search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95302"

    • நாளை முற்பகல் 11 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது .

    எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஓரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திற னாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடடிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அப்படி வீட்டிலிருந்தே சிறப்பாக பணியாற்றுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். அடுத்து முதுகுவலி, கழுத்து வலி வராத அளவிற்கு சொகுசான நாற்காலி, தேவையிருந்தால் ஸ்கேனர், பிரிண்டர் போன்றவற்றையும் வாங்க வேண்டும்.

    அலுவலக பணியாற்றும் போது அதற்காக படுக்கை அறையை தேர்ந்தெடுக்கக் கூடாது. படிக்கும் அறையாக இருந்தால் வேலை சிறப்பாக அமையும். படுக்கை உங்கள் கண்ணில் தெரியும் வகையில் இருந்தால் உங்களுக்கு வேலை ஓடாது. தூக்கத் தான் தோன்றும். எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
    வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், புதுமைப் பெண்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டப்படுகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் செய்தித்தாள் படிப்பது, தேனீர் அருந்துவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே பாதியில் முடிந்து விடுகிறது. அவர்கள் கடிகாரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அப்போது மனதில் ஏற்படும் பதற்றம் அவர்கள் உடம்பையும், உள்ளத்தையும் உலுக்கிவிடும்.

    காலை நேர அவசர வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே பல வீடுகளில் தாய்மார்களுக்கு சவா லான விஷயமாக இருக்கும். தாயாரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும்.

    அப்போது குழந்தைகளிடம் ‘உன் எதிர்காலத்திற்காக தான் நான் சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? அந்தப் பருவத்தில் குழந்தைக்கு தேவை அம்மாவின் அரவணைப்புதான். பணமல்ல!. வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட பல வீடுகளில் குழந்தை களுக்கு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட மனநிலையில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்பதை பற்றி சிந்திக்க கூட அம்மாக்களுக்கு நேரம் இருக்காது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பது கூடுதல் குழப்பத்தை தரும். முடிந்த வரை முக்கியமான வேலைகளை செய்துவிட்டு மற்றதை ஒதுக்கி விட்டு மறுநாளைக்கு தேவையானவைகளை செய்து முடித்து விட்டு படுப்பதற்குள் போதுமென்றாகிவிடும். கால்வலி, உடம்பு வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    இப்படி பரபரப்பாக இயங்குபவர்கள் குழந்தைகளிடத்தில் பொறுமையாக கையாள பழகிக்கொண்டாலே சுமுகமாக செயல்பட தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் பக்குவமாக பேசி அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் பணி முடித்து வீடு திரும்பும்போது கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி செய்து வந்தால் இயல்பாகவே குழந்தைகள் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம்பிடிக்காமல் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள பழகிவிடுவார்கள்.
    பணி செய்யும் இடத்தில் சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
    பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

    சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரை பற்றியுமே சரியான முடிவுக்குவர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு அவர்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம்.

    அந்த வருமானத்தை நம்பித்தான் அவர்களின் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் உங்கள் உயர் அதிகாரியிடம் சொல்லாதீர்கள். சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் “நான் இருக்கிறேன் உனக்கு, கவலைப்படாதே“ என்கிற போர்வையில் எல்லைமீறப் பார்க்கலாம்.

    உடை வி‌ஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்து ஒரு சில ஆண்களின் எண்ணம் கொஞ்சம் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அதனால் ஆடை வி‌ஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.



    பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். டிரைவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க வி‌ஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

    எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேல் அதிகாரி உங்களுக்கு தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். ‘எனக்குப் பிறந்த நாள்‘ என்று சுவீட் பாக்சை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேல் அதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சக ஆண் ஊழியர்கள் ஜோக்குகள் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் பேசினால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும்.

    உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேல் அதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். எனவே பணியில் திறமைசாலிகளாக விளங்க முயற்சியுங்கள்.

    நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
    நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில் தான் செலவழிப்போம். அந்த நேரத்தை மகிழ்ச்சியும் நிம்மதியும் குழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    அலுவலகத்தில் உங்களுக்கென தனி நட்பு வட்டம் இருந்தாலும் உடன் பணி செய்வோர் அனைவரிடமும் நல்ல நட்பு முறையில் ஆன உறவு அவசியம். சுமூகமான, எளிதாக அணுகக்கூடியவராக உங்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடன் இருப்போர் குறித்து அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அனைவரிடமும் சமமாக பழகுங்கள்.

    உங்களுக்கும் உடன் பணியாற்றுவோரில் சிலருக்கும் இடையில் சில பிடித்தமான விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். அதை அறிந்துகொண்டு நட்பு பாராட்டுவது கூடுதல் பலமாக அமையும்.

    அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அடுத்தவர் பற்றி புரளியும் புரணியும் பேசுவதை தவிர்க்கவும். எப்போதும் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஒரு பாஸிட்டிவான அலைகளைக் கொடுங்கள்.

    உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் உங்கள் மூலமாக சலிப்பு அடையக் கூடாது. ஆர்வமிக்க சந்திப்புகள், பேச்சுகள், உரைகள் என ஆராவராமக உங்கள் வட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

    சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது. சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள்.

    இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம் மாறி வேலையில் சேரமாட்டார்கள்.

    இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும். ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

    அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
    திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். 
    ×