என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடிகர்"
- தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார்.
- திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.
புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு காக்கிநாடவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஜெகதீஷ் வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த இளம் பெண் ஜெகதீஷை ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனை அறிந்த ஜெகதீஷ் இளம் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராரில் ஈடுபட்டார். கடந்த மாதம் இளம் பெண் வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.
ஜெகதீஷ் இதனை சமையலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து இளம் பெண் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி தான் எடுத்த போட்டோக்களை அந்த பெண்ணிற்கு காட்டினார். அப்போது இளம் பெண்ணுடன் இருந்த வாலிபர் ஜெகதீசை விரட்டி அடித்து விட்டு போலீசில் புகார் செய்வதாக தெரிவித்தார்.
2 நாட்கள் கழித்து ஜெகதீஷ் எடுத்த அரை நிர்வாண போட்டோக்களை இளம்பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அரை நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக ஜெகதீஷ் இளம் பெண்ணை மிரட்டினார். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பஞ்சகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இளம் பெண் செல்போன் எண்ணிற்கு கடைசியாக பேசியவர்கள் யார் என விசாரணை நடத்திய போது அவருடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஜெகதீஷ் நிர்வாண படங்களை காட்டி விரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.
- நடிகர் பாலா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- இவர் மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.
இந்நிலையில், சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்துள்ளார். அதாவது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பாலா பேசியதாவது, "என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்" என்றார். இவருக்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார்.
- விஜயகாந்திற்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த நாசர், "விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக 'விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்' என்று சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறினார்.
- சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.
- திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டன குரல் எழுப்பினர்.
இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா, "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
தன் காமெடியால் பிரபலமான முன்னணி நடிகர் ஒருவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஊர், உலகத்தில் நல்லவர் என்று பெயர் எடுத்த அந்த நடிகர் தன் நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளாராம். இதை கண்டுபிடித்த அந்த நண்பர் இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதீங்கனு நடிகரை அடித்து அனுப்பியுள்ளார். இந்த விஷய்ம் தெரிந்த ரசிகர்கள் இவர போய் நல்லவருன்னு நம்பிட்டு இருந்தோமே என்று தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் மீது திரைப்பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிக மதிப்பு உள்ளதாம். ஆனால், இந்த நடிகர் தன் மகளாக நினைக்க கூடிய நண்பரின் மகளை காதலிப்பதாக கூறி வெளிநாட்டிற்கு டேட்டிங்கிற்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட இசை வெளியீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர் மேடையிலேயே அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் கொந்தளித்து பிரபல நடிகரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார்களாம். இந்த விஷயம் பெரிய சர்ச்சையாகிவிடக் கூடாதே என்று எண்ணிய நடிகர் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாராம்.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறாராம். இசை என்றாலே அந்த பிரபலத்தை தேடி பலர் செல்ல நண்பர் ஒருவரும் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டாராம். ஆனால், இசையமைப்பாளரோ புகழ் போதையில் அதலாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.
இசையமைப்பாளர் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்த நண்பருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்ததாம் இந்த செயலுக்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு உள்ளது என்று. இதனால் மனம் வெறுத்த நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.
இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம்.
பிரபல தொகுப்பாளினி பல முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாராம். அப்போது நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றி வந்தாராம். ஒரு நாள் முன்னணி நடிகருடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை தலைக்கேறும் அளவிற்கு குடித்துவிட்டு பார்க்கிங்கில் மயங்கி கிடந்தாராம்.
இதனை பார்த்த அந்த முன்னணி நடிகர் தனக்கு தேவையானதை முடித்துவிட்டு நடிகையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் வந்த தொகுப்பாளினியின் நண்பர்கள் அவரை அழைத்து சென்றார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் என்னதான் தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொண்டாலும் தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை தனக்கு இரையாக்க வேண்டும் என துடித்து வந்தாராம். அம்மா- மகள் என இருவரையும் அடைந்துவிட வேண்டும் என நினைத்து கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாராம். அவரது ஆசைக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அவர்களை தயாரிப்பாளர்களிடம் சொல்லி படத்தில் இருந்து தூக்கிவிட்டு அடுத்த ஹீரோயினை கரெக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.
திரைத்துறையில் பிரபலமாக வேண்டுமே என்று நினைக்கும் நடிகைகள் என்ன செய்வது எல்லாம் விதி என்று தலையில் அடித்துக் கொண்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.
ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்