிலத்தை பெறுவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. அதனை பெற்று தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினாலும், சபரிமலை கோவில் தந்திரி, பந்தளம் ராஜகுடும்பத்தினர் இதற்கு எதிராக உள்ளனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    இது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இன்றும், நாளையும் இந்த ஆலோசனை நடக்கும். அதன் பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஆலோசனை கூட்டம் 3-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு விவாதிக்கப்படும். அதன் பிறகு இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தினால் சபரிமலை சுற்றுலா தலமாக மாறி விடும் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் சபரிமலை சுற்றுலா தலமாக மாறாது, அது ஆன்மீக தலமாகவே இருக்கும் என்று முதல்-மந்திரி பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை அய்யப்பன் பற்றியும், அவரது ஆச்சாரங்கள் குறித்தும் கேரள பெண்களுக்கு நன்றாகவே தெரியும். சபரிமலை அய்யப்பனின் வரலாறு தெரிந்த பெண்கள் இக்கோவிலுக்கு வரமாட்டார்கள். எனது குடும்ப பெண்களும் அய்யப்பன் மீது அபரிதமான பக்தி கொண்டவர்கள். ஆனால் அவர்களும் சபரிமலை சன்னி தானம் வரமாட்டார்கள்.

    பெண் ஆர்வலர்கள், சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியவர்கள் மட்டுமே சபரிமலை வருவார்கள் என்று கருதுகிறேன். இதனால் கோவில் நடை திறந்தாலும் பெரிய அளவில் பெண்கள் வருகை இருக்காது என்றே நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala

    கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தோன்றவில்லை என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் நிலையில், 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து முதல்மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேவசம் போர்டு தலைவர், பெண்களின் உபயோகத்துக்காக நிலக்கல் பகுதியில் கழிவறைகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். குறைந்த அளவே நேரம் இருப்பதால், அதிகமான வசதிகளை இப்போது செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தாம் நினைக்கவில்லை எனவும், அக்டோபர் 3-ம் தேதி மறுஆய்வு மனு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் பெண்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் தான்
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்…

    ப்யூர் காட்டன் :

    மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.

    போச்சம்பள்ளி :

    காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.

    பூம்காய் சேலை :

    இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள்.



    இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.

    டண்ட் சேலை :

    பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காதி சேலை:

    கைத்தறி சேலைகளான இதனை ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டனில் விரைப்பான லுக் கொடுப்பதால் பார்ட்டிகளுக்கு அணிந்து சென்றால் தனியாக தெரிந்திடும். அதே போல இதில் பெரிய கண்களை உறுத்தும் டிசைன்கள் இருக்காது.

    தாக்ககை சேலை :

    பங்கலாதேஷில் உள்ள தாக்காவிலிருந்து வருகின்ற சேலை இது. இங்கிருந்தே ப்ளைன் த்ரட் வொர்க் கொண்ட சேலைகளும் வருகிறது. தங்க நிறத்தில் ஜரிகை வேலைகள் நிரம்பியிருக்கும் அந்த சேலையை ஜம்தனி தாக்கை என்றும் அழைக்கப்படும். டிசைனர் சேலைக்கான லுக் இதில் கிடைத்திடும்.

    பசப்பள்ளி சேலை :

    ஒடிசாவின் கைத்தறி சேலை வகை இது. இதில் பெரும்பாலும், செக்டு பேட்டர்ன் தான் வரும். இந்த டிசைனில் ஒரு சேலை தயாரிக்கு ஒரு மாதம் வரை ஆகும் மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இதன் எலகண்ட் லுக்கிற்கு தாரளமாக கொடுக்கலாம்.
    பெண்கள் ஆண்களைவிட நிறைய விஷயங்களில் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்த வகையில் பெண்களை பளிச்சிட வைக்கும் 10 குணங்களைப் பார்க்கலாம்.
    பெண்கள் ஆண்களைவிட நிறைய விஷயங்களில் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்த வகையில் பெண்களை பளிச்சிட வைக்கும் 10 குணங்களைப் பார்க்கலாம்.

    1 எந்த விஷயத்தையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். கற்றல் திறன் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும், ஆண்களுக்குப் பொறுமை குணம் குறைவு. ஆகையால்தான், வகுப்புகளில் பெரும்பான்மை பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.

    2 சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு வீட்டையோ, அலுவலகத்தின் குறிப்பிட்ட ஓர் இடத்தையோ பார்க்கும்போதே அந்த இடத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்று சொல்லிவிடலாம். பெண்கள், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

    3 இன்டெர்வியூ என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம் வரும். பெண்களுக்கும் அந்த பயம் உண்டுதான். ஆனால், அதை வெளிக்காட்டாமல் கூலாக கையாள்வதில் வல்லவர்கள். அதனால்தான், செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். அது மட்டுமா? அவர்கள் எந்த விஷயத்திலும் முன்தயாரிப்புடன் செல்வார்கள்.



    4 ரொம்ப மெச்சூர்டாக செயல்படுவதும் பெண்கள்தான். அவர்கள் தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றுவார்கள்.

    5 எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தெளிவான உறுதிகொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள். ஆனால், ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள். ஓர் செயலில் ஈடுபடுவதற்கு முன்னரே யோசித்து, அதற்கு தகுந்தபடி செயல்படுவதே பெண்களின் வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது.

    6 பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்றால் மிகையாகாது. 36 சதவிகிதப் பெண்கள், பெற்றோர்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். ஆனால், 16 சதவிகித ஆண்களே பெற்றோர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்களாம்.

    7 சேமிப்பு என்று வந்துவிட்டால், அதிலும் பெண்கள்தான் சிறந்தவர்கள். ஆண்களுக்கு அதில் பக்குவம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேக்கப், டிரெஸ்ஸிங், காஸ்மெடிக்ஸ் என்று பெண்கள் செலவு செய்தாலுமே, பிற்காலத் தேவைக்கும் பயன்படும் வகையில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், ஆண்கள் இப்போதைக்கு இது என்பதிலேயே இருப்பார்கள். சேமிப்புக்கும் ஆண்களுக்கும் தூரம் அதிகம்.

    எந்த வேலையை எடுத்தாலும் அதில் சாதிக்கும் மனஉறுதி பெண்களுக்கு எப்போதும் உண்டு. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களில் பெண்கள் மேம்பட்டவர்கள். 
    பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைவில் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
    நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான்.

    ஆனால் அவர்களுக்கு ஏதாவது நோயின் அறிகுறி தென்பட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் கவலைப்படும் பெண்கள் தங்கள் உடல் நலன் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

    பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

    * சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

    * மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் "Intraductal Papillomas" என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.



    * மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    * எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * மச்சம் திடீரென பெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

    * மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

    * சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய். கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
    நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.
    பணியாளர் தேர்வுக்கு பெருவாரியாக பயன்படுத்தப்படும் வழிமுறையே நேர்காணல் ஆகும். இதில், தேர்வு செய்ய வேண்டிய பணியாளர்களை நிறுவன முதலாளியோ அல்லது அவர் சார்பாக உரிய மேலாளரோ அல்லது நியமனம் செய்யப்பட்ட தேர்வுக்குழுவோ நேர்காணலில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன. பணியாளரை தேர்வு செய்யும்போது அவர்களது பணி பற்றி கலந்து ஆலோசிக்கவும், அவர்கள் பணியின் போது தவறு செய்ய நேர்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்து கூறப்படுகிறது.

    நேர்காணலுக்கு வந்தவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதனை சுதந்திரமாக எடுத்து சொல்ல அனுமதிக்கப்படுகிறது. “நேர்காணல் என்பது காரண காரியத்துடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல்” என்று ஸ்காட் என்பவர் கூறுகிறார். நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வந்தவர் எவ்வாறு பதில் அளிக்கிறார் என்று உற்று நோக்கப்படுகிறது. பணி நியமனத்துக்கு தயாராய் இருக்கும் பணியாளரிடம், அவரது கல்வி, அனுபவம், குடும்ப பின்னணி உள்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் அவரது சுபாவம், தோற்றம், பேசும் திறன், இன்முகத்துடன் அடுத்தவரிடம் பழகும் விதம், அடுத்தவரிடம் தன்னை பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குதல் போன்றவை பற்றியும் மதிப்பீடு செய்வதற்கு நேர்காணல் உதவுகிறது.

    விண்ணப்பதாரர் யார்?, அவர் எப்படி இருக்கிறார்?, அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்கூடாக காணவும் நேர்காணல் பயன்படுகிறது. விண்ணப்பதாரரால் முடியும் என்னும் நம்பிக்கையை பெறுவதற்கான ஒரு சிறந்த சாதனமாகவும் நேர்காணல் அமைகிறது. நேர்காணல் நம்பத்தகுந்ததாகவும், செல்லத்தக்கதாகவும் அமைய வேண்டும். வேறு விதங்களில் முறைப்படுத்துதல் அல்லது மறைத்தல் போன்றவை தவிர்க்கப்பட்டு உண்மையை மட்டும் தரக்கூடியதாக அமைய வேண்டும். விண்ணப்பதாரர்களை அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

    பணியாளர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு உரிய பயிற்சியும், வளர்ச்சி வாய்ப்பும் தரப்பட வேண்டும். பல பணியாளர்கள் எவ்வித முன் அனுபவமும் இன்றி நேரடியாக தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் பணியின்போது திணறுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உரிய பயற்சி அவசியம். 
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
    வேலூர்:

    முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார். அதன்அடிப்படையில் தமிழகம் முழுவதும் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி 100 பேருக்கும், 23-ந் தேதி 1000 பேருக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 500 பேருக்கு வழங்கப்பட்டது.

    இந்த இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்து. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக இருசக்கர வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் அதிகமானவர்கள் பயன்பெறுகிறார்கள். ஜெயலலிதாவின் அரசு பெண்களுக்கான அரசாகும். பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க அவர் கொண்டு வந்த திட்டம் தான் தொட்டில் குழந்தை. இத்திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டு உயர்கல்வி படித்து வருகின்றனர்.

    இத்திட்டம் குறித்து அறிந்த அன்னை தெரசா ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டினார். ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பிறப்பு, படிப்பு, திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். இந்தியாவிலேயே பெண்களுக்கான தனி நலவாரியம் அமைத்தார். பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள், சம உரிமை உண்டு என பெண்களுக்கான உரிமைகளை பெற்று தந்தார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசுகையில், “வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. பெண்கள் வாழ்வில் முன்னேற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். இருசக்கர வாகனம் வழங்குவது என்பது கவர்ச்சி திட்டம் அல்ல. உழைக்கும் பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு முன்மாதிரி திட்டமாகும்” என்றார். இதில், அ.தி.மு.க. அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் காந்தி நன்றி கூறினார்.

    ×